Tuesday, October 25, 2016

நான் செய்த ரசகுல்லா !!!

தீபாவளிக்கு ஸ்வீட் பண்ணனும் ... என்ன பண்ணலாம்னு வீட்ல கேட்டேன் ... உடனே "உனக்கு எதுக்குமா வீணா (போன) கஷ்டம் ... பேசாம வெளில வாங்கிக்கலாம்..." அப்படின்னு இம்மீடியட் ரெஸ்பான்ஸ் வருது... ஏன்னு சொல்றேன் ...

போன வருஷம் தீபாவளிக்கு வித்தியாசமா ட்ரை பண்ணனும்ன்னு ரசகுல்லா பண்ணலாம்ன்னு ஏதோ ஒரு நல்ல ராகு காலத்துல முடிவு எடுத்தேன் ....

உடனே போய் கூகிள்ல ரசகுல்லா ரெசிபி தேடி (நிறைய அலசி ஆராய்ஞ்சி தேடணும் இல்லனா குப்தா ஸ்வீட்ஸ் ரசகுல்லா மாதிரி வராதே) லிஸ்ட் போட்டேன் .... கிளம்பி போய் ஒரு 4 லிட்டர் (ஒரு 1 லிட்டர்ல ஆரம்பிக்க மாட்டேன் ... அவ்வளவு செல்ப் கான்பிடன்ஸ் ) புல் கிரீம் பால் , 2 கிலோ வெண்ணெய் (பின்ன பிரெஷ் நெய்யில  பொரிச்சா தானே பிரமாதமா இருக்கும் ), 4 படி சர்க்கரை , 40 ஸாரி 4 எலுமிச்சம்பழம் (4 எல்லாம் தேவையே இல்ல... இருந்தாலும் ஸ்பேர்க்கு ) ரோஸ் எசென்ஸ் (ஹ்ம்ம்க்கும் அது ஒண்ணு தான் குறைச்சல் ) 1 படி மைதா மாவு, கிளீன் மஸ்லின் துணி ஒரு 4 மீட்டர் (பின்ன பால்ல  லெமன பிழிஞ்சி அப்பறம் திரிஞ்சு போன பாலை மூட்டை கட்டி பிழிய வேணாமா) எல்லாம் வாங்கிட்டு வந்து உற்ச்சாகமா ஆரம்பிச்சேன் ...

முதல்ல அந்த துணிய துவைச்சு (அவ்வளவு சுத்தம் ) அப்பறம் அத்தனை பாலையும் அண்டால காய்ச்சி  லெமன பிழிஞ்சி துணில மூட்டை கட்டி பிழிஞ்சிட்டு வெளில பிளேட்ல ஸ்ப்ரெட் பண்ணா ஆஹா என்ன ஒரு லுக் அண்ட் பீல் ... அப்பறம் அதுல மைதா மாவை சேர்த்து நல்லா தேய்ச்சா சூப்பர் மாவு  ரெடி ஆச்சு ... போடு உடனே இலுப்ப சட்டிய ஊத்து அதுல 1 லிட்டர் நெய்ய .... நல்லா காம்பஸ் வச்சு ரவுண்டு போட்டு அந்த ரௌண்ட்ல மாவை உருட்டி நெய்யில பொறிச்சி , பேரலெல்லா இன்னொரு பர்னர்ல பண்ண சர்க்கரை பாகுல அதை போட்டு in addition ஒரு 2  சொட்டு ரோஸ் எசென்ஸையும் அதுல விட்டு, ஒரு 1 மணி நேரம் கழிச்சு அதை பிரிட்ஜல வச்சேன்... (இத்தனையும்  பண்ணப்போ ஒரு பீஸ் கூட டேஸ்ட் பாக்கலை ... wanted to taste it chilled )...அப்பறம் 1 மணி நேரம் கழிச்சு அதை எடுத்து கிண்ணத்துல  போட்டு ஆர்வமா ஒரு ஸ்பூனால மெதுதுவா (ரொம்ம்ம்ம்ப சாப்ட் இல்லயா அதனால ) கட் பண்ண ட்ரை பண்ணா அந்த உருண்டை எகிறி போய் டீவிய உடைச்சிருச்சு.... என் மனசும் அப்படியே சுக்கு நூறா உடைஞ்சிருச்சு.....

