Thursday, July 21, 2016

"மறக்காம அந்த all proof jacket, helmet எடுத்துக்கோ... "
"எடுத்துக்கிட்டேன் மா ..."
"பெப்பர் ஸ்ப்ரே இருக்கு இல்ல.. இல்லேன்னா ரீபில் பண்ணிக்கோ..."
"இருக்கும்மா..."
"சரி இன்னைக்கு சீசன் டிக்கெட்டோட அந்த safety லைசென்ஸையும் ரென்யூ பண்ணிக்கணும்...."
"ஓகே மா.."
"அட் எனி காஸ்ட் நைட் லேடிஸ் ஸ்பெஷல் air cab ல தான் திரும்பி வரணும்.. கூட்டமா இருக்குன்னு road cab ல வர கூடாது சரியா ..."
"அப்பப்பா எல்லா நாளும் பண்றது தானே மா இது எல்லாம் ... திரும்ப திரும்ப தினமும் சொல்லணுமா ..."
"நீ அம்மாவானா தெரியும்டி .. பத்திரமா போய்ட்டு வா..."
ஆஃபிஸ் முடிந்து air cab இல் ஏறிய போது ரொம்ப லேட் ஆகிவிட்டது... நான் மட்டும் தான் இருந்தேன் .... cab கிளம்பி பறக்க ஆரம்பிக்க அசதியில் கொஞ்சம் கண் அசந்து விட்டேன் ...  திடீரென "பறந்தாலும் விடமாட்டேன்..." என்ற பாட்டு ஒலிக்க வெடுக்கென கண் விழித்தேன் ... நான் போய் கொண்டிருந்த பஸ் சடன் பிரேக் அடித்து இருந்தது ... முகம் எல்லாம் வேர்த்து இருந்தது ... சே என்ன ஒரு கனவு ...
அந்த ரோடில் இருந்த அரங்கத்தில் "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்...." என்று எக்காலத்துக்கும் பொருந்தும் பாடலை இயற்றிய அந்த மீசை கவிஞனின் 150வது பிறந்த நாள் விழாவாம்.. ஓரே டிராபிக் ஜாம் !!!!

No comments:

Post a Comment