tag:blogger.com,1999:blog-13317580387798049712024-03-19T04:22:54.998-07:00என் பேனாவின் பயணம்கதைகள், கவிதைகள், அனுபவங்கள்Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-72610966192794029502021-08-22T04:08:00.001-07:002023-08-17T02:27:57.844-07:00கதை - நிதர்சனம் <p>“சொல்ல மறந்துட்டேனே... நம்ம சங்கரன் கூட வீட்டை வித்துடலாம்னு முடிவெடுத்து இருக்கான்”</p><p><br /></p><p>“என்னது??” வாயில் போட்ட சாதம் முழுங்க முடியாமல் தொண்டையிலேயே சிக்க, ஒரு நிமிஷம் அம்மா சொன்னதை கேட்டு அதிர்ந்தேன்...</p><p><br /></p><p>“ஆமாண்டா.... பத்து நாள் முன்னாடி தான் இந்த பக்கமா ஏதோ வேலையா வந்துட்டு, நம்ம வீட்டுக்கும் வந்தான்... அவன் பையன் அரவிந்த்க்கு அமெரிக்கால, Michiganல யூனிவர்சிட்டி அட்மிஷன் கிடைச்சிருக்காம்.... உன்கிட்ட கூட பேசணும்னு சொன்னான்... நான் நீ இந்த வாரம் இங்க வரன்னு சொன்னேன்... அப்போ நல்லதா போச்சு நேர்லயே பேசிக்கறேன் அப்படின்னு சொல்லிட்டு போனான்..”</p><p><br /></p><p>“சரிம்மா... வீட்டை எதுக்கு விக்கறானாம்?”</p><p>“அதாண்டா... அவன் பையனை படிக்க அனுப்ப ஏதோ லோன் எல்லாம் கூட போட்டுருக்கானாம்.... இருந்தாலும் கஷ்டமா இருக்கு போலருக்கு... அரவிந்த்க்கு கீழ வேற ரெண்டு பொண்ணாச்சே அவனுக்கு.... அதான் சரி வீட்டை வித்துடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் அப்படினான்…”</p><p><br /></p><p>வீட்டையா?? வெறும் வீடா அது.... காரையும், மணலும், துணி துவைக்கற கல்லும், கிணறும், வேப்பமரமும், பாட்டியோட “சாப்பிட வாடா சந்துரு...”வும், அவ கை வாசனை நிறைஞ்சு இருக்கற முருங்கைக்காய் சாம்பாரும், தாத்தாவோட லைஃபாய்யும் விபூதியும் கலந்த பனியன் மணமும், மாமாவோட “டேய்ய்ய்”யும், வாசல்ல கும்னு மணம் வீசற மல்லிகையும், உள்ளங்கை அளவு பூக்கும் சிவப்பு செம்பருத்தியும், அதை கொண்டையில் வெக்கறதுக்காகவே காத்திட்டு இருக்கும் நான் ‘விக்கி’ன்னு செல்ல பேர் வெச்ச “கேட்” விநாகயரும், அகிலாவோட கல்யாண ரிசப்ஷனுக்கு போயிட்டு வந்து சத்தமில்லாம நான் அழுத வேப்பமர கிளைகள் குடைபிடிச்ச மொட்டைமாடியும் ..... ஐயோ என்னது இதெல்லாத்தையும் விக்க போறானா.... நினைக்கும் போதே என்னவோ செய்தது…</p><p><br /></p><p>சென்னை… இல்ல தப்பு மெட்றாஸ்… சென்னைன்னு சொல்ல என்னைக்குமே எனக்கு விருப்பம் இருந்தது இல்ல..... அம்மா வழி தாத்தா, பாட்டி, அம்மாவோட அண்ணாவான ஒரே தாய் மாமா, அத்தை, அவங்க பையன் சங்கர் அண்ணா, பொண்ணு விமலா அக்கா இருந்த மெட்ராஸ்.... மேற்கு மாம்பலத்துல மகாதேவன் ஸ்ட்ரீட்ல, அந்த காலத்துல தாத்தா பாத்து பாத்து கட்டின வீடு.... வீட்டை சுத்தி கொய்யா மரம், வேப்ப மரம், மல்லிகை, செம்பருத்தி, ரோஜான்னு செடிகள், பாட்டி வெச்ச கறிவேப்பிலை, கீழாநெல்லி, பின்னாடி கிணறு, வாசல் பக்கம் சிமெண்ட்ல திண்ணை, வீட்டுக்குள்ள ரெட் ஆக்சைட் மெழுகின தரை.....</p><p><br /></p><p>அம்மாவோட பிறந்த வீடுங்கறதாலயோ என்னமோ, மெட்றாஸ்க்கும் எனக்குமான பந்தம், தொப்புள் கொடி உறவு மாதிரி அவ்ளோ நெருக்கமா இருந்தது... ஒவ்வொரு வருஷமும் தவறாம, எனக்கும் அம்மாவுக்கும், ஏப்ரல், மே மாதங்கள், தாத்தா பாட்டி வீட்ல தான் ….</p><p><br /></p><p>நான் பிறந்ததுலேர்ந்து எனக்கு ஆறு வயசாகற வரைக்கும், அப்பா பாம்பேல வேலை பார்த்துட்டு இருந்தார்... பாம்பே கல்யாண் ஜங்க்ஷன்ல நாங்க ஏறும் தாதர் எக்ஸ்பிரஸ், ஒண்ணரை நாட்கள் விடாம ஓடி, பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷன்ல நுழையும் போதே, ஜன்னல் வழியா தெரியும் அந்த மூணு ராக்ஷச சிமெண்ட் டம்ப்ளர்களை (பேசின் பிரிட்ஜ் பவர் ஸ்டேஷனோட ராக்ஷச சிம்னிக்கள்) பார்த்த நொடிலயே, மெட்ராஸ் வந்துட்ட பரவசம், சென்ட்ரல் ஸ்டேஷனோட “டொய்ங்ங்ங்..” அறிவிப்பை கேட்ட நொடியிலே ப்ரவாகமா மாறி, துள்ளிக்கிட்டே நான் கால் பதிக்கற மெட்ராஸ்… பேசின் பிரிட்ஜ்ல இருக்கற அந்த மூணு, அந்த மூணுல ஒண்ணு பாதியா உடைஞ்சது, அப்படிங்கற வரைக்கும் நினைவில் இருக்கற சிம்னிக்கள், என்னை பொறுத்தவரை மெட்ராஸ் வந்துட்ட என் சந்தோஷத்தோட கொண்டாட்டமான துவக்கம்.... பின்னாடி அப்பாக்கு சேலத்துக்கு மாற்றல் ஆகி, லீவ்லயெல்லாம் அம்மா வந்து, என்னை மட்டும் விட்டுட்டு திரும்பி போன காலத்துல, பத்தாவது பரீட்சை எழுதிட்டு லீவ்க்கு வந்தப்போ, சங்கர் அண்ணாவை கெஞ்சி, அதை பார்க்க பேசின் பிரிட்ஜ் வரைக்கும் போயிட்டு வந்து, “இது என்னடாது புதுசா ஊர் சுத்தற பழக்கம்…. அதும் ஸ்கூல் படிக்கற வயசுலயே... அந்த ஏரியாலாம் தனியா போற அளவு சரியே கிடையாது... போலாமா மாமா அப்படின்னு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா நீ... இல்ல இது சரிப்பட்டு வராது.... உங்கம்மாக்கிட்டயே சொல்றேன்...” அப்படின்னு மாமாக்கிட்ட மண்டகப்படி வாங்கினது வேற கதை… பின்னாடி அந்த மூணு சிம்னிக்களும் காணாம போன அன்னைக்கு யாருக்கும் தெரியாம மொட்டைமாடிக்கு போய் அழுதேன்.... “அய்யே என்னடாது வளர்ந்த பசங்க எங்கயாவது அழுவாங்களா..” அப்படின்னு சங்கர் அண்ணா கிண்டல் பண்ணுவான்...</p><p><br /></p><p>………………………………….</p><p>………………………………….</p><p>………………………………….</p><p><br /></p><p>“டேய் .... என்னடா... அப்படியே மலைச்சு போய் உக்காந்து இருக்க..... தட்டு காயறது பாரு... போய் கையலம்பிட்டு வா....” அம்மாவோட குரல் உலுக்க, சுதாரிச்சேன்...</p><p><br /></p><p>“அம்மா..... நான் சங்கரன் அண்ணாக்கிட்ட பேசறேன்...”</p><p><br /></p><p>அவளுக்கு தெரியும்... வீட்டை விக்கறதை பத்தி நான் அதிர்ச்சி அடையலைன்னா தான் அவளுக்கு ஆச்சர்யம்..</p><p><br /></p><p>“டேய் சந்துரு… நீ வரப்போறன்னு அத்தை சொன்னாடா... எப்படி இருக்க... வாணி, ஸ்ருதி எல்லாம் சௌக்கியம் தானே… வீட்டுக்கு வாடா.... எவ்ளோ நாளாச்சு நாம ஒண்ணா சாப்பிட்டு, பேசி, சிரிச்சு.... நானே உன்கிட்ட பேசணும்னு தான் இருந்தேன்.... நம்ம அரவிந்த்க்கு Michiganல MS அட்மிஷன் கிடைச்சு இருக்கு.... நீ அட்லாண்டால தான இருக்க... உனக்கு தெரிஞ்சவங்க யாராவது Michiganல இருக்காங்களா....”</p><p><br /></p><p>மூச்சு விடாமல் பேசிய அண்ணாவுக்கு ஒரே வரியில், “அண்ணா.... வீட்டை விக்க போறியா?”… வேற எதுக்குமே பதில் சொல்லாம இதை தான் கேட்டேன்... இதை தான் கேக்க முடிஞ்சது ...</p><p><br /></p><p>“ஆமாடா... அவனுக்கு ஸ்பான்சர் கிடைச்சாலும் அதுக்கு மேல ஆகற செலவை சமாளிக்க வேற வழி இல்ல.... யோசிச்சேன்... அதான் இந்த முடிவு...”</p><p><br /></p><p>“ஏண்ணா… அந்த வீடு நமக்கு எவ்ளோ பிரியமானது ..... அதை போய் எப்படி??”</p><p><br /></p><p>“என்னடா பண்றது.... அப்பா போனப்பறமே நானே ஆபீஸ்க்கு தூரமா இருக்குன்னு, அங்க இல்லாம இங்க அம்பத்தூர் வந்துட்டேன்... அவ்ளோ பெரிய தனி வீட்ல, இதுக்கு அப்பறம்லாம் யாருடா இருக்க போறாங்க ... இப்போ பாரு அரவிந்த் யூ.எஸ்க்கு படிக்க வந்துட்டான்னா அப்பறம் இங்க எங்க வரப்போறான் .... உன்னை மாதிரியே அங்கேயே இருந்துருவான்....”</p><p><br /></p><p>“ஐயோ திரும்பி வர முடியாததுதாண்ணா ப்ரச்சனையே...” ன்னு சொல்ல வாயெடுத்தேன்.... ஆனா சொல்லாமல் முழுங்கினேன் …</p><p><br /></p><p>“ஒரு பிளாட் ப்ரமோட்டர் ஜாயிண்ட் வென்ச்சர் போட்டுக்கலாமான்னு ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கான்... அதும் இல்லாம நாம இடத்தை கொடுத்தாலும், நமக்கும் பிளாட்க்கு முன்னாடியே அழகா ஒரு தனி வீட்டையும் அவனே கட்டி கொடுக்கறதா சொல்லி இருக்கான்... நல்லதா போச்சு... நமக்கும் புதுசாவே வீடு கிடைச்சுடும்... அதான் இந்த முடிவு...” அப்படினான்.</p><p><br /></p><p>“அண்ணா, உனக்கு இப்போ பணம் தேவையா இருக்குங்கறதால தான விக்க முடிவு பண்ணிருக்க.... வீட்டை நானே வாங்கிக்கிட்டா எனக்கு கொடுப்பியா ... நான் வாங்கிக்கறேன்...” சட்ன்னு கேட்டுட்டேன் …</p><p><br /></p><p>கடகடன்னு சிரிச்சிட்டு, “டேய்ய்ய் ... நீ இன்னும் அப்படியே தான் இருக்க.... சரி நாளைக்கு அத்தை, மாமாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வர்ற.. நானும் அனுவும் லீவ்தான்.... சாப்பிடற மாதிரி வர்ற.... மத்தத எல்லாம் நேர்ல பேசிக்கலாம் சரியா...” அப்படின்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டான்...</p><p><br /></p><p>“என்னடா ... ஏதோ யோசனைலயே இருக்க.... கொஞ்சம் நேரம் கண்ணசறலாம் இல்ல.... இந்தா காஃபியை குடிச்சிட்டு தெம்பா யோசி...” சிரிச்சிக்கிட்டே கிண்டல் அடித்த அம்மாவை, அடிபட்ட பார்வையுடன் பார்த்தேன்....</p><p><br /></p><p>சட்ன்னு பதறிட்டா... “சந்துரு.... ஏண்டா இப்படி இருக்க.... எனக்கு உன்னோட உணர்ச்சிகள் புரியலைனா நினைக்கற.... எனக்கும் தான் கஷ்டமா இருக்கு.... என்ன பண்றது … சிலதெல்லாம் நடைமுறைல வேறடா.... அந்த வீட்டை எவ்ளோ நாள் இப்படியே வெச்சிருப்பான்.... நீயே யோசிச்சு பாரு இவ்ளோ வருஷமா நீ லீவ்க்கு வரும்போதெல்லாம் அந்த வீட்டை போய் பார்க்கணும்னாவது நினைச்சு இருக்கியா ... இப்போ அதை விக்க போறான்னு தெரிஞ்சதும் உனக்கு வலிக்குது .... இது தான் நிதர்சனம்…. இதையெல்லாம் கடந்து வர்றது தான் வாழ்க்கைடா..... நீயே திரும்பி போனப்பறம் இதை பத்தி யோசிக்க கூட நேரமில்லாம கால்ல சக்கரத்தை கட்டிட்டு ஓட போற.... வா கிளம்பு... திருவல்லிக்கேணி போயிட்டு வரலாம்...” ன்னு சொல்லட்டு போய்ட்டா…</p><p><br /></p><p>உண்மைதான் … மாமா இறந்தப்பறம், சங்கர் அண்ணா அம்பத்தூர் போய்ட்டான்.... அதுக்கு அப்பறம் நான் லீவ்க்கு வந்தப்போ எல்லாம் வீட்டை போய் பார்க்கணும்னு தோணினது இல்லை.... நம்ம வீடு தானே எங்க போய்ட போகுதுங்கற எண்ணம் காரணமா இருக்கலாம்... அதுக்காக அதை இடிச்சு வேற கட்டணும் அப்படிங்கும்போது வலிக்காம இருக்குமா …</p><p><br /></p><p>“அப்பா.... நாளைக்கு சங்கர் அண்ணா அவன் வீட்டுக்கு நம்ம எல்லாரையும் வர சொல்லி இருக்கான்...”</p><p><br /></p><p>“சரிடா.... போலாம்.... நாங்களே போய் ரொம்ப நாள் ஆச்சு ... கூப்டுட்டே இருக்கான்...”</p><p><br /></p><p>காலைல குளிச்சிட்டு டிபன் சாப்பிட்டவுடனேயே, சட்னு பேண்ட் ஷர்ட்டை மாட்டிக்கிட்டு அப்பா டாண்ணு ரெடியாய்ட்டார் ....</p><p><br /></p><p>“அம்மா பத்து நிமிஷத்துல ரெடியாய்டுவேன்னு சொல்லிட்டா.... நீயும் ரெடி ஆக இன்னும் எவ்ளோ நேரமாகும்ன்னு சொல்லிட்டா, அதுக்கு தகுந்த மாதிரி ஓலாவோ உபெரோ புக் பண்ணிடுவேன்....” ன்னு சொன்ன அப்பாவை பார்த்து “பத்து நிமிஷத்துல நானும் ரெடியிடுவேன்ப்பா ....” ன்னு சொல்லி சிரிச்சேன்....</p><p><br /></p><p>அனாயசமா மொபைல் ஆப்ல ஓலா புக் பண்ணிட்டு இருந்த அப்பா... ஸ்கூல் லீவ்ல வரும்போது சென்ட்ரல் ஸ்டேஷன்ல, ஸ்டேஷனை விட்டு வெளிய வரும்போது மொய்க்கும் ஆட்டோ டாக்சிக்களை ஒதுக்கி, பழைய ரூட் 11D பஸ்சுக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து, பஸ்லயே வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அதே அப்பா...</p><p><br /></p><p>“என்னடா சிரிக்கற... எனக்கும் மொபைல்ல ஆப்லாம் யூஸ் பண்ண தெரியும்டா...”ன்னு சொன்ன அப்பாவை பார்த்து, “ஒண்ணுமில்லப்பா” ன்னு சொல்லிட்டு கிளம்பினேன்...