என்னடா ப்ராபளம் நம்ம டச்  எதுவும் குடுக்காம ஒழுங்கா ரெசிபியை தானே பாலோ பண்ணோம்ன்னு அனலைஸ் பண்ணா "ஆஆஆஆ பிழிஞ்சு எடுத்த பன்னீர்ல ஒரு டம்பளர் இல்ல ஜஸ்ட் பைண்டிங்க்காக ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவு தான் போடணும் யாராவது சொல்லக் கூடாதா ..."

அப்பறம் வேற என்ன பண்றது .... எல்லாரும் தீபாவளிக்கு அணுகுண்டு வெடிப்பாங்க... நாங்க ரசகுண்டை தூக்கி போட்டு தூக்கி போட்டு வெடிச்சோம் (no pollution green deepavali) .... அப்பவே நம்ம மோடிஜி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பத்தி சொல்லி இருந்தா அவருக்காவது பார்சல் அனுப்பி இருப்பேன் ... It is absolutely a non nuclear weapon you know !!!

Sunday, October 16, 2016

ஹரித்வார் ...

எங்கே போனாலும் அழுக்கு துணி மூட்டையை திருப்பி வீட்டிற்கு கொண்டு வருவது எனக்கு ஒத்துவராத விஷயம் .... அந்த ஊர்ல துணி காயற அளவு வெயில்னா நானே வாஷ் பண்ணிடுவேன்... இல்லனா தங்கி இருக்கும் ஹோட்டல்ல லாண்ட்ரி கொடுத்துருவேன்... ஹரித்வார்ல வெயிலும் இல்ல லாண்ட்ரியும் வெளிய தான் கொடுக்கணும்னு ஹோட்டல்ல சொல்லிட்டாங்க .... வெளிய தேடினா நிறைய இருக்குன்னு ஏதோ ஒண்ணுல கொடுத்துட்டு வந்துட்டார்....

சாயங்காலம் திருப்பி வாங்கப்போனவர் "காலைல கடைல இருந்த பையன் இல்ல... ஆனா அந்த பில்டிங்ல இருந்த இன்னொரு பையன் உங்க பண்டல் வெளியவே இருந்தா எடுத்துக்கோங்க அப்பறம் வந்து பணம் கொடுங்கன்னு சொன்னான் ..வெளியவே இருந்தது.. அதனால கொண்டு வந்துட்டேன்... திரும்ப 8 மணிக்கு போகணும்" அப்படினாரு .... சரி நாமளும் கம்பெனிக்கு போலாமேன்னு போனா திரும்ப கடைல யாருமே இல்ல... சுத்தி முத்தி பாத்திட்டு இருந்தப்போ கொஞ்ச தூரத்துல பைக் மேல நீட்டா அயர்ன் பண்ண பேண்ட், டக் இன் பண்ண புல் ஸ்லீவ் ன்னு ரெமண்ட்ஸ் மாடல் மாறி உட்கார்ந்து இருந்த ஒரு பையன் வேகமா வந்தான்...  எங்கடா துணி பண்டல்ல காணோம் பே பண்ணாம எடுத்திட்டு போய்ட்டோம்ன்னு நினைச்சானோ என்னவோ முழிச்சான் .... உடனே இவர் "நாங்க பணம் கொடுக்காம போய்டுவோம்ன்னு நினைச்சிட்டியா ... மேல இருந்த பையன் சொன்னதால தான் எடுத்திட்டு போனேன்" னு  அவன்கிட்ட  நடந்ததை சொல்லி பணத்தை தந்தார்....  முதல்ல முழிச்சவன் அப்பறம் சிரிச்சிகிட்டே இட்ஸ் ஓகே சார் அப்படின்னு பணத்தை வாங்கிக்கிட்டான்.... யெஸ் அவன்தான் லாண்டரிவாலா வாம்...  அப்பறம் சொல்றான் "மேரி கவர்ன்மென்ட் ஜாப் ஹே சாப்... யே லாண்டரி தோ பார்ட் டைம்.. சுபே அவுர் ஷாம் கர்தா ஹூன்" .... அட government job ல இருக்கானாம்.... ஆபீஸ் க்கு போறதுக்கு முன்னாடியும் வந்த அப்பறமும்   லாண்டரில வேலை பண்ணுவானாம்.....

