Wednesday, November 23, 2016

அன்பு என்பது யாதெனின்....

அன்பு என்பது யாதெனின்....

மனதில் எவ்வளவு வலி கவலை இருந்தாலும் அதை மறைத்து சிரிப்பையும் சந்தோஷத்தையும் மட்டுமே பரப்புவது...

கெட் லாஸ்ட் என வள் என்று விழுந்தாலும் ஒரு 2 நிமிஷம் வாடிய முகத்தோடு இருந்து விட்டு பின்னே ரோஷமே இல்லாமல் போய் "ஏதாவது ப்ராப்ளமா .... நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா.." என்று கேட்டு இன்னும் வாங்கிக்கட்டி கொள்வது...

உடம்பு சரி இல்லன்னா "ஒண்ணும் இல்ல.... தைரியமா இருக்கணும் ...சரியா போயிடும்...... மருந்து சாப்பிட்டு நல்லா தூங்கணும்..." ன்னு சொல்லிட்டு அவர்கள் தூங்கிய பின் கவலை பட்டு இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை பீவர் இருக்கான்னு தொட்டு பார்த்து கொண்டு நைட் புல்லா தூக்கம் வராம புரள்றது....

சும்மா உரிமை இருக்குங்கறதுக்காக நைநைங்காம கொஞ்சம் ப்ரீயா இருக்க விடறது...

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியூரில் இருந்து  "நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வரேன் ..." ன்னு சொன்னதை கேட்டு  லாஜிக்கே இலலாமல் அந்த நிமிடத்தில் இருந்தே ரோடில் எந்த வண்டி ஆட்டோ சத்தம் கேட்டாலும் மனசு பரபரப்பது  ..

ரொம்ம்ம்ப பிடிச்ச ரொம்ம்ம்ப நாளா பாக்கணும்னு நினைச்சு இருக்கற படத்தை அதிசயமா டீவில பாக்கும்போது போன் வந்தா உடனே டீவியை நிறுத்திட்டு ஆசையா பேசறது ...

மனதுக்கு பிடித்த தேடி அலைந்து வாங்கிய எந்த பொருளாய் இருந்தாலும் "ஹேய்ய் நல்லா இருக்கே .." என்று சொல்வதை கேட்ட நிமிடமே "இந்தா வச்சுக்கோ.." என்று தூக்கி கொடுப்பது.. (ஆனா "நல்லா இருக்கு நீ பண்றது.... உனக்கு பிடிச்சு வாங்கி இருக்க.... தூக்கி கொடுக்கற ... எங்க வாங்கினன்னு சொல்லு .... வேணும்னா நானே வாங்கிக்கறேன்... " அப்படி சொல்றது தான் அவங்க அன்பு ..)

முக்கியமா நாலு கிலோ பேபி பொட்டேட்டோ வாங்கி ப்ரை பண்ணாலும் அதுல நாலு பீஸ் கூட நம்ம வாயில போடாம அவங்களுக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்ன்னு அப்ப்ப்ப்படியே எடுத்து வெக்கறது தான் அன்பிலேயே சிறந்த பேரன்பு...  (ஹிஹி வாட் டு டு ...நாம சீரியஸா மெசேஜ் சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சாலும் கடைசியில லைட்டர் மொமெண்ட்டா தான முடிக்க வருது...) !!!

Saturday, November 19, 2016

Happy Men's day !!!

இன்னைக்கு சர்வதேச ஆண்கள் தினமாம் .... ஏதாவது சொல்ல வேண்டாமா...

பிறக்கும்போதே ரெஸ்பான்சிபிலிட்டிஸோடவே பிறக்கும் மண்ணின் மைந்தர்கள்...  பின்ன என்னங்க "பையனா ..... கொடுத்து வெச்சவங்க சார்.. வாழ்த்துக்கள்.." அப்படின்னு குடும்பத்தை தாங்கவே ஜனித்த திருமலை நாயக்கர் மகால் தூண்கள் .... அப்போது இருந்தே அவர்கள் மேல எதிர்பார்ப்புகள் கூட ஆரம்பித்துவிடும்.... ஆனா ஆணா பிறந்ததுக்கு தான் அவங்க செய்யற தியாகம் படற பாடு இருக்கே ...

