Tuesday, May 31, 2016

பயணங்கள் முடிவதில்லை
சிரித்து முடிக்க முடியாத மகிழ்ச்சிகள் இருக்கும் வரை
சொல்லப்படாத துயரங்கள் வருத்தும் வரை
கொண்டாடும் வெற்றிகள் இருக்கும் வரை
அது தரும் போதை தீரும் வரை 
கொடுத்து முடிக்கப்படாத முத்தங்கள் இருக்கும் வரை
தலை கோதும் விரல்கள் விலகாத வரை
நொறுங்கி சிதறும் உணர்ச்சிகள் உள்ள வரை
கதறி துடிக்கும் வலிகள் அடங்கும் வரை
அன்பின் எல்லை வரை செல்லாத மனம் இருக்கும் வரை
ஆழத்தை சொல்லி முடிக்காத இதயம் இருக்கும் வரை
ஆசைகள் கட்டுக்குள் அடங்கும் வரை
பந்தங்கள் நம்மை ஆளும் வரை
பாசமும் நம்மை வழுக்கும் வரை
பயணங்கள் முடிவதில்லை !

No comments:

Post a Comment