துணிய வாங்கிட்டு இவரோட அங்க இருந்த ஒரு டீ ஷாப் போனா அங்க காலைல இருந்த டீ மாஸ்டர் இல்ல (காலைலயும் அங்க தான் டீ குடிச்சோம் ) .. இப்போ புல் ஸ்லீவ மடக்கி விட்டுட்டு பராத்தா தேச்சிட்டு இருந்தான் இன்னொரு பீட்டர் இங்க்லாண்ட் மாடல் ... உடனே என் வாய் சும்மா இல்லாம இது பார்ட் டைம் ஜாப்பா ன்னு கேட்டுட்டேன்... ஆமாங்கறான் ....

அசந்து போய் ஹோட்டலுக்கு வந்து "நாளைக்கு மார்னிங் 6 o கிளாக் டிரெயின்... செக்கவுட் பண்றோம்... காலைல 5 மணிக்கு இங்க ஆட்டோலாம்  கிடைக்குமா....இல்ல இப்போவே ஓலா புக் பண்ணிக்கவா"  (ஓலா ஹரித்வார்லயும் இருக்கு ... infact அங்க இருந்து ரிஷிகேஷ்க்கு ஸ்பெஷல் பேக்கேஜ் இருக்கு olaல) அப்படின்னு இவர் கேட்டா ஹோட்டல் மானேஜர் சொல்றார் "நீங்க புக் லாம் பண்ண வேண்டாம் .... புல் டைம் ஆட்டோ ஓட்டறவன் காலைல வரமாட்டான்.... ஆனா டே டைம்ல ஆபிஸ்  போய்ட்டு நைட் டைம்ல ஆட்டோ ஓட்டறவங்க நிறைய பேர் இருக்காங்க .... காலைல 4 மணில  இருந்தே நிறைய வண்டி கிடைக்கும் " ன்னு ....

வாட் அ ஊருய்யா... அதான் பேரு ஹரித்வார் போல...
உழைப்பாளிகள் !!

Saturday, October 15, 2016

முகவரி...

ரொம்ம்ம்ம்ப நாளுக்கு அப்பறம் இன்னைக்கு டீவில ஒரு படம் பார்க்கிறேன் ... அதுவும் 'முகவரி' படம்ங்கறதால.... சில விஷயங்கள் நிறைய நினைவுகளை அதுக்குள்ள புதைச்சு வச்சிருக்கும்... இது ஒரு அற்புதமான படம் மட்டும் இல்ல எனக்கு இது நிறைய நினைவுகளை பொதிஞ்சு வெச்சுருக்கும் படம் ....

