Tuesday, March 7, 2017

நான் ஒரு பெண் !!!

கொஞ்சம் மாசங்களுக்கு முன்ன டெல்லி போய் இருந்தப்போ ....
நாங்கள் ஸ்டே பண்ணி இருந்த இடத்தில் இருந்து சாயங்காலம் "அக்ஷர்தாம்" போகறதுக்காக டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தோம்.... போகும் போது அவ்வளவு கூட்டமா இல்லை.... அக்ஷர்தாமில் இருந்து நைட் ஒரு எட்டரை மணிக்கு மேல் கிளம்பியபோது என்னவோ கொஞ்சம் துருக்க்ன்னு தான் இருந்தது.... இதுக்கும் கொஞ்சம் காலம் முன்னாடி வரைக்கும் வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ எட்டரை ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸ்ல இருந்து எந்த கவலையும் இல்லாம சென்னைல எலெக்ட்ரிக் ட்ரெயின்ல வீட்டுக்கு வருவேன்... ஆனால் அன்னைக்கு டெல்லில கூடவே கணவர் மாமனார் மாமியார் ன்னு எல்லாரும் இருந்தும் என்னவோ ஒரு டிஸ்கம்பர்ட்... என் பொண்ணை இறுக்கி கைய பிடிச்சிகிட்டே நடந்தேன்....

மெட்ரோ ஏறும் போது ஓரளவு தான் கூட்டமா இருந்தது.... டோர் கிட்ட இருக்கற சீட்ல (வயதானவர்கள் , நோயாளிகள் க்கு முன்னுரிமைன்னு நினைக்கறேன்....) நானும் என் பொண்ணும் உட்காந்துகிட்டோம்.... என் ஹஸ்பண்ட் எங்களுக்கு முன்னாடியே பாதுகாப்பா நின்னிட்டு இருந்தார்....  எங்க ரெண்டு பேராலயும் அந்த சின்ன கேப்ல ரொம்ப நேரம் உக்கார முடில... சோ அவ நல்ல உக்காந்துக்கட்டும்னு நான் எழுந்து  என் பொண்ணு பக்கத்துலயே நின்னுக்கிட்டேன்.... சில ஸ்டேஷன்ஸ் போனப்பறம் ஒரு வயசானவர் ட்ரெயின்ல ஏறினார்.... கொஞ்சம் மூச்சு திணறல் மாதிரி தெரிஞ்சார்..... அது வயதானவர்கள் சீட் னால என் பொண்ணை எழுப்பி அவளை என் பக்கத்துலயே கையை பிடிச்சிகிட்டே நின்னுட்டு இருந்தேன்.... கொஞ்ச நேரம் ஆனதும் என் பின்னாடி இருந்து யாரோ எங்களையே முக்கியமா என் பொண்ணையே கவனிக்கற மாதிரியே தோணிச்சு.... எதேச்சையா திரும்பற மாதிரி பின்னாடி பார்த்தேன்..... முகம் எல்லாம் ஏதோ தழும்போட தலையில துப்பட்டாவை போட்டு பாதி மறைச்சிகிட்ட முகத்தோட ஒரு பொண்ணு எங்களையே பார்த்துட்டு இருந்தா.... பகீர்ன்னு இருந்தது.... ஒரு நிமிஷத்துல பல விதமான எண்ணங்கள்.... என்னோட ஹேண்ட்பேகை பாக்கறாளா இல்லை என் பொண்ணை கவனிக்கறாளான்னு செக் பண்ண என் பேகை ஷோல்டர் மாத்தி மாட்டிகிட்டேன்…. அப்பொவும் அவ என் பொண்ணை தான் பாத்துட்டு இருந்தா.... அதுக்குள்ள வேற ஒருத்தர் எங்களுக்கும் அந்த லேடிக்கும் நடுவுல வந்தார்.... அவ அவரையும் மீறி என் பொண்ணு நின்னுட்டு இருந்த டைரக்ஷன்லயே பாத்துட்டு இருந்ததை பார்த்து அடி வயிறே கலங்கிடுச்சு.... மெதுவா பக்கத்துல இருந்த என் கணவர் கிட்ட சொன்னேன்.... அவரும் கொஞ்ச நேரம் அப்சர்வ் பண்ணிட்டு "ஆமா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.... அவ நம்மளை தான் பார்த்துட்டு இருக்கா.... பட் கவலைப்படாத..... பாத்துக்கலாம்...." அப்படினார்..... அதுக்கு அப்பறம் ஒரு பதினைந்து நிமிஷம் என்னோட ஹார்ட் பீட் எனக்கே கேக்கற அளவு ஒரு பதட்டம்.... அவ நோக்கம் என்ன.... டெல்லி மெட்ரோ பத்தி நியூஸ்ல வந்த அத்தனையும் அப்போதான் ஞாபகம் வருது.... என் பொண்ணை அந்த லேடி பாக்க முடியாத மாதிரி எனக்கு முன்னாடி இழுத்து இறுக்க அணைச்சிகிட்டே "சாய் ராம் சாய் ராம் " ன்னு  சொல்ல ஆரம்பிச்சேன்…. I was super alert  when the train stopped at every station…. Was constantly scanning if there was someone else somewhere with whom that lady might communicate…. திடீர்ன்னு வந்த அடுத்த ஸ்டேஷன்ல அந்த லேடி எங்களுக்கு முன்னாடி வந்து உக்காந்து இருந்த அந்த வயசானவரை கூட்டிட்டு ட்ரெயின்ல இருந்து இறங்கறா.... அவ அவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்த எங்க கேப்ல அந்த பெரியவரை தான் பார்த்துட்டு இருந்தான்னு அப்போதான் புரிஞ்சது.... may be she was his care taker or helper….