கூலா இருந்தா "பியூச்சர் பத்தி ஏதாவது அக்கறை இருக்கா பாரு ... " ன்னு மண்டகப்படி... எல்லாத்துக்கும் சீரியஸா இருந்தா "சரியான சிடுமூஞ்சி.." சின்சியரா இருந்தா "அய்யோ அது ஒரு அம்மாஞ்சி ..." ... அலப்பறை விட்டு சுத்தினா "சரியான தறுதலை.." இப்படி கேப்பே விடாம ரோட் பிளாக் பண்ணிடுவோம்...

அட ஒரு காமெடிக்கு கெக்கே பிக்கேன்னு சிரிக்க முடியுதா...  ஒரு கஷ்டம் ஏமாற்றம்னா வாய் விட்டு அழ முடியுதா... ஏதாவது ஸ்ட்ரெஸ்ன்னா நான்ஸ்டாப்ப்பா புலம்ப முடியுதா... . இதுல எதை செஞ்சாலும் "என்ன இது பொண்ணு மாறி அழுதுக்கிட்டு , சிரிச்சுக்கிட்டு , புலம்பிக்கிட்டு ..." ன்னு சொல்லிடும் இந்த சொ கால்டு 'ஆணாதிக்க??' சமுதாயம் ... so அப்படியே கெத்து மெயின்டெய்ன் பண்ண வேண்டி இருக்கு...

கெத்தா இருந்தா "ச்செ ரொமான்டிக்கா இல்ல" ன்னு மேட்டுக்குடில வர்ற கவுண்டமணி ரேஞ்சுக்கு பாக்க வேண்டியது .... ரொம்ம்மன்டிக்கா இருந்தா "சரியான வழிசல் ..." ன்னு முத்திரை குத்த வேண்டியது ... அட அது கூட பரவால்ல எல்ல்லா ஆண்களுமே பயங்கர இன்டலிஜென்ட்டா இன்டலெக்சுவலா தில்லா இருக்க முடியுமா ... still according to our social setup such an image is an absolute necessity to gain respect as a man...

குடும்பத்து  விஷயங்கள்ல தலையிட்டா "என்னது இது பொண்ணு மாதிரி வம்பு ..." ங்க வேண்டியது ... எதுக்குடா வீண் வம்புல தலைய கொடுத்து மாட்டிக்கணும்னு தலையிடாம இருந்தா "வீட்ல என்ன நடக்குதுன்னு அக்கறை இருக்கா ... தன்னோட விஷயம் நடந்தா சரின்னு விட்டேத்தியா இருக்கறது .." ங்க வேண்டியது ...

அட காரியர்ல கூட ப்ரொபஷனல் தான் மதிக்கப்படுது... வேற ஒரு பீல்டுல இன்ட்ரெஸ்ட் இருக்கற அதை காரியரா சூஸ் பண்ற எல்லா ஆண்களுக்குமா ஈசியா கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுது....

பிரெண்ட்லியான அப்பாவா இருந்தா மொளகா அரைக்கறது ... ஸ்ட்ரிக்டான அப்பான்னா கடுகடுன்னு இருக்காருன்னு ஒதுங்கி ஓடறது....

இப்படி சொல்லிகிட்டேஏஏஏ போலாம் ...

இருந்தாலும் இத்தனை சமூதாய கட்டுகளுக்குள்ள எப்பவுமே 'ஆண்' என்கிற கம்பீரத்தை வெளிக்காட்டி நம்ம குடும்பங்களை தாங்கற ஸ்டராங் பேஸ்மெண்ட்டா  தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் இயங்கும் ஆண்களுக்கு இன்றைய நாளில் ஒரு சல்யூட்...