காலேஜ் கட் அடிச்சிட்டு பார்த்த முதலும் கடைசியுமான படம் (காலேஜ் கட் அடிச்ச அனுபவமும் வேணும்னு நாங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ப்ராஜெக்ட் டைம்ல ஒரு மத்தியானம் போனது) .... படத்துல விரல்ல பிரஸ் டர்ன் புல்ன்னு ப்ரபோசலே செம்ம ரொமான்டிக்கா , போன்ல டயலாகே இல்லாமல் ம்யூசிக்கலா, அழகான அன்பே உருவான ஹீரோ பாமிலி கலகலப்பான ஹீரோயின் பாமிலின்னு கவிதையா, கடைசில யதார்த்தம்னாலும் பிரிவுல ன்னு முடிஞ்ச படத்தை பார்த்துட்டு ஒரே பீலிங்க்ல வெளிய வந்தா வெளிய ட்ரிஸ்லிங்... அந்த gloomy eveningla எமோஷனல் ஆகி  ரோட்ல நடக்கும் போதே என் அருமை தோழி தோள்ல சாஞ்சி கண்ணீர் விட்டது...
அன்னைக்கு என்னை பார்க்க என் ஹாஸ்டலுக்கு அப்பா வர என் ரூம் மேட் நான் படம் பார்க்க போனது தெரியாமல் ஏதோ ப்ராஜெக்ட் வொர்க்காக நான் லேப்ல இருக்கறதா சொல்ல அப்பா சரி படிக்கற புள்ளைய தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு திரும்ப கிளம்பியது... அப்படி கிளம்பிய அப்பாவை நான் படம் பார்த்திட்டு திரும்பி வரும்போது ரோட்ல கீழ பராக்கு பார்த்துக்கிட்டே இந்த மாதிரி ஒரு பேண்ட் ஒரு நடை கைல ஒரு  பேகை எங்கயோ பார்த்து இருக்கோமேன்னு நிமிர்ந்து பார்த்து நீ ஏதோ லேப்ல ப்ராஜெக்ட் வொர்க் பண்ணிட்டு இருந்த போல இருக்கேன்னு நமட்டு சிரிப்போட கேட்ட அப்பாவை பார்த்து அப்பான்னு செல்லமா சிணுங்கிகிட்டே வழிஞ்சது... அவரோட ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டது.... அப்பறம் ரூம்க்கு வந்து என்னதான் யதார்த்தம்னாலும் அன்பான  குடும்பத்துக்காக லட்சியத்தை ஒத்தி போடற ஹீரோ, அவ்வளவு சப்போர்ட்டிவா, அண்டர்ஸ்டாண்டிங் ஆன செல்ப்லெஸ் ஹீரோயின மட்டும் எப்படி லட்சியத்துக்காக விட்டுடலாம் பாவம் தான அவ அப்படின்னு ஆர்க்யூ பண்ணது...

அந்த ஒரு நாளை இத்தனை வருடங்கள் கழித்து இன்று மீண்டும் வாழ்ந்து விட்டேன்...  முகவரி பிரிண்ட் கொஞ்சம் மங்கலாய் இருந்தது ... அந்த படத்தின் முடிவை பற்றிய என் கருத்து மட்டும் இன்னும் அப்படியே... Perhaps that is what is wonderful about this movie !!!

Thursday, October 13, 2016

நானும் என் ஹிந்தியும் !!!

ஹிந்திங்கறதே எனக்கு கொஞ்சம் தகராறு .... பின்ன நான் என்ன பிரவீன் ராஷ்ட்ரபாஷாலாம் படிச்சேனா என்ன ... ஏதோ நாலாங்கிளாஸ் அஞ்சாங்கிளாஸ்ல சுத்தமா ஹிந்தி தெரியாம அதுல க்ராமர் மட்டும் படிச்சிட்டு அத வெச்சிட்டே  அலப்பறை விட்டுட்டு சுத்திட்டு இருந்தேன் ..... என்னோட அறியாமை எப்போ வெளிய வந்துதுன்னா எங்க அபார்ட்மெண்ட்ல ஒரு ஹிந்தி செக்யூரிட்டி  வந்தப்போ தான் .... அதிலயும் அபார்ட்மெண்ட் மெயின்டெனன்ஸ் இன்சார்ஜ் எங்க பிளாட் டர்ன் போது .... இவர் இருக்கும் போது தப்பிச்சிருவேன் (இவருக்கும் அவ்வளவெல்லாம் ஹிந்தி வராது பட் இவர் இருக்கும் போது டீலிங்லாம் பார்த்துப்பார் சொ மீ எஸ்கேப் )... இவர் ஆபீஸ் போன டைம்ல ஏதாவது சொல்ல வேண்டி வந்தா மாட்டுவேன் or rather அவன் எங்கிட்ட மாட்டுவான்.... நான் என்ன சொல்றேன்னு புரியறத்துக்கே அவனுக்கு அரை மணி நேரம் ஆகும்... அதுக்காக அவன் சொல்றதெல்லாம் எனக்கு புரியாதுன்னு நினைச்சுக்க வேண்டாம் ... பேசத்தான் தகராறே ஒழிய இந்த ஷாரூக்கின் பாஜிகர் , அனில் கபூரோட கிஷன் கன்னையா, சல்மான் கானோட மேனே பியார் கியா முக்கியமா  ராமானந்த சாகர் எடுத்த ராமாயணம் எல்லாம் பார்த்து ஹிந்தி புரியறதுல எனக்கு ஒண்ணும் கஷ்டமே இல்ல.. செக்யூரிட்டிக்கு எனக்கு பேசத்தெரியாம புரியறது மட்டும் ஆச்சர்யமா இருக்கும் போல ... சில சமயம் நான் பேசற ஹிந்திய  கேட்டுட்டு அடக்க முடியாம நக்கலா சிரிப்பான்...

