Wednesday, June 22, 2016

இந்த herbarium னா என்னன்னு எல்லாருக்கும் தெரியுமா ... சரி ப்ளஸ் 2 ல சயின்ஸ் குரூப் எடுத்தவங்க மட்டும் கை தூக்குங்க.. ஓகே நீங்க ஒரு ஒரு நிமிஷம் தூங்கிக்கலாம் பிகாஸ் herbarium னா என்னன்னு மத்தவங்களுக்கு ஷார்ட் ஆ சொல்லிடறேன்... காய்ந்த இலை தழை  எல்லாத்தையும் ஒரு நோட்ல ஒட்டி அதை  பத்தி ரீலை ஓட்டறது தான் herbarium ... பிளஸ் 2 பயாலஜி க்ரூப்ல பைனல் ப்ராக்டிகல்ஸ்க்கு இந்த herbarium இன்டெர்னல் மார்க்ஸ் உண்டு.. எதுக்கு இவ்வளவு விளக்கம் னா இந்த herbarium என்னை படுத்திய சாரி நான் அதை படுத்திய பாடு இருக்கே ...

இங்க பாட்டனி டீச்சர் பத்தி ஒரு முதல் வணக்கம்... பயங்கர ஸ்ட்ரிக்ட்... அவங்களுக்கு மட்டும் எங்க இருந்து தான் இவ்வளவு வகையான செடி இலை கிடைக்குமோ... நாங்க இந்த herbarium பண்ண அவங்க ஒரு மாடல் நோட் கொண்டு வந்து, அதுல இருந்த இலை எல்லாம் காமிச்சு இப்படி தான் இருக்கணும் இல்லேன்னா நோ மார்க்ஸ்  ன்னு சொல்லிட்டாங்க .... அதுக்கு ஒரு டெட்லைன்னும் கொடுத்துட்டாங்க...

நானும் எப்பவும் போல கடைசீசீ ரெண்டு நாள் இருக்கும் போது தான் அந்த செடி இலை எல்லாம் தேடி தெருத்தெருவா லோலோன்னு அலைஞ்சேன்... என்னோட பரந்த நெட் வொர்க் (!!) வச்சு எப்படியோ அதுல சிலதை தேத்திட்டேன்.. வீட்டுக்கு வந்தா எங்க அப்பா திடிர்னு நாளைக்கு நைட் திருப்பதி போறோம்ங்கறார்... டென்ஷன் ஆயிட்டேன்... ஏன்பா முன்னாடியே சொல்றதுக்கென்ன.. எனக்கு நாளான்னைக்கு herbarium சப்மிட் பண்ணனும்.. இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேனேன் ... அவர் அவர்  ஸ்டையில்ல நீ முன்னாடியே பண்ணி வைக்கருத்துக்கென்ன ன்னு வெறுப்பேத்தறார்... அப்றம் சரி அதான் நாளைக்கு ஸ்கூல் போவியே அப்போ கொடுத்து வெச்சுருன்னு சொல்லிட்டார்... ஓகே வேற வழி இல்லைன்னு மடமடன்னு ராத்தரியோட  ராத்திரியா ப்ரீபெர் பண்ணி அடுத்த நாள் ஸ்கூல் க்கு கொண்டு போனா டீச்சர் லீவு....

சரி ஓகே ன்னு பிரென்ட் கிட்ட கொடுத்து அடுத்த நாள் நோட் கலெக்ட் பண்ணும் போது கொடுத்துருடீ ன்னு சொல்லிட்டு திருப்பதி லட்டுவை திருப்தியா சாப்பிட போய்ட்டேன்.. அந்த தடவைன்னு பார்த்து திருப்பதி ஸ்வாமி வேற ஒரு நாள் ஷெட்ல ஒக்கார வச்சு தான் லட்டு கொடுத்தார்....
திருப்பி வந்தப்போ சனி ஞாயிறு ....

மண்டே ஸ்கூல் க்கு போனா உடனே என் கிளாஸ் ல எல்லாரும் என்னை பாவமா பார்த்து உன்னை பாட்டனி டீச்சர் கேட்டுட்டே இருந்தாங்க.. வந்தா உடனே ஸ்டாப் ரூம்க்கு வர சொன்னாங்கன்னு சொல்றாங்க... ஒரே திகில் ல போனேன்... என்னை பார்த்த உடனே எங்க போய் இருந்த.. நான் உன்னை என்ன செய்ய சொல்லி இருந்தேன்னு முறைச்சாங்க... சாரி மிஸ் திருப்பதி போய் இருந்தேன் ... அங்க லேட் ஆய்டுச்சு ... பட் நான் herbarium நோட்டை கொடுத்துட்டு தான் போய் இருந்தேன்னு சொன்னேன்... அந்த அலமாரில உன் நோட் இருக்கு போய் எடுத்துட்டு வான்னு சொன்னாங்க... போய் பாத்தா தனியா லாஸ்ட் ஷெல்ப்பில இருக்கு.. எடுத்தா என்னவோ ஒரு ஸ்மெல் ....பயந்துகிட்டே  போனா "உன்னை herbarium தானே பண்ண சொன்னேன் ... fungarium ஆ பண்ண சொன்னேன்..நோட்டை திறந்து பார் " ன்னு ஒரே அர்ச்சனை... பாத்தா வெள்ளை வெள்ளையா ஒரே  fungus ...

அது ஒண்ணும் இல்லை என் வேலை எப்பவும் சுத்தமா இருக்குமா.. அன்னைக்கு herbarium பண்ணும் போது அந்த இலை தழை எல்லாம் நல்லா தண்ணில அலம்பி சுத்தம் பண்ணி சரியா துடைக்காம  நோட்ல ஒட்டிட்டேன் .... அதான் அந்த ஸ்பெஷல் ஸ்மெல் ...

அப்புறம் டீச்சர் அர்ச்சனை முடிச்சிட்டு தந்த ரெண்டு நாள்ல ஏதோ வீட்லயே இருந்த செம்பருத்தி இலை, துளசி இலை, கொத்தமல்லி , கறிவேப்பிலை , புதினா இப்படி எல்லாத்தையும் நோட்ல ஒட்டி herbarium ன்னு டீச்சர் கிட்ட கொடுத்து, அதை பத்தி செம்பருத்தி முடிக்கு  நல்லது நான் கூட யூஸ் பண்ணுவேன், துளசி இஸ் விஷ்ணு  பத்னி, கொத்தமல்லி சாப்பிட்டா லிப்ஸ்டிக் கே வேணாம் , புதினா நல்ல மௌத் பிரெஷ்னர் ன்னு ரீல் ஓட்டினா  அப்புறம் இண்டெர்னல் மார்க்ஸ் ஆ கிடைச்சிருக்கும்....

2 comments: