Tuesday, May 31, 2016

ஒரு டிவியின் கதை....


முதல் முறை டிவி எனும் வஸ்துவை கண்டது ஐந்து வயதில்... நாங்கள் குடி இருந்த தெருவில் ஸ்கூல் ப்ரெண்ட் வீட்டில்... ஒரு பிரவுன் ஷட்டர் போட்ட பெட்டியில் ... அன்று தூக்கத்தில் ஒரே டிவி மயம்... வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பாக்கணும்னா என் வீட்டுக்கு வா என்ற அவள் வார்த்தையை பிடித்து கொண்டு அவள் வீட்டுக்கு ஓடி போய் பார்த்துவிட்டு திரும்பினால் ஆபீசில் இருந்து அப்பா திரும்பி இருந்தார்... டிவி பார்க்க எல்லாம் இன்னொருத்தர் வீட்டுக்கு போக கூடாது என்ற அவர் அட்வைஸ் ஐ கேட்டு அதன் பின் ஒலியும் ஒளியும் என்ற ப்ரோக்ராமை மறந்தாயிற்று..
அதற்கு பின் இட மாற்றம்..... இந்த முறை வட இந்தியா... ஒரே ஹிந்தி மயம்... யார் வீட்டிற்கு போனாலும் ஒரே டெம்ப்லேட்டில் ஒரு டிவி, ஒரு மர ஷோகேஸ்.... வெள்ளிக்கிழமை ராமானந்த் சாகரின் ராமாயணம் ... ஒரு வெள்ளிக்கிழமை கதவை தட்டிய அப்பா விற்கு கதவை திறந்தால் அவர் பின்னால் தலையில் டிவி பெட்டியை வைத்து கொண்டு ஒரு ஆள்.. வீட்டில் இருந்த சின்ன டீபாயில் அந்த போர்டபிள் டிவிஐ வைத்து அன்டேனாவை அட்ஜஸ்ட் செய்து ராமாயணம் பார்த்து தூக்கத்தில் எல்லாம் ஒரே காற்றில் பறந்து பறந்து புஸ் என்று போன அம்பு மயம்....
அதன் பின் அந்த டிவியிலேயே அடுத்த ஏழு வருஷங்களாய் கண்மணி பூங்கா, செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர நாடகம், எதிரொலி, சித்ரஹார், ரங்கோலி, சண்டே காலையில் எஸ் வீ சேகர் இன் வண்ணக்கோலங்கள் எல்லாம் பார்த்து அப்படியும் திருப்தி வராமல் ப்ரோக்ராம் பட்டனை எவ்வளவு திருகினாலும் டான்டடடடான் எனும் தூர்தர்ஷன் மட்டும் தன் கிடைக்கும் .... நடு நடுவே காற்றில் திசை மாறி இருக்கும் அன்டனாவை பிடித்து திருகியதும் லைட் ஆக கிடைத்த தூர்தர்ஷன் செகண்ட் சேனலையும் விட்டு வைத்ததில்லை..
பதினொனாவது படிக்கும் போது ஒரு பெரிய கலர் டிவி வீட்டிற்க்கு வந்தது... துப்பறியும் சாம்புவையும், ஏக் சே பட்கர் ஏக் ஐயும், சந்திரகாந்தாவையும் கலரில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது...
பிளஸ் 2 எக்ஸாம் ரிசல்ட் வந்த அன்று நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு கீழே இருந்த டாக்டர் ஆன்டி வீட்டில் முதல் முறையாக கேபிள் டிவி தரிசனம் கிடைத்தது... காலேஜ் படிக்கும் போது லீவ் இற்கு வீட்டிற்க்கு வந்தால் டிவியின் ரிமோட் பட்டன் சுத்தமாய் அமுங்கி போகும் அளவிற்கு மாற்றி மாற்றி இவ்வளவு சேனல் ஆ என்று ஸ்டடி லீவை எல்லாம் செமஸ்டர் லீவாய் மாற்றியது ஒரு காலம்...
வேலைக்கு போனபோது வீட்டிற்க்கு வந்தால் ஒரு தனி கவனிப்பு... அம்மா விற்கு ஒரு உதவியும் செய்யாமல் சும்மா இருக்கிறதே என்று எல்லா சேனல் ஐயும் மாற்றி மாற்றி சோபாவை தேய்த்தது வேறு ஒரு காலம்...
இன்று திருமணமாகி எட்டு வயதில் ஒரு குழந்தையும் வந்த பிறகு கணக்கே இல்லாத நூறு சேனல்கள் இருந்தாலும் ஏனோ டிவியை பார்க்கும் இன்டெரெஸ்ட் சுத்தமாய் பூஜ்யம்....
போறாததற்கு அவள் படிக்கும் மாண்டேசரி ஸ்கூல் இல் எனக்கு போதித்ததை எல்லாம் என் மனதில் உருவேற்றி என் பெண்ணிடம் ஒரு நாளைக்கு ஓராயிரம் முறை சொல்லும் டயலாக் 'கண்ணா நீ ஒண்ணும் பண்ணாம சும்மா வேணா இரு ஆனா இந்த இடியட் பாக்ஸ் அ பாக்காத'
.. இந்த கதை ஐ அவள் கண்ணிலேயே காட்ட கூடாது

No comments:

Post a Comment