இது ஒரு பக்கம்னா பொண்ணுக்கு பேசிக் ஹிந்தி லெட்டர்ஸ் சொல்லித்தரேன் பேர்வழின்னு ஹிந்தில எ ஏ தான் ஐ இல்லன்னு சொல்லிட்டேன்.... ஒரு 6 மாசம் நான் பிராக்டீஸ் கொடுத்து அப்பறம் அவ எதிர்காலத்தை நினைச்சு ஹிந்தி கிளாசில சேர்த்துட்டேன்... ஹிந்தி கிளாசில சேர்ந்த புதுசுல அவங்க டீச்சர் எ ஐ ன்னு சொல்லித்தராங்க ... இவ "Miss my mother has told there is no ஐ in hindi... this is ஏ..." அப்படின்னு அவங்களுக்கே சொல்லித்தரா...  முதல் நாளாச்சேன்னு வெளிய வெயிட் பண்ணிட்டு இருந்த நான் அவ டீச்சரை பாக்காமலேயே நழுவிட்டேன்... பின்ன மானம் போச்சே..

இப்படி இருக்க இந்த ஹிந்திய நம்பி நாங்க கிளம்பி வாரணாசி  ஹரிதுவார்ன்னு  தைரியமா போனோம்... அது என்னவோ என்ன மாயமோ தெரில.. அங்க போய் சுத்தி ஒரே இந்தி மயம்ன உடனே திருவிளையாடல்ல விறகு வெட்டி ங்கீயேன்னு ஆரம்பிச்சு திடீர்ன்னு  "பாட்டும் நானே ..." ன்னு பொளந்து கட்டற மாதிரி அங்க போனவுடனே எந்த காலத்துலயோ நான் படிச்ச ஹிந்தி கங்கா பிரவாகம் மாதிரி அப்படியே பீறிட்டு வருது ... ஹிஹி... விடுவேனா எப்பவும் ஒழுங்கா இவர் பின்னாடி போறவ ஏதாவது வழி கேக்கணும்னாலோ இல்லை விலை கேக்கணும்னாலோ "ஹரே பதிஜி ஆப் டைரியேனா ...மெய்ன் பூச்க்கே பதாத்திஹூன் ..." அப்படின்னு கிளாசில முதல் பெஞ்ச் ஸ்டுடன்ட் மாதிரி பாஞ்சிட்டு போனேன் ... ஏற்கனவே "அம்மா சொன்னா ... அம்மா சொல்லுவா... " ன்னு என் புராணம் பாடற பொண்ணு (மத்தவங்க கிட்ட மட்டும் தான் ... எங்கிட்ட பேசும்போது இல்ல ) கேக்கவா வேணும் .... அப்படியே என்னோட ஹிந்திய கேட்டு "அம்மா சூப்பரா பேசற மா " அப்படின்னு அசந்துட்டா ... எனக்கு ஒரே பெருமை தாங்கல ...

