Tuesday, May 31, 2016

காக்காய் கடி கடித்து பகிர்ந்த மிட்டாய்களும்
ஒன்றாய் உட்கார்ந்து தேய்த்த பெஞ்சுகளும்
இம்மி மாறாமல் காப்பி அடித்த நோட்ஸ்களும்
டெலிபோன் பில்களை எகிற வைத்த சிரிப்புகளும்
தூக்கம் தொலைத்த இரவு நேர அரட்டைகளும்
உப்பு பெறாத விஷயங்களுக்கு போட்ட சண்டைகளும்
அதன் பின் நிமிடத்தில் வரும் சமாதானங்களும்
ஒன்றாக சென்ற பேருந்து பயணங்களும்
ஆனந்தமாக மிதித்து சென்ற சைக்கிள் டபுள்ஸ்களும்
வலிக்கையில் சாய்ந்து கொண்ட தோள்களும்
அட்வைஸ் செய்யாமல் கண்ணீர் துடைத்த கைகளும்
பிரிகையில் அழுத அழுகைகளும்
வாழ்வில் எத்தனை மைல்கள் தள்ளி இருந்தாலும்
வேறு எத்தனை மையல்கள் வந்தாலும்
நாம் நாமாக மட்டுமே இருக்கும்
நட்பில் மட்டுமே சாத்தியம் !

No comments:

Post a Comment