Friday, July 1, 2016

பேசி சிரித்து தயங்கி தவித்து
உரைத்து ஏற்று மயங்கி களித்து
நின்று மணந்து அணைத்து கலந்து
வாதம் செய்து ஊடல் மறந்து
பகிர்ந்து நடந்து வலிகள் மறைத்து
உடையும் நேரம் தாயாய் தழுவி
எல்லாம் மறந்து உள்ளதை ஏற்று
கடவுள் போல அன்பை மட்டும்
பொழியும் கணமே காதல் மலரும் !!

No comments:

Post a Comment