நிற்க ஹரித்வார்ல காலைல 6.30 மணிக்கு  கங்கால ஸ்நானம் பண்ண  சுறுசுறுப்பா கிளம்பினோம்... நிறைய இடத்தில குளிக்கறாங்க... நாங்களும் ஏதோ ஒரு படித்துறைக்கு போனோம் ... பட் மெயின் படித்துறை (ஹரி கி பவுரி ன்னு அந்த இடத்தை சொல்றாங்க ... ) எங்க இருக்குன்னு யாரையாவது  கேக்கணும்னு இவர் சொல்லிட்டு இருக்கார்.. நான் உடனே "நான் கேக்கறேன்... நானு நானு ..." ன்னு அங்க இருந்த ஒருத்தர் கிட்ட "பையா.... ஹமே கங்கா சே (நாந்தான் சொன்னேனே அரைகுறை க்ராமர் ) பாத் கர்னா ஹே .. கைஸே ஜானா ஹே ..." ன்னு கேக்கறேன் .... அந்த ஆளு உடனே "ஹரே பாத் கரியே தோ ... ஹே ஹமாரி கங்கா  மைய்யா ஹே ... ஆப் மன் கோல் கே ஜித்னே சாஹியே உத்னே பாத் கரியே ..." அப்டிங்கறாரு .... உடனே அவர் கூட இருந்த வைப் சிரிக்கறாங்க.... என் அருமை கணவர் என்ன பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்... நான் bath ன்னு இங்கிலிஷ்ல கேட்டா அவர் ஹிந்தில பாத் (பேசறது) ன்னு நினைச்சுக்கிட்டு எங்க வேணா மனசு விட்டு பேசுங்கன்னு சொல்றார்.... இதுக்கு மேல ஊருக்கு திரும்ப வரைக்கும் நான் ஹிந்தில பேசி இருப்பேனா என்ன !!

Sunday, October 9, 2016

வாரணாசி !!

வாரணாசிக்கு போய் புண்ணியம் சேர்த்துக்கலாம்னு பிளான் பண்ணி அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ணும் போதே டீவில  பாக்கற பக்தி மணம் கமழும் கங்கா நதியின் படித்துறைகள் (வாரணாசியில் அதை காட் ன்னு சொல்றாங்க பொருள் விளக்க உபயம் அங்க இருக்கற boatman),  ஒளிமயமான கங்கா ஆரத்தி, பக்திமயமான காவியுடை ஸ்வாமிகள் அப்பறம் இது எதுக்குமே சம்மந்தம் இல்லாம நம்ம ராஞ்சனா இந்தி படம் அதுல வர்ற காசி தெருக்கள், கொஞ்சமே கொஞ்சம் மனசு ஓரத்துல காசிக்கு போற அளவு வயசாயிடுச்சான்னு ஒரு பீலிங்ன்னு ஒரு மாதிரி கலவையா வாரணாசி ஏர்போர்ட் போய் இறங்கியாச்சு...

அங்க இருந்து வாரணாசி  டௌன்க்கு கார்ல போகும்போது (கிட்டத்தட்ட 25 kms) அந்த வழியெல்லாம் பார்த்தா மனசுல நினைச்சு இருந்த கலகல காசியான்னு ஸ்லைட்டா டவுட்  வந்திருச்சு... அவ்வளவு காலி ரோட் ...   அப்பறம் டௌன்க்குள்ள நுழைஞ்ச உடனே டவுட் கிளியர் என்ன கலகல காசி இல்ல கசகச காசி.... இங்க ரோட்டில வண்டி ஒட்டாம நடக்கறவங்களுக்கு நடுவுல ஓட்டறாங்க ..  டிராபிக் ரூல்ஸ்னா ஸ்பெல்லிங் கூட தெரியாதுன்னு தோணுது.... நான் நினைச்ச மாதிரி ஒரே மணம் கமழுது  ஆனா பக்தி மணம் இல்ல பான்பராக் மணம்...