</p><p><br /></p><p>அடையார்ல இருந்து அம்பத்தூர் போற வழி எல்லாம் எவ்ளோ மாற்றங்கள்… ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஏதோ ஒரு புது மாற்றம்.... மத்ய கைலாஷை தாண்டி, மேம்பாலத்து கீழ ஊர்ந்து, இடது பக்கமா காந்தி மண்டபம் கண்ல பட்டதும், தன்னிச்சையா அண்ணா யூனிவர்சிட்டியை திரும்பி பார்த்தேன்... ப்ளஸ் டூ முடிச்சிட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாம் கோச்சிங்க்காக மெட்ராஸ் தான் வந்தேன்... சங்கர் அண்ணா தான் அண்ணா யூனிவர்சிட்டிக்கு முதல் முதலா கூட்டிட்டு போனான் ... மெயின் கேட்க்கு முன்னாடி இருந்த ரவுண்டானால, “அண்ணா யூனிவர்சிட்டி” ன்னு எழுதி இருந்த அந்த பெரிய சிவப்பு க்ரானைட் ஒட்டின கான்க்ரீட் ஸ்ட்ரக்ச்சரை பார்த்த உடனே, அங்க தான் சேர்ந்து படிக்கணும்ங்கற ஆசை அதிகமாச்சு.... ப்ளஸ் டூ ல எப்படியும் நல்ல மார்க் எடுப்பேன்னு தெரியும்.. அதனால என்ட்ரன்ஸ் எக்ஸாமையும் பிச்சி உதறிடணும்னு அதுக்காகவே ராப்பகலா படிச்ச ஞாபகமெல்லாம் வர... சட்னு மனசு ஒரு தாவு தாவி அகிலா எங்க இருக்கா? எப்படி இருப்பான்னு யோசிக்க ஆரம்பிச்சது … ச்சே இப்போ என்ன அதை பத்திலாம்... மனதில் ஓடிய கேள்விகளை உதறி வேடிக்கை பார்ப்பதை தொடர்ந்தேன்... </p><p><br /></p><p>சங்கர் அண்ணா அப்படியே தான் இருந்தான், பிள்ளைகளின் வாழ்க்கையை பற்றிய கனவுகளை மட்டுமே லட்சியமாக கொண்ட ஒரு நடுத்தர வர்க்க அப்பாவின் வயோதிகத்தின் ஒரு சாயலை தவிர ....</p><p><br /></p><p>“வாடா வா..... எவ்ளோ காலமாச்சு உன்னை பார்த்து.... அப்படியே தான் இருக்க.... என்ன அங்கலாம் எல்லாரும் ரெகுலரா எக்சர்சைஸ் பண்ணுவாங்களாமே... நீயும் பண்றியோ... அப்பறம் ஸ்ருதி இப்போ ஏழாவதா, எட்டாவதா? ... இந்த வீட்ல மாடி போர்ஷன் கட்டினப்பறம், இப்போதான் முதல் தடவையா வர்றியோ... வா மாடியை காட்டறேன்.... மொட்டை மாடிக்கு போனா காத்து பிச்சிக்கிட்டு போகும்... உனக்கு தான் மொட்டை மாடினா ரொம்ப பிடிக்குமே.... நம்ம மாம்பலத்துல இருந்தப்போ எப்படி இருந்ததோ, அதே மாதிரி இந்த ஏரியா இப்போ இருக்கு பாரு காத்தோட்டமா...” விடாமல் படபடன்னு பேசிக்கிட்டே இருந்தான்...</p><p><br /></p><p>அவன் எப்பவுமே இப்படித்தான்....</p><p><br /></p><p>நான் ஹை ஸ்கூல் வந்தப்பறம், என்னதான் சேலத்துல ராஜு, கிருஷ்ணா, செல்வம் ன்னு எனக்கு ஒரு பெரிய பிரெண்ட்ஸ் கேங்கே இருந்தாலும், லீவ் விட்டா ஒரு பத்து நாளாவது மெட்ராஸ் வரலைனா அந்த லீவ் வேஸ்ட் தான்.... அதுக்கு ஒரு முக்கியமான காரணம் சங்கர் அண்ணான்னு சொல்லலாம்..</p><p><br /></p><p>நான் போய் வீட்ல இறங்கினவுடனே பாட்டிக்கிட்ட சிரிச்சிக்கிட்டே சொல்லுவான் “பாட்டி.... வடாம் போடலாம்னு சொல்லிட்டே இருந்தியே.... வந்துட்டான் பாரு உன் செல்ல சமத்து பேரன்.... நீ தினம் ஒரு வெரைட்டியா, காக்காவை விரட்டறதை பத்தின கவலையே இல்லாம போடலாம்.... மொட்டை மாடி பிரியன் கவனமா பார்த்துப்பான்...”</p><p><br /></p><p>“போடா... சொன்னாலும் சொல்லாட்டாலும் அவன் சமத்து தான்... பொறுமையா உக்காந்து இருப்பான்... லைப்ரரில இருந்து பத்து புக்ஸ் ஐ எடுத்துட்டு வந்துட்டான்னா போறும்... இடத்தைவிட்டு நகராம அப்படியே உக்காந்து இருப்பான்…” பாட்டி சொல்லிவிட்டு வடாம் மாவை கிளற தயாராயிடுவா...</p><p><br /></p><p>கரெக்ட்தான் ... அங்க இருந்த நாட்கள்ல பாதி நேரம் நான் மொட்டைமாடிலேயே தான் குடி இருப்பேன்... மாடில வெச்சிருந்த சின்டெக்ஸ் டேங்க்கும், கைப்பிடி சுவருக்கும் நடுவுல வேப்ப மரக்கிளை குடை மாதிரி விரிஞ்சி ஒரு இடம்... ஒரு புக்கை எடுத்துக்கிட்டு போய் உக்காந்தா “சாப்பிட வாடா சந்துரு...” ன்னு பாட்டி குரலை கேக்கற வரைக்கும் உலகமே மறந்து போகும்... ராத்திரி ஐஸ்வண்டி போகும்போது அதை வாங்கிக்கிட்டு மாடில உக்காந்து வானத்தை பார்த்துக்கிட்டே சாப்பிடறதுல ஒரு அலாதி சுகம் இருந்தது .. சங்கர் அண்ணா காலேஜ் போக ஆரம்பிச்சிட்ட டைம்ல மாடில ஒரு சின்ன ரூம் கட்டினார் மாமா.... “வெயில் ஏறுதேடா .... ரூம்ல உக்காந்து தான் படியேன்...” ன்னு பாட்டி சொன்னாலும், எனக்கு அந்த டேங்க்க்கு பக்கத்துல இருந்த இடம் தான் பிடித்தமானது ....</p><p><br /></p><p>ரங்கநாதன் ஸ்ட்ரீட்க்கு விமலா அக்கா கூட போய், அந்த தெரு முனைல இருக்கற ஜூஸ் கடைல ஜூஸை குடிச்சு, கிருஷ்ணவேணி தியேட்டர்ல எல்லாருமா போய் படம் பார்த்து, பாட்டி வீட்டு பக்கத்துல இருந்த செம்ம பிரில்லியண்ட் சாரதியை பார்த்து பிரமித்து, அவன் அறிமுகப்படுத்திய லைப்ரரில ஒரு நாளைக்கு ரெண்டு புக்ஸ் ன்னு எடுத்து அசுர வேகத்துல படிச்சு, ராத்திரி தாத்தா, மாமா, சங்கர் அண்ணா, விமலா அக்கான்னு எல்லாரோடவும் மொட்டை மாடில சாப்பிட்டு, அந்தாக்ஷரி, படம் பேரெல்லாம் dumb charades ன்னு விளையாடி, அதிகமா பேசாம, நாங்க அடிக்கற கூத்தையெல்லாம் சிரிச்சுக்கிட்டே ரசிக்கிற அத்தை கூட “முத்தான முத்தல்லவோ ..” அப்படினு இனிமையா பாடற பொழுதுகள்…ஒரு தடவை அந்தாக்ஷரில வேணும்னே “அஃக்” ல முடிச்சேன்.... “டேய்ய்ய் அஃக்ல எல்லாம் பாட்டு இல்லை....” அப்படின்னு சங்கர் அண்ணா சொல்ல, “ஏன் இல்ல.... அதான் இப்போ ஏதோ பாட்டு வருதே ‘அஃக் கடான்னு நாங்க..’ன்னு கமலஹாசன் பாடறானே அதாண்டா...” அப்படின்னு தாத்தா சொல்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சது, அப்படின்னு லீவ் ஓடறதே தெரியாது …. வருஷம் 16 படத்துல வர்ற கார்த்திக் மாதிரி என்னை பீல் பண்ண நாட்கள் எல்லாம் கூட உண்டு …. கிளம்பும் நாள் என்னவோ தொண்டையை அடைக்கும் ... இப்போல்லாம் எவ்ளோ தடவை அமெரிக்கால இருந்து வந்தாலும், அந்த அளவு தொண்டையை அடைப்பதில்லையே அப்படின்னு, இப்போ இதையெல்லாம் நினைக்கும்போது தோணுது …</p><p><br /></p><p>நான் பத்தாவது படிக்கும் போது சங்கர் அண்ணா லயோலால டிகிரி கடைசி வருஷம்.... நான் மெட்ராஸ் வந்த லீவ் நாட்களெல்லாம் அவன் தான் வெளில ஊர் சுத்தி காமிப்பான்.... சொல்லப்போனா மெட்ராஸை அப்போ தான் அதிகமா தெரிஞ்சிக்கிட்டேன்னே சொல்லலாம்... மாம்பலத்துல பாட்டி வீட்டு அதே தெருல அண்ணாவோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் ஸ்ரீனி அண்ணா, பிரசன்னா அண்ணா, ரஞ்சித் அண்ணா ன்னு ஒரு கும்பலே சேர்ந்து வெளில கூட்டிட்டு போகும்…</p><p><br /></p><p>“சந்துரு... இதுதான்டா தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர் வீடு....” ன்னு சொல்லிக்கிட்டே நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட் வழியா, அங்க மரங்கள் சூழ்ந்த ரம்மியமான IFCI குவாட்டர்ஸ்ல இருந்த, அவன் காலேஜ் பிரெண்ட் ஸ்ரீராம் அண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு போவான்... அப்பறம் அங்க இருந்து காலேஜ் ரோட் வரைக்கும் எதுக்கோ நடந்தே வருவோம்... ஸ்ரீராம் அண்ணாவோட பெரியப்பா பையன் ஐஐடில ரிசர்ச் ஸ்டூடன்ட் ... அவங்க மூலமா ஒரு தடவை ஏதோ பிரெஞ்சு படத்துக்கு பாஸ் கிடைச்சதுன்னு, ஐஐடி காம்பஸ்க்கு உள்ள இருக்கற ஓபன் ஏர் தியேட்டர்க்கு ராத்திரி கூட்டிட்டு போனான் .... குளிர் காத்துல உக்காந்து பார்த்த அனுபவம் இன்னும் மனசுல சில்ன்னு…. “டேய்ய் வாடா.... மெரினா பீச்க்கு போலாம்.... அங்க பீச்க்கு எதிர்க்க ஒரு ஆவின் கடை இருக்கு பாரு..... ஐஸ்க்ரீம் டேஸ்ட் சும்மா அப்ப்படி இருக்கும்...” அப்படின்னு பீச்க்கு கூட்டிட்டு போவான்...</p><p><br /></p><p>சங்கர் அண்ணாக்கூட இப்படின்னா, விமலா அக்காக்கூட வெளில போறதுன்னா அது ரங்கநாதன் தெருவும், அதை ஒட்டின மாம்பலம் மார்க்கெட்டும் தான்... என்னன்னவோ காதுக்கு, மூக்குக்கு கழுத்துக்குன்னு கலர் கலரா வாங்குவா..... ரங்கநாதன் தெரு முழுக்க கிட்டத்தட்ட எல்லா கடைகள்லயும் கலர் கலரா ஹேண்ட்பேக் தொங்க, சடார்ன்னு அங்க இருக்கற ஒரு சந்துக்குள்ள நுழைஞ்சு, அதுல இருக்கற கடைகள் வழியாவே போய், சடக்ன்னு பேஸ்மெண்ட்ல இறங்கின்னு, ஏகப்பட்ட சர்க்கஸ் பண்ணி, ஒரு பேக் கடைக்கு போய்தான் பேக் வாங்குவா.... கலர் கலரா துப்பட்டா வாங்குவா .... “எதுக்குக்கா இதுக்கெல்லாம் என்னை கூட்டிட்டு சுத்தற....” அப்படின்னு கேட்டா, “டேய்ய்.... மார்க்கெட்க்கும் போணும்டா .... காயெல்லாம் வாங்கணும்... வெயிட்டா இருக்கும்... துணைக்கு வாடா....” ன்னு சொல்லி இழுத்துட்டு போய்டுவா.... முட்டைகோஸுக்கும், சின்ன வெங்காயத்துக்கும், மாங்காய் இஞ்சிக்கும், வாசனைல போட்டி நடக்கும் மார்க்கெட்…. அதைவிட்டா “வீணை வாசிக்க நெயில்ஸ் வாங்கணும் வாடா..” அப்படின்னு சொல்லி துரைசாமி சப்வே கிட்ட இருக்கற முரளி ம்யூஸிக்கல்ஸ்க்கு கூட்டிட்டு போவா.... அங்க இருக்கற வித விதமான ம்யூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அ பராக்கு பார்க்கறதுக்காகவே கூட போவேன்.... காலேஜ் போக பஸ் ஸ்டான்ட்க்கு போகணும்னா “கூட வாடா.... பேசிக்கிட்டே போலாம்..” அப்படிம்பா... நானும் ப்ளஸ் டூ வர்ற வரைக்கும் அவக்கூட இப்படி தி.நகரை சுத்திட்டு இருந்தேன் .... இப்போ டெல்லில இருக்கா ... ரெண்டு வருஷம் முன்னாடி நான் இந்தியா வந்தப்போ, எதேச்சையா ஏதோ கல்யாணத்துக்கு அவ மெட்ராஸ் வந்துருந்தப்போ பார்த்தது ...</p><p><br /></p><p>எப்பவும் ஆபீஸ்ன்னே இருக்கற மாமா, நான் ப்ளஸ் டூல 96 பெர்சன்டேஜ் வாங்கினதும், அந்த லீவ்ல, “வாடா உன்னை வெளில கூட்டிட்டு போறேன்...” அப்படின்னு சொல்லி, மைலாப்பூர் கோவிலுக்கும், ராமகிருஷ்ணா மட்க்கும் கூட்டிட்டு போய், மைலாப்பூர் குளத்துக்கு எதிர்க்க ஒரு துணி கடைல எனக்கு ஒரு பேண்டும் ஷர்ட்டும் வாங்கித் தந்து, “நல்ல மார்க் வாங்கி இருக்கேடா சந்துரு... இனிமேலும் நல்லா படிக்கணும்.. நல்ல நிலைமைக்கு வரணும்... அது ஒண்ணு தான்டா வாழ்க்கைல முக்கியம்.. அதை மட்டும் பண்ணிட்டேனா அதுக்கப்பறம் மத்ததெல்லாம் தானாவே நல்லா அமைஞ்சிடும்..” அப்படின்னு சொன்னது நெகிழ்ச்சி... வேலைக்கு சேர்ந்தப்பறம் அவருக்கு ஒரு சஃபாரி வாங்கிட்டு போய் கொடுத்து நமஸ்காரம் பண்ணதும் “அவ்ளோ பெரிய மனுஷன் ஆய்டியாடா நீ...” அப்படின்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாலும் அவர் கண் கலங்கி இருந்தது … எனக்கு நினைவிருக்கற வரைக்கும் அவருக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு, ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி வீட்டு வாசல்ல இருக்கற திண்ணைல படுத்துக்கிட்டே ரேடியோல பாட்டு கேக்கறது... அமெரிக்கால இருந்து அவருக்கு வாங்கிட்டு வந்த ஐபாட் அ கொடுக்க தான் அவர் இல்லாம போய்ட்டார் …</p><p><br /></p><p>ஒன்னொன்னா ஞாபகம் வர, அம்பத்தூர்ல இப்போதைய காற்றோட்டமான சங்கர் அண்ணா வீட்டுல சாப்பிட்டுட்டே, உக்காந்து பழைய கதைகளை பேசி பேசியே மத்தியானம் மூணு மணி...</p><p><br /></p><p>“சந்துரு.... உனக்கு நாம பீச் போன கதை ஞாபகம் இருக்கா ..” ன்னு சங்கர் அண்ணா சிரிச்சிக்கிட்டே கேட்டான்… பின்ன மறக்க முடியுமா என்ன…. ஒரு தடவை பாட்டி “டேய் சங்கரா.... என்னடாது நீங்க ரெண்டு பேர் மட்டும் பிரெண்ட்ஸோட பீச்க்கு போறீங்க.... எங்களையெல்லாம் கூட்டிட்டு போக கூடாதா...” ன்னு கேட்க, “சரி பாட்டி போலாம்....” ன்னு சொல்லிட்டு சாயங்காலம் பாட்டி, தாத்தா, அத்தை, விமலா அக்கா, நானு, சங்கர் அண்ணான்னு கும்பலா கிளம்பினோம்.... அன்னைக்கு ஒரு நாளாவது பஸ் நெரிசல்ல அவதிப்படாம ஆட்டோல போலாம்னு முடிவு பண்ணி, ஒரு ஆட்டோ பத்தாதுன்னு ரெண்டு ஆட்டோ பேசி, துணைக்காக நான் ஒரு ஆட்டோல, சங்கர் அண்ணா இன்னொரு ஆட்டோலன்னு கிளம்பினோம்.... பீச்ன்னு சொன்ன உடனே ரெண்டு ஆட்டோவும் கிளம்பி, ஒன்னு மெரினாக்கும், இன்னொன்னு சாந்தோம்க்கும் போக, இன்னொரு ஆட்டோல வந்தவங்க எங்கன்னு காத்திருந்து, டென்ஷன் ஆகி, அதுலயே ராத்திரி ஆக, தனித்தனியா வீட்டுக்கு திரும்பி, விஷயம் தெரிஞ்சு விழுந்து விழுந்து சிரிச்சோம்.. “டேய்ய் ... உனக்கு கூட பாத்தா தெரிலயாடா, நீங்க இருந்தது சாந்தோம், மெரினா இல்லைன்னு...” ன்னு சொல்லி சொல்லி கிண்டல் பண்ணான்… மொபைல் இல்லாத ஆனா வரமா இருந்த காலம் …</p><p><br /></p><p>………………………………….