ஆனா ஒண்ணு "ஹேய்ய்   சூப்பரா இருக்குடி" ன்னு கைல வழியற ஐஸ்கிரீமை கூட விடாம நக்கி ஒரு குச்சி ஐஸ ரசனையோட சாப்பிடத்தான் முடியுதா அவங்களால !!

Very importantly... இந்த ரைட்டப் கண்டிப்பா மத்தவங்கள குறிப்பா குடும்பத்துல இருக்கறவங்க உணர்வுகளை மதிக்காம டாஸ்மாக் ட்ரக் அது இதுன்னு விழுந்து உழன்றுகிட்டு இருக்கும் ஜென்மங்களுக்கானதல்ல ....

This is only for all the 'Real' Gentlemen around us !!

Sunday, November 13, 2016

ஒரு யூத் ஸ்டோரி...

ஆபிஸ் பஸ்சில் ஒரு ஒரு வாரமாக எல்லாருடைய கவனமும் புதியதாய் அஷோக் பில்லரில் ஏறும் அவள் மேல்தான்..  போன வாரம் 3 நாட்கள் லீவ் எடுத்துட்டு ஊருக்கு ஒரு வேலையாய் போய்விட்டு வியாழன் அன்று பஸ்சில் ஏறியதும் எப்போதும் பின்னாடி ஸீட்டில் உட்காரும் அரவிந்த் முன் ஸீட்டில் இருந்தான் ... என்னை பார்த்து உற்சாகமாய் கையசைத்து அவன் பக்கத்து ஸீட்டை காட்டினான்... "என்னடா இங்க உட்கார்ந்து இருக்க.... " என்று நான் கேட்டதுக்கு நமட்டு சிரிப்பு சிரித்து "வெயிட் டில் அஷோக் பில்லர்" அப்படினான் ... அஷோக் பில்லரில் அவள் ஏறியதும் எனக்கு அவன் மாற்றத்தின் காரணம் சொல்லாமலேயே  புரிந்து விட்டது.....

"புதுசா வந்துருக்கற ஹெச் ஆர் டா.. எப்படி ..." என்று கேட்டவனை பார்த்து "சரிடா சரிடா நடத்து..." ன்னு சிரிச்சேன்.. "எங்ங்ங்க.... கொஞ்சம் திரும்பி பாரு ... பஸ் புல்லா எவனும் 3 நாளா வெளிய வேடிக்கை பாக்கறது இல்ல... மொபைல நோண்டறது இல்ல... பொதுவா ஹெச் ஆர் னா நல்லா பேசுவாங்க இல்ல... ஆனா அவ யாரையும் பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிக்கறது இல்ல.. அப்பறம் தான் தெரிஞ்சுது பைனான்ஸ் டிபார்ட்மெண்ட்ன்னு .... நான் கூட  டீசெண்டா கொஞ்சம் சிரிச்சு ஒரு ஹலோன்னேன்... ரியாக்ஷனே இல்ல..... இதுல நடத்துங்கற...." என்றான்.

"சரிடா ... புதிசா சேரும்போது அப்படித் தான் இருப்பாங்க .... பிரெண்ட்லியா genuine ஆ இருடா "ன்னு சொல்லிட்டு நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பிச்சேன் ....

