Thursday, March 23, 2017

எனக்கு இதே வேலை..... என்ன வேலை?????

எனக்கு இதே வேலை..... என்ன வேலை????? ..... எங்கயாவது ஏதாவது வம்பு வளர்த்துட்டு அப்பறம் பின் விளைவுகளை பத்தி யோசிக்கறது.... வம்புன்னா ரொம்ம்ம்ப பெரிய லெவல்லாம் இல்ல..... இந்த கடைக்காரர் ஆட்டோக்காரர் அந்த மாதிரி ..... பின்ன என்னங்க பஸ் கண்டக்டர்ல இருந்து ரெஸ்டாரண்ட் வெய்ட்டர் வரைக்கும் எல்லாரையும் "சார்" "அண்ணா" "ஏம்ப்பா தம்பி" ன்னு க்ரோனலாஜிக்கல் ஆர்டர்ல மரியாதையா "தேங்க் யூ""எக்ஸ்க்யூஸ் மீ" ன்னு கர்டெசியோட பேசற என்னை ஏமாத்தற மாதிரி மட்டும் தெரிஞ்சுது அவ்ளோதான் பொங்கி எழுந்து சண்டை போட்டு வந்துருவேன்.... அந்த கெத்த அப்படியே மெயின்டெயின் பண்ணா பரவால்ல ..... ஆனா கொஞ்ச நேரத்துல "இது தேவையா .... அவங்களுக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்னு பேசாம பொறுமையா இருந்து இருக்கலாம்.... இப்ப எந்த ஏழரைய இழுத்து விட்டுருக்கோமோ" ன்னு விட்டத்தை பார்த்து யோசிப்பேன்.... என்னோட ஹஸ்பண்ட்க்கு வேற இந்த மாதிரி நான் பண்ணறதெல்லாம் சுத்தமா பிடிக்காது....  இப்படி ஏதாவது பண்ணிட்டு அதை பத்தி அவர்கிட்ட சொன்னா (அவர்கூட போகும்போது வாய திறப்பேன்??.... பரம சாது நான் ) அவ்ளோதான் ..... "நாம படிச்சவங்க தான .... இக்னோர் பண்ணிட்டு பேசாம வரலாம்ல.... ரோட்ல கடைலன்னு ஏன் ஸீன் கிரியேட் பண்ணனும்" ன்னு இங்கயும் திட்டு விழும் .... அவர்கிட்ட சொல்லாமலாவது இருக்கலாம்ல ... சின்சியரா சொல்லி வாங்கி கட்டிப்பேன்.... சரி சரி ஓகே ஓகே புரியுது …. முன்குறிப்பு தற்பெருமை எல்லாம் நிறுத்திக்கறேன் … விஷயத்துக்கு வரேன்.... இந்த மாதிரி ஸ்டண்ட் வேலை ஒன்னு பண்ணிட்டு அதனால வசமா மாட்டிகிட்டேன் ...  

ஒரு பன்னெண்டு பதிமூணு வருஷம் முன்னாடி இருக்கும்..... வீட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல என்னை பாத்தாலே ஒரே தி மரியாதை... எல்லாரும் உடனே மீட்டிங்க போட்டு "ஹே நேத்து நீதான்பா போன.... இன்னைக்கு என் டர்ன்னு " அப்படின்னு பஞ்சாயத் பண்ணி "உக்காருங்க மேடம்.... " அப்படின்னு ஆட்டோ கதவை திறந்து விடுவாங்க .. ச்சை ஆட்டோல ஏது கதவு... வாய்ல அதுவா வருது .... பின்ன ரெகுலரா ஏழரை மணி ஆபீஸ் பஸ்ஸை கரெக்ட்டா ஏழு நாப்பதுக்கு பஸ் ஸ்டாப்க்கு போய் அதை மிஸ் பண்ணிட்டு அங்க இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல இருக்கற ஆட்டோஸ்க்கு டெயிலி முதல் போணியே நாந்தான் பண்ணுவேன்.... நல்ல கை ராசின்னு பேசிக்குவாங்க ..... பின்ன காலைல நான் தர ஆட்டோ சார்ஜே அன்னைக்கு முழுசா போதுமே.... எல்லாம் ஒரு தர்மம் தான்..... அப்பறம் வீட்ல "பொறுப்பே இல்ல..... என்ன சொல்லி என்ன" ன்னு தர்ம திட்டு .... பட் அது ஒரு சோஷியல் சர்வீஸ் மாதிரி பண்ணிட்டு இருந்தேன்னு வெச்சுக்கோங்க ...

அன்னைக்கு அப்படிதான் எங்க வீட்ல இருந்து ரெண்டு தெரு தள்ளி இருந்த சித்தப்பா வீட்ல இருந்து என்னோட பாட்டியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர போனேன்....  வயசானவங்கறதால போகும் போதே ஆட்டோல போயிட்டு அவங்கள அதே ஆட்டோல கூட்டிட்டு வர்றதா பிளான் .... ஆட்டோ ஸ்டாண்ட்ல அன்னைக்கு இருந்த ஆட்டோல பதினஞ்சு வயசு தான் இருக்கும் அந்த ஆட்டோ ட்ரைவர்க்கு.... "ஆபீஸ் தான மேடம் " னான்.... "இல்லப்பா .... --- ஸ்ட்ரீட்க்கு போய் அங்க இருந்து பாட்டியை கூட்டிட்டு இங்க திரும்ப வந்து டிராப் பண்ணனும்.... ஒரு அஞ்சு நிமிஷம் அங்க வெயிட் பண்ண வேண்டி இருக்கும்.... அதையும் இப்போவே சொல்லிர்றேன்" னேன்.... "சரிங்க" னான்.... "யூஷுவலா அந்த ஸ்ட்ரீட்க்கு போக இருபது ரூபாய் தான.... நான் நாப்பது தரேன்... அப்பறம் கூட கேக்க கூடாது " அப்படின்னு தெளிவா பேசிட்டு தான் ஆட்டோல ஏறினேன் ......

அங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட்டிங்க்ல இருந்துருப்பான் .... அதையும் தெளிவா சொல்லிருந்தேனே... முணுமுணுன்னு புலம்பிகிட்டே தான் ஆட்டோவை ஓட்டிட்டு வந்தான் ... திரும்ப எங்க வீட்டுக்கு வந்தப்போ தான் பிரச்சனை.... "என்ன நாப்பது ரூபா தரீங்க.... எவ்வளவு நேரம் அங்க வெயிட்டிங்க்ல இருக்க வெச்சீங்க.... வேற சவாரியாவது போயிருப்பேன்.... அம்பது தாங்க..." ன்னு ரைட் ராயலா கேட்டானே பாக்கணும்.... சுர்ர்ர்ன்னு ஏறிடுச்சு எனக்கு ...."ஏன்பா எல்லாத்தையும் தெளிவா பேசிட்டு தான ஏறினேன்..... இப்போ என்ன தகராறு பண்ற.... உங்க ஸ்டாண்ட்ல ரெகுலரா ஆட்டோல போறேன்..... நீ என்ன இந்த சின்ன வயசுலயே இப்படி இருக்க.... " ன்னு முதல்ல கொஞ்சம் பொறுமையாதான் பேச ஆரம்பிச்சேன்.... அவன் தேவை இல்லாம மரியாதை குறைவா பேசினவுடனே ரொம்ம்ம்ப கோபம் வந்துருச்சு.... கடுப்பாகி "வேணாம்டி எதுக்கு தகராறு.... அம்பது கொடுத்துரு ..." ன்னு சமாதானமா பேசின பாட்டியை வீட்ல விட்டுட்டு நேரா ஆட்டோ ஸ்டாண்ட்க்கே போய் "என்ன உங்க ஸ்டாண்ட் பையன் இப்படிலாம் பேசறான்.... நீங்கலாம் ஒன்னும் சொல்ல மாட்டிங்களா..." அப்படி இப்படின்னு சண்டை போட்டுட்டேன்.... அவங்க அப்போதைக்கு "சரி மேடம்.... நீங்க போங்க... நாங்க சொல்லி வெக்கறோம்..... டேய் அவங்க சொல்லிட்டு தான வண்டிய எடுத்தாங்க.... அப்பறம் என்ன தகராறு பண்ற..." அப்படின்னு அவன்கிட்ட பேசற மாதிரி என்னை அனுப்பிட்டாங்க.... அடுத்த ரெண்டு மூணு நாள் ஆட்டோலேயே போகல.... அதுக்கு அடுத்த வாரம் வேற வழி இல்லாம ஒரு நாள் அந்த ஸ்டாண்ட்ல வேற ஒரு ஆட்டோல ஆபீஸ் போனேன்...  ஆட்டோ சார்ஜ்க்கு கரெக்ட்டா சேஞ்சு இல்ல.. அந்த ட்ரைவர் மீதி சிக்ஸ்டி ரூபீஸ் தரணும் .... சரி மீதியை சாயங்காலம் ஸ்டாண்ட்ல கொடுத்துர்றேன் மேடம் ன்னு சொன்னவனை நம்பி விட்டுட்டேன்.... அன்னைக்கு நான் வீட்டுக்கு போக லேட் ஆயிடுச்சு.... அடுத்த நாள் பஸ் வர்ற டைம்க்கே போய்ட்டேன்.... அந்த ட்ரைவர் ரோட்ல அப்போசிட் சைட்ல நின்னுட்டு தான் பேசிட்டு இருந்தான்.... என்னை பாத்தும் பாக்காத மாதிரி திரும்பிகிட்டான்.... பஸ் வந்துட்டதுனால நானும் சரி ஈவினிங் பாத்துக்கலாம்னு போய்ட்டேன்.... அன்னைக்கும் லேட் ஆயிடுச்சு... அதுக்கு அடுத்த நாள் சீக்கிரமா கிளம்பினேன்.... அவன் என்னை பாக்காத மாதிரி இருந்தான்.... நான் ரோடை க்ராஸ் பண்ணி "நீங்க எனக்கு சிக்ஸ்டி தரணும்.... ரெண்டு நாளா பாத்தும் பாக்காத மாதிரி இருக்கீங்க...." அப்படினேன்.... "ஆமா சிக்ஸ்டி தான தரணும்..... மறந்துட்டேன்.... உனக்கு உன் காசு வேணும்னா நீ (கவனிக்கவும் மரியாதை இல்லாம) வந்து கேக்க வேண்டியது தான " ன்னு திமிரா பேசினான்.... அவன் ஆட்டோக்குள்ள ஏற்கனவே என் கூட தகராறு பண்ண அந்த பையன் உக்காந்து இருந்தான்.... சரிதான் இது பிளான் பண்ணி செய்யறதுன்னு புரிஞ்சு திரும்பவும் செம்மா கடுப்பு.... நேரா அந்த ஸ்டாண்ட்ல கொஞ்சம் சீனியர் கிட்ட போய் "எனக்கு அறுபது ரூபா பெரிய விஷயம் இல்ல (ஆமா கர்ணனுக்கு தங்கச்சி நான்னு நெனப்பு ) ஆனா ஏமாத்தணும்னு நினைச்சது தான் என்னால பொறுத்துக்க முடியலை …..இந்த மாதிரி ஒரு ரோக் கூட்டம் இந்த ஸ்டாண்ட்ல இருக்குன்னு இத்தனை நாள் நான் தெரிஞ்சுக்கலை பாருங்க ...இனிமேல் உங்க ஸ்டாண்ட் வண்டில ஏறுவேன் ...." அப்படின்னு கத்திட்டு போய்ட்டேன்....