நம்ம காசி தலைவர் ரிஷப வாகனன் தான் ஆனா அதுக்காக காசி நகரத் தெருவில் எல்லாம் 4 அடிக்கு ஒரு ரிஷபர்.. அந்த இர்ரெகுலர் அட்ராஷியஸ்  ட்ராபிக்கு நடுவிலும் என்னவோ மராத்தான் ஓடும் ரிஷபர்கள் (வேற எங்கயும் இவ்வளவு வேகமா ஓடற,  படித்துறையில் படி ஏறும் மாடுகளை நான் பார்த்ததில்லை.... அப்படி எங்க வேகமா போகுமோ... சிவபெருமானை பார்க்க அதுகள் கைலாசம் போகுமோ இல்லயோ  ரோட்டில நடக்கும் போது நாம கொஞ்சம் கவனமா இல்லனா நாம கண்டிப்பா சாணி மேல தான் லேண்ட் ஆவோம்ன்னு சொல்ல வந்தேன் வேற ஒண்ணும் இல்ல .. ம்ம்ம் )

கோவில் போற வழியெல்லாம் ஒரே பண்டிட்ஸ் அஸிஸ்டண்ட்ஸ் மயம்.... பண்டிட்ஸ் அங்க அங்க உட்கார்ந்து ஏதோ பிரார்த்தனை சங்கல்பம்ன்னு பண்றாங்க ... பக்கத்துல ஒரு பெரிய துணிக்கு அடியில ஒன்லி 500 ரூபாய் நோட்ஸ் (this is not to hurt any body's religious beliefs all i meant is the commercialisation behind all rituals)...
கோயில்ல நாமளே காசி விஸ்வநாதருக்கு  அபிஷேகம் பண்ணலாம்.... இதுவரைக்கும் அது மாதிரி இல்லாம இங்க அபிஷேகம் பண்ணப்போ இதுதான காசியின் மஹிமைன்னு தோணிச்சு...

நாங்க தங்கி இருந்த இடத்துல கங்கால எதிர் கரையில கிளீனா இருக்கும் பட் அங்க குளிச்சா புண்ணியம் இல்ல கோவில் இருக்கற பக்கம் தான் புண்ணியம்ன்னு சொன்னாங்க ...நேரா பரவசத்தோடு கங்கால புண்ணிய ஸ்நானம் பண்ண எல்லாம் ரெடியா கங்கா மாதாவை பார்க்க போனோம் .... போய் போட்ல காலை வெச்சிட்டு நிமிர்ந்தா போட் பக்கத்தில ஒரு செத்து போன கன்னுக்குட்டி மிதக்குது.... அப்பவே என்னமோ மாறி ஆய்டுச்சு .... அப்பறம் boatman ஒவ்வொரு காட் உம் என்ன என்னன்னு சொல்லி கூட்டிட்டு போனார் .... அதுல ரெண்டு காட்ல கடைசி மரியாதைக்கு நிறைய பேர் (?) படிக்கட்ல காத்திருந்ததை பார்க்க மனசெல்லாம் ஒரே morbid பீலிங்.... ஆனா தேங்க்ஸ் டு கங்கா மா ஆரத்தி கொஞ்சம் மூட் மாறிச்சு... ஸ்டில் அதுவரை நேரில்  இல்லாம டிவில  கங்கை கரையில் கோவிலை பார்த்த போது இருந்த லேசான பீலிங் இல்லாம கனமா தான் இருந்தது ... அதை விட புண்ணியமே உருவான பவித்ரமான கங்கா மா இப்படி நம்ம மன அழுக்குகளை மட்டும் இல்லாம எல்லாத்தையும் சுமந்து கலங்கி ஓடறதை பார்க்க கஷ்டமா இருந்த்து ... ஒரு புண்ணிய ஸ்தலத்துல இந்த மாதிரி இருப்பதெல்லாம் ஒரு பக்கம் சகஜம்ன்னு இருந்தாலும் நம்ம ஆழ்ந்த நம்பிக்கைகளை தாங்கிய இந்த ஸ்தலத்தில் புண்ணியம் மட்டும் சேர்க்க நினைக்காமல் தூய்மையா வெச்சுக்கறதும் நம்ம கடமைதானே ன்னு இங்க வர்ற ஒவ்வொருத்தருக்கும் தோணும்னு தோணுது ....

