Monday, June 27, 2016

"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்ன்னு ஞாபகம் இருக்கா ..."

"இன்னைக்கு என்ன ஸ்பெஷல் நீயே சொல்லிடேன்.. " (எக்கச்சக்க மெயில்ஸ் ரெஸ்பாண்ட் பண்ணணும்.. இதுல இன்னைக்கு ஹை  லெவெல் ப்ரோபோசல் மீட்டிங் வேற ..)

"அது கூட ஞாபகம் இல்லையா.. நல்லா யோசிங்க பார்ப்போம் ..."

"யோசிக்க எல்லாம் டைம் இல்ல ... நீயே சொல்றதானா சொல்லு ...." (சலிப்புடன் )

"சரி விடுங்க ..." (கல்யாணமாகி கொஞ்ச வருஷத்துலயே எப்படி சலிச்சுக்கறார் ... )

காரை ஸ்டார்ட் செய்தபோது ஒரு மாதிரி கனைத்தது ... நிறைய கஷ்டப்பட்டு ஸ்டார்ட் செய்ய வேண்டி இருந்தது .. இந்த சனிக்கிழமையாவது சர்வீஸ்க்கு கொடுக்கணும்.... போன் அடித்தது..  "இன்னைக்கு ஈவினிங் ஈ ஸீ ஆர் ல இருக்கற பாபா கோவிலுக்கு போலாமா ..."

"இன்னைக்கு எல்லாம் கஷ்டம் ... அதுவும் அவ்வளவு தூரம் போய்த்தான் பார்க்கணுமா.. நீயே லோக்கல்ல இருக்கற சமிதி போய் பாத்துக்கோ ...."

"இல்லை இன்னைக்கு வரதா மனசுல வேண்டிட்டே இருந்தேன் ..."

"உனக்கு வேற வேலை இல்லை .. நான் ட்ராபிக் ல இருக்கேன் ... அப்றம் பேசறேன்... "

வேலை டென்ஷனில் மொபைல் சைலன்ட் மோடில் இருந்ததை கவனிக்கவில்லை....

அவள் திரும்ப திரும்ப ட்ரை செய்து போனை எடுக்கவில்லை.. "இவ்வளவு  தடவை போன் பண்ணறேன் ... எடுக்கறாரா பாரு ... அவ்வளவு அலட்சியம் ... எல்லாரும் சொல்றா மாறி நாற்பது வயசுன்னா இப்படி தான் மாறிடுவாங்களோ .. முன்ன எல்லாம் என் மேல எவ்வளவு அன்பா இருப்பார்.. இப்போ சுத்தமா என் மேல அன்பே இல்லை ... " ரொம்ம்ம்ப யோசித்து யோசித்து ஒரு அழுகை அழுது முகம் எல்லாம் வீங்கி விட்டது...

கிட்டத்தட்ட நாலு  மணியாகி விட்டது  மீட்டிங் முடிந்து ஓரளவு டென்க்ஷன் குறைந்து அப்போதான் லன்ச் பேகையே  பிரித்தான்.. "அட என்ன இது ஸ்பெஷல் லன்ச் ... பாயசம் வேற இருக்கு ... எனனவோ ஸ்பெஷல் கண்டுபிடிங்கன்னு வேற சொன்னாளே ... ஒரு வேளை இன்னைக்கு அவ பர்த்டேவோ .. மார்ச் 4 ஆ மார்ச் 14 ஆ ... இப்படியா மறந்து போவேன் ... சரி எதுக்கும் ஒரு பொக்கேயோடவே வீட்டுக்கு போவோம்.. "

கதவை திறந்தவள் முகத்தை பார்த்தவுடனே தெரிந்து விட்டது ... "அய்யோ ஸாரிம்மா காலைல ஒரே வொர்க் டென்க்ஷன் ... மொபைலை வேற கவனிக்காம சைலண்ட்ல போட்டு இருந்தேன் ... அதுக்கு போய் இப்படி அழுதியா ... ஹேய் many many happy returns of the day... ஆனா பாத்தியா அப்பவும் நான் மறக்கலை ... உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு தான் ஒண்ணுமே ஞாபகம் இல்லாத மாறி நடிச்சேன் ... எப்படி ..." (கடவுளே எப்படியோ சமாளிச்சாச்சு ... நீதான் காப்பாத்தணும் )

அவன் தந்த பொக்கேவையே பார்த்தவள் சொன்னாள் "இன்னைக்கு பர்த்டே உங்களுக்குதான்.... அதுக்கு தான் பாயசம் பண்ணேன்.. கோவிலுக்கு போலாம்னு சொன்னேன் "

"ஙே !!!"

Men are from mars, women are from venus ன்னு சும்மாவா  சொன்னாங்க...

No comments:

Post a Comment