அதுக்கு அப்பறம் அந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோவே ஏறலை.... ஆனா அங்க இருந்த கொஞ்ச மாசம் அந்த ட்ரைவர்ஸ் எப்ப நான் அந்த பக்கம் போனாலும் முறைச்சுகிட்டே இருப்பாங்க… நானும் கண்ணாலேயே எரிச்சிட்டு போய்டுவேன்…. இருந்தாலும் சம்டைம்ஸ் ஆபீஸ்ல இருந்து லேட் நைட்லாம் கேப்ல வரும்போது கொஞ்சம் பயமாதான் இருக்கும்.... பெரிய இவளாட்டம் ஆட்டோ ட்ரைவர்ஸ் கிட்டலாம் தகராறு பண்ணிட்டோம்... கராத்தே கூட கத்துக்கல.... இதெல்லாம் எனக்கு தேவையான்னு தோணும்...  அப்பறம் கொஞ்ச மாசத்துலயே வேற வீட்டுக்கு மாறி போய்ட்டோம்.... கல்யாணம் ஆகி நானும் வேற ஏரியாக்கே வந்துட்டேன்.... ஸ்டில் என்னோட பேரன்ட்ஸ் அங்க இருக்கறதால அந்த ஏரியாக்கு போவேன் .... அந்த மார்க்கெட்க்கு போவேன் ஆனா ஒரு தடவை கூட ஆட்டோ ஏறலை.....

இப்போ கொஞ்ச நாள் முன்னாடி அந்த ரோட்ல ஏதோ வேலையா போயிட்டு வீட்டுக்கு திரும்ப ஆட்டோ தேடினேன்.... தெளிவா அந்த ஸ்டாண்ட்ல இருந்து ரொம்ம்ம்ப தள்ளி ஒரு போக்கு ஆட்டோவை  நிறுத்தி கேட்டேன் ... ஆனா அவனை எங்கயோ பாத்த மாதிரியே இருந்தது ... அவனும் ஒரு மாதிரி என்னை பார்த்துட்டே யோசிச்சிகிட்டே சரி ஏறுங்கனான்.... ஏறி உக்காந்து மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சப்ப தான் தெரிஞ்சுது அது அப்போ நான் சண்டை போட்ட பதினஞ்சு வயசு ட்ரைவர்ன்னு.... இத்தனை வருஷத்துல வளர்ந்துருந்தான்.... அதான் ச்சட்ன்னு ஸ்ட்ரைக் ஆகல..... அய்யோஓஒ ன்னு நினைச்சுகிட்டே நிமிர்ந்து  பாக்கறேன் அவனும் ரியர் வ்யூ மிரர்ல ரொம்ம்ம்ம்ப தீவிரமா யோசிச்சிகிட்டே என்னை பாத்துட்டு இருந்தான்....  "அட ராமா... கடைசில இவன் ஆட்டோலயா ஏறிருக்கோம்.... அய்யோஓஒ இவன் ஸ்டாண்ட் ஆட்டோல கூட ஏற மாட்டோம்னு  நாம போட்ட சபதம் என்ன ஆறது (ம்ம்ம்கும்ம் இந்த அலப்பறைக்கு ஒண்ணுதான் குறைச்சல் ன்னு என் மைண்ட் வாய்ஸ் வேற இம்சை)....   இவனுக்கு நாம யாருன்னு தெரிஞ்சுட்டா அவ்ளோதான்....ஏதாவது வேணும்னே தகராறு பண்ணுவானே.... இவ்ளோ லேட்டா வேற போறோம்...  இது என்ன சோதனை.... " ன்னு வேகமா யோசிச்சிகிட்டே என்னோட ஹேண்ட்பேகை துழாவினேன்.... "ஆஹாஆஆ.... கிடைச்சுடுச்சு..... இதை வெச்சு தப்பிச்சுக்கலாம்" ன்னு உடனே அதை எடுத்து வெச்சிகிட்டேன் .... அப்பறம் கொஞ்ச நேரத்துல மெதுவா ரியர் வ்யூ மிர்ரரை பாத்தேனா.... அவன் ரோடை பாத்து ஓட்டிட்டு இருந்தான்.....

அது சரி அப்படி என்ன வெச்சுக்கிட்டேன்னு கேக்கறீங்களா.... ஒன்னும் இல்ல எப்பவோ அவசரத்துக்கு வாங்கின "ஷில்பா பொட்டு சைஸ் 1 " (இருக்கறதுலயே நெத்தி புல்லா அடைக்கற மாதிரி பெரிய சைஸ் பொட்டு) ஹாண்ட் பேக்ல இருந்ததா.... அதை எடுத்து கன்னத்துல ஒட்டிக்கிட்டேன் .... இப்போ என்னை அடையாளம் தெரியாதில்ல.... எப்புடிஇஇஇ ...

ஹிஹி.... ஏதோ சீரியஸா சொல்ல வந்தேன்னு நீங்க நினைச்சுருந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது  !!!!

Saturday, March 11, 2017

பாட்டு பாடவா !!!

பாட்டு பாடறதுனா சும்மாவா .... அதுவும் பாட்டு பாடி ரெக்கார்டிங் பண்றதுன்னா ச்சும்மாவா ..... எட்டு வயசுல பாட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சது ... ஆரம்பிச்சது மட்டும் தான்...  ஒரு மூணு மாசத்துலயே  ஏன்டா போனோம்னு எப்படியோ சாக்கு போக்கு சொல்லி நிறுத்திட்டேன்.. ஏன்னா அது என் ப்ராப்ளம் இல்ல... பாம்பேல நாங்க இருந்த அபார்ட்மெண்ட்ல இருந்த கொஞ்சமே கொஞ்சம் மாமீஸ் ல பாட்டு தெரிஞ்ச ஒரு மாமிதான் சொல்லித் தந்தாங்க.... ஆனா பாருங்க "ஸா பா ஸா பா ஸா " ன்னு ஆரம்பிச்சவுடனேயே "பாரு மேல இருக்கற நவநீதா என்னமா பாடறா... க்ளாஸ்லயும் பர்ஸ்ட் ... பாட்டுலயும் கெட்டி படிப்புலயும் கெட்டி.. நீயும் இருக்கியே .... நல்லா இன்டரெஸ்ட் ஒட கத்துக்கணும்.... ஏனோ தானோன்னு கத்துக்க வந்தா இப்படிதான்" அப்படின்னு அவங்களுக்கு மேல் பிளாட்ல இருந்த என் க்ளாஸ்மேட்டை பத்தி சொல்லி சம்மந்தமே இல்லாம திட்டிட்டு இருப்பாங்க .... "மேம் நீங்க சொல்லிக் கொடுக்கவே ஆரம்பிக்கலையே... " அப்படின்னு சொல்லவா முடியும் (நவநீதா வேற எங்கயோ கத்துக்கிட்டா ).... கம்பேரிசனோட முழுழு பலனையும் அனுபவிச்சேன்... பாட்டு பாடணும்ன்னு ஆசை இருந்தாலும் அவங்க வீட்டுக்குள்ள நுழையவே பயம்... சோ அப்படியே நின்னு போச்சு ....