</p><p>………………………………….</p><p>………………………………….</p><p><br /></p><p>“அண்ணாஆ ... பீச்க்கு போலாமா....” சட்னு கேட்டேன்</p><p><br /></p><p>“அய்யயோ.... இங்க இருந்து இப்போ பீச்க்கு கிளம்பினா எப்போ போய் சேர... ட்ராபிக் ஹெவியா இருக்கும்.... போய் சேர்றதுக்குள்ளயே ராத்தரி ஆய்டும்.... முன்னாடியே பிளான் பண்ணி கிளம்பணும்டா....” அப்படினான்</p><p><br /></p><p>“இல்லண்ணா.... ஒன்னும் லேட் ஆகல.... இப்போதான் மூணரை மணி... உடனே கிளம்பினா போய்டலாம்...”</p><p><br /></p><p>“சரி ஒண்ணு பண்ணலாம்.... எல்லாருமா கிளம்பி அடையார் போலாம்.... பீச்க்கு போணும்ங்கறவங்களாம் அங்க பெசன்ட் நகர் பீச்க்கு போங்க... ராத்திரி நம்ம வீட்லயே தங்கிட்டு நாளைக்கு திரும்பிடலாம்... நாளைக்கு ஞாயித்து கிழமை தானே...” அம்மா சொல்லவும், “இந்த ஐடியா நல்லா இருக்கே..” அப்படினான் சங்கர் அண்ணா..</p><p><br /></p><p>“பெசன்ட் நகர் ஆஆ..” ன்னு இழுத்த என்னை பார்த்து, “இன்னுமா நீ அதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்க...”ங்கற அர்த்தத்துல சிரிச்சான்...</p><p><br /></p><p>எனக்கு அவன்கிட்ட பேசணும்.... வீட்டை அவன் விக்கறதை பத்தி பேசணும்.... அதுதான் இப்போ முக்கியம் ... அதனால இத்தனை வருஷமா வீட்டுக்கு பக்கத்துலயே இருந்தும் நான் போக விரும்பாத பெசன்ட் நகர் பீச்சுக்கே போலாம்ன்னு என்னையே சமாதான படுத்திக்கிட்டேன் ..</p><p><br /></p><p>“நான் வரலை... இன்னைக்கு இங்க காலனில க்ரூப்பா சஹஸ்ரநாமம் சொல்றோம்... நானும் ஒரு ஆர்கனைஸர் .... நீங்க வேணா போயிட்டு வாங்க....”ன்னு அனு மன்னி சொல்ல, கடைசில சங்கர் அண்ணா மட்டும் எங்க கூட வந்தான்...</p><p><br /></p><p>அப்பா, அம்மா வீட்லயே இருந்துக்கறோம்னு சொல்ல, அவங்களை வீட்ல விட்டுட்டு நானும் அவனும் மட்டும் நடந்தே பெசன்ட் நகர் பீச்க்கு போய் மணல்ல உக்காந்தோம்... பீச் காத்து விடாம அகிலாவையே ஞாபகப்படுத்த, வீட்டை பத்தின பேச்சை ஆரம்பிக்க முடியாம இதென்ன மனசுல இந்த சஞ்சலம்ன்னு அலைகளையே பாத்துட்டு இருந்த என்கிட்ட, “என்னடா... இப்போ வரைக்கும் இந்த பீச்க்கு நீ வர்றதே இல்லையா... சரியான செண்டிமெண்ட் fool டா நீ.... நீயெல்லாம் எப்படி விதேசத்துல காலத்தை ஓட்டறியோ...” அப்படினான்</p><p><br /></p><p>“அப்டி இல்லண்ணா ... என்னவோ இந்த பீச்னாலே அகிலா ஞாபகம் வருது.... அதான்...”</p><p><br /></p><p>“அது சரி... டேய்ய்ய் ஏதோ கொஞ்ச நாள் ஒண்ணா என்ட்ரன்ஸ் கோச்சிங் போனீங்க... மாம்பலத்துல அடுத்த தெருலயே அப்படி ஒரு பொண்ணு இருக்காங்கற விஷயமே உனக்கு அப்போதான் தெரியும்... ஏதோ அந்த கோச்சிங் போன ரெண்டு மாசத்துல பிரெண்ட்ஸ் ஆனீங்க.... அப்பறம் அவ பாட்டுக்கு அண்ணா யூனிவர்சிட்டில சேர்ந்துட்டா.... நீ திருச்சில படிக்க போயிட்ட... இதுல எப்படிடா இவ்ளோ வருஷங்கள் கழிச்சும், அவளை நினைக்கற அளவு உனக்கு பீலிங்ஸ் ...”</p><p><br /></p><p>உண்மை தான்.... மெட்ராஸ்ல கோச்சிங் போன அந்த ரெண்டு மாசத்துல தான் அவ எனக்கு பழக்கமானா.... அப்பறம் தான் தெரிஞ்சுது அவ வீடும் மாம்பலம் தான்னு.... கோச்சிங் முடிஞ்ச கடைசி நாள், அந்த பாட்ச்ல இருந்த எல்லாரும் ஒண்ணா பெசன்ட் நகர் பீச்க்கு தான் வந்தோம்.. எனக்கு அதுதான் முதல் தடவை பெசன்ட் நகர் பீச்... பக்கத்துல இருந்த ‘ஷேக்ஸ் அண்ட் கிரீம்ஸ்’ல சாப்பிட்டோம்...</p><p><br /></p><p>“சந்துரு, நீ நல்லா எக்ஸாம் எழுதுவன்னு எனக்கு தெரியும்.... ரெண்டு பேருமே அண்ணா யூனிவர்சிட்டில ஒண்ணா சேர்ந்து படிக்கணும்னு எனக்கு ஆசை...” அப்படின்னு அவ சொன்னப்போ எனக்கு எதுவும் தோணலை... அண்ணா யூனிவர்சிட்டில சேர்றதுக்கு போதுமான அளவு மார்க் இருந்தும், திருச்சி REC ல சீட் கிடைச்சதும் அப்பா “நீ அங்கேயே சேந்துக்கோ..” ன்னு சொன்னப்பவும் எனக்கு அது ஒரு பெரிய விஷயமா தோணலை.... மெட்ராஸ்ல படிக்க முடியலைன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும், அப்பா நல்லதுக்கு தான் சொல்வார் அப்படின்னு அங்கேயே சேர்ந்துட்டேன்.... அகிலா வீட்டுக்கு போய் அதை சொன்னப்போ, அவ கொஞ்சம் ஏமாற்றம் அடைஞ்ச மாதிரி தோணினாலும் அப்பவும் எனக்கு ஒன்னும் தோணலை... “சரி உன் அட்ரஸ் கொடு... நான் அப்பப்போ உனக்கு லெட்டர் போடறேன்.. பதில் போடுவ இல்ல..” அப்படின்னு கேட்டு வாங்கிக்கிட்டா... அப்பறம் ஒரு ஒரு வருஷம் சேலம் வீட்டு அட்ரஸ்க்கு லெட்டர் போட்டுட்டும் இருந்தா.... “எப்படி இருக்க... நான் இங்க அண்ணா யூனிவர்சிட்டில கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுத்திருக்கேன்... சப்ஜெக்ட்ஸ்லாம் கொஞ்சம் tough ஆ இருக்கு ஆனாலும் இன்டெரெஸ்ட்டிங் ஆ இருக்கு.. உனக்கு எப்படி இருக்கு... லீவ்க்கு மெட்ராஸ் வருவியா..” மாதிரி லெட்டர்ஸ் ... நான் ஸ்டடி ஹாலிடேஸ், செமஸ்டர் ஹாலிடேஸ் அப்படின்னு போகும்போது அம்மா அந்த லெட்டர்ஸை எல்லாம் பத்திரமா வெச்சிருந்து கொடுப்பா... நானும் பதில் எழுதி போடுவேன்...</p><p><br /></p><p>ஒரு ரெண்டு வருஷம் மெட்ராஸ்க்கு லீவ்க்கு வர முடியாம ஹாலிடேஸ்ல இன்டெர்ன்ஷிப்லாம் பண்ணேன்... நானா எதுவும் லெட்டர்ஸ் போடாததாலயா என்னன்னு தெரில, அவ கிட்ட இருந்து லெட்டர்ஸ் வரதும் குறைஞ்சுடுச்சு... அப்பறம் பைனல் இயர் எக்ஸாம் முடிஞ்சி மெட்ராஸ் போனப்போ எதேச்சையா அவளை ரங்கநாதன் ஸ்ட்ரீட்ல பார்த்தேன்....</p><p><br /></p><p>“ஹேய்ய் சந்துரு.... எப்படி இருக்க... ரொம்ப நாளா லெட்டர் ஒன்னும் போடறதே இல்லையே ... நான் அனுப்பின லெட்டர்ஸ்க்கும் பதிலே இல்லை...” ன்னு அவ சொன்னப்போ தான், அத்தனை நாள் அவகிட்ட இருந்து எந்த லெட்டரும் வராததுக்கான காரணம் உறைச்சுது.... நடுவுல சேலத்துல வீட்டை மாத்தினதும், நான் புது வீட்டு அட்ரஸையோ, என்னோட திருச்சி அட்ரஸையோ, அவளுக்கு கொடுக்கவே இல்லைன்னு…</p><p><br /></p><p>“என்னை மறந்துட்ட இல்ல....”ன்னு, என் கண்ணையே பார்த்து அவ கேட்ட அந்த ஒரு வரி அத்தனை வருஷமா இல்லாம அன்னைக்கு என்னவோ மனசை ஏதோ பண்ணிச்சு.... “ஸாரி... வீட்டை மாத்திட்டோம்.... உனக்கு சொல்ல மறந்துட்டேன்....” அப்படினேன்... ஒரு மாதிரி அடிப்பட்ட பார்வை பார்த்தா...</p><p>“அப்பறம்ம்ம்ம்... எனக்கு காம்பஸ் செலக்ஷன்ல வேலை கிடைச்சிடுச்சு.... ஜூலைல ஹைதராபாத் போறேன்...” அப்படின்னா... நானும் பெங்களூர் போறதை சொன்னேன்...</p><p><br /></p><p>அப்பறம் வேலைக்கு சேர்ந்து அடுத்த ஆறு மாசத்துல மெட்ராஸ் வந்தப்போ தான் சங்கர் அண்ணா சொன்னான்.... “டேய் உன் பிரெண்ட் அகிலாவை பார்த்தேன்.... அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்டா... மாப்பிள்ளை யாரு தெரியுமா... என் பிரெண்ட் ஸ்ரீராம் ஞாபகம் இருக்கா... அவனோட பெரியப்பா பையன்.... நாம கூட ஐஐடில படம் எல்லாம் பாத்தோமே.... அவனோட நிச்சயதார்த்தத்துல தான் அகிலாவை பார்த்தேன்... அவதான்டா பொண்ணு... வயசு வித்யாசம் கொஞ்சம் கூடனாலும் ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம்டா... என்னை பார்த்ததும் அவளுக்கும் ஒரே ஆச்சர்யம்.... உன்னை பத்தி கேட்டா... கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுவேன் கண்டிப்பா வரணும்னு உன்கிட்ட சொல்ல சொன்னாடா..”</p><p><br /></p><p>அவன் அதை சொன்னவுடனே என்னவோ ஒண்ணு உள்ள உடைஞ்சது.... அவளை பார்த்து பேசணும்னு தோண, அவ வீட்டுக்கு போனேன்.... “எங்கயாவது வெளில போலாமா..” ன்னு கேட்ட என்னை ஆச்சர்யமா பார்த்தா...</p><p><br /></p><p>சிவா விஷ்ணு கோவிலுக்கு போய் பிரகாரத்துல உக்காந்தோம்... “உனக்கு நிச்சயதார்த்தம் ஆய்டுச்சுன்னு சங்கர் அண்ணா சொன்னான்.... கங்க்ராட்ஸ்..” அப்படினேன்</p><p><br /></p><p>ஒரு நிமிஷம் அமைதியா தரையை பார்த்துட்டு இருந்தவ “கேக்க வேண்டாம்னு தான் நினைச்சேன்... கேக்காம இருக்க முடில.... கடைசி வரைக்கும் உனக்கு புரியவே இல்லை இல்ல?.... ப்ச்ச்... சரி விடு இப்போ பேசி எதுவும் ஆகப்போறதில்லை... அடுத்த மாசம் கல்யாணம்... கட்டாயம் வரணும்...” ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா... அவ கல்யாண ரிசெப்ஷன் போயிட்டு திரும்பி வந்து, நேரா மொட்டை மாடிக்கு போய் என்னோட இடமான சின்டெக்ஸ் தொட்டிக்கு பின்னாடி உக்காந்து சத்தமில்லாம அழுதேன்... எதேச்சையா வந்த சங்கர் அண்ணாக்கு ஒரு மாதிரி விஷயம் புரிய “என்ன பண்றது... சிலதெல்லாம் எப்ப தோணனுமோ தோணாம, எப்போ சொல்லணுமோ சொல்லாம , இப்போ அழுது என்ன... விடு அவங்க அவங்களுக்கு என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும் கிடைக்கும்..” அப்படின்னு சமாதான படுத்தினான்..</p><p><br /></p><p>………………………………….</p><p>………………………………….</p><p>………………………………….</p><p><br /></p><p>“டேய்ய்ய்.... என்ன இப்படி யோசனை பண்ணிட்டே இருக்க...” சங்கர் அண்ணா குரல் உலுக்க, நடப்புக்கு வந்தேன்.. சரி இப்போ இதையெல்லாம் விட முக்கியமா வீட்டை பத்தி பேசணும்...</p><p><br /></p><p>“அண்ணா.... நான் நேத்து விளையாட்டுக்கு சொல்லலை... சீரியஸா தான் சொன்னேன்… வீட்டை நானே வாங்கிக்கறேன்.... உனக்கு எவ்ளோ வேணும் சொல்லு...”</p><p><br /></p><p>“உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருக்கு... டேய்ய் உன்னை விட அந்த வீட்லயே வளர்ந்த எனக்கு அந்த வீட்டு மேல எவ்ளோ அட்டாச்மென்ட் இருக்கணும்... என்ன பண்றது... சிலதெல்லாம் ப்ராக்டிகலா யோசிக்கணும்... உள்ளூர்ல இருக்கற நானே அந்த வீட்ல இல்லை.... நீ அதை வாங்கி என்ன பண்ண போற... பூட்டி வெச்சிருப்பியா... அது சரி இந்த விஷயத்தை வாணிக்கிட்ட சொன்னியா... அவ கருத்தை கேட்டியா ... சும்மா எப்பவும் போல எமோஷனலா யோசிச்சு பைத்தியக்காரத்தனம் பண்ணாத.... நான் அதை வித்தாலும், அங்கேயே ஒரு புது வீடு கிடைக்கும்.... வேற என்ன வேணும்.... அந்த இடத்துல நமக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா... சும்மா ஏதோ யோசிச்சு மண்டைய குழப்பிக்காத.... உன்னோட வெகேஷனை என்ஜாய் பண்ணு...”</p><p><br /></p><p>“எப்படிஇஇ??? சின்ன வயசுல அங்க மாம்பலத்துல என்ஜாய் பண்ண மாதிரியா??” ன்னு கேட்ட என்னை முறைத்தான்...</p><p><br /></p><p>“அண்ணா..... எனக்கு அந்த வீடு வேணும்.... உனக்கு அந்த ப்ரமோட்டர் எவ்ளோ தர்றதா சொல்லி இருக்கானோ அதை நான் உனக்கு தரேன்... ப்ளீஸ் .... நான் நாளைக்கு அங்க போய் வீட்டை பார்க்க போறேன்...” அப்படினேன்</p><p><br /></p><p>ஒரு நிமிஷம் என்னையே பார்த்தவன் என்ன நினைத்தானோ... “சரி நீ பாரு... இப்போ இதை பத்தி இதுக்கு மேல எதுவும் பேசவேண்டாம்… நல்லா யோசிச்சு அப்பறம் பேசுவோம்... இப்போ வா வீட்டுக்கு கிளம்புவோம்..” அப்படின்னு எழுந்து நடக்க ஆரம்பிச்சான்..</p><p><br /></p><p>காலைல எழுந்து, குளிச்சு சாப்பிட்ட உடனே கிளம்பினேன்... அந்த நேரத்திலேயே திநகர்ல ஒரே ட்ராபிக், வண்டிகள்... எல்லாரும் என்னன்னவோ வாங்கிக்கிட்டே இருந்தாங்க... கேப் ட்ரைவர் என்னன்னவோ ஒன் வே டூ வே ன்னு சொல்லி, திநகர்க்கே உரிய கூட்ட நெரிசலான ரோட்கள்ல, திறமையா வண்டிய ஓட்டிட்டு போனான்... அயோத்யா மண்டபத்தை பார்த்தவுடனே மனசுக்குள்ள ஒரு பரபரப்பு தொத்திச்சு.... வீடு இருந்த தெருவில் நுழைஞ்சது கூட புரியாம நிறைய மாற்றங்கள்....