Tuesday, May 31, 2016

எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத கடல் அழகு
நம்மையே தூக்கி செல்லும்
கரையின் காற்று அழகு
நீரில் பட்டு தெறிக்கும்
கடற்கரை நிலவு அழகு
மணலில் செய்து அலை கலைக்கும் மாளிகை அழகு
மாங்காயும் சுண்டலும்
கொறிக்கும் சுவை அழகு
இத்தனையையும் தோற்கடித்தது
தன் அப்பாவின் காலை பிடித்து தொங்கி அலையில் ஆடும் என்னுயிர் பிள்ளை அழகு
தாய் மனம் !

No comments:

Post a Comment