அதுக்கு அப்பறம் கேசட்டை போட்டு கேட்டு ஏதோ நானே கத்துகிட்டு பாடி அதை ரெக்கார்டு பண்ணி கேக்கறதுல ஒரு சந்தோஷம் .... அப்போ ஆரம்பிச்சது என்னோட ரெக்கார்டிங் பயணம்..... அதுவும் நடுவுல ஒரு வருஷம் வீட்ல பப்பின்னு ஒரு பொமரேனியனை வளர்த்தோம்.... நான் ரெக்கார்டு பண்ண வாயை திறந்தாலே கத்தும்.... நான் பாடகியா ஆகறதுல இப்படி பல பல தடைகள்.....

அப்பறம் பிளஸ் 1 படிக்கும்போது தான் வீட்டுக்கு ஒரு மாமி வந்து சொல்லித் தந்தாங்க .... ரெண்டு வருஷம் நல்லா கத்துக்கிட்டேன் .... ஆனா இப்போ வரைக்கும் கொலு, பண்டிகை , கல்யாணம், காதுகுத்து, பூணூல் , கோவில் ன்னு எந்த அகேஷனா இருந்தாலும் "குறை ஒன்றும் இல்லை " இல்லனா "ஸ்ரீ சக்ரராஜ " ன்னு இந்த ரெண்டு பாட்டு தான் பாடறது... அதுதானே யுனிவர்சல் சாங்ஸ் .... பாட்டு மாமிக்கு தெரிஞ்சா இதற்கு தானா நடையா நடந்து சொல்லித் தந்தேன்னு ரத்த கண்ணீர் வடிப்பாங்க ....

அப்பறம் பாட்டு கிளாஸ் போனேனோ இல்லயோ ரெக்கார்டிங் மட்டும் அந்த அந்த பீரியட்ல இருந்த டெக்னாலஜி,  ஐ மீன் டேப் ரெக்கார்டார்ல, லேப்டாப்ல, மொபைல்லன்னு பண்றதுல ஒரு குறைச்சலும் இல்ல...

சரி சினிமா பாட்டெல்லாம் முக்கியமா ராஜா சார் பாட்டெல்லாம் பாடி பாடி தரோ ஆய்டுச்சுன்னு எம்.எஸ் அம்மாவோட பாட்டெல்லாம் ஆன்லைன்ல கேட்டு கேட்டு கத்தி கிட்டு ஐ மீன் கத்துகிட்டு மொபைல்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன் ... அப்போ தான் இந்த soundcloud ன்னு ஒண்ணு இருக்கறது தெரிய வந்தது .... அவ்ளோதான் குஷி பிச்சிகிச்சு... ஒரே இயர் போனை மாட்டிகிட்டு அதுல ரெக்கார்டிங்  ஆரம்பிச்சேன் ... இதுக்கு நடுவில கரோக்கே ன்னு ஒண்ணு இருக்கறது தெரிஞ்சவுடனே ஜானகி அம்மா மாதிரி இருக்கற என்னோட குரலோட இனிமைக்கு இனிமை சேர்க்கற மாதிரி கரோக்கே போட்டுக்கிட்டு இயர் போன்ல ஒரு சைட் மட்டும் இயர்ல போட்டுக்கிட்டு இன்னொரு சைடை மைக் கிட்ட வச்சிகிட்டு (என்கிட்ட இருக்கற லிமிடேட் ரெக்கார்டிங் facility யை கூட எவ்வளவு மூளையை கசக்கி எபக்டிவா யூஸ் பண்ணிருக்கேன் பாருங்க...) பாடி அப்லோடிங் தான் ..... ஆனா ஒண்ணு எல்லா ரெக்கார்டிங்கையும் நான் தனியா இருக்கும் போது தான் பண்ணுவேன் ...

அன்னைக்கு மட்டும் பாருங்க காதில் இயர் போனை மாட்டிக்கிட்டே கீரையை கிளீன் பண்ணி நறுக்கிட்டு இருந்தேன் .... ராஜா சாரோட "மௌனமான நேரம் ...." ஒட ஆரம்பிச்சவுடனே அஸ் யூஷுவல் ரிக்கார்டிங் ஆசை தலை தூக்கி, அதை அடக்க முடியாம அந்த பாட்டோட கரோக்கேவை  தேடி புடிச்சு அதோட சேர்ந்து பாடிட்டு (அப்படிதான் நினைச்சேன்) இருந்தேன்....

என் பொண்ணு எங்கிட்ட இருந்து கொஞ்ச தூரத்தில சோபாலயே தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தா..... நான் பாடினதை  பார்த்திட்டு என் அருமை கணவரும் ஏதோ பாடறதா நினைச்சு ட்ரை பண்ணிருக்கார்.... அவர் பாட ஆரம்பிச்ச உடனே "அப்ப்பாஆ ப்ளீஸ்... எனக்கு தூக்கம் வருது..... பாடாதீங்க ...." அப்படின்னு கத்தினா.... அப்பவும் நான் டீசெண்டா  சிரிப்பை அடக்கிட்டு அமைதியா தான் வேலைய பண்ணிட்டு இருந்தேன் .....

உடனே அவர் "அப்போ நான் இயர் போனை மாட்டிட்டு பாடுவேன் " ....

அதுக்கு அவ "அய்யோஓஓஓ வேணாம் வேணாம் ..... அப்படியே வேணாலும் பாடிக்கோங்க "

ஹம்ம்ம்.... ஜானகி மாதிரி பீல் பண்ணி ஒரு பாட்டு ரெக்கார்ட் பண்ண முடியுதா ... எனக்கு எதிரிங்க வேற எங்கயும் இல்ல 😛 !!!

Note :
இதுல பாத்தீங்கனா ஒண்ணு கூட நம்ம ஊர் பேரு இல்ல ... நான் பாடின ஒண்ணு ரெண்டு டமில் பாடல்கள்ல என்ன புரிஞ்சு லைக் பண்றாங்கனே தெரில ... என்னே soundcloudடோட ரீச் ன்னு சொன்னா "இது ஒரு வேளை soundcloud ஆப் டெவலப்பர்ஸா இருக்கும் .... இப்படியாவது  நம்ம ஆப் யூஸ் ஆகுதேன்னு லைக் பண்ணிருப்பாங்க ..." அப்படிங்கறார் என் ஹஸ்பண்ட் 😛 !!!

Tuesday, March 7, 2017

நான் ஒரு பெண் !!!

கொஞ்சம் மாசங்களுக்கு முன்ன டெல்லி போய் இருந்தப்போ ....
நாங்கள் ஸ்டே பண்ணி இருந்த இடத்தில் இருந்து சாயங்காலம் "அக்ஷர்தாம்" போகறதுக்காக டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தோம்.... போகும் போது அவ்வளவு கூட்டமா இல்லை.... அக்ஷர்தாமில் இருந்து நைட் ஒரு எட்டரை மணிக்கு மேல் கிளம்பியபோது என்னவோ கொஞ்சம் துருக்க்ன்னு தான் இருந்தது.... இதுக்கும் கொஞ்சம் காலம் முன்னாடி வரைக்கும் வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ எட்டரை ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸ்ல இருந்து எந்த கவலையும் இல்லாம சென்னைல எலெக்ட்ரிக் ட்ரெயின்ல வீட்டுக்கு வருவேன்... ஆனால் அன்னைக்கு டெல்லில கூடவே கணவர் மாமனார் மாமியார் ன்னு எல்லாரும் இருந்தும் என்னவோ ஒரு டிஸ்கம்பர்ட்... என் பொண்ணை இறுக்கி கைய பிடிச்சிகிட்டே நடந்தேன்....

மெட்ரோ ஏறும் போது ஓரளவு தான் கூட்டமா இருந்தது.... டோர் கிட்ட இருக்கற சீட்ல (வயதானவர்கள் , நோயாளிகள் க்கு முன்னுரிமைன்னு நினைக்கறேன்....) நானும் என் பொண்ணும் உட்காந்துகிட்டோம்.... என் ஹஸ்பண்ட் எங்களுக்கு முன்னாடியே பாதுகாப்பா நின்னிட்டு இருந்தார்....  எங்க ரெண்டு பேராலயும் அந்த சின்ன கேப்ல ரொம்ப நேரம் உக்கார முடில... சோ அவ நல்ல உக்காந்துக்கட்டும்னு நான் எழுந்து  என் பொண்ணு பக்கத்துலயே நின்னுக்கிட்டேன்.... சில ஸ்டேஷன்ஸ் போனப்பறம் ஒரு வயசானவர் ட்ரெயின்ல ஏறினார்.... கொஞ்சம் மூச்சு திணறல் மாதிரி தெரிஞ்சார்..... அது வயதானவர்கள் சீட் னால என் பொண்ணை எழுப்பி அவளை என் பக்கத்துலயே கையை பிடிச்சிகிட்டே நின்னுட்டு இருந்தேன்.... கொஞ்ச நேரம் ஆனதும் என் பின்னாடி இருந்து யாரோ எங்களையே முக்கியமா என் பொண்ணையே கவனிக்கற மாதிரியே தோணிச்சு.... எதேச்சையா திரும்பற மாதிரி பின்னாடி பார்த்தேன்..... முகம் எல்லாம் ஏதோ தழும்போட தலையில துப்பட்டாவை போட்டு பாதி மறைச்சிகிட்ட முகத்தோட ஒரு பொண்ணு எங்களையே பார்த்துட்டு இருந்தா.... பகீர்ன்னு இருந்தது.... ஒரு நிமிஷத்துல பல விதமான எண்ணங்கள்.... என்னோட ஹேண்ட்பேகை பாக்கறாளா இல்லை என் பொண்ணை கவனிக்கறாளான்னு செக் பண்ண என் பேகை ஷோல்டர் மாத்தி மாட்டிகிட்டேன்…. அப்பொவும் அவ என் பொண்ணை தான் பாத்துட்டு இருந்தா.... அதுக்குள்ள வேற ஒருத்தர் எங்களுக்கும் அந்த லேடிக்கும் நடுவுல வந்தார்.... அவ அவரையும் மீறி என் பொண்ணு நின்னுட்டு இருந்த டைரக்ஷன்லயே பாத்துட்டு இருந்ததை பார்த்து அடி வயிறே கலங்கிடுச்சு.... மெதுவா பக்கத்துல இருந்த என் கணவர் கிட்ட சொன்னேன்.... அவரும் கொஞ்ச நேரம் அப்சர்வ் பண்ணிட்டு "ஆமா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.... அவ நம்மளை தான் பார்த்துட்டு இருக்கா.... பட் கவலைப்படாத..... பாத்துக்கலாம்...." அப்படினார்..... அதுக்கு அப்பறம் ஒரு பதினைந்து நிமிஷம் என்னோட ஹார்ட் பீட் எனக்கே கேக்கற அளவு ஒரு பதட்டம்.... அவ நோக்கம் என்ன.... டெல்லி மெட்ரோ பத்தி நியூஸ்ல வந்த அத்தனையும் அப்போதான் ஞாபகம் வருது.... என் பொண்ணை அந்த லேடி பாக்க முடியாத மாதிரி எனக்கு முன்னாடி இழுத்து இறுக்க அணைச்சிகிட்டே "சாய் ராம் சாய் ராம் " ன்னு  சொல்ல ஆரம்பிச்சேன்…. I was super alert  when the train stopped at every station…. Was constantly scanning if there was someone else somewhere with whom that lady might communicate…. திடீர்ன்னு வந்த அடுத்த ஸ்டேஷன்ல அந்த லேடி எங்களுக்கு முன்னாடி வந்து உக்காந்து இருந்த அந்த வயசானவரை கூட்டிட்டு ட்ரெயின்ல இருந்து இறங்கறா.... அவ அவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்த எங்க கேப்ல அந்த பெரியவரை தான் பார்த்துட்டு இருந்தான்னு அப்போதான் புரிஞ்சது.... may be she was his care taker or helper….

ஒரு நிமிஷம் அவளை என்னன்னவோ நினைச்சிட்டோமேன்னு கொஞ்சம் வெட்கமா இருந்தாலும்..... அது தான் இன்றைக்கு வெளில பெண்களுக்கு நடக்கற நிதர்சனங்கள்..... எதையுமே லைட்டா எடுத்துக்க முடியறது இல்லை பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு....

என்றைக்கு நம் வீட்டு குட்டி பெண் குழந்தைகள் எந்த வித கவலையும் பயமும் இல்லாமல் வீட்டு முற்றத்தில் விளையாட விடப்படுகிறார்களோ, ரோடில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க படுகிறார்களோ….

என்றைக்கு ஸ்கூல் காலேஜ் ஆபீஸ் போகும் பெண்களின் பாதுகாப்பை  பற்றி எந்த கவலையும் இல்லாமல் பெற்றவர்களால் இருக்க முடிகிறதோ....

என்றைக்கு பெண்களுக்கு அவர்களின் இயற்கை உபாதைகளை தீர்க்க மறைவிடம் தேடி அலைவது நின்று ஒரு பேசிக் நீடாக வீட்டில் ஒரு ரெஸ்ட்ரூம் இருக்கோ....

என்றைக்கு பெண்களுக்கு அடிப்படை கல்வியாவது கட்டாயமாக கிடைக்குதோ  (I agree today women are in every possible field and doing wonders…. But I am talking about the women who do not get even basic education)....

என்றைக்கு morphing மண்ணாங்கட்டி என்று என்ன செய்து மிரட்ட பட்டாலும் "அது எதுவும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.... நீ செய்வதை செய்" என்று துணிச்சலாக சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு determination வருகிறதோ....

பெண்கள் தினம் அன்று மட்டும் திரும்ப திரும்ப "பெண் ஒரு மகள், தாய், சகோதரி, மனைவி etc etc " என்று ஒரே மெசேஜை சொல்லாமல்,…

When a woman, a girl child is seen, treated, felt and protected as a fellow HUMAN BEING, deserving all the rights to live SAFELY in this world,  Only then Women’s Day becomes meaningful because it should not be just the celebration of social, economic and cultural achievements of women but it should be a celebration of

The proud emotion ...

“I am a WOMAN” !!!

Friday, February 3, 2017

ராங் நம்பர்ங்க !!!

எங்க வீட்டு லேண்ட் லைன் போன் ஒரு ஆறு மாசமா வொர்க் ஆகல போல இருக்கு.... என்னது எங்க வீடு ஆனா 'போல இருக்கு' ங்கறேன்னு பாக்காதீங்க.... அந்த லேண்ட் லைன் போன் ச்சும்மா கிரஹாம்பெலோட கண்டுபிடிப்புக்கு ஒரு மானுமெண்டல் ப்ரூப்பா , வீட்ல வேற எங்கயுமே ஒரு பொட்டு தூசி இல்லேன்னா அப்போ தூசி தட்டப்படும் (அப்போ இந்த ஜென்மால அது எவ்வளவு கைவிட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே தூசி தட்டப்பட்டிருக்கும்) ஒரு வஸ்து .... மோடம் மட்டும் ஓவர் டைம் செய்யும் ஒரு போன் கனெக்ஷன் ....  அவ்வ்வளவேதான்...

ஆனா எவ்வளவு தடவை 'ராங் நம்பர்ங்க' ன்னு சொன்னாலும் வாரத்துக்கு ஒரு தடவை தவறாம 'ஹலோ .... துரை இருக்கானா' ன்னு ஓர்ர்ர்ர்ரெ ஒரு கால் மட்டும் வரும்... நானும் "ராங் நம்பர் " ன்னு சொல்லி வெறுத்து போய் ஒரு தடவை "இங்க ஜாக்சன் துரை இல்லங்கோ .... கட்டபொம்மன் தான் இருக்காருங்கோ " ன்னு கூட சொல்லிப் பார்த்துட்டேன்.... ம்ம்ம்ஹ்ம்ம் நோ யூஸ் ...

கொஞ்ச நாள் முன்னாடி அதிசயமா என் அம்மா, தங்கை எல்லாருமே என்னவோ லேண்ட் லைன்க்கு போன் பண்ணி பாத்திட்டு "என்னடி லேண்ட் லைன் வொர்க் ஆகலையா... " ன்னு கேட்டப்ப தான் "அந்த துரை" கால் ரொம்ம்ம்ப நாளா வரலைங்கறதே உறைச்சுது..... நானும் ரொம்ப மெனக்கெட்டு கனெக்ஷன் செக் பண்ணலை .... அதான் வீட்டுல நூறு மொபைல் போன் இருக்கே ....

இப்போ ஆசைக்காக ஒரு பழய மாடல் retro போன் வாங்கினவுடனே தான் அந்த லேண்ட் லைன் ஞாபகம் வந்து போனை ஆராய்ச்சி பண்ணேன்... போன்ல டிஸ்ப்ளேயே வரலை... அப்போ போன் தான் பால்ட்ன்னு முடிவு பண்ணி retro போனை கனெக்ட் பண்ணினேன்..... அதுவும் வரலை... "பாருங்க இது ஷோபீஸ் தான் போலருக்கு ... வொர்க் ஆகலை" ன்னு இவர்கிட்ட சொன்னா என்னை முறைச்சிட்டு பழய போனை செக் பண்ணார்.. பேட்டரியே இல்ல அதுல ... "இதுதான் நீ செக் பண்ண லக்ஷணமா" ங்கற மாதிரி என்னை லுக் விட்டார் .... "ஆமாப்பா ரொம்ம்ம்ப நாள் முன்னாடியே அந்த பேட்டரியை என்னோட டாக்கிங் பேர்ட்க்கு போடறதுக்கு நான் தான் எடுத்தேன் " அப்டின்னா பொண்ணு... "ரெண்டு போனும் வொர்க் ஆகலைனா லைன்லயே பால்ட்டா இருக்கும் .... அது புரியாம இதை ஷோ பீஸ்ங்கற " அப்டின்னு என்னோட இமேஜ டேமேஜ் ஆயிடுச்சேன்னு பீல் ஆயிட்டேன் ... ஓகே கம்மிங் டு தி பாயிண்ட் ....