</p><p><br /></p><p>“எந்த இடம் சார்?” கேட்ட டிரைவரிடம் “கொஞ்சம் இங்கயே நிறுத்திக்கப்பா..... நான் இறங்கி நடந்து போய்க்கறேன்..”ன்னு சொல்லி இறங்கிக்கிட்டேன்..</p><p><br /></p><p>நடந்துக்கிட்டே ரெண்டு பக்கமும் வேடிக்கை பார்த்தேன்... புதுசா கொஞ்சம், பழையதை புதுப்பித்து பெயிண்ட் மின்னிய கொஞ்சம், XXX சொல்யூஷன்ஸ் , YYY பவர் டெக் சிஸ்டம்ஸ் அப்படின்னு சில சின்ன நிறுவனங்கள் கொஞ்சம்ன்னு, கட்டிடங்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள்....</p><p><br /></p><p>பார்த்துக்கிட்டே நடக்க நடக்க, சடக்ன்னு பிரேக் போட்டு நிறுத்தியது வீடு ...</p><p><br /></p><p>வீடுன்னா சொன்னேன்... ஒரு நொடி இதயத்துல குத்து பட்டவன் மாதிரி உணர்ந்தேன்....</p><p><br /></p><p>வாசலில் பாட்டி போட்ட நெளி கோலம் இல்லை.... வராந்தாவில் மாமாவின் மொபெட் இல்லை.... திண்ணைக்கு பக்கத்தில் போடப்பட்டிருக்கும் தாத்தாவின் ஈஸி சேர் இல்லை.... திண்ணைல மாமா படுத்துக்கிட்டே கேக்கும் பாட்டு இல்லை…. வாசல் கதவில் இருந்து பார்த்தாலே புழக்கடை வரைக்கும் தெரியும் அமைப்பில், உள்ளே அடுக்களையில் பாட்டி ரசத்துக்கு தாளிக்கும் நெய் மணம் இல்லை... அவள் வைத்த கறிவேப்பிலை, எனக்கு காமாலை வந்தப்போ அவள் கொடுத்த, அவள் வைத்திருந்த கீழாநெல்லி, இல்லை.... வெளியில் சைடில் கொடிகள் கட்டப்பட்டு, காய வைக்கப்பட்டிருக்கும் வேஷ்டியும், பனியனும், சுங்குடி புடவையும், பேண்டும் சட்டையும் என்னோட அரை ட்ராயரும் எதுவுமே இல்லை... படு எளிதான குறுக்குவாட்டு கம்பிகள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும் பிரவுன் நிற ஜன்னல்களும், காம்பவுண்டில் இருந்து எக்கி நிற்கும் நந்தியாவட்டை பூக்களும், தரையில் கிடைக்கும் அதன் இறந்த காலமும், செம்பருத்தியும், ரோஜாவும் எதுவும் இல்லை ...</p><p><br /></p><p>மற்ற கட்டிடங்கள், அபார்ட்மெண்ட்களுக்கு நடுவில், உயரமான ரோடில் இருந்து சடக்ன்னு ரெண்டடி கிழே இறங்கி… முன்ன கோபி மஞ்சள் நிறத்தில் இருந்தது என்றே சொல்ல முடியாத, என்ன கலரில் இருந்தது என்றே அனுமானிக்க முடியாத கருமை படிந்த, மேல் பூச்சை இழந்த காம்பவுண்ட் சுவரும்… அடிக்கப்பட்ட பச்சைநிறம் சாயம் போய், கீழே தரையிலிருந்து பாதி உயரத்துக்கும் மேலே அந்த பெயிண்டும் உதிர்ந்து, மேல் பூச்சும் அரிக்கப்பட்டு, காரை பெயர்ந்து அங்கங்கே வெளியில் தெரிந்த இரும்பு கம்பிகளுமாய் நின்ற, வெளி வராந்தாவின் ரெண்டு கான்க்ரீட் தூண்களும்…. அதே போல் கீழே தரையிலிருந்து பாதி உயரத்திற்கும் மேலே சுத்தமாய் சேறும் சகதியும் பதிந்த அடையாளங்களுமாய், காரை உதிர்ந்து நின்ற பழுப்பான வீட்டு சுவரும்… வராந்தாவின் மேலே இருந்த jaali ஓட்டைகள் நிறைந்த சுவரில், அந்த டிசைனே தெரியாத அளவில் அங்கங்கே உடைந்தும்… ஜன்னல்களின் கதவுகள் தூக்கில் தொங்குவது போல தொங்கியும்… காம்பவுண்டின் உள்ளே வீட்டை சுற்றி புதர்களும், கொடிகளுமாய், சுற்றி இருந்த மரங்கள் எல்லாம் காய்ந்து, சாய்ந்து… மாடியின் வெளிச்சுவர் அங்கங்கே உடைந்தும்… சுத்தமாய் இடிந்திருந்த வாசல் திண்ணையுமாய்…. வெயிலிலும், மழையிலும், அபத்தமாய் வந்த வெள்ளத்திலும் சிக்கி சின்னாபின்னமாய்....</p><p><br /></p><p>தொண்டையை அடைத்து, கண்கள் சட்னு நிரம்பி, வாழ்க்கை எங்கெங்கேயோ தேவையே இல்லாமல் நகர்ந்து, திரும்பி செல்லவே முடியாத, திரும்ப நடக்கவே வாய்ப்பில்லாத தருணங்களுமாய் அலைக்கழித்து, திரும்பி போகமுடியாத, மகா பெரிய அபத்தமாய், என்னது இது ….. மனதில் இருந்த பல பல நினைவுகளும் ஒரு நொடில பாரமாய் மாறியது…. என்னவோ எதையோ இழந்த துக்கமும், ஏக்கமும் மனதை பிசைய, மரண படுக்கையில் இருக்கும் பிரியமானவளை போல இருந்த வீட்டை, கையாலாகாத இடிந்த மனதுடன் பார்த்தேன்....</p><p><br /></p><p>சங்கர் அண்ணாக்கு போன் பண்ணி “அண்ணாஆ... வீட்டை அந்த ப்ரமோட்டர்க்கே கொடுத்துரு....” ன்னு தொண்டை அடைக்க, குரல் உடைய சொல்லிட்டு, “டேய்ய்ய்.... என்னடா அழறியா.... எங்க இருக்க? என்ன ஆச்சு?” ன்னு கேட்ட அவனுக்கு எதையும் சொல்லாமல் காலை கட் பண்ணிட்டு, திரும்பி பார்க்காம நடக்க ஆரம்பிச்சேன்,</p><p><br /></p><p>“வராமலேயே, இதை பார்க்காமலேயே, இருந்து இருக்கலாம்” ங்கற நிரந்தரமான வலியோட .</p><p><br /></p><p>சில நிதர்சனங்கள் தரும் வலியை விட, நினைவுகள் தரும் சுமைகள் தாங்க கூடியதாக தான் இருக்கிறது, நினைவுகளாகவே இருக்கும் வரையில் !!!</p><p><br /></p><p>- சாரதா</p><p><br /></p><p><br /></p>Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-19538236823867418652019-01-18T00:57:00.000-08:002019-01-18T00:57:01.224-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhryE1yWS6JbSCX0PW5S3J5e7TBuCmrPFmHMytyzjW49cUtZ0NLddQ_ZUTCwUBv8uug0HAo8lfXk3rIYsjG5W555OrIhl9Q8zjYmNgkk9gI22qq0o6xZbOJnH3X_7pmW5TrHtmAw2ZL3PSf/s1600/A+Passerby%25E2%2580%2599s+Diary-now+avilable+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="594" data-original-width="1600" height="118" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhryE1yWS6JbSCX0PW5S3J5e7TBuCmrPFmHMytyzjW49cUtZ0NLddQ_ZUTCwUBv8uug0HAo8lfXk3rIYsjG5W555OrIhl9Q8zjYmNgkk9gI22qq0o6xZbOJnH3X_7pmW5TrHtmAw2ZL3PSf/s320/A+Passerby%25E2%2580%2599s+Diary-now+avilable+%25281%2529.jpg" width="320" /></a></div>
<strong style="background-color: white; font-family: "Helvetica Neue", helvetica, arial, sans-serif; font-size: 15px;">Thank you #WorditArtFund for publishing my debut novel #APasserby'sDiary via @BeShakespeare #BecomeShakespeare</strong></div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-42066151542781787052017-03-23T10:06:00.000-07:002017-03-23T10:06:47.156-07:00எனக்கு இதே வேலை..... என்ன வேலை?????<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எனக்கு இதே வேலை..... என்ன வேலை????? ..... எங்கயாவது ஏதாவது வம்பு வளர்த்துட்டு அப்பறம் பின் விளைவுகளை பத்தி யோசிக்கறது.... வம்புன்னா ரொம்ம்ம்ப பெரிய லெவல்லாம் இல்ல..... இந்த கடைக்காரர் ஆட்டோக்காரர் அந்த மாதிரி ..... பின்ன என்னங்க பஸ் கண்டக்டர்ல இருந்து ரெஸ்டாரண்ட் வெய்ட்டர் வரைக்கும் எல்லாரையும் "சார்" "அண்ணா" "ஏம்ப்பா தம்பி" ன்னு க்ரோனலாஜிக்கல் ஆர்டர்ல மரியாதையா "தேங்க் யூ""எக்ஸ்க்யூஸ் மீ" ன்னு கர்டெசியோட பேசற என்னை ஏமாத்தற மாதிரி மட்டும் தெரிஞ்சுது அவ்ளோதான் பொங்கி எழுந்து சண்டை போட்டு வந்துருவேன்.... அந்த கெத்த அப்படியே மெயின்டெயின் பண்ணா பரவால்ல ..... ஆனா கொஞ்ச நேரத்துல "இது தேவையா .... அவங்களுக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்னு பேசாம பொறுமையா இருந்து இருக்கலாம்.... இப்ப எந்த ஏழரைய இழுத்து விட்டுருக்கோமோ" ன்னு விட்டத்தை பார்த்து யோசிப்பேன்.... என்னோட ஹஸ்பண்ட்க்கு வேற இந்த மாதிரி நான் பண்ணறதெல்லாம் சுத்தமா பிடிக்காது.... இப்படி ஏதாவது பண்ணிட்டு அதை பத்தி அவர்கிட்ட சொன்னா (அவர்கூட போகும்போது வாய திறப்பேன்??.... பரம சாது நான் ) அவ்ளோதான் ..... "நாம படிச்சவங்க தான .... இக்னோர் பண்ணிட்டு பேசாம வரலாம்ல.... ரோட்ல கடைலன்னு ஏன் ஸீன் கிரியேட் பண்ணனும்" ன்னு இங்கயும் திட்டு விழும் .... அவர்கிட்ட சொல்லாமலாவது இருக்கலாம்ல ... சின்சியரா சொல்லி வாங்கி கட்டிப்பேன்.... சரி சரி ஓகே ஓகே புரியுது …. முன்குறிப்பு தற்பெருமை எல்லாம் நிறுத்திக்கறேன் … விஷயத்துக்கு வரேன்.... இந்த மாதிரி ஸ்டண்ட் வேலை ஒன்னு பண்ணிட்டு அதனால வசமா மாட்டிகிட்டேன் ... <br />
<br />
ஒரு பன்னெண்டு பதிமூணு வருஷம் முன்னாடி இருக்கும்..... வீட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல என்னை பாத்தாலே ஒரே தி மரியாதை... எல்லாரும் உடனே மீட்டிங்க போட்டு "ஹே நேத்து நீதான்பா போன.... இன்னைக்கு என் டர்ன்னு " அப்படின்னு பஞ்சாயத் பண்ணி "உக்காருங்க மேடம்.... " அப்படின்னு ஆட்டோ கதவை திறந்து விடுவாங்க .. ச்சை ஆட்டோல ஏது கதவு... வாய்ல அதுவா வருது .... பின்ன ரெகுலரா ஏழரை மணி ஆபீஸ் பஸ்ஸை கரெக்ட்டா ஏழு நாப்பதுக்கு பஸ் ஸ்டாப்க்கு போய் அதை மிஸ் பண்ணிட்டு அங்க இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல இருக்கற ஆட்டோஸ்க்கு டெயிலி முதல் போணியே நாந்தான் பண்ணுவேன்.... நல்ல கை ராசின்னு பேசிக்குவாங்க ..... பின்ன காலைல நான் தர ஆட்டோ சார்ஜே அன்னைக்கு முழுசா போதுமே.... எல்லாம் ஒரு தர்மம் தான்..... அப்பறம் வீட்ல "பொறுப்பே இல்ல..... என்ன சொல்லி என்ன" ன்னு தர்ம திட்டு .... பட் அது ஒரு சோஷியல் சர்வீஸ் மாதிரி பண்ணிட்டு இருந்தேன்னு வெச்சுக்கோங்க ...<br />
<br />
அன்னைக்கு அப்படிதான் எங்க வீட்ல இருந்து ரெண்டு தெரு தள்ளி இருந்த சித்தப்பா வீட்ல இருந்து என்னோட பாட்டியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர போனேன்.... வயசானவங்கறதால போகும் போதே ஆட்டோல போயிட்டு அவங்கள அதே ஆட்டோல கூட்டிட்டு வர்றதா பிளான் .... ஆட்டோ ஸ்டாண்ட்ல அன்னைக்கு இருந்த ஆட்டோல பதினஞ்சு வயசு தான் இருக்கும் அந்த ஆட்டோ ட்ரைவர்க்கு.... "ஆபீஸ் தான மேடம் " னான்.... "இல்லப்பா .... --- ஸ்ட்ரீட்க்கு போய் அங்க இருந்து பாட்டியை கூட்டிட்டு இங்க திரும்ப வந்து டிராப் பண்ணனும்.... ஒரு அஞ்சு நிமிஷம் அங்க வெயிட் பண்ண வேண்டி இருக்கும்.... அதையும் இப்போவே சொல்லிர்றேன்" னேன்.... "சரிங்க" னான்.... "யூஷுவலா அந்த ஸ்ட்ரீட்க்கு போக இருபது ரூபாய் தான.... நான் நாப்பது தரேன்... அப்பறம் கூட கேக்க கூடாது " அப்படின்னு தெளிவா பேசிட்டு தான் ஆட்டோல ஏறினேன் ......<br />
<br />