ஒரு 10 நாள் இருக்கும் .... அன்றைக்கு பஸ்சில் ஏறியவளை எதேச்சையாக பார்த்தேன் .... மெல்லியதாய் ஒரு சிரிப்பு  சிரிச்சா .... நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்... ஒரு செகண்ட் பஸ்சே (ட்ரைவர் உட்பட) என்னையே பார்த்தது ...
அவ்வளவுதான் அரவிந்த் ஒரு முறை முறைத்தான் ... "டேய்ய்.. என்னடா நடக்குது.... உனக்கே இது நியாயமா படுதா.... இதெல்லாம் சரி இல்ல ..." என்றவனை பார்த்து "ஹேய்ய் நான் என்ன பண்ணேன்... சிரிச்சா ஒரு கர்டெசிக்கு நானும் சிரிச்சேன்... ஏண்டா இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கீங்க.. கொஞ்சம் மெச்சூர்டா இருடா.. அதனால தான் அவ உங்களை எல்லாம் மைண்ட் பண்றதில்லை ..." என்றேன் .. "நீ பேசுவடா ... உனக்கு என்ன " என்று சொல்லிட்டு திரும்பி கொண்டவனை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது ...

இப்படியே ஒரு ஒரு மாசம் போனபோது..... ஒரு 10 நாட்கள் பிராஜெக்ட் விஷயமா பெங்களூரு போய்ட்டு அன்னைக்கு தான் பஸ்சில் வந்தேன் ... என்னை பார்த்ததும் அர்விந்த் "அப்ப்பா நல்லவனே ... உன்னால எனக்கு ஒரே ஒரு நல்லதுதான்டா நடந்தது .... நீ 10 நாளா பஸ்ல வராம இருந்தாலும் இருந்த ... அந்த அஷோக் பில்லர் 2 நாள் முன்னாடி  திடீர்னு என்கிட்டே வந்து பேசினாடா....ஹாய்... எங்க உங்க பிரெண்டை ரொம்ப நாளா பாக்கமுடியலையே.... ரிசைன் பண்ணிட்டாரான்னு அக்கறையோட கேக்கறா ... இல்லனதும் ஒரு நிம்மதியோட போனா ... உனக்கு என்னடா .... மச்சம் தான் " ன்னு வயித்தெரிச்சலோட சொன்னான்..

அஷோக் பில்லரில் அவள் ஏறியதும் நான் இருக்கும் ஸீட்டை தான் பார்த்தாள் .... அடுத்த செகண்ட் அவள் முகத்தில் தோன்றிய ஒரு பீலிங் சட்டென்று எனக்குள் ஒரு மணி அடித்தது....

என்னை பார்த்து சிரித்துவிட்டு ஏதோ கேட்க வந்தவளை பேப்பர் படிப்பவன் போல நாசூக்காய் அவாய்ட் செய்தேன் .... முகம் வாடி உட்கார்ந்தவளை பார்க்க எனக்கே கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது ...

வழக்கமாய் அஷோக் பில்லரில் அவள் இறங்கி போனதும் வடபழனியில் இறங்கும் நான், அன்றைக்கு சாயங்காலம்  கிண்டியில் இறங்க போனதை ஆச்சர்யமாக அவள் பார்ப்பது  தெரிந்தது...

கிண்டியில் இறங்கியதும் "அப்ப்பா ... " என்று பஸ் ஸ்டாப்பில் என் மனைவியோடு காத்து கொண்டிருந்த என் ரெண்டரை வயது மகள் என்னிடம் தாவியதை அவள் ஷாக்கோட பார்த்தது தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது ....

"இது என்னங்க உலக அதிசயமா ஆபிஸ்    இருக்கற வீக் டேல சினிமா போறோம் ... கிண்டி வந்துருன்னு திடீர்னு 4 மணிக்கு போன் பண்ணி சொல்றீங்க ...ஒண்ணும் புரியல .." என்ற மனைவியை பார்த்து "ச்சும்மா ஒரு சர்ப்ரைஸ்" என்று சிரித்தேன்... இவளுக்கு புரியாது ஆனால் அவளுக்கு புரிந்திருக்கும்...

பின்ன என்னங்க சந்தனத்தின் குணம் நிறைந்த santoor soap ன்னா பொண்ணுங்க மட்டும் தானா... நானும் சந்தனத்தின் குணம் நிறைந்த mysore sandal தாங்க !!!

Friday, November 11, 2016

சிம்பிளா ஒரு கல்யாணம் !!!

