Tuesday, May 31, 2016

அடிக்கப்படாத அழைப்பு மணிகள்
அழைக்கப்படாத தொலைபேசிகள்
பரிமாறப்படாத தட்டுக்கள்
ரசித்து பேசப்படாத நினைவுகள்
பேசி சிரிக்கப்படாத தருணங்கள் 
கைகோர்த்து செல்ல முடியாத நடைபாதைகள்
புரிந்து கொள்ளப்படாத ஜாடைகள்
நெக்குருக்கும் நாட்கள்
திறக்கப்படாத மனத்தாள்கள்
இவை அனைத்தும் தனிமையின் நெருங்கிய நண்பர்கள் !

No comments:

Post a Comment