ஒரு நிமிஷம் அவளை என்னன்னவோ நினைச்சிட்டோமேன்னு கொஞ்சம் வெட்கமா இருந்தாலும்..... அது தான் இன்றைக்கு வெளில பெண்களுக்கு நடக்கற நிதர்சனங்கள்..... எதையுமே லைட்டா எடுத்துக்க முடியறது இல்லை பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு....

என்றைக்கு நம் வீட்டு குட்டி பெண் குழந்தைகள் எந்த வித கவலையும் பயமும் இல்லாமல் வீட்டு முற்றத்தில் விளையாட விடப்படுகிறார்களோ, ரோடில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க படுகிறார்களோ….

என்றைக்கு ஸ்கூல் காலேஜ் ஆபீஸ் போகும் பெண்களின் பாதுகாப்பை  பற்றி எந்த கவலையும் இல்லாமல் பெற்றவர்களால் இருக்க முடிகிறதோ....

என்றைக்கு பெண்களுக்கு அவர்களின் இயற்கை உபாதைகளை தீர்க்க மறைவிடம் தேடி அலைவது நின்று ஒரு பேசிக் நீடாக வீட்டில் ஒரு ரெஸ்ட்ரூம் இருக்கோ....

என்றைக்கு பெண்களுக்கு அடிப்படை கல்வியாவது கட்டாயமாக கிடைக்குதோ  (I agree today women are in every possible field and doing wonders…. But I am talking about the women who do not get even basic education)....

என்றைக்கு morphing மண்ணாங்கட்டி என்று என்ன செய்து மிரட்ட பட்டாலும் "அது எதுவும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.... நீ செய்வதை செய்" என்று துணிச்சலாக சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு determination வருகிறதோ....

பெண்கள் தினம் அன்று மட்டும் திரும்ப திரும்ப "பெண் ஒரு மகள், தாய், சகோதரி, மனைவி etc etc " என்று ஒரே மெசேஜை சொல்லாமல்,…

When a woman, a girl child is seen, treated, felt and protected as a fellow HUMAN BEING, deserving all the rights to live SAFELY in this world,  Only then Women’s Day becomes meaningful because it should not be just the celebration of social, economic and cultural achievements of women but it should be a celebration of

The proud emotion ...

“I am a WOMAN” !!!

No comments:

Post a Comment