ஊர்ல எவ்வளவோ  விதமா கல்யாணங்கள் பண்ணறாங்க... 3 நாள் கல்யாணம் , 5 நாள் fair and lovely கல்யாணம், மெஹந்தி, பாராத் , ரிஸப்ஷன்னு மிக்ஸ்ட் ஸ்டைல், பணத்தை மூட்டைல வெச்சுருக்கறவங்க கப்பல்ல , பிளைட்ல,  விட்டா மார்ஸ்ல கூட பண்ணறாங்க... அதுல buffet , அதுகூட ஐஸ் கிரீம் ஸ்டால் , பீடா ஸ்டால் , மெஹந்தி ஸ்டால், வளையல் ஸ்டால் , பாஸ்ட் புட் ஸ்டால் ன்னு ஒரு திருவிழா சந்தை ரேன்ஜ்க்கு பண்றாங்க.... இதெல்லாம் ஒரு சந்தோஷம்னாலும் சில சமயம் தோணும் இதுக்கு பதிலா அந்த பணத்தை அந்த பொண்ணு பேர்ல டெபாசிட் பண்ணா எவ்வளவு யூஸ்புல்லா இருக்கும்ன்னு .. இருந்தாலும் நம்ம சமூக கலாச்சார கட்டமைப்புல அதை எல்லாம் ஒரு ஆளா மாத்த முடியாது ....

ஆனா கிட்டதட்ட ரெண்டு decades க்கு மேல ஒருத்தர் இந்த கல்யாணம் சம்பந்தமா எவ்வளவு புரட்சிகரமான மெஸேஜஸ் குடுத்துட்டு இருக்கார் ... அதையும் youthful ன்னு ரசிச்சு ரசிச்சு பாக்கறோம்..

ஒண்ணா ரொம்ப துடுக்கா துறுதுறுன்னு இருக்கற பொண்ணு... அவளை "ஹேய்ய் நீ அழகா இல்ல... உன்னை லவ் பண்ணலை... ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமாருக்கு " ன்னு ரொமான்டிக்கா ப்ரபோஸ் பண்ணும் ஸ்மார்ட் ஹீரோ.. அவங்களுக்கு ஜஸ்ட் ஒரு கார்டன் இல்லனா ஷிபான் முகூர்த்த ஸாரி , இன்டர்வியூக்கு போற மாதிரி பீட்டர் இங்க்லேண்ட் பார்மல் முகூர்த்த பேண்ட் ஷர்ட்ல கோயில்ல ச்சும்மா கொஞ்சூண்டு அர்ச்சனைக்கு யூஸ் பண்ற அளவுல பூவை வச்சு ஆசீர்வாதம் பண்ணி (கல்யாண சாப்பாடு கூட இல்லாம) கல்யாணம் பண்ணி வைக்க நாலே நாலு பிரெண்ட்ஸ்.....

இல்லேன்னா அந்த 4 பிரெண்ட்ஸ் கூட வேண்டாம்ன்னு குட்டியூண்டு டிரெயின் டிக்கெட்டை பொண்ணுக்கு மட்டும் அனுப்பி ஊருக்கு ஹோல்டாலோட வரவெச்சு கல்யாணம் பண்ணிக்கற ஹீரோ

அதுவும் இல்லையா யாருமே ஆதரவு இல்லாத வாழக்கை இழந்த விதவையை  ச்சும்மா ஒரு குங்குமத்தை நெத்தில வெச்சும் , மீள முடியாத நரகத்திலே சிக்கி இருக்கும் சின்ன பெண்ணை கோயில்ல கண்ணை மூடி வேண்டிட்டு இருக்கும் போது சர்ப்ரைஸா  டக்குனு ஷேக் ஹாண்ட்ஸ் கொடுக்கற மாதிரி தாலி கட்டியும் கல்யாணம் பண்ணிக்கற "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை" ன்னு பயங்கர கெத்தா ஊரை காப்பாத்தற ஹீரோ....