அங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட்டிங்க்ல இருந்துருப்பான் .... அதையும் தெளிவா சொல்லிருந்தேனே... முணுமுணுன்னு புலம்பிகிட்டே தான் ஆட்டோவை ஓட்டிட்டு வந்தான் ... திரும்ப எங்க வீட்டுக்கு வந்தப்போ தான் பிரச்சனை.... "என்ன நாப்பது ரூபா தரீங்க.... எவ்வளவு நேரம் அங்க வெயிட்டிங்க்ல இருக்க வெச்சீங்க.... வேற சவாரியாவது போயிருப்பேன்.... அம்பது தாங்க..." ன்னு ரைட் ராயலா கேட்டானே பாக்கணும்.... சுர்ர்ர்ன்னு ஏறிடுச்சு எனக்கு ...."ஏன்பா எல்லாத்தையும் தெளிவா பேசிட்டு தான ஏறினேன்..... இப்போ என்ன தகராறு பண்ற.... உங்க ஸ்டாண்ட்ல ரெகுலரா ஆட்டோல போறேன்..... நீ என்ன இந்த சின்ன வயசுலயே இப்படி இருக்க.... " ன்னு முதல்ல கொஞ்சம் பொறுமையாதான் பேச ஆரம்பிச்சேன்.... அவன் தேவை இல்லாம மரியாதை குறைவா பேசினவுடனே ரொம்ம்ம்ப கோபம் வந்துருச்சு.... கடுப்பாகி "வேணாம்டி எதுக்கு தகராறு.... அம்பது கொடுத்துரு ..." ன்னு சமாதானமா பேசின பாட்டியை வீட்ல விட்டுட்டு நேரா ஆட்டோ ஸ்டாண்ட்க்கே போய் "என்ன உங்க ஸ்டாண்ட் பையன் இப்படிலாம் பேசறான்.... நீங்கலாம் ஒன்னும் சொல்ல மாட்டிங்களா..." அப்படி இப்படின்னு சண்டை போட்டுட்டேன்.... அவங்க அப்போதைக்கு "சரி மேடம்.... நீங்க போங்க... நாங்க சொல்லி வெக்கறோம்..... டேய் அவங்க சொல்லிட்டு தான வண்டிய எடுத்தாங்க.... அப்பறம் என்ன தகராறு பண்ற..." அப்படின்னு அவன்கிட்ட பேசற மாதிரி என்னை அனுப்பிட்டாங்க.... அடுத்த ரெண்டு மூணு நாள் ஆட்டோலேயே போகல.... அதுக்கு அடுத்த வாரம் வேற வழி இல்லாம ஒரு நாள் அந்த ஸ்டாண்ட்ல வேற ஒரு ஆட்டோல ஆபீஸ் போனேன்... ஆட்டோ சார்ஜ்க்கு கரெக்ட்டா சேஞ்சு இல்ல.. அந்த ட்ரைவர் மீதி சிக்ஸ்டி ரூபீஸ் தரணும் .... சரி மீதியை சாயங்காலம் ஸ்டாண்ட்ல கொடுத்துர்றேன் மேடம் ன்னு சொன்னவனை நம்பி விட்டுட்டேன்.... அன்னைக்கு நான் வீட்டுக்கு போக லேட் ஆயிடுச்சு.... அடுத்த நாள் பஸ் வர்ற டைம்க்கே போய்ட்டேன்.... அந்த ட்ரைவர் ரோட்ல அப்போசிட் சைட்ல நின்னுட்டு தான் பேசிட்டு இருந்தான்.... என்னை பாத்தும் பாக்காத மாதிரி திரும்பிகிட்டான்.... பஸ் வந்துட்டதுனால நானும் சரி ஈவினிங் பாத்துக்கலாம்னு போய்ட்டேன்.... அன்னைக்கும் லேட் ஆயிடுச்சு... அதுக்கு அடுத்த நாள் சீக்கிரமா கிளம்பினேன்.... அவன் என்னை பாக்காத மாதிரி இருந்தான்.... நான் ரோடை க்ராஸ் பண்ணி "நீங்க எனக்கு சிக்ஸ்டி தரணும்.... ரெண்டு நாளா பாத்தும் பாக்காத மாதிரி இருக்கீங்க...." அப்படினேன்.... "ஆமா சிக்ஸ்டி தான தரணும்..... மறந்துட்டேன்.... உனக்கு உன் காசு வேணும்னா நீ (கவனிக்கவும் மரியாதை இல்லாம) வந்து கேக்க வேண்டியது தான " ன்னு திமிரா பேசினான்.... அவன் ஆட்டோக்குள்ள ஏற்கனவே என் கூட தகராறு பண்ண அந்த பையன் உக்காந்து இருந்தான்.... சரிதான் இது பிளான் பண்ணி செய்யறதுன்னு புரிஞ்சு திரும்பவும் செம்மா கடுப்பு.... நேரா அந்த ஸ்டாண்ட்ல கொஞ்சம் சீனியர் கிட்ட போய் "எனக்கு அறுபது ரூபா பெரிய விஷயம் இல்ல (ஆமா கர்ணனுக்கு தங்கச்சி நான்னு நெனப்பு ) ஆனா ஏமாத்தணும்னு நினைச்சது தான் என்னால பொறுத்துக்க முடியலை …..இந்த மாதிரி ஒரு ரோக் கூட்டம் இந்த ஸ்டாண்ட்ல இருக்குன்னு இத்தனை நாள் நான் தெரிஞ்சுக்கலை பாருங்க ...இனிமேல் உங்க ஸ்டாண்ட் வண்டில ஏறுவேன் ...." அப்படின்னு கத்திட்டு போய்ட்டேன்....<br />
<br />
அதுக்கு அப்பறம் அந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோவே ஏறலை.... ஆனா அங்க இருந்த கொஞ்ச மாசம் அந்த ட்ரைவர்ஸ் எப்ப நான் அந்த பக்கம் போனாலும் முறைச்சுகிட்டே இருப்பாங்க… நானும் கண்ணாலேயே எரிச்சிட்டு போய்டுவேன்…. இருந்தாலும் சம்டைம்ஸ் ஆபீஸ்ல இருந்து லேட் நைட்லாம் கேப்ல வரும்போது கொஞ்சம் பயமாதான் இருக்கும்.... பெரிய இவளாட்டம் ஆட்டோ ட்ரைவர்ஸ் கிட்டலாம் தகராறு பண்ணிட்டோம்... கராத்தே கூட கத்துக்கல.... இதெல்லாம் எனக்கு தேவையான்னு தோணும்... அப்பறம் கொஞ்ச மாசத்துலயே வேற வீட்டுக்கு மாறி போய்ட்டோம்.... கல்யாணம் ஆகி நானும் வேற ஏரியாக்கே வந்துட்டேன்.... ஸ்டில் என்னோட பேரன்ட்ஸ் அங்க இருக்கறதால அந்த ஏரியாக்கு போவேன் .... அந்த மார்க்கெட்க்கு போவேன் ஆனா ஒரு தடவை கூட ஆட்டோ ஏறலை.....<br />
<br />
இப்போ கொஞ்ச நாள் முன்னாடி அந்த ரோட்ல ஏதோ வேலையா போயிட்டு வீட்டுக்கு திரும்ப ஆட்டோ தேடினேன்.... தெளிவா அந்த ஸ்டாண்ட்ல இருந்து ரொம்ம்ம்ப தள்ளி ஒரு போக்கு ஆட்டோவை நிறுத்தி கேட்டேன் ... ஆனா அவனை எங்கயோ பாத்த மாதிரியே இருந்தது ... அவனும் ஒரு மாதிரி என்னை பார்த்துட்டே யோசிச்சிகிட்டே சரி ஏறுங்கனான்.... ஏறி உக்காந்து மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சப்ப தான் தெரிஞ்சுது அது அப்போ நான் சண்டை போட்ட பதினஞ்சு வயசு ட்ரைவர்ன்னு.... இத்தனை வருஷத்துல வளர்ந்துருந்தான்.... அதான் ச்சட்ன்னு ஸ்ட்ரைக் ஆகல..... அய்யோஓஒ ன்னு நினைச்சுகிட்டே நிமிர்ந்து பாக்கறேன் அவனும் ரியர் வ்யூ மிரர்ல ரொம்ம்ம்ம்ப தீவிரமா யோசிச்சிகிட்டே என்னை பாத்துட்டு இருந்தான்.... "அட ராமா... கடைசில இவன் ஆட்டோலயா ஏறிருக்கோம்.... அய்யோஓஒ இவன் ஸ்டாண்ட் ஆட்டோல கூட ஏற மாட்டோம்னு நாம போட்ட சபதம் என்ன ஆறது (ம்ம்ம்கும்ம் இந்த அலப்பறைக்கு ஒண்ணுதான் குறைச்சல் ன்னு என் மைண்ட் வாய்ஸ் வேற இம்சை).... இவனுக்கு நாம யாருன்னு தெரிஞ்சுட்டா அவ்ளோதான்....ஏதாவது வேணும்னே தகராறு பண்ணுவானே.... இவ்ளோ லேட்டா வேற போறோம்... இது என்ன சோதனை.... " ன்னு வேகமா யோசிச்சிகிட்டே என்னோட ஹேண்ட்பேகை துழாவினேன்.... "ஆஹாஆஆ.... கிடைச்சுடுச்சு..... இதை வெச்சு தப்பிச்சுக்கலாம்" ன்னு உடனே அதை எடுத்து வெச்சிகிட்டேன் .... அப்பறம் கொஞ்ச நேரத்துல மெதுவா ரியர் வ்யூ மிர்ரரை பாத்தேனா.... அவன் ரோடை பாத்து ஓட்டிட்டு இருந்தான்.....<br />
<br />
அது சரி அப்படி என்ன வெச்சுக்கிட்டேன்னு கேக்கறீங்களா.... ஒன்னும் இல்ல எப்பவோ அவசரத்துக்கு வாங்கின "ஷில்பா பொட்டு சைஸ் 1 " (இருக்கறதுலயே நெத்தி புல்லா அடைக்கற மாதிரி பெரிய சைஸ் பொட்டு) ஹாண்ட் பேக்ல இருந்ததா.... அதை எடுத்து கன்னத்துல ஒட்டிக்கிட்டேன் .... இப்போ என்னை அடையாளம் தெரியாதில்ல.... எப்புடிஇஇஇ ...<br />
<br />
ஹிஹி.... ஏதோ சீரியஸா சொல்ல வந்தேன்னு நீங்க நினைச்சுருந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது !!!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-69275472432364986772017-03-11T10:47:00.000-08:002021-08-22T05:47:19.059-07:00பாட்டு பாடவா !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பாட்டு பாடறதுனா சும்மாவா .... அதுவும் பாட்டு பாடி ரெக்கார்டிங் பண்றதுன்னா ச்சும்மாவா ..... எட்டு வயசுல பாட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சது ... ஆரம்பிச்சது மட்டும் தான்... ஒரு மூணு மாசத்துலயே ஏன்டா போனோம்னு எப்படியோ சாக்கு போக்கு சொல்லி நிறுத்திட்டேன்.. ஏன்னா அது என் ப்ராப்ளம் இல்ல... பாம்பேல நாங்க இருந்த அபார்ட்மெண்ட்ல இருந்த கொஞ்சமே கொஞ்சம் மாமீஸ் ல பாட்டு தெரிஞ்ச ஒரு மாமிதான் சொல்லித் தந்தாங்க.... ஆனா பாருங்க "ஸா பா ஸா பா ஸா " ன்னு ஆரம்பிச்சவுடனேயே "பாரு மேல இருக்கற நவநீதா என்னமா பாடறா... க்ளாஸ்லயும் பர்ஸ்ட் ... பாட்டுலயும் கெட்டி படிப்புலயும் கெட்டி.. நீயும் இருக்கியே .... நல்லா இன்டரெஸ்ட் ஒட கத்துக்கணும்.... ஏனோ தானோன்னு கத்துக்க வந்தா இப்படிதான்" அப்படின்னு அவங்களுக்கு மேல் பிளாட்ல இருந்த என் க்ளாஸ்மேட்டை பத்தி சொல்லி சம்மந்தமே இல்லாம திட்டிட்டு இருப்பாங்க .... "மேம் நீங்க சொல்லிக் கொடுக்கவே ஆரம்பிக்கலையே... " அப்படின்னு சொல்லவா முடியும் (நவநீதா வேற எங்கயோ கத்துக்கிட்டா ).... கம்பேரிசனோட முழுழு பலனையும் அனுபவிச்சேன்... பாட்டு பாடணும்ன்னு ஆசை இருந்தாலும் அவங்க வீட்டுக்குள்ள நுழையவே பயம்... சோ அப்படியே நின்னு போச்சு ....<br />
<br />
அதுக்கு அப்பறம் கேசட்டை போட்டு கேட்டு ஏதோ நானே கத்துகிட்டு பாடி அதை ரெக்கார்டு பண்ணி கேக்கறதுல ஒரு சந்தோஷம் .... அப்போ ஆரம்பிச்சது என்னோட ரெக்கார்டிங் பயணம்..... அதுவும் நடுவுல ஒரு வருஷம் வீட்ல பப்பின்னு ஒரு பொமரேனியனை வளர்த்தோம்.... நான் ரெக்கார்டு பண்ண வாயை திறந்தாலே கத்தும்.... நான் பாடகியா ஆகறதுல இப்படி பல பல தடைகள்.....<br />
<br />
அப்பறம் பிளஸ் 1 படிக்கும்போது தான் வீட்டுக்கு ஒரு மாமி வந்து சொல்லித் தந்தாங்க .... ரெண்டு வருஷம் நல்லா கத்துக்கிட்டேன் .... ஆனா இப்போ வரைக்கும் கொலு, பண்டிகை , கல்யாணம், காதுகுத்து, பூணூல் , கோவில் ன்னு எந்த அகேஷனா இருந்தாலும் "குறை ஒன்றும் இல்லை " இல்லனா "ஸ்ரீ சக்ரராஜ " ன்னு இந்த ரெண்டு பாட்டு தான் பாடறது... அதுதானே யுனிவர்சல் சாங்ஸ் .... பாட்டு மாமிக்கு தெரிஞ்சா இதற்கு தானா நடையா நடந்து சொல்லித் தந்தேன்னு ரத்த கண்ணீர் வடிப்பாங்க ....<br />
<br />
அப்பறம் பாட்டு கிளாஸ் போனேனோ இல்லயோ ரெக்கார்டிங் மட்டும் அந்த அந்த பீரியட்ல இருந்த டெக்னாலஜி, ஐ மீன் டேப் ரெக்கார்டார்ல, லேப்டாப்ல, மொபைல்லன்னு பண்றதுல ஒரு குறைச்சலும் இல்ல...<br />
<br />
சரி சினிமா பாட்டெல்லாம் முக்கியமா ராஜா சார் பாட்டெல்லாம் பாடி பாடி தரோ ஆய்டுச்சுன்னு எம்.எஸ் அம்மாவோட பாட்டெல்லாம் ஆன்லைன்ல கேட்டு கேட்டு கத்தி கிட்டு ஐ மீன் கத்துகிட்டு மொபைல்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன் ... அப்போ தான் இந்த soundcloud ன்னு ஒண்ணு இருக்கறது தெரிய வந்தது .... அவ்ளோதான் குஷி பிச்சிகிச்சு... ஒரே இயர் போனை மாட்டிகிட்டு அதுல ரெக்கார்டிங் ஆரம்பிச்சேன் ... இதுக்கு நடுவில கரோக்கே ன்னு ஒண்ணு இருக்கறது தெரிஞ்சவுடனே ஜானகி அம்மா மாதிரி இருக்கற என்னோட குரலோட இனிமைக்கு இனிமை சேர்க்கற மாதிரி கரோக்கே போட்டுக்கிட்டு இயர் போன்ல ஒரு சைட் மட்டும் இயர்ல போட்டுக்கிட்டு இன்னொரு சைடை மைக் கிட்ட வச்சிகிட்டு (என்கிட்ட இருக்கற லிமிடேட் ரெக்கார்டிங் facility யை கூட எவ்வளவு மூளையை கசக்கி எபக்டிவா யூஸ் பண்ணிருக்கேன் பாருங்க...) பாடி அப்லோடிங் தான் ..... ஆனா ஒண்ணு எல்லா ரெக்கார்டிங்கையும் நான் தனியா இருக்கும் போது தான் பண்ணுவேன் ...<br />
<br />
அன்னைக்கு மட்டும் பாருங்க காதில் இயர் போனை மாட்டிக்கிட்டே கீரையை கிளீன் பண்ணி நறுக்கிட்டு இருந்தேன் .... ராஜா சாரோட "மௌனமான நேரம் ...." ஒட ஆரம்பிச்சவுடனே அஸ் யூஷுவல் ரிக்கார்டிங் ஆசை தலை தூக்கி, அதை அடக்க முடியாம அந்த பாட்டோட கரோக்கேவை தேடி புடிச்சு அதோட சேர்ந்து பாடிட்டு (அப்படிதான் நினைச்சேன்) இருந்தேன்....<br />
<br />
என் பொண்ணு எங்கிட்ட இருந்து கொஞ்ச தூரத்தில சோபாலயே தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தா..... நான் பாடினதை பார்த்திட்டு என் அருமை கணவரும் ஏதோ பாடறதா நினைச்சு ட்ரை பண்ணிருக்கார்.... அவர் பாட ஆரம்பிச்ச உடனே "அப்ப்பாஆ ப்ளீஸ்... எனக்கு தூக்கம் வருது..... பாடாதீங்க ...." அப்படின்னு கத்தினா.... அப்பவும் நான் டீசெண்டா சிரிப்பை அடக்கிட்டு அமைதியா தான் வேலைய பண்ணிட்டு இருந்தேன் .....<br />
<br />
உடனே அவர் "அப்போ நான் இயர் போனை மாட்டிட்டு பாடுவேன் " ....<br />
<br />
அதுக்கு அவ "அய்யோஓஓஓ வேணாம் வேணாம் ..... அப்படியே வேணாலும் பாடிக்கோங்க " <br />
<br />
ஹம்ம்ம்.... ஜானகி மாதிரி பீல் பண்ணி ஒரு பாட்டு ரெக்கார்ட் பண்ண முடியுதா ... எனக்கு எதிரிங்க வேற எங்கயும் இல்ல 😛 !!!<br />
<br />
Note :<br />
இதுல பாத்தீங்கனா ஒண்ணு கூட நம்ம ஊர் பேரு இல்ல ... நான் பாடின ஒண்ணு ரெண்டு டமில் பாடல்கள்ல என்ன புரிஞ்சு லைக் பண்றாங்கனே தெரில ... என்னே soundcloudடோட ரீச் ன்னு சொன்னா "இது ஒரு வேளை soundcloud ஆப் டெவலப்பர்ஸா இருக்கும் .... இப்படியாவது நம்ம ஆப் யூஸ் ஆகுதேன்னு லைக் பண்ணிருப்பாங்க ..." அப்படிங்கறார் என் ஹஸ்பண்ட் 😛 !!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-18778365525935907612017-03-07T07:23:00.000-08:002017-03-07T07:23:23.788-08:00நான் ஒரு பெண் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கொஞ்சம் மாசங்களுக்கு முன்ன டெல்லி போய் இருந்தப்போ ....<br />
நாங்கள் ஸ்டே பண்ணி இருந்த இடத்தில் இருந்து சாயங்காலம் "அக்ஷர்தாம்" போகறதுக்காக டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தோம்.... போகும் போது அவ்வளவு கூட்டமா இல்லை.... அக்ஷர்தாமில் இருந்து நைட் ஒரு எட்டரை மணிக்கு மேல் கிளம்பியபோது என்னவோ கொஞ்சம் துருக்க்ன்னு தான் இருந்தது.... இதுக்கும் கொஞ்சம் காலம் முன்னாடி வரைக்கும் வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ எட்டரை ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸ்ல இருந்து எந்த கவலையும் இல்லாம சென்னைல எலெக்ட்ரிக் ட்ரெயின்ல வீட்டுக்கு வருவேன்... ஆனால் அன்னைக்கு டெல்லில கூடவே கணவர் மாமனார் மாமியார் ன்னு எல்லாரும் இருந்தும் என்னவோ ஒரு டிஸ்கம்பர்ட்... என் பொண்ணை இறுக்கி கைய பிடிச்சிகிட்டே நடந்தேன்....<br />