ஆனா இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ... போட்ல திருப்பி வரும்போது அந்த boatman "இது ராமர் சீதையை குகன் போட்ல கூட்டிட்டு வரும்போது  அவர்களை சிவ பார்வதி தர்சனம் பண்ணிய ஸ்தலம்.... அதனால குகன் வம்சத்துல வந்த boatman அவங்க கையால உங்களுக்கு கங்கா ஜலத்தை தெளிச்சா உங்களுக்கு புண்ணியம் (????!!!) ... குகனுக்கு உங்களால முடிஞ்ச தக்ஷிணை குடுங்க...." அப்படின்னு சொல்லி அவரோட அசிஸ்டண்ட் ஒரு பையனை பார்க்க , அவன் போட்ல இருந்து எட்டி கீழ ஓடிட்டு இருந்த கங்கா நீரை கைல எடுத்து எங்க மேல தெளிச்சு பாவத்தை போக்கினதை மட்டும் என்னவோ என்னால ஜீரணச்சிக்கவே முடில ...
அவன் வாய் நிறைய பான் !!!

Note:
With due respects to all our deep beliefs this is written just out of my thoughts on how our beliefs are being used for day to day living and earning....  It is not to hurt anyone's beliefs 🙏

Friday, October 7, 2016

வாட் அ நவராத்திரி தட் வாஸ் !!

எனக்கு நினைவு தெரிந்த நவராத்திரிகளில் "எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் மாமி ... வெத்தலை பாக்கு வாங்கிக்க வாங்கோ ..." அப்படின்னு குங்கும சிமிழை நீட்டி சிமிழ் மாதிரி இருக்கற குட்டி வாயால கூப்பிடும் குழந்தைகள் (ஆனா அப்போ மட்டும் அதுகளுக்கு நீளமா தலை முடி இருக்கும் எல்லாம் சவுரி உபயம் .... அதுல ராக்கொடிய வச்சு தாழம்பூ தெச்சுன்னு பண்றதுக்கு அதுகளுக்கு ரசனையான பாட்டிகள் இருப்பாங்க ...)

"அடடே குழந்தை என்ன சமத்தா கூப்பிடறது ..." அப்படின்னு மெச்சிக்கிட்டே "மாலுக்குட்டி எங்க அழகா ஒரு பாட்டு பாடேன் " தவறாம சொல்லும் மாமிகள் (அங்க கூடத்துலே பார்த்தா பெருசா விரிச்சு இருக்கும் ஜமக்காளம் மேல ஆல்ரெடி ஜுகல்பந்தி பண்ண தோதா 7 8 பாவாடை சட்டை சவுரிகள் பலமா கச்சேரியை ஆரம்பிச்சிருக்கும் )...

அத்தனை டிக்கட்டும் வெட்கப்படாம சுருதி சுத்தமா (?!!!) பாடறதையும் பொறுமையா கேட்கும் மாமி வீட்டு மாமாக்கள் , தாத்தாக்கள்...

கொலு கடைசீ படிக்கட்டுல வெச்சிருக்கற குட்டியூண்டு பீங்கான் டீ கப் செட் , மர சோப்பு (அதோட காலி ஒலை பெட்டியும் தவறாம அது பக்கத்துலயே இருக்கும்) , மாக்கல் செட் (அதுல மாத்திரை சைஸ்ல பணியாரம்  செய்ய இருக்கும் பணியார தட்டு, இட்டிலி செய்ய காலி மாத்திரை ஸ்ட்ரிப் தவறாம இருக்கும்) , துக்கினியூண்டு பிரிட்ஜ், பீரோ, ஆங் மிக்ஸி (பிளாஸ்டிக்ல ) இது எல்லாத்தையும் நைஸா போய் போய் தொட்டு பார்க்கும் பாவாடை அக்காக்களோட வந்த வாண்டு நிஜார்கள் பிராக் பாப்பாக்கள் ....

இது எல்லாத்தயும் விட கொடுக்கும் தாம்பூலத்துல  வெத்தலை பாக்கு பழம் இதோட ஒரு பேப்பர் பொட்டலம்... அந்த பொட்டலத்துல இருக்கும் சுண்டலை  ஆசை ஆசையாக, பொட்டுக்கடலை மாவை பப் பப் ன்னு அள்ளி சாப்பிடும் குழந்தைகள் ....

வாட் அ நவராத்திரி தட் வாஸ் .... I want a time machine please !!!