வேற யாருங்க நம்ம மணிரத்னம் சார் தான் .... எனக்கு தெரிஞ்சு கல்யாண மண்டபத்துல கல்யாணம் நடக்கற மாதிரி அவர் எடுத்த ரெண்டு படம் "இதய கோவில்", "மௌன ராகம் " தான் ... அதிலயும் இதய கோவில்ல தான் மண்டபத்தை முழுசா காட்டுவார்... மௌன ராகத்துல நாதஸ்வர சவுண்டை பேக்ரவுண்ட்ல கொடுத்துட்டு 2 நிமிட்ஸ்ல சிம்பிளா முடிச்சிருவார்...

ஆனா இதைப்படிக்கற பெரியவங்க பெற்றோர்கள்லாம் "நீ சொல்ற இந்த புரட்சி கல்யாணத்துல எல்லாம் அட்லீஸ்ட் ஹீரோ ஹீரோயினோட பேரன்ட்ஸ்இ ருந்தாங்களான்னு " கேட்டு என்னை அடிக்க வராதீங்க.. நான் சொன்னது சிம்பிளா கல்யாணம் பண்ற aspect அ மட்டும் தான் ...

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதை அடுத்து டீவில ஒருத்தர் "இந்த வாரம் நடக்க இருக்கும் கல்யாணங்களெல்லாம் எவ்வளவு பாதிக்கப்படும் தெரியுமா" ன்னு சொல்லிட்டு இருக்கும் போது வாஸ்தவம்  தானனு யோசிச்சு சும்மா தோணினத எழுதிட்டேன்... மற்றபடி மணி சார் அவர் பையனுக்கு ராஜா முத்தையா ஹால்ல கல்யாணம் பண்ணினார்னா என்னை எதுவும் சொல்லாதீங்க.. கேக்காதீங்க ... ஏன்னா நான்தான் சொல்லிட்டேனே ... நம்ம கட்டமைப்புல இதெல்லாம் மாத்த முடியாததுன்னு... மணி சார் நீங்களும் கோவிச்சுக்காதீங்க !!

Monday, November 7, 2016

ஒரு குட்ட்ட்டி கதை...

கோயிலில் கூட்டத்தில் ரெஸ்ட்லெஸ் ஆக இருந்த குழந்தையிடம் "கண்ணா கொஞ்ச நேரம்  சமத்தா வேண்டிக்கோயேன்... காட்க்கு தேங்க் பண்ணேன்..."

ஒரு வழியா கூட்டத்தை சமாளித்து வெளிய வந்த உடனே முதல் கேள்வி "நீ என்னம்மா வேண்டிக்கிட்ட ?"

என்னவோ ஆசைகளே இல்லாம, இருக்கறதுல திருப்தி அடையும் பெரிய்ய்ய செல்ப்லெஸ் மனசு இருக்கறவ நான்னு ஒரு நினைப்பு ப்ளஸ் மிதப்பு... பெரிய இவளாட்டம் "கடவுளுக்கு தெரியாதாடா நமக்கு என்ன தரணும்னு.. அம்மா எப்பவுமே எனக்குன்னு எதுவுமே கேட்க மாட்டேன்... நன்றி தான் சொல்லுவேன்.. என் குழந்தை நல்லா படிச்சி நல்ல ஆரோக்கியத்தோட லைஃப்ல நல்லா இருக்கணும் அப்படின்னு தான் வேண்டிப்பேன்.. " என்றேன் ..

"ஏம்மா ஒண்ணுமே கேட்க மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு கேக்கறியே.. காட்க்கு தெரியாதா மா எனக்கும் எல்லாம் தர்றதுக்கு.... என்னையும் நல்லா பாத்துக்க .... " அப்படின்னு ஒரு பதில் வருது....

சுரீர் ன்னு உறைச்சுது தெய்வத்திடம் பரிபூர்ண சரணாகதின்னா என்னன்னு ..