<br />
மெட்ரோ ஏறும் போது ஓரளவு தான் கூட்டமா இருந்தது.... டோர் கிட்ட இருக்கற சீட்ல (வயதானவர்கள் , நோயாளிகள் க்கு முன்னுரிமைன்னு நினைக்கறேன்....) நானும் என் பொண்ணும் உட்காந்துகிட்டோம்.... என் ஹஸ்பண்ட் எங்களுக்கு முன்னாடியே பாதுகாப்பா நின்னிட்டு இருந்தார்.... எங்க ரெண்டு பேராலயும் அந்த சின்ன கேப்ல ரொம்ப நேரம் உக்கார முடில... சோ அவ நல்ல உக்காந்துக்கட்டும்னு நான் எழுந்து என் பொண்ணு பக்கத்துலயே நின்னுக்கிட்டேன்.... சில ஸ்டேஷன்ஸ் போனப்பறம் ஒரு வயசானவர் ட்ரெயின்ல ஏறினார்.... கொஞ்சம் மூச்சு திணறல் மாதிரி தெரிஞ்சார்..... அது வயதானவர்கள் சீட் னால என் பொண்ணை எழுப்பி அவளை என் பக்கத்துலயே கையை பிடிச்சிகிட்டே நின்னுட்டு இருந்தேன்.... கொஞ்ச நேரம் ஆனதும் என் பின்னாடி இருந்து யாரோ எங்களையே முக்கியமா என் பொண்ணையே கவனிக்கற மாதிரியே தோணிச்சு.... எதேச்சையா திரும்பற மாதிரி பின்னாடி பார்த்தேன்..... முகம் எல்லாம் ஏதோ தழும்போட தலையில துப்பட்டாவை போட்டு பாதி மறைச்சிகிட்ட முகத்தோட ஒரு பொண்ணு எங்களையே பார்த்துட்டு இருந்தா.... பகீர்ன்னு இருந்தது.... ஒரு நிமிஷத்துல பல விதமான எண்ணங்கள்.... என்னோட ஹேண்ட்பேகை பாக்கறாளா இல்லை என் பொண்ணை கவனிக்கறாளான்னு செக் பண்ண என் பேகை ஷோல்டர் மாத்தி மாட்டிகிட்டேன்…. அப்பொவும் அவ என் பொண்ணை தான் பாத்துட்டு இருந்தா.... அதுக்குள்ள வேற ஒருத்தர் எங்களுக்கும் அந்த லேடிக்கும் நடுவுல வந்தார்.... அவ அவரையும் மீறி என் பொண்ணு நின்னுட்டு இருந்த டைரக்ஷன்லயே பாத்துட்டு இருந்ததை பார்த்து அடி வயிறே கலங்கிடுச்சு.... மெதுவா பக்கத்துல இருந்த என் கணவர் கிட்ட சொன்னேன்.... அவரும் கொஞ்ச நேரம் அப்சர்வ் பண்ணிட்டு "ஆமா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.... அவ நம்மளை தான் பார்த்துட்டு இருக்கா.... பட் கவலைப்படாத..... பாத்துக்கலாம்...." அப்படினார்..... அதுக்கு அப்பறம் ஒரு பதினைந்து நிமிஷம் என்னோட ஹார்ட் பீட் எனக்கே கேக்கற அளவு ஒரு பதட்டம்.... அவ நோக்கம் என்ன.... டெல்லி மெட்ரோ பத்தி நியூஸ்ல வந்த அத்தனையும் அப்போதான் ஞாபகம் வருது.... என் பொண்ணை அந்த லேடி பாக்க முடியாத மாதிரி எனக்கு முன்னாடி இழுத்து இறுக்க அணைச்சிகிட்டே "சாய் ராம் சாய் ராம் " ன்னு சொல்ல ஆரம்பிச்சேன்…. I was super alert when the train stopped at every station…. Was constantly scanning if there was someone else somewhere with whom that lady might communicate…. திடீர்ன்னு வந்த அடுத்த ஸ்டேஷன்ல அந்த லேடி எங்களுக்கு முன்னாடி வந்து உக்காந்து இருந்த அந்த வயசானவரை கூட்டிட்டு ட்ரெயின்ல இருந்து இறங்கறா.... அவ அவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்த எங்க கேப்ல அந்த பெரியவரை தான் பார்த்துட்டு இருந்தான்னு அப்போதான் புரிஞ்சது.... may be she was his care taker or helper….<br />
<br />
ஒரு நிமிஷம் அவளை என்னன்னவோ நினைச்சிட்டோமேன்னு கொஞ்சம் வெட்கமா இருந்தாலும்..... அது தான் இன்றைக்கு வெளில பெண்களுக்கு நடக்கற நிதர்சனங்கள்..... எதையுமே லைட்டா எடுத்துக்க முடியறது இல்லை பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு....<br />
<br />
என்றைக்கு நம் வீட்டு குட்டி பெண் குழந்தைகள் எந்த வித கவலையும் பயமும் இல்லாமல் வீட்டு முற்றத்தில் விளையாட விடப்படுகிறார்களோ, ரோடில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க படுகிறார்களோ….<br />
<br />
என்றைக்கு ஸ்கூல் காலேஜ் ஆபீஸ் போகும் பெண்களின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லாமல் பெற்றவர்களால் இருக்க முடிகிறதோ....<br />
<br />
என்றைக்கு பெண்களுக்கு அவர்களின் இயற்கை உபாதைகளை தீர்க்க மறைவிடம் தேடி அலைவது நின்று ஒரு பேசிக் நீடாக வீட்டில் ஒரு ரெஸ்ட்ரூம் இருக்கோ....<br />
<br />
என்றைக்கு பெண்களுக்கு அடிப்படை கல்வியாவது கட்டாயமாக கிடைக்குதோ (I agree today women are in every possible field and doing wonders…. But I am talking about the women who do not get even basic education)....<br />
<br />
என்றைக்கு morphing மண்ணாங்கட்டி என்று என்ன செய்து மிரட்ட பட்டாலும் "அது எதுவும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.... நீ செய்வதை செய்" என்று துணிச்சலாக சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு determination வருகிறதோ....<br />
<br />
பெண்கள் தினம் அன்று மட்டும் திரும்ப திரும்ப "பெண் ஒரு மகள், தாய், சகோதரி, மனைவி etc etc " என்று ஒரே மெசேஜை சொல்லாமல்,…<br />
<br />
When a woman, a girl child is seen, treated, felt and protected as a fellow HUMAN BEING, deserving all the rights to live SAFELY in this world, Only then Women’s Day becomes meaningful because it should not be just the celebration of social, economic and cultural achievements of women but it should be a celebration of<br />
<br />
The proud emotion ...<br />
<br />
“I am a WOMAN” !!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-53381367023897153242017-02-03T08:12:00.000-08:002017-02-03T08:12:39.935-08:00ராங் நம்பர்ங்க !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எங்க வீட்டு லேண்ட் லைன் போன் ஒரு ஆறு மாசமா வொர்க் ஆகல போல இருக்கு.... என்னது எங்க வீடு ஆனா 'போல இருக்கு' ங்கறேன்னு பாக்காதீங்க.... அந்த லேண்ட் லைன் போன் ச்சும்மா கிரஹாம்பெலோட கண்டுபிடிப்புக்கு ஒரு மானுமெண்டல் ப்ரூப்பா , வீட்ல வேற எங்கயுமே ஒரு பொட்டு தூசி இல்லேன்னா அப்போ தூசி தட்டப்படும் (அப்போ இந்த ஜென்மால அது எவ்வளவு கைவிட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே தூசி தட்டப்பட்டிருக்கும்) ஒரு வஸ்து .... மோடம் மட்டும் ஓவர் டைம் செய்யும் ஒரு போன் கனெக்ஷன் .... அவ்வ்வளவேதான்...<br />
<br />
ஆனா எவ்வளவு தடவை 'ராங் நம்பர்ங்க' ன்னு சொன்னாலும் வாரத்துக்கு ஒரு தடவை தவறாம 'ஹலோ .... துரை இருக்கானா' ன்னு ஓர்ர்ர்ர்ரெ ஒரு கால் மட்டும் வரும்... நானும் "ராங் நம்பர் " ன்னு சொல்லி வெறுத்து போய் ஒரு தடவை "இங்க ஜாக்சன் துரை இல்லங்கோ .... கட்டபொம்மன் தான் இருக்காருங்கோ " ன்னு கூட சொல்லிப் பார்த்துட்டேன்.... ம்ம்ம்ஹ்ம்ம் நோ யூஸ் ...<br />
<br />
கொஞ்ச நாள் முன்னாடி அதிசயமா என் அம்மா, தங்கை எல்லாருமே என்னவோ லேண்ட் லைன்க்கு போன் பண்ணி பாத்திட்டு "என்னடி லேண்ட் லைன் வொர்க் ஆகலையா... " ன்னு கேட்டப்ப தான் "அந்த துரை" கால் ரொம்ம்ம்ப நாளா வரலைங்கறதே உறைச்சுது..... நானும் ரொம்ப மெனக்கெட்டு கனெக்ஷன் செக் பண்ணலை .... அதான் வீட்டுல நூறு மொபைல் போன் இருக்கே ....<br />
<br />
இப்போ ஆசைக்காக ஒரு பழய மாடல் retro போன் வாங்கினவுடனே தான் அந்த லேண்ட் லைன் ஞாபகம் வந்து போனை ஆராய்ச்சி பண்ணேன்... போன்ல டிஸ்ப்ளேயே வரலை... அப்போ போன் தான் பால்ட்ன்னு முடிவு பண்ணி retro போனை கனெக்ட் பண்ணினேன்..... அதுவும் வரலை... "பாருங்க இது ஷோபீஸ் தான் போலருக்கு ... வொர்க் ஆகலை" ன்னு இவர்கிட்ட சொன்னா என்னை முறைச்சிட்டு பழய போனை செக் பண்ணார்.. பேட்டரியே இல்ல அதுல ... "இதுதான் நீ செக் பண்ண லக்ஷணமா" ங்கற மாதிரி என்னை லுக் விட்டார் .... "ஆமாப்பா ரொம்ம்ம்ப நாள் முன்னாடியே அந்த பேட்டரியை என்னோட டாக்கிங் பேர்ட்க்கு போடறதுக்கு நான் தான் எடுத்தேன் " அப்டின்னா பொண்ணு... "ரெண்டு போனும் வொர்க் ஆகலைனா லைன்லயே பால்ட்டா இருக்கும் .... அது புரியாம இதை ஷோ பீஸ்ங்கற " அப்டின்னு என்னோட இமேஜ டேமேஜ் ஆயிடுச்சேன்னு பீல் ஆயிட்டேன் ... ஓகே கம்மிங் டு தி பாயிண்ட் ....<br />
<br />
அப்பறம் bsnl கம்ப்ளெயிண்ட் கொடுத்து ஒரே நாள்ல லைன் பால்ட்ட கரெக்ட் பண்ணிட்டாங்க .... retro போனை கனெக்ட் பண்ணா டயல் டோன் வருது... இவருக்கு கால் பண்ணி "சூப்பரா வொர்க் ஆகுது " ன்னு சொன்னேன் .... "இரு நான் திருப்பி கால் பண்ணி இன்கம்மிங் செக் பண்ணறேன்" ன்னு சொன்னாருன்னு போனை வச்சேன்..... உடனே "ட்ரிங்க்க்க் ட்ரிங்க்க்க்க் " ன்னு உச்சஸ்தாயில அலறுது.... வேகமா எடுத்து "வொர்க்கிங் ..." ங்கறேன் ....<br />
<br />
அந்த சைடுல இருந்து "ஹலோ..... துரை இருக்கானா " !!!<br />
<br />
இந்த கதையை காமெடியா எழுதினாலும் , ஒரு மூணு வருஷமா இந்த நம்பரை அவங்க துரையோட நம்பர்ன்னு நினைச்சு கால் பண்ணிகிட்டே இருக்காங்களே... அப்போ மாறின தன்னோட போன் நம்பரை அந்த துரை அவங்களுக்கு இன்னமும் தரலைன்னு தானே அர்த்தம் .... "துரை இருக்கானா " அப்டின்னு மாத்தி மாத்தி கேக்கற அந்த வயதான குரல்களை நினைச்சா .........</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-77098066880527193672017-01-27T06:48:00.000-08:002017-01-27T06:48:07.050-08:00எல்லா புகழும் இறைவனுக்கே !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
காலைல ஆறு மணிக்கு எழுந்து பக்கத்து வீட்டு ரூபா அதுக்கு முன்னாடியே எழுந்து அப்படி என்னதான் படிப்பான்னு யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, கஜானனம் சுலோகம் சொல்லி, நாலு சென்டிமீட்டரே இருந்த ஷாலினி கிராப்பை (உபயம் எங்கப்பா அண்ட் தெருமுனை சலூன்கார்ர்ர்) நூறு தடவை வாரி வாரி ஒரு ஸ்லைடை குத்தி, பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு பேபி ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) தலை ஆட்டி ஆட்டி சொல்லி, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது மூணாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... பர்ஸ்ட் ரேங்க் ஆமா...<br />
<br />
காலைல ஆறு மணிக்கு எழுந்து கங்காபாய் மேம் சொல்லித்தந்த மராத்திய நினைச்சு கண்ணீர் விட்டுட்டே, அப்படி மராத்தி லெட்டர்ஸ்லயே தந்தி அடிக்கற நான் போய் மராத்தில கட்டுரையே எழுதணுமேன்னே யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, பத்து சென்டிமீட்டர் இருந்த முடியை நூறு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு வளர்ந்த ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) பின்னலை முன்னாடி பின்னாடின்னு மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது அஞ்சாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... ஆனா பர்ஸ்ட் ரேங்க் இல்லை ஆமா... பின்ன மராத்தியே தெரியாதே அப்போ அதுல ஜஸ்ட் பாஸ் தான ஆக முடியும் (அப்போ ஹிந்தி மட்டும் தெரியுமா ... அதுல நூத்துக்கு நூறானெலாம் தயவு செஞ்சி கேட்டுடாதீங்க ... அதுலயும் ததிங்கிணத்தோம் தான் ஸ்டில் பெட்டர் தான் மராத்தி)<br />
<br />
காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் மலையை பார்த்த மாதிரி உக்காந்து சிவபெருமானை தியானம் பண்ணிகிட்டே ஒரு அரை மணி நேரம் படிச்சிட்டு, குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, இருபது சென்டிமீட்டர் இருந்த முடியை நாலு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு யாரை மாதிரியும் நினைச்சுக்காம என்னோட ஸ்டைல்லயே பவ்யமா சொல்லிட்டு, டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, போய் எழுதினது டென்த் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... திஸ் டைம் சிவா ஆல்சோ ஹெல்ப்ட்.... சோ நல்ல மார்க் தான்...<br />