அப்பறம் bsnl கம்ப்ளெயிண்ட் கொடுத்து ஒரே நாள்ல லைன் பால்ட்ட  கரெக்ட் பண்ணிட்டாங்க .... retro போனை கனெக்ட் பண்ணா டயல் டோன் வருது... இவருக்கு கால் பண்ணி "சூப்பரா வொர்க் ஆகுது " ன்னு சொன்னேன் .... "இரு நான் திருப்பி கால் பண்ணி இன்கம்மிங் செக் பண்ணறேன்" ன்னு சொன்னாருன்னு போனை வச்சேன்..... உடனே "ட்ரிங்க்க்க் ட்ரிங்க்க்க்க் " ன்னு உச்சஸ்தாயில அலறுது.... வேகமா எடுத்து "வொர்க்கிங் ..." ங்கறேன் ....

அந்த சைடுல இருந்து "ஹலோ..... துரை இருக்கானா " !!!

இந்த கதையை காமெடியா எழுதினாலும் , ஒரு மூணு வருஷமா இந்த நம்பரை அவங்க துரையோட நம்பர்ன்னு நினைச்சு கால் பண்ணிகிட்டே இருக்காங்களே... அப்போ மாறின தன்னோட போன் நம்பரை அந்த துரை அவங்களுக்கு இன்னமும் தரலைன்னு தானே அர்த்தம் .... "துரை இருக்கானா " அப்டின்னு மாத்தி மாத்தி கேக்கற அந்த வயதான குரல்களை நினைச்சா .........

Friday, January 27, 2017

எல்லா புகழும் இறைவனுக்கே !!

காலைல ஆறு மணிக்கு எழுந்து பக்கத்து வீட்டு ரூபா அதுக்கு முன்னாடியே எழுந்து அப்படி என்னதான் படிப்பான்னு யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, கஜானனம் சுலோகம் சொல்லி, நாலு சென்டிமீட்டரே இருந்த ஷாலினி கிராப்பை (உபயம் எங்கப்பா அண்ட் தெருமுனை சலூன்கார்ர்ர்) நூறு தடவை வாரி வாரி ஒரு ஸ்லைடை குத்தி, பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு பேபி ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) தலை ஆட்டி ஆட்டி சொல்லி, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது மூணாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... பர்ஸ்ட் ரேங்க் ஆமா...

காலைல ஆறு மணிக்கு எழுந்து கங்காபாய் மேம் சொல்லித்தந்த மராத்திய நினைச்சு கண்ணீர் விட்டுட்டே, அப்படி மராத்தி லெட்டர்ஸ்லயே தந்தி அடிக்கற நான் போய் மராத்தில கட்டுரையே எழுதணுமேன்னே யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, பத்து சென்டிமீட்டர் இருந்த முடியை நூறு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு வளர்ந்த ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) பின்னலை முன்னாடி பின்னாடின்னு மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது அஞ்சாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... ஆனா பர்ஸ்ட் ரேங்க் இல்லை ஆமா... பின்ன மராத்தியே தெரியாதே அப்போ அதுல ஜஸ்ட் பாஸ் தான ஆக முடியும் (அப்போ ஹிந்தி மட்டும் தெரியுமா ... அதுல நூத்துக்கு நூறானெலாம் தயவு செஞ்சி கேட்டுடாதீங்க ... அதுலயும் ததிங்கிணத்தோம் தான் ஸ்டில் பெட்டர் தான் மராத்தி)

காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் மலையை பார்த்த மாதிரி உக்காந்து சிவபெருமானை தியானம் பண்ணிகிட்டே ஒரு அரை மணி நேரம் படிச்சிட்டு,  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, இருபது சென்டிமீட்டர் இருந்த முடியை நாலு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு யாரை மாதிரியும் நினைச்சுக்காம என்னோட ஸ்டைல்லயே பவ்யமா சொல்லிட்டு, டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, போய் எழுதினது டென்த் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... திஸ் டைம் சிவா ஆல்சோ ஹெல்ப்ட்....  சோ நல்ல மார்க் தான்...

காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் வானத்தை பார்த்து  உக்காந்து சூர்ய பகவானை தியானம் பண்ணிகிட்டே ஒரு மணி நேரம் படிச்சிட்டு,  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, என்னோட நாப்பது கிலோ ஸ்கூல் பாவாடையும் அப்பாவோட பெரிரிரிய ஷர்ட்டையும்  போட்டுக்கிட்டு தெருமுனை பிள்ளையார் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் சுத்து சுத்துன்னு ஒரு முப்பது சுத்து சுத்திட்டு, முப்பது சென்டிமீட்டர் இருந்த முடியை ஒரு தடவை கூட சரியாய் வாராம ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் (இது மட்டும் காலேஜ் ஹாஸ்டல் போற வரைக்கும் மாறலை) சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "யெஸ்ஸ்ஸ்" ன்னு (கான்பிடன்ட்டா இருக்கேனாமாம் ... ) பெரிய்ய மனுஷியா சொல்லிட்டு,  டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, கூடவே கொஞ்சம் குங்குமமும் சேர்த்து வெச்சிக்கிட்டு போய் எழுதினது ப்ளஸ் டூ எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... கூடவே ஆஞ்சி வேற ... சோ கேட்கணுமா...

நல்லா தான் போயிட்டு இருந்தது இது வரைக்கும்......
அப்பறம் தான் ....
....
மறுநாள் எக்ஸாம்க்கு முதல் நாள் புல்லா ஸ்டடி லீவ் இருந்தாலும் புக்கை பூஜைல வெச்சிட்டு, பகல்ல நல்லா தூங்கிட்டு , சாயங்காலம் இருந்த அரை அடி கூந்தலை (ஹோம் சிக்ல முடி எல்லாம் கொட்டி போச்சு) சும்மா கட்டிக்கிட்டு , அந்த டீ தண்ணிய (பின்ன காபி தண்ணின்னு சொல்லலாம்.... உண்மையாவே தண்ணியா இருக்கற ஹாஸ்டல் டீயை சொல்ல கூடாதா), குடிச்சிட்டு அங்க இருந்த ஆபத்பாந்தவன் பிள்ளையார் கோவிலுக்கு போய் ஒரு நாப்பது சுத்து சுத்திட்டு, திரும்ப ஹாஸ்டல் வந்து, மறக்காம அங்க வந்து பொறி விக்கறவர் கிட்ட கார பொறி வாங்கி சாப்பிட்டு (இந்த ரண களத்துலயும் உனக்கு கார பொறி கேக்குதான்னு மட்டும் தெரியாம கேட்டுடாதீங்க .... அது சென்டிமென்ட .. பொறி சாப்டா அடுத்த நாள் எக்ஸாம் சும்மா பொறி பறக்க வெளுக்கற அளவு ஈஸியா வரும்னு .... it was a proven fact in those 4 years), அப்பறமும் திருந்தாம டின்னரையும் சாப்பிட்டு அலப்பறை விட்டுட்டு காரிடார்ல சுத்திட்டு, ராத்திரி புல்லா காலைல 5 மணி வரைக்கும் படி படின்னு அந்த புக்கை வெச்சி செஞ்சிட்டு,  காலைல ஆறு மணிக்கு இல்ல எட்டு மணிக்கு எழுந்து சுத்தமா படிச்ச மாதிரியே இல்லாம மண்டையெல்லாம் ஒரே பிளாங்க்கா, முழிச்சிகிட்டே பல்லை தேய்ச்சு (ஆனாலும் கூலா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன் இல்ல ),  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி ப்ளஸ் ஒரு நாலு a4 ஷீட்ல எழுதி வெச்சிருக்கற எல்லா ஸ்லோகத்தையும் சொல்லி, தலை வாருவது எல்லாம் ஒரு வேலையான்னு அதை குழாயடி சண்டைக்கு போறவ மாதிரியே அள்ளி முடிஞ்சிகிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்க ஹாஸ்டல்ல அப்பா இருப்பாரா என்ன... சோ நானே வரிசையா பிள்ளையார் கோவில் விபூதி, பாபா விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் செந்தூரம் (இதையெல்லாம் கரெக்ட்டா கலெக்ட் பண்ணி வெச்சிருப்பேன்.... பிரெண்ட்ஸ்க்கும் சாமியாடி ரேஞ்சுக்கு நானே மந்திரிச்சு வெச்சு விடுவேன்) எல்லாத்தையும் வெச்சிக்கிட்டு மேல்மருவத்தூர் ச்ச டங் ஸ்லிப் எக்ஸாம் ஹாலுக்கு போய் எழுதினது எஞ்சினீரிங் எக்ஸாம் .... அப்பப்பா இவ்வளவு பேர் இருந்தாங்கல... சோ எப்படியோ காப்பாத்திட்டாங்க...