பிரணவ மந்திரம் ஓதின குட்டி முருகன் மாதிரி தெரிஞ்சா என் குழந்தை !!

Friday, November 4, 2016

நண்பேன்டா!!!

மாவடுவால் அமைந்த நட்பு  (yes you read it right... not a typo)

மலேரியா, டைபாய்டு, ஜாண்டிஸ் கூட பரவால்ல ஆனா காலேஜ் ஹாஸ்டல் போன புதுசுல வந்த ஹோம் சிக் இருக்கே ஐய்யய்யயோ ... ஒரு சுபயோக சுபதினத்தில் காலேஜ் அட்மிஷன் முடிஞ்சு ஹாஸ்டல் ரூம்க்கு போய் லக்கேஜ் எல்லாம் வெச்சுட்டு இரும்பு கேட்க்கு இந்த பக்கம் நின்னுட்டு புன்னகை மன்னன் கமல் ரேஞ்சுக்கு அழுகையோட கலந்த ஒரு சிரிப்பு சிரிச்சிட்டே அப்பா அம்மா உடன்பிறப்பு தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களுக்கெல்லாம் டாட்டா சொல்லும் போது மனசை கடிக்கற அந்த கொசுனால வரும் சிக்னெஸ் ..

ஒரு 10 நாள் இது வீட்ல சீவின தலைமுடின்னு அதை கலைச்சு மறுபடி சீவாம , இது வீட்ல தேய்ச்ச பல்லுன்னு அதை தேக்காம.. வெயிட் வெயிட் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துறாதீங்க இப்படி எல்லாம் இருக்க நினைச்சு பட் நம்மளை சுத்தி இருக்கற இந்த சமூக நலனை முன்னிட்டு ஒழுங்கா செஞ்சிட்டு காலேஜ் போய் அழுதிட்டு வருவேன்.. காலைல ஹாஸ்டல் பாத்ரூம் க்யூல பக்கட் போடறதுல இருந்து ஈவினிங் மெஸ்ல வாயில பிஸ்கட்ட போடற வரைக்கும் எல்லாமே பழக்கமே இல்லாத புது புது விஷயம் (நாம தான் ஈவினிங் பசில தாம்பாளத்த முழுங்கற ஆளாச்சே)....

நாக்கு எல்லாம் செத்து போச்சு...  தினம் காலைல இட்லியோட அதே சேம் சாம்பார் , மத்தியானம் ஒரே டைப் சாம்பார் ரசம் (ஓர்ர்ர்ரெ அயிட்டம் தான் ... மேல எடுத்தா ரசம் கீழ சாம்பார் ... Point to be noted தப்பி தவறி கூட கரண்டியை வச்சு கலந்துறக்கூடாது ... அப்பறம் இப்படி multiple ஆ இல்லாம ஒரே டிஷ் ஆயிடும் ) கூடவே ஒண்ணு காராமணி இல்லனா காலிபிளவர்... காலிபிளவர் மட்டும் டேஸ்ட் ஓகேவா இருக்கும் ஆனா அத்தனை பேருக்கும் பண்ணும்போது அதை வெந்நீர்ல கொதிக்க வெச்சு சைவமா சமைச்சுருப்பாங்களா இல்லை புழுவோட அசைவமான்னு டவுட்லயே அதுவும் தொண்டைல இறங்காது.... சாயங்காலம் காலேஜ்ல இருந்து லைன்ல மயிலம்மாவோட z கிரேட் செக்யூரிட்டில (ராகிங்கை அவாய்டு பண்ணவாம்.. மயிலம்மாக்கு 65 வயசு இருக்கும்.. நம்ம மைக்கேல் மதன காமராஜ் பாட்டி மாதிரி பல்டியெல்லாம் அடிப்பாங்களா அப்படின்னெல்லாம் எனக்கு தெரியாது ... இருந்தாலும் அவங்ககிட்ட ஏதோ ஒரு திறமை இருந்ததால அவங்கதான் பாடிகார்ட் ... But a sweet person she was... ) ஹாஸ்டல் வந்து, அதோட லாபில (பெருசா ஏர்போர்ட் லாபி ரேஞ்சுக்கு நினைச்சுக்க வேணாம் .. ஒரு பெரிய ஸ்டீல் காட் போட்டு இருக்கும் வார்டன் உட்கார்ந்து ரோல் கால் எடுக்க) இருக்கற லெட்டர்ஸ்ல நமக்கு ஏதாவது லெட்டர் இருக்கான்னு (டெயிலி யாரால தான் லெட்டர் போட முடியும்) செக் பண்ணி இல்லைனதும் ஹோம் சிக்ல தொண்டை அடைக்க சரி டீ குடிச்சு சரி பண்ணலாம்ன்னு போனா தொண்டைல டீ இறங்கும் போதே கண்ணுல தண்ணி கொட்டும் ...