<br />
காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் வானத்தை பார்த்து உக்காந்து சூர்ய பகவானை தியானம் பண்ணிகிட்டே ஒரு மணி நேரம் படிச்சிட்டு, குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, என்னோட நாப்பது கிலோ ஸ்கூல் பாவாடையும் அப்பாவோட பெரிரிரிய ஷர்ட்டையும் போட்டுக்கிட்டு தெருமுனை பிள்ளையார் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் சுத்து சுத்துன்னு ஒரு முப்பது சுத்து சுத்திட்டு, முப்பது சென்டிமீட்டர் இருந்த முடியை ஒரு தடவை கூட சரியாய் வாராம ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் (இது மட்டும் காலேஜ் ஹாஸ்டல் போற வரைக்கும் மாறலை) சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "யெஸ்ஸ்ஸ்" ன்னு (கான்பிடன்ட்டா இருக்கேனாமாம் ... ) பெரிய்ய மனுஷியா சொல்லிட்டு, டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, கூடவே கொஞ்சம் குங்குமமும் சேர்த்து வெச்சிக்கிட்டு போய் எழுதினது ப்ளஸ் டூ எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... கூடவே ஆஞ்சி வேற ... சோ கேட்கணுமா...<br />
<br />
நல்லா தான் போயிட்டு இருந்தது இது வரைக்கும்......<br />
அப்பறம் தான் ....<br />
....<br />
மறுநாள் எக்ஸாம்க்கு முதல் நாள் புல்லா ஸ்டடி லீவ் இருந்தாலும் புக்கை பூஜைல வெச்சிட்டு, பகல்ல நல்லா தூங்கிட்டு , சாயங்காலம் இருந்த அரை அடி கூந்தலை (ஹோம் சிக்ல முடி எல்லாம் கொட்டி போச்சு) சும்மா கட்டிக்கிட்டு , அந்த டீ தண்ணிய (பின்ன காபி தண்ணின்னு சொல்லலாம்.... உண்மையாவே தண்ணியா இருக்கற ஹாஸ்டல் டீயை சொல்ல கூடாதா), குடிச்சிட்டு அங்க இருந்த ஆபத்பாந்தவன் பிள்ளையார் கோவிலுக்கு போய் ஒரு நாப்பது சுத்து சுத்திட்டு, திரும்ப ஹாஸ்டல் வந்து, மறக்காம அங்க வந்து பொறி விக்கறவர் கிட்ட கார பொறி வாங்கி சாப்பிட்டு (இந்த ரண களத்துலயும் உனக்கு கார பொறி கேக்குதான்னு மட்டும் தெரியாம கேட்டுடாதீங்க .... அது சென்டிமென்ட .. பொறி சாப்டா அடுத்த நாள் எக்ஸாம் சும்மா பொறி பறக்க வெளுக்கற அளவு ஈஸியா வரும்னு .... it was a proven fact in those 4 years), அப்பறமும் திருந்தாம டின்னரையும் சாப்பிட்டு அலப்பறை விட்டுட்டு காரிடார்ல சுத்திட்டு, ராத்திரி புல்லா காலைல 5 மணி வரைக்கும் படி படின்னு அந்த புக்கை வெச்சி செஞ்சிட்டு, காலைல ஆறு மணிக்கு இல்ல எட்டு மணிக்கு எழுந்து சுத்தமா படிச்ச மாதிரியே இல்லாம மண்டையெல்லாம் ஒரே பிளாங்க்கா, முழிச்சிகிட்டே பல்லை தேய்ச்சு (ஆனாலும் கூலா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன் இல்ல ), குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி ப்ளஸ் ஒரு நாலு a4 ஷீட்ல எழுதி வெச்சிருக்கற எல்லா ஸ்லோகத்தையும் சொல்லி, தலை வாருவது எல்லாம் ஒரு வேலையான்னு அதை குழாயடி சண்டைக்கு போறவ மாதிரியே அள்ளி முடிஞ்சிகிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்க ஹாஸ்டல்ல அப்பா இருப்பாரா என்ன... சோ நானே வரிசையா பிள்ளையார் கோவில் விபூதி, பாபா விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் செந்தூரம் (இதையெல்லாம் கரெக்ட்டா கலெக்ட் பண்ணி வெச்சிருப்பேன்.... பிரெண்ட்ஸ்க்கும் சாமியாடி ரேஞ்சுக்கு நானே மந்திரிச்சு வெச்சு விடுவேன்) எல்லாத்தையும் வெச்சிக்கிட்டு மேல்மருவத்தூர் ச்ச டங் ஸ்லிப் எக்ஸாம் ஹாலுக்கு போய் எழுதினது எஞ்சினீரிங் எக்ஸாம் .... அப்பப்பா இவ்வளவு பேர் இருந்தாங்கல... சோ எப்படியோ காப்பாத்திட்டாங்க...<br />
<br />
இப்படியாக ஒரு வழியா எக்ஸாம்ஸ்க்கு ஒரு பெரிய முழுக்கை போட்டு படிப்பை முடிச்சிட்டேன் (வேணும்னா மேல படிக்கலாம்.... பட் இந்த கதையை படிச்ச உங்களுக்கே புரிஞ்சுருக்குமே )...<br />
<br />
இப்போ போன மாசம் முதல் ஹிந்தி எக்ஸாம் (ஸ்கூல்ல ஆறாவது வரைக்கும் நோ எக்ஸாம்ஸ்... நல்லா இருக்குல்ல ).... சோ " I am soooo excited maa… this is my first exam…” அப்படினெல்லாம் சொல்லிட்டு, என்னை மாதிரி இருக்க மாட்டா கொஞ்சம் சீரியஸா தான் இருக்கான்னு நினைக்கற மாதிரி நைட் படிச்சிட்டு தூங்கிட்டு, காலைல ஏழு மணிக்கு எழுந்து , மெதுவ்வ்வ்வா ஏதோ யோசனை பண்ணிகிட்டே (சேம் ப்ளட்) பல்லை தேய்ச்சி, குளிச்சு, டிரஸ் போட்டுக்கிட்டு , நேரா புக் ஷெல்ப் திறந்து தேடிடி ஒரு அமர் சித்ர கதா புக் (மஹாபாரதம்) எடுத்து மெனக்கெட்டு ஏதோ பேஜை திறந்து அதை படிக்க ஆரம்பிச்சா... "ஹே சுலோகம் (because that is the most important part of exams you see) ஏதாவது சொல்லுடி..." ன்னு நான் சொன்னதுக்காக இருந்த இடத்துலயே வேகவேகமா என்ன சொன்னான்னே புரியாம ஏதோ ஒண்ண சொல்லிட்டு "சொல்லிட்டேன்மா..." ன்னு மறுபடியும் மஹாபாரதம் படிக்க ஆரம்பிச்சாளே பாக்கணும் .... நானே ஷாக் ஆய்ட்டேன்னா பாத்துகோங்களேன் ...<br />
<br />
பின் குறிப்பு:<br />
இதெல்லாம் கூட பரவால்ல .... ஆனா வீட்ல ஒருத்தர் ஆபீஸ் போயிட்டு வந்து மறுநாள் எக்ஸாம்க்கு நைட், கொட்டாவி விட்டுக்கிட்டே, இந்த கண் இமையெல்லாம் குச்சி வெச்சு ஓபன் பண்ணிக்கிட்டு தெய்வமேங்கற மாதிரியே பாவமா படிக்க ஆரம்பிக்கறப்போ.... இந்த பக்கம் என் பொண்ணு ஏதோ கதை புக்கும், அந்த பக்கம் நான் "மங்கையர் மலரும்" படிப்போமே... இந்த அக்கிரமத்தை கேக்க யாருமே இல்லையாங்கற மாதிரியே எங்க ரெண்டு பேரையும் பாக்காதீங்க... அவருகிட்ட எல்லா ஸ்லோகமும் இருக்கற a4 ஷீட்டை கொடுத்துட்டேன்.... எல்லா புகழும் இறைவனுக்கே !!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-70635502851989895192017-01-24T07:59:00.002-08:002017-01-24T07:59:42.466-08:00மேரேஜ் கிப்ட்.... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"சரி ... எனக்கு மேரேஜ் கிப்ட்டா என்ன தரப்போற..."<br />
<br />
"அடிப்பாவி.... லவ் பண்ணப்போ தான் உன் பர்த்டே, என் பர்த்டே, இன்னைக்கு ஐம்பதாவது சண்டே, நாளைக்கு நூறாவது மண்டேன்னு எதுக்கெடுத்தாலும் கிப்ட்டா கேட்டு இம்சை பண்ண.... இப்போ கல்யாணம் நடக்க போறது நம்ம ரெண்டு பேருக்கும் தான் .... அது என்ன இப்பவும் நாந்தான் உனக்கு தரணுமா... நீ எனக்கு தரக்கூடாதா...."<br />
<br />
"உனக்குள்ள இவ்வளவு பீலிங்கா இருந்தது... நான் உன்னை உரிமையா கேட்டேன்..."<br />
<br />
"ம்ம்ம்ஹும்ம் .... இந்த கதையே வேண்டாம்.. என்ன நடந்தாலும் சரி இந்த தடவை நான் தரப்போறதில்லை... நீதான் எனக்கு கிப்ட் தர...."<br />
<br />
"ஓகே ஓகே... உனக்கு கிப்ட் தான வேணும்..... என்ன வேணும் கேளு..."<br />
<br />
"ஹேய்ய் இத்தனை நாள் நான் உனக்கு என்ன வேணும்னு கேட்டா வாங்கித் தந்தேன்... எவ்வளவு மண்டைய பிச்சிகிட்டு ஒவ்வொரு தடவையும் உனக்கு வாங்குவேன் தெரியுமா.... ஒரு தடவை நீ அனுபவி அப்போ தெரியும் அந்த கஷ்டம்..."<br />
<br />
"சும்மா ஒரு பொக்கே, புக் இதுக்கெல்லாம் மண்டைய பிச்சிகிட்டா??... ம்ம்க்க்கும் ... ரொம்ப தான் பேசற... சரி இப்போ என்ன மேரேஜ் கிப்ட் நான் உனக்கு தரணும் அவ்ளோதானே... வெயிட் அண்ட் சி..."<br />
<br />
கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் எந்த கிப்ட்டும் வரலை... அவனுக்கு ஒரே ஆர்வம்..."ஹே... என்ன கிப்ட் தரேன் அது இதுன்ன... ஒண்ணையும் காணோம்..."<br />
<br />
"நான் தான் வெயிட் அண்ட் சி ன்னு சொன்னேன் இல்ல... இப்போதான கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் ஆயிருக்கு... பொறுமையா இரு... "<br />
<br />
அப்படி என்ன வாங்கறா ஒரு வாரமா...<br />
<br />
"இது பார் உனக்கு என்னோட மேரேஜ் கிப்ட்... "ன்னு சொல்லிட்டே அவள் நீட்டிய கவரை பார்த்து "என்ன இது... இதுக்கு தான் இவ்வளவு நாளா " ன்னு சிரிச்சுகிட்டே பிரிச்சான்... உள்ளே கிப்ட் வவுச்சர் ....<br />
<br />
"என்ன முழிக்கற.... நீதான் மண்டைய பிச்சிகிட்டு எனக்கு வாங்கித் தருவ.... நான் பாரு எவ்வளவு இன்டெலிஜென்ட்டா உனக்கு கிப்ட் கார்டு கொடுத்து இருக்கேன்.... உனக்கு என்ன வேணுமோ நீயே வாங்கிக்கலாம் பாரு..." அப்படின்னு சிரிச்சா...<br />
<br />
சரின்னு அதை எடுத்துட்டு லைப் ஸ்டைல் போனா "திஸ் கார்டு இஸ் ஒன்லி பார் விமன் பேஷன் அஸஸரீஸ் அண்ட் காஸ்மெட்டிக் ப்ராடக்ட்ஸ் சார் ...." னானே பாக்கணும் ...<br />
<br />
தெளிவாத்தான் இருக்காங்க 😛 !!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-86352844059542612262017-01-16T23:06:00.000-08:002017-01-16T23:06:07.345-08:00அம்மான்னா சும்மாவா !!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த கால யங் பேரன்ட்ஸ் முக்க்கியமா அம்மாக்கள் (ஏன்னா அப்பாக்கள் இப்பவும் கொஞ்சம் கூலா தான் இருக்காங்க ங்கறது என்னோட தாழ்மையான அபிப்பிராயம் ... அம்மாக்கள் என்னை அடிக்க வராதீங்க .. நாம எப்பவுமே ரொம்ம்ம்ப பொறுப்பானவங்கன்னு சொல்ல வந்தேன்) பதட்டத்தை (anxious parenting) குறைக்க, செய்யவே கூடாததுன்னு சில விஷயங்களை வெச்சுக்கணும்னு எனக்கு தோணுது (காரணம் இதுல சிலதை நானும் செஞ்சு அது எல்லாம் என்னை வெச்சு செஞ்சுடுச்சு)<br />
<br />
முதல்ல எதுக்கெடுத்தாலும் Mr கூகுளை போய் கருத்து கேக்கறது... குழந்தைக்கு நாப்பி மாற்றுவது எப்படி, செர்லாக் கலக்குவது எப்படி, அதை ஊட்டுவது எப்படி, தூங்கவைப்பது எப்படி, குழந்தையை அழ வைப்பது ..ச்சை நாக்கு குளறிடுச்சு .. அழாமல் இருக்க வைப்பது எப்படி, கொஞ்சுவது எப்படி , திட்டுவது எப்படி.... இப்படி பல பல எப்படிகள்.... நாமளானா வீட்ல இருக்கற நம்ம பாட்டிஸ் எல்லாம் "ஒண்ணும் இல்லடி... வயத்து வலினா தொப்புளை சுத்தி கொஞ்சம் எண்ணையை தடவு ..." ன்னு சொல்றதை எல்லாம் துச்சமா நினைச்சு எங்கயோ எத்தியோப்பியால இருக்கற பாட்டி "ஹோம் ரெமடிஸ்" ங்கற பேர்ல அதே எண்ணெய் தடவும் டெக்னிக்க சொல்ல அதை செய்வோம்.... இதுல என்னடானா கூகிள் இதுக்கெல்லாம் சைல்டு சைக்கியாட்ரிஸ்ட்ஸ் கிட்ட இருந்தோ சைல்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்ஸ் கிட்ட இருந்தோ கருத்தை எடுக்காம, நம்மள மாதிரியே எக்ஸ்பர்ர்ர்ட்(???) பேரன்ட்ஸ் கிட்ட இருந்து எக்ஸ்பர்ட் அட்வைஸாஆ அள்ளி கொட்டும்.... அதை படிச்சிட்டு நம்ம குழந்தை நார்மலா பண்ற விஷமத்தை கூட "ஹைப்பர் ஆக்டிவ்", "அடன்ஷன் டெபிசிட் டிஸார்டர்" அச்சா பூச்சா ன்னு பெரிய ப்ரச்சனையா நினைச்சு நமக்கு பிபி, டிப்ரெஷன், ஹிஸ்டிரியான்னு வர வெச்சுப்போம்... பாவம் குழந்தை நம்ம டிஸ்ஆர்டர பாத்து ஒண்ணும் புரியாம முழிக்கும் (இன்னும் கொஞ்ச நாள்ல மேனேஜிங் பேரன்ட்ஸ்ன்னு கூகிள் பண்ணி பாத்தாலும் பாக்கும்)...<br />
<br />