இப்படியாக ஒரு வழியா எக்ஸாம்ஸ்க்கு ஒரு பெரிய முழுக்கை போட்டு படிப்பை முடிச்சிட்டேன் (வேணும்னா மேல படிக்கலாம்.... பட் இந்த கதையை படிச்ச உங்களுக்கே புரிஞ்சுருக்குமே )...

இப்போ போன மாசம் முதல் ஹிந்தி எக்ஸாம் (ஸ்கூல்ல ஆறாவது வரைக்கும் நோ எக்ஸாம்ஸ்... நல்லா இருக்குல்ல ).... சோ "    I am soooo excited maa… this is my first exam…” அப்படினெல்லாம் சொல்லிட்டு, என்னை மாதிரி இருக்க மாட்டா கொஞ்சம் சீரியஸா தான் இருக்கான்னு நினைக்கற மாதிரி நைட் படிச்சிட்டு தூங்கிட்டு, காலைல ஏழு மணிக்கு எழுந்து , மெதுவ்வ்வ்வா ஏதோ யோசனை பண்ணிகிட்டே (சேம் ப்ளட்) பல்லை தேய்ச்சி, குளிச்சு, டிரஸ் போட்டுக்கிட்டு , நேரா புக் ஷெல்ப் திறந்து தேடிடி ஒரு அமர் சித்ர கதா புக் (மஹாபாரதம்) எடுத்து மெனக்கெட்டு ஏதோ பேஜை திறந்து அதை படிக்க ஆரம்பிச்சா... "ஹே சுலோகம் (because that is the most important part of exams you see) ஏதாவது சொல்லுடி..." ன்னு நான் சொன்னதுக்காக இருந்த இடத்துலயே வேகவேகமா என்ன சொன்னான்னே புரியாம ஏதோ ஒண்ண சொல்லிட்டு "சொல்லிட்டேன்மா..." ன்னு மறுபடியும் மஹாபாரதம் படிக்க ஆரம்பிச்சாளே பாக்கணும் .... நானே ஷாக் ஆய்ட்டேன்னா பாத்துகோங்களேன் ...

பின் குறிப்பு:
இதெல்லாம் கூட பரவால்ல .... ஆனா வீட்ல ஒருத்தர் ஆபீஸ் போயிட்டு வந்து மறுநாள் எக்ஸாம்க்கு நைட், கொட்டாவி விட்டுக்கிட்டே, இந்த கண் இமையெல்லாம் குச்சி வெச்சு ஓபன் பண்ணிக்கிட்டு தெய்வமேங்கற மாதிரியே பாவமா  படிக்க ஆரம்பிக்கறப்போ.... இந்த பக்கம் என் பொண்ணு ஏதோ கதை புக்கும், அந்த பக்கம் நான் "மங்கையர் மலரும்" படிப்போமே... இந்த அக்கிரமத்தை கேக்க யாருமே இல்லையாங்கற மாதிரியே எங்க ரெண்டு பேரையும் பாக்காதீங்க... அவருகிட்ட எல்லா ஸ்லோகமும் இருக்கற a4 ஷீட்டை கொடுத்துட்டேன்.... எல்லா புகழும் இறைவனுக்கே !!

Tuesday, January 24, 2017

மேரேஜ் கிப்ட்....

"சரி ... எனக்கு மேரேஜ் கிப்ட்டா என்ன தரப்போற..."

"அடிப்பாவி.... லவ் பண்ணப்போ தான் உன் பர்த்டே, என் பர்த்டே, இன்னைக்கு ஐம்பதாவது சண்டே, நாளைக்கு நூறாவது மண்டேன்னு எதுக்கெடுத்தாலும் கிப்ட்டா கேட்டு இம்சை பண்ண.... இப்போ கல்யாணம் நடக்க போறது நம்ம ரெண்டு பேருக்கும் தான் .... அது என்ன இப்பவும் நாந்தான் உனக்கு தரணுமா...  நீ எனக்கு தரக்கூடாதா...."

"உனக்குள்ள இவ்வளவு பீலிங்கா இருந்தது... நான் உன்னை உரிமையா கேட்டேன்..."

"ம்ம்ம்ஹும்ம்  .... இந்த கதையே வேண்டாம்.. என்ன நடந்தாலும் சரி இந்த தடவை நான் தரப்போறதில்லை...  நீதான் எனக்கு கிப்ட் தர...."

"ஓகே ஓகே... உனக்கு கிப்ட் தான வேணும்..... என்ன வேணும் கேளு..."

"ஹேய்ய் இத்தனை நாள் நான் உனக்கு என்ன வேணும்னு கேட்டா வாங்கித் தந்தேன்... எவ்வளவு மண்டைய பிச்சிகிட்டு ஒவ்வொரு தடவையும் உனக்கு வாங்குவேன் தெரியுமா.... ஒரு தடவை நீ அனுபவி அப்போ தெரியும் அந்த கஷ்டம்..."

"சும்மா ஒரு பொக்கே, புக் இதுக்கெல்லாம் மண்டைய பிச்சிகிட்டா??...  ம்ம்க்க்கும் ... ரொம்ப தான் பேசற... சரி இப்போ என்ன மேரேஜ் கிப்ட் நான் உனக்கு தரணும் அவ்ளோதானே... வெயிட் அண்ட் சி..."

கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் எந்த கிப்ட்டும் வரலை... அவனுக்கு ஒரே ஆர்வம்..."ஹே... என்ன கிப்ட் தரேன் அது இதுன்ன... ஒண்ணையும் காணோம்..."

"நான் தான் வெயிட் அண்ட் சி ன்னு சொன்னேன் இல்ல... இப்போதான கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் ஆயிருக்கு... பொறுமையா இரு... "

அப்படி என்ன வாங்கறா ஒரு வாரமா...

"இது பார் உனக்கு என்னோட மேரேஜ் கிப்ட்... "ன்னு சொல்லிட்டே அவள் நீட்டிய கவரை பார்த்து "என்ன இது... இதுக்கு தான் இவ்வளவு நாளா " ன்னு சிரிச்சுகிட்டே பிரிச்சான்...  உள்ளே கிப்ட் வவுச்சர் ....

"என்ன முழிக்கற.... நீதான் மண்டைய பிச்சிகிட்டு எனக்கு வாங்கித் தருவ.... நான் பாரு எவ்வளவு இன்டெலிஜென்ட்டா உனக்கு கிப்ட் கார்டு கொடுத்து இருக்கேன்.... உனக்கு என்ன வேணுமோ நீயே வாங்கிக்கலாம் பாரு..." அப்படின்னு சிரிச்சா...

சரின்னு அதை எடுத்துட்டு லைப் ஸ்டைல் போனா "திஸ் கார்டு இஸ் ஒன்லி பார் விமன் பேஷன் அஸஸரீஸ் அண்ட் காஸ்மெட்டிக் ப்ராடக்ட்ஸ் சார் ...." னானே பாக்கணும் ...

தெளிவாத்தான் இருக்காங்க 😛 !!

Monday, January 16, 2017

அம்மான்னா சும்மாவா !!!!

இந்த கால யங் பேரன்ட்ஸ் முக்க்கியமா அம்மாக்கள் (ஏன்னா அப்பாக்கள் இப்பவும் கொஞ்சம் கூலா தான் இருக்காங்க ங்கறது  என்னோட தாழ்மையான அபிப்பிராயம் ... அம்மாக்கள் என்னை அடிக்க வராதீங்க .. நாம எப்பவுமே ரொம்ம்ம்ப பொறுப்பானவங்கன்னு சொல்ல வந்தேன்) பதட்டத்தை (anxious parenting) குறைக்க, செய்யவே கூடாததுன்னு சில விஷயங்களை வெச்சுக்கணும்னு எனக்கு தோணுது (காரணம் இதுல சிலதை  நானும் செஞ்சு அது எல்லாம் என்னை வெச்சு செஞ்சுடுச்சு)

முதல்ல எதுக்கெடுத்தாலும் Mr கூகுளை போய் கருத்து கேக்கறது... குழந்தைக்கு நாப்பி மாற்றுவது எப்படி, செர்லாக் கலக்குவது எப்படி, அதை ஊட்டுவது எப்படி, தூங்கவைப்பது எப்படி, குழந்தையை அழ வைப்பது ..ச்சை  நாக்கு குளறிடுச்சு .. அழாமல் இருக்க வைப்பது எப்படி, கொஞ்சுவது எப்படி , திட்டுவது எப்படி.... இப்படி பல பல எப்படிகள்.... நாமளானா வீட்ல இருக்கற நம்ம பாட்டிஸ் எல்லாம் "ஒண்ணும் இல்லடி... வயத்து வலினா தொப்புளை சுத்தி கொஞ்சம் எண்ணையை தடவு ..." ன்னு சொல்றதை எல்லாம் துச்சமா நினைச்சு எங்கயோ எத்தியோப்பியால இருக்கற பாட்டி "ஹோம் ரெமடிஸ்" ங்கற பேர்ல அதே எண்ணெய் தடவும் டெக்னிக்க சொல்ல அதை செய்வோம்.... இதுல என்னடானா கூகிள் இதுக்கெல்லாம் சைல்டு சைக்கியாட்ரிஸ்ட்ஸ் கிட்ட இருந்தோ சைல்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ஸ் கிட்ட இருந்தோ கருத்தை எடுக்காம,  நம்மள மாதிரியே எக்ஸ்பர்ர்ர்ட்(???) பேரன்ட்ஸ் கிட்ட இருந்து எக்ஸ்பர்ட் அட்வைஸாஆ அள்ளி கொட்டும்.... அதை படிச்சிட்டு நம்ம குழந்தை நார்மலா பண்ற விஷமத்தை கூட "ஹைப்பர் ஆக்டிவ்", "அடன்ஷன் டெபிசிட் டிஸார்டர்"  அச்சா பூச்சா ன்னு பெரிய ப்ரச்சனையா நினைச்சு நமக்கு பிபி, டிப்ரெஷன், ஹிஸ்டிரியான்னு வர வெச்சுப்போம்... பாவம் குழந்தை நம்ம டிஸ்ஆர்டர பாத்து ஒண்ணும் புரியாம முழிக்கும் (இன்னும் கொஞ்ச நாள்ல மேனேஜிங் பேரன்ட்ஸ்ன்னு கூகிள் பண்ணி பாத்தாலும் பாக்கும்)...