இப்படியே போய்ட்டு இருந்தப்போ தான் ஒரு நாள் காலேஜ்க்கு  போற க்யூல  என்னை மாதிரியே கண்ணீரும் கம்பலையுமா அவங்களை பார்த்தேன் ...என் ரூமுக்கு நேர் கீழ் ரூம்... ஆஹா இவங்களும் நம்ம இனம் தான் போலன்னு போய் பேச ஆரம்பிச்சேன் ... இருந்தாலும் வேற வேற ரூமாச்சே எப்படி போய் ஒட்டிக்கறது என்னை பத்தி என்ன நினைப்பாங்கன்னு தயக்கமா  இருக்கும் ...

ஒரு நாள் லன்ச் டைம்ல மெஸ்க்கு  சேர்ந்து போறதுக்காக அவங்க ரூம்க்கு போய் இருந்தேன் .... வீட்டுல இருந்து மாவடு ஊறுகாய் கொண்டு வந்துருந்தா  ஒருத்தி ... அது அந்த 10 நாள்லயே காலியாகி ஓர்ர்ர்ரெ ஒரு குட்டி மாங்காய் மட்டும் அந்த பாட்டில்ல இருந்தது ... அதை எடுத்து ஒண்ணே ஒண்ணு தானனு பாட்டிலோட தட்டுல கவுத்தா இன்னொருத்தி.... அந்த மாங்கா டேக்கா குடுத்துட்டு தட்டுல விழாம எங்கயோ தரைல போய் விழுந்தது... போகட்டும்ங்கறாங்க ரெண்டு பேரும் .. அய்யய்யயோ வீட்டுல சீவின தலைங்கறதுக்காகவே  தலைய 2 நாள் சென்டிமெண்டா கலைஞ்சுராம பாத்துக்கிட்ட நானா வீட்டுல இருந்து கொண்டு வந்த மாங்காயை விடுவேன் ... ச்செ தரையில விழுந்தாத்தான் என்ன.. இவங்க வேற போனா போகட்டுங்கறாங்க ... நாம ஏதாவது சொன்னா கேவலமா நினைச்சுப்பாங்களேன்னு நினைச்சுகிட்டே அதை பாத்திட்டு நிமிரறேன் .... மூணாவதா அந்த ரூம்ல இருந்த ஒருத்தி அதையே பாத்துட்டு இருக்கா .... நான் அவள பாக்கறது தெரிஞ்சதும் என்னை பார்த்தாளே ஒரு பார்வை .. அந்த நொடி அந்த இணைபிரியாத உயிர் நட்பு எங்களுக்குள்ள பிறந்த நொடி.... நண்பேன்டா....

இப்பவும் எப்போ சந்திச்சாலும் மாவடு கதைய மட்டும் மறக்காம பேசி விழுந்து விழுந்து சிரிக்கறோம் ... இன்னும்  சிரிப்போம்..

ஆனா அந்த குட்டி  மாவடு என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லமாட்டேனே !!!