இது எல்லாத்தையும் விட ரொம்ம்ம்ம்ப முக்கியமான த்ரெட்டா நான் பாக்கறது, இப்போ நெட்ல உலா வர்ற நிறைய டெர்மினாலஜிஸ்.... full time at home mother, stay at home mother (SAHM), working mother, working part time mother (sorry part time working mother ) இப்படி... அட என்ன கொடுமை வேலைக்கு போனாலும் வீட்ல இருந்தாலும் அம்மாங்கறது முழு நேரமும் தான... எங்கயாவது working father, part time working father பார்த்து இருக்கறோமா .... அப்பறம் என்ன full time at home mother... இந்த ஒரு விஷயம் மட்டுமே அம்மாங்கற நம்ம கான்பிடன்ஸை பெருசா அசைச்சு பாக்கற விஷயமா தான் எனக்கு தோணுது.... இதுல quantity time and quality time மாம்.... இது எல்லாம் கொடுக்கற ப்ரெஷர் இருக்கே .... சேப்டி வால்வ் ரிப்பேர் ஆன ப்ரெஷர் குக்கர் மாதிரி ரொம்ம்ம்ப ஆபத்தானது நம்ம ஹெல்த்துக்கு ..... வீட்ல இருக்கற அம்மாக்களுக்கு வெட்டியா இருக்கோமோன்ன பீலிங்கும், வொர்க் பண்ற அம்மாக்களுக்கு ஓர்ர்ரே கில்ட்டி பீலிங்கும் தர தான் இப்படி பட்ட forums discussions லாம் ஹெல்ப் பண்ணும் மத்தபடி பேரன்டிங் டிப்ஸ் எல்லாம் தராது ங்கறது தான் நான் நினைக்கறேன் (i know this because i was a working but a full time at home(!!!) mother now...)..எப்படிப்பட்ட மதரா இருந்தாலும் நாம ஒரு நாள் வீட்ல இல்லைனா வீட்ல இருக்கறவங்க நிலைமையும் அதை விட வீடு (தலைகீழா ) இருக்கற நிலைமையும் நினைச்சாலே நம்ம இம்பார்டன்ஸ் நமக்கு தன்னால புரிஞ்சுரும் ... அப்பறம் இந்த SAHM , full time, part time mother ங்கறதெல்லாம் நம்ம ப்ளட் பிரஷரை ஒண்ணும் பண்ண முடியாது... நாம தான் வீட்ல இருக்கறவங்க பிரஷரை ஏத்துவோம் ஓவர் கான்பிடன்ஸ்ல ...வேலைக்கு போறதும் வீட்ல இருக்கறதுக்கு ஒவ்வொருத்தர் குடும்ப நிலைமை, ஹெல்த் நிலைமை, பெர்சனல் ரீஸன்ஸை பொறுத்து செய்யறது ... it has nothing to do with our ability,intelligence and importantly mothering skills...<br />
<br />
அடுத்தது சிங்கிள் சைல்டு அண்ட் sibling ஓட வளரும் சைல்டு.... அதை பத்தி வர்ற ஆர்டிகல்ஸ் போரம்ஸ் டிஸ்கஷன்ஸ் .... இந்த கவலை இருக்கே அது இன்னொரு தலையை தின்னும் பெரும் ப்ரச்சனை.... அகைன் சிங்கிளா அமையறதும் அதுக்கு மேல அமையறதும் அவங்க அவங்க நிலைமையை பொறுத்தது.... முக்கியமா கடவுள் கொடுக்கும் வரம்.... எப்படி இருந்தாலும் அது நன்மைக்கே ன்னு நினைச்சு அமைதியான பதட்டம் குறைந்த நல்ல ரோல் மாடல் அம்மாவா இருந்தாலே குழந்தை நல்லா வளரும் ... இதை கேரிங் ஷேரிங் எல்லாம் நாம சொல்லிக்கொடுக்க சொல்லி கொடுக்கவே வளரும்னு தான் தோணுது.... இதை எல்லாம் படிச்சிட்டு குழந்தையோட எதிர்காலம் பத்தி ரொம்ம்ம்ப கவலை படாம பாஸிட்டிவா இருந்தாலே லைஃப் நல்லா இருக்கும்...<br />
<br />
அடுத்து வருவது ஸ்கூல் ஹண்ட்.... ஓர்ர்ர்ர்ரெ ரெவ்யூஸ் படிச்சிதான் செலெக்ட் பண்ணுவோம்.... இதுல பாத்தா ஒரு சைட்ல ஒரு ஸ்கூலை திட்டுவாங்க அதே ஸ்கூல இன்னொரு சைட்ல சூப்பர்ம்பாங்க .... நாமளான மண்டைய பிச்சிகிட்டு இன்டர்வ்யூக்கு குழந்தையை தயார் படுத்துவோம் .... அப்போதான் நமக்குள்ள இருக்கற ஷேக்ஸ்பியர், ரென் அண்ட் மார்ட்டின் எல்லாம் வெளிய வருவாங்க.... ஸ்கூல் சேர்த்துட்டு ஓரொரு மீட்டிங்கிலேயும் பேரன்ட்ஸ் ஒரே பதட்டமா டிஸ்கஸ் பண்ணுவோம் குழந்தை வாங்கின கிரேட் பத்தி.... போன் பண்ணி பண்ணி எல்லா பேரன்ட்ஸ் கிட்டயும் கருத்து கணிப்பு எடுப்போம்.... ஸ்கூல் செலக்ட் பண்றதெல்லாம் தப்பு இல்ல ஆனா அதுக்கப்பறம் ஓரொரு விஷயத்துக்கும் ஓவரா ரியாக்ட் பண்றதுதான் நம்ம பிபியை ஏத்தும்.... அப்பறம் எக்ஸ்டரா கரிகுலர் ஆக்டிவிடீஸ்ன்னு இருக்கற எல்லாத்துலயும் போய் சேக்கறது.... சேக்கறது தப்பு இல்ல.... ஆனா எதுலங்கறது தான் முக்கியம்.. பாவம் குழந்தை நல்லா வரையும் நாம போய் பாட்டுல சேப்போம்... நல்லா பாடும் நாம போய் ஆட வெப்போம்..... அந்த காலத்துல எல்லாருக்கும் எல்லா க்ளாஸ்லயும் சேக்கற அளவு வசதியும் இருக்காது இவ்வளவு க்ளாஸசும் இருக்காது ... ஸ்டில் சில்ட்ரன் வேர் கான்பிடண்ட் ன்னு தோணுது... அதை விட முக்கியமா பேரன்ட்ஸ் வேர் கான்பிடண்ட்... அதனால தான் நாமயெல்லாம் ரொம்ம்ம்ம்ப யோசிக்கற புத்திசாலியா வளந்துட்டோம்.... <br />
<br />
இதெல்லாம் விட நாம ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைனாலும் நம்ம பேரண்ட்ஸ்க்கு இருந்த ஒரு முக்கியமான விஷயம் நம்ம ஜெனரேஷன்க்கு அவ்வளவா இல்லைன்னு எனக்கு தோணற ஒரு விஷயம்.... லைஃப் ல நம்பிக்கை ... கான்பிடனஸ் ... நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நினைக்கற அந்த பக்குவம்.... may be life was simple and there was no much job tension , job insecurity etc those days... But now apart from stress, job insecurity we have one more thing called desire... எதையோ துரத்திக்கிட்டே ஓடறோம் ... ஆனா அது என்னன்னு கேட்டா சொல்ல தெரியாது...<br />
<br />
சோ பாசிட்டிவ் ஆட்டிட்யூடை வளர்ப்பது எப்படின்னு Mr கூகிளை நான் கேக்க ஆரம்பிச்சுட்டேன் (இன்னும் முழுசா திருந்தல.... ஸ்டில் இன் த ப்ராஸஸ் 😉) !!!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-55222336704499217122017-01-03T09:29:00.000-08:002017-01-03T09:29:42.592-08:00நல்ல டெயிலர் அமைவதெல்லாம்ம்ம்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வாழ்க்கைல எவ்வளவோ விஷயங்கள் நல்லா அமையலாம்.... அமையாம போலாம் .... ஆனா இந்த டெயிலர் அமையறது இருக்கே .... அப்பப்பப்பா.... அது உண்மையாவே இறைவன் கொடுத்த வரம் தான் .... எனக்கும் துணி தச்சு போட்டுக்கறதுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம்..... ஜாதகத்துல தச்ச துணி போட்டுக்கற கட்டத்துல தோஷம்னு நினைக்கறேன்... ஏன் ஜாதகத்தையெல்லாம் இழுக்கறேன்னு கேக்கறீங்களா... சொல்றேன் இருங்க ...<br />
<br />
எனக்கு தெரிஞ்சு கடைசியா எனக்கு ஒரு டெயிலர் தச்சு பிரமாதமா இருந்த சல்வார் கம்மீஸ் நான் மூணாவது படிக்கும் போது .... அப்போவே என் அப்பா ஒரே ட்ரெண்டியா தான் ட்ரஸ் வாங்கித்தருவார்.... சல்வார் கம்மீஸ் ஸ்டையில் ஸ்டேட்மெண்டா இருந்தப்போ ஒரு கிரீம் அண்ட் பிங்க் சல்வார் கம்மீஸ் துணிய மேட்டுபாளையத்துல வாங்கி குடும்பத்தோட பஸ் ஏறி கோயம்புத்தூர் போய் அங்க ஒரு டெயிலர் கிட்ட கொடுத்து ஒரு பத்து நாள் தூக்கத்துல எல்லாம் ஒரே ஆஷா பரேக், மும்தாஜ் , ஹேமமாலினி மாறி இமாஜின் பண்ணி (including தட் மண்டை மேல கொண்டை ... ஆனா எனக்கு அப்போ பாய் கட் ) அப்பறம் திரும்ப பஸ் ஏறி போய் அதை வாங்கிட்டு வந்து துப்பட்டாவை ஏகப்பட்ட மெத்தட்ல மாத்தி மாத்தி போட்டு அடுத்த ஒரு வருஷத்துக்கு எல்லா கலர் ட்ரஸ் சாட்டர்டே ஸ்கூல் , கல்யாணம், காது குத்து, தீபாவளி (ஆமா காலைல புதுச போட்டுட்டு ஈவினிங் சல்வார் ), பொங்கல், கடைவீதிக்கு போறதுல இருந்து தெருமுனை மளிகை கடை வரைக்கும் அது தான் மை காஸ்ட்யூம் ... அதுவும் எவ்வளவுதான் தாங்கும் பாவம் .... நொந்து போய் நார் நாராடுச்சு..... I still pity that lovable salwar ...<br />
<br />
அதுக்கு அப்பறம் மோஸ்ட்லி ரெடிமேட் தான் கொஞ்ச வருஷத்துக்கு .... டெயிலர் ஒன்லி பார் ஸ்கூல் யூனிபார்ம் .... ஆனா நான் தான் வருஷா வருஷம் ஊர் ஊரா சுத்தி ஏகப்பட்ட ஸ்கூல்கள்ல படிச்சேன்னே .... ஆனாலும் சொல்லி வெச்ச மாறி ஆல் டெயிலர்ஸ் சொதப்புவாங்க... யூனிபார்ம்ல எப்படிங்கறீங்களா..... ஸ்கூல்ல ஸ்கர்ட்ன்னா பாவாடையா தெச்சு வரும்.... ஸ்கூல்ல பினபார்ன்னா ஷிம்மியா வரும் .... சுடிதார்ன்னா அங்கியா வரும்.... oh my god i am very thankful to all my class friends who tolerated my look ....<br />
<br />
அடுத்து தாவணி பருவம்..... ஸ்கூல் யூனிஃபார்ம் தான் .... அதுவே கரும்பச்சை பாவாடை மஞ்சள் பிளவுஸ் கிளிப்பச்சை தாவணின்னு செம்ம்ம்ம்ம காமெடியா இருக்கும் .... இதுல நீளமா பாவாடை ஆனா அதுக்குள்ள ஒரு அடிக்கு டக்கு (எதுக்குன்னே இப்போ வரைக்கும் எனக்கு புரில... ஒரு வருஷத்துல அவ்வ்வ்வளவா வளருவேன்... ) அதுவும் படு கனமான பெட்ஷீட் துணி.... அதை போட்டுக்கிட்டு வெயிட் கீழ இழுத்ததுல ஷோல்டர்ல கூன்னே விழுந்துடுச்சு..... பாவம் அதை வாஷ் பண்ண எங்க அம்மா ( என் பொண்ணுக்கு பக்கம் பக்கமா அட்வைஸ் பண்ற நான் ஒரு நாள் கூட எங்கம்மாக்கு ஹெல்ப் பண்ணலையேன்னு இப்போ ஒரே பீலிங்) ... பாவாடை இப்படின்னா பிளவுஸ் ஒரே தொள தொள.... பின்ன பாவாடைல டக்குன்னா பிளவுஸ்க்கு மட்டும் வேண்டாமா... ஆனா கொடுக்கற துணியவே அடிக்கற டெயிலர்களுக்கு மத்தியில் (no offense please) எக்ஸ்டரா துணிய போட்டு தச்ச டெயிலர் அண்ணாக்கு கோவிலே கட்டலாம்....<br />
<br />
அப்போ தான் நாமளே தைக்கலாமேன்னு அம்மாகிட்ட பேப்பர் கட்டிங் வாங்கி அவங்களுக்கு பிளவுஸ் தைக்கறதுல ஆரம்பிச்சேன் .... வாட் அ மிராக்கிள் .... அவங்க அளவுக்கு தைச்சது கடைசியில என் அளவுக்கு இருந்தது .... அதுக்கு மேல ஸ்க்ரீன் தலைகாணி கவர தவிர எதுவும் தைக்க மாட்டேன்ன்னு சபதம் எடுத்துட்டேன்... வேற வழி ...<br />
<br />
அப்பறம் சுடிதார் ..... வெச்சு போடலாம் வெச்சு போடலாம்னு கொஞ்சம் லூசா தைக்க சொன்னா டபிள் த சைஸ்ல வரும்... அந்த ராசில தான் இப்போ டபிள் த சைஸ்ல இருக்கேனோ என்னவோ .... சரி பிட்டிங்கா தைங்கன்னு சொன்னா கைல முட்டிக்கு மேல நுழையாது..... அசையவே முடியாது ..... சுடிதார்க்கெல்லாம் ரெண்டு மூணு தையல் போட்டு வேணும்னா பிரிச்சுக்கற மாதிரி தைச்சுக்கிட்டவ நான் ஒருத்தியாதான் இருப்பேன் ... what an idea madamji... அதுகூட பரவால்ல நான் கொடுத்த துணியில் டாப்சும் வேற யாரோ கொடுத்த துணியில் பேண்டும் வரும்.... வாட் அ கொடுமை பாருங்க....<br />
<br />
என் கல்யாணத்துக்கு பிளவுஸ் தைக்க பிள்ளையாருக்கு 108 தேங்கா, ஆஞ்சநேயருக்கு வடைமாலை , அம்பாளுக்கு 108 பிரதக்ஷிணம் (கூடவே நீயும் ஒரு பெண் தானேன்னு வேண்டுதல்....) ன்னு எல்லாம் பண்ணி சீட்டு குலுக்கி போட்டு ஒரு டெயிலர கண்டுபிடிச்சு எப்படியோ எல்லா கடவுளும் காப்பாத்திட்டாங்க..... ஆனா அதுக்கு அப்பறம் ஒரே மாசத்துல அந்த மஹானுபாவர் (டெயிலர் தான் ) ஊரை விட்டே போயிட்டார்.....<br />
<br />
அப்பறம் ஒரே டிஃபரெண்ட் டைப்ஸ் ஆப் லூஸா இருக்கற ரெடிமெட் பிளவுஸ் போட்டு ஸாரி கட்டற ஆசையே போயிடுச்சு (என்னை சுத்தி இருக்கறவங்க ரியாக்ஷன் பாத்துதான்)... சுடிதார்களாம் ஸ்டிச்சிங் மூச் நினைக்கறதே இல்ல..... ஒன்லி மெகாமார்ட் பாண்டலூன் குர்தா தான் ....<br />
<br />
இப்போ லேட்டஸ்ட்டா ஒரு நல்ல டெயிலர கேள்விப்பட்டு என்னோட கசின் கல்யாணத்துக்கு ரிஸ்க் எடுத்து பிளவுஸ் தைக்க கொடுத்தேன் .... சும்மா சொல்லக்கூடாது .... ரொம்ம்ம்ப வருஷத்துக்கு அப்பறம் சூப்பரா தைச்சு வந்தது .... போட்டு பாத்திட்டு ஒரே சந்தோஷம் ..... ஒரு வாஷ் பண்ணிட்டு அயர்ன் பண்ணலாம்ன்னு அயர்ன் பாக்ஸை வச்சேன் பாருங்க... புஸ்ன்னு ஒரு சவுண்ட்.... பின்ன சில்க் காட்டன் துணின்னு மறந்துட்டு புல் ஹீட்ல அயர்ன் பாக்ஸை அது மேல வச்சா தீஞ்சு போகாம ....<br />
<br />
இப்போ சொல்லுங்க இது ஜாதகத்துலயே இருக்கற ஸ்டிச்சிங் தோஷம் தான !!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-85992090892436410122016-11-23T10:18:00.000-08:002016-11-23T10:18:20.773-08:00அன்பு என்பது யாதெனின்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அன்பு என்பது யாதெனின்....<br />
<br />
மனதில் எவ்வளவு வலி கவலை இருந்தாலும் அதை மறைத்து சிரிப்பையும் சந்தோஷத்தையும் மட்டுமே பரப்புவது...<br />
<br />
கெட் லாஸ்ட் என வள் என்று விழுந்தாலும் ஒரு 2 நிமிஷம் வாடிய முகத்தோடு இருந்து விட்டு பின்னே ரோஷமே இல்லாமல் போய் "ஏதாவது ப்ராப்ளமா .... நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா.." என்று கேட்டு இன்னும் வாங்கிக்கட்டி கொள்வது...<br />
<br />
உடம்பு சரி இல்லன்னா "ஒண்ணும் இல்ல.... தைரியமா இருக்கணும் ...சரியா போயிடும்...... மருந்து சாப்பிட்டு நல்லா தூங்கணும்..." ன்னு சொல்லிட்டு அவர்