இது எல்லாத்தையும் விட ரொம்ம்ம்ம்ப முக்கியமான த்ரெட்டா நான் பாக்கறது, இப்போ நெட்ல உலா வர்ற நிறைய டெர்மினாலஜிஸ்.... full time at home mother, stay at home mother (SAHM), working mother, working part time mother (sorry part time working mother ) இப்படி... அட என்ன கொடுமை வேலைக்கு போனாலும் வீட்ல இருந்தாலும் அம்மாங்கறது முழு நேரமும் தான... எங்கயாவது working father, part time working father பார்த்து இருக்கறோமா .... அப்பறம் என்ன full time at home mother... இந்த ஒரு விஷயம் மட்டுமே அம்மாங்கற நம்ம கான்பிடன்ஸை பெருசா அசைச்சு பாக்கற விஷயமா தான் எனக்கு தோணுது.... இதுல quantity time and quality time மாம்.... இது எல்லாம் கொடுக்கற ப்ரெஷர் இருக்கே .... சேப்டி வால்வ் ரிப்பேர் ஆன ப்ரெஷர் குக்கர் மாதிரி ரொம்ம்ம்ப ஆபத்தானது நம்ம ஹெல்த்துக்கு ..... வீட்ல இருக்கற அம்மாக்களுக்கு வெட்டியா இருக்கோமோன்ன பீலிங்கும், வொர்க் பண்ற அம்மாக்களுக்கு ஓர்ர்ரே கில்ட்டி பீலிங்கும் தர தான் இப்படி பட்ட forums discussions லாம் ஹெல்ப் பண்ணும் மத்தபடி பேரன்டிங் டிப்ஸ் எல்லாம் தராது ங்கறது தான் நான் நினைக்கறேன் (i know this because i was a working but a full time at home(!!!) mother now...)..எப்படிப்பட்ட மதரா இருந்தாலும் நாம ஒரு நாள் வீட்ல இல்லைனா வீட்ல இருக்கறவங்க நிலைமையும் அதை விட வீடு (தலைகீழா ) இருக்கற நிலைமையும் நினைச்சாலே நம்ம இம்பார்டன்ஸ் நமக்கு தன்னால புரிஞ்சுரும் ... அப்பறம் இந்த SAHM , full time, part time mother ங்கறதெல்லாம் நம்ம ப்ளட் பிரஷரை ஒண்ணும் பண்ண முடியாது... நாம தான் வீட்ல இருக்கறவங்க பிரஷரை ஏத்துவோம் ஓவர் கான்பிடன்ஸ்ல ...வேலைக்கு போறதும் வீட்ல இருக்கறதுக்கு ஒவ்வொருத்தர் குடும்ப நிலைமை, ஹெல்த் நிலைமை, பெர்சனல் ரீஸன்ஸை பொறுத்து செய்யறது ... it has nothing to do with our ability,intelligence and importantly mothering skills...

அடுத்தது சிங்கிள் சைல்டு அண்ட் sibling ஓட வளரும் சைல்டு.... அதை பத்தி வர்ற ஆர்டிகல்ஸ் போரம்ஸ் டிஸ்கஷன்ஸ் .... இந்த கவலை இருக்கே அது இன்னொரு தலையை தின்னும் பெரும் ப்ரச்சனை.... அகைன் சிங்கிளா அமையறதும் அதுக்கு மேல அமையறதும் அவங்க அவங்க நிலைமையை பொறுத்தது.... முக்கியமா கடவுள் கொடுக்கும் வரம்.... எப்படி இருந்தாலும் அது நன்மைக்கே ன்னு நினைச்சு அமைதியான பதட்டம் குறைந்த நல்ல ரோல் மாடல் அம்மாவா இருந்தாலே குழந்தை நல்லா வளரும் ... இதை கேரிங் ஷேரிங் எல்லாம் நாம சொல்லிக்கொடுக்க சொல்லி கொடுக்கவே வளரும்னு தான் தோணுது.... இதை எல்லாம் படிச்சிட்டு குழந்தையோட எதிர்காலம் பத்தி   ரொம்ம்ம்ப  கவலை படாம பாஸிட்டிவா இருந்தாலே லைஃப் நல்லா இருக்கும்...

அடுத்து வருவது ஸ்கூல் ஹண்ட்.... ஓர்ர்ர்ர்ரெ ரெவ்யூஸ் படிச்சிதான் செலெக்ட் பண்ணுவோம்.... இதுல பாத்தா ஒரு சைட்ல ஒரு ஸ்கூலை திட்டுவாங்க அதே ஸ்கூல இன்னொரு சைட்ல சூப்பர்ம்பாங்க .... நாமளான மண்டைய பிச்சிகிட்டு இன்டர்வ்யூக்கு குழந்தையை தயார் படுத்துவோம் .... அப்போதான் நமக்குள்ள இருக்கற ஷேக்ஸ்பியர், ரென் அண்ட் மார்ட்டின் எல்லாம் வெளிய வருவாங்க.... ஸ்கூல் சேர்த்துட்டு ஓரொரு மீட்டிங்கிலேயும் பேரன்ட்ஸ் ஒரே பதட்டமா டிஸ்கஸ் பண்ணுவோம் குழந்தை வாங்கின கிரேட் பத்தி.... போன் பண்ணி பண்ணி எல்லா பேரன்ட்ஸ் கிட்டயும் கருத்து கணிப்பு எடுப்போம்.... ஸ்கூல் செலக்ட் பண்றதெல்லாம் தப்பு இல்ல ஆனா அதுக்கப்பறம் ஓரொரு விஷயத்துக்கும் ஓவரா ரியாக்ட் பண்றதுதான் நம்ம பிபியை ஏத்தும்....  அப்பறம் எக்ஸ்டரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்ன்னு இருக்கற எல்லாத்துலயும் போய் சேக்கறது.... சேக்கறது தப்பு இல்ல.... ஆனா எதுலங்கறது தான் முக்கியம்.. பாவம் குழந்தை நல்லா வரையும் நாம போய் பாட்டுல சேப்போம்... நல்லா பாடும் நாம போய் ஆட வெப்போம்..... அந்த காலத்துல எல்லாருக்கும் எல்லா க்ளாஸ்லயும் சேக்கற அளவு வசதியும் இருக்காது இவ்வளவு க்ளாஸசும் இருக்காது ... ஸ்டில் சில்ட்ரன் வேர் கான்பிடண்ட் ன்னு தோணுது... அதை விட முக்கியமா பேரன்ட்ஸ் வேர் கான்பிடண்ட்... அதனால தான் நாமயெல்லாம் ரொம்ம்ம்ம்ப யோசிக்கற புத்திசாலியா வளந்துட்டோம்....

இதெல்லாம் விட நாம ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைனாலும் நம்ம பேரண்ட்ஸ்க்கு இருந்த ஒரு முக்கியமான விஷயம் நம்ம ஜெனரேஷன்க்கு அவ்வளவா இல்லைன்னு எனக்கு தோணற ஒரு விஷயம்.... லைஃப் ல நம்பிக்கை ... கான்பிடனஸ் ... நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நினைக்கற அந்த பக்குவம்.... may be life was simple and there was no much job tension , job insecurity etc those days... But now apart from stress, job insecurity we have one more thing called desire... எதையோ துரத்திக்கிட்டே ஓடறோம் ... ஆனா அது என்னன்னு கேட்டா சொல்ல தெரியாது...

சோ பாசிட்டிவ் ஆட்டிட்யூடை வளர்ப்பது எப்படின்னு Mr கூகிளை நான் கேக்க ஆரம்பிச்சுட்டேன் (இன்னும் முழுசா திருந்தல.... ஸ்டில் இன்  த ப்ராஸஸ் 😉) !!!!

Tuesday, January 3, 2017

நல்ல டெயிலர் அமைவதெல்லாம்ம்ம்.....

வாழ்க்கைல எவ்வளவோ விஷயங்கள் நல்லா அமையலாம்.... அமையாம போலாம் .... ஆனா இந்த டெயிலர் அமையறது இருக்கே .... அப்பப்பப்பா.... அது உண்மையாவே இறைவன் கொடுத்த வரம் தான் .... எனக்கும் துணி தச்சு போட்டுக்கறதுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்..... ஜாதகத்துல தச்ச துணி போட்டுக்கற கட்டத்துல  தோஷம்னு நினைக்கறேன்... ஏன் ஜாதகத்தையெல்லாம் இழுக்கறேன்னு கேக்கறீங்களா... சொல்றேன் இருங்க ...

எனக்கு தெரிஞ்சு கடைசியா எனக்கு ஒரு டெயிலர் தச்சு பிரமாதமா இருந்த சல்வார் கம்மீஸ் நான் மூணாவது படிக்கும் போது .... அப்போவே என் அப்பா ஒரே ட்ரெண்டியா தான் ட்ரஸ் வாங்கித்தருவார்....  சல்வார் கம்மீஸ் ஸ்டையில் ஸ்டேட்மெண்டா இருந்தப்போ ஒரு கிரீம் அண்ட் பிங்க் சல்வார் கம்மீஸ் துணிய மேட்டுபாளையத்துல வாங்கி குடும்பத்தோட பஸ் ஏறி கோயம்புத்தூர் போய் அங்க ஒரு டெயிலர் கிட்ட கொடுத்து ஒரு பத்து நாள் தூக்கத்துல எல்லாம் ஒரே ஆஷா பரேக், மும்தாஜ் , ஹேமமாலினி மாறி இமாஜின் பண்ணி (including தட் மண்டை மேல கொண்டை ... ஆனா எனக்கு அப்போ பாய் கட் ) அப்பறம் திரும்ப பஸ் ஏறி போய் அதை வாங்கிட்டு வந்து துப்பட்டாவை ஏகப்பட்ட மெத்தட்ல மாத்தி  மாத்தி போட்டு அடுத்த ஒரு வருஷத்துக்கு எல்லா கலர் ட்ரஸ் சாட்டர்டே ஸ்கூல் , கல்யாணம், காது குத்து, தீபாவளி (ஆமா காலைல புதுச போட்டுட்டு ஈவினிங் சல்வார் ), பொங்கல், கடைவீதிக்கு போறதுல இருந்து தெருமுனை மளிகை கடை வரைக்கும் அது தான் மை காஸ்ட்யூம் ... அதுவும் எவ்வளவுதான்  தாங்கும் பாவம் .... நொந்து போய் நார் நாராடுச்சு..... I still pity that lovable salwar ...

அதுக்கு அப்பறம் மோஸ்ட்லி ரெடிமேட் தான் கொஞ்ச வருஷத்துக்கு .... டெயிலர் ஒன்லி பார் ஸ்கூல் யூனிபார்ம் .... ஆனா நான் தான் வருஷா வருஷம் ஊர் ஊரா சுத்தி ஏகப்பட்ட ஸ்கூல்கள்ல படிச்சேன்னே .... ஆனாலும்  சொல்லி வெச்ச மாறி ஆல் டெயிலர்ஸ் சொதப்புவாங்க... யூனிபார்ம்ல எப்படிங்கறீங்களா..... ஸ்கூல்ல ஸ்கர்ட்ன்னா பாவாடையா தெச்சு வரும்.... ஸ்கூல்ல பினபார்ன்னா ஷிம்மியா வரும் .... சுடிதார்ன்னா அங்கியா வரும்.... oh my god i am very thankful to all my class friends who tolerated my look ....

அடுத்து தாவணி பருவம்..... ஸ்கூல் யூனிஃபார்ம் தான் .... அதுவே கரும்பச்சை பாவாடை மஞ்சள் பிளவுஸ் கிளிப்பச்சை தாவணின்னு செம்ம்ம்ம்ம காமெடியா இருக்கும் .... இதுல நீளமா பாவாடை ஆனா அதுக்குள்ள ஒரு அடிக்கு டக்கு (எதுக்குன்னே இப்போ வரைக்கும் எனக்கு புரில... ஒரு வருஷத்துல அவ்வ்வ்வளவா வளருவேன்... ) அதுவும் படு கனமான பெட்ஷீட் துணி.... அதை போட்டுக்கிட்டு வெயிட் கீழ இழுத்ததுல ஷோல்டர்ல கூன்னே விழுந்துடுச்சு..... பாவம் அதை வாஷ் பண்ண எங்க அம்மா ( என் பொண்ணுக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ற நான் ஒரு நாள் கூட எங்கம்மாக்கு ஹெல்ப் பண்ணலையேன்னு இப்போ ஒரே பீலிங்) ... பாவாடை இப்படின்னா பிளவுஸ் ஒரே தொள தொள.... பின்ன பாவாடைல  டக்குன்னா பிளவுஸ்க்கு மட்டும் வேண்டாமா... ஆனா கொடுக்கற துணியவே அடிக்கற டெயிலர்களுக்கு மத்தியில் (no offense please) எக்ஸ்டரா துணிய போட்டு தச்ச டெயிலர் அண்ணாக்கு கோவிலே கட்டலாம்....

அப்போ தான் நாமளே தைக்கலாமேன்னு அம்மாகிட்ட பேப்பர் கட்டிங் வாங்கி அவங்களுக்கு பிளவுஸ் தைக்கறதுல ஆரம்பிச்சேன் .... வாட் அ மிராக்கிள் .... அவங்க அளவுக்கு தைச்சது கடைசியில என் அளவுக்கு இருந்தது .... அதுக்கு மேல ஸ்க்ரீன் தலைகாணி கவர  தவிர எதுவும் தைக்க மாட்டேன்ன்னு சபதம் எடுத்துட்டேன்... வேற வழி ...

அப்பறம் சுடிதார் ..... வெச்சு போடலாம் வெச்சு போடலாம்னு கொஞ்சம் லூசா தைக்க சொன்னா டபிள் த சைஸ்ல வரும்... அந்த ராசில தான் இப்போ டபிள்  த சைஸ்ல இருக்கேனோ என்னவோ .... சரி பிட்டிங்கா தைங்கன்னு சொன்னா கைல முட்டிக்கு மேல நுழையாது..... அசையவே முடியாது .....  சுடிதார்க்கெல்லாம் ரெண்டு மூணு தையல் போட்டு வேணும்னா பிரிச்சுக்கற மாதிரி தைச்சுக்கிட்டவ நான் ஒருத்தியாதான் இருப்பேன் ... what an idea madamji...  அதுகூட பரவால்ல நான் கொடுத்த துணியில் டாப்சும் வேற யாரோ கொடுத்த துணியில் பேண்டும் வரும்.... வாட் அ கொடுமை பாருங்க....

என் கல்யாணத்துக்கு பிளவுஸ் தைக்க பிள்ளையாருக்கு 108 தேங்கா, ஆஞ்சநேயருக்கு வடைமாலை , அம்பாளுக்கு 108 பிரதக்ஷிணம் (கூடவே நீயும் ஒரு பெண் தானேன்னு வேண்டுதல்....) ன்னு எல்லாம் பண்ணி சீட்டு குலுக்கி போட்டு ஒரு டெயிலர கண்டுபிடிச்சு எப்படியோ எல்லா கடவுளும் காப்பாத்திட்டாங்க..... ஆனா அதுக்கு அப்பறம் ஒரே மாசத்துல அந்த மஹானுபாவர் (டெயிலர் தான் ) ஊரை விட்டே போயிட்டார்.....

அப்பறம் ஒரே டிஃபரெண்ட் டைப்ஸ்  ஆப் லூஸா இருக்கற ரெடிமெட் பிளவுஸ் போட்டு ஸாரி கட்டற ஆசையே போயிடுச்சு (என்னை சுத்தி இருக்கறவங்க ரியாக்ஷன் பாத்துதான்)... சுடிதார்களாம் ஸ்டிச்சிங் மூச் நினைக்கறதே இல்ல..... ஒன்லி மெகாமார்ட் பாண்டலூன் குர்தா தான் ....

இப்போ லேட்டஸ்ட்டா ஒரு நல்ல டெயிலர கேள்விப்பட்டு என்னோட கசின் கல்யாணத்துக்கு ரிஸ்க் எடுத்து பிளவுஸ் தைக்க கொடுத்தேன் .... சும்மா சொல்லக்கூடாது .... ரொம்ம்ம்ப வருஷத்துக்கு அப்பறம் சூப்பரா தைச்சு வந்தது .... போட்டு பாத்திட்டு ஒரே சந்தோஷம் ..... ஒரு வாஷ் பண்ணிட்டு அயர்ன் பண்ணலாம்ன்னு அயர்ன் பாக்ஸை வச்சேன் பாருங்க... புஸ்ன்னு ஒரு சவுண்ட்.... பின்ன சில்க் காட்டன் துணின்னு மறந்துட்டு புல்  ஹீட்ல அயர்ன் பாக்ஸை அது மேல வச்சா தீஞ்சு போகாம ....

இப்போ சொல்லுங்க இது ஜாதகத்துலயே இருக்கற ஸ்டிச்சிங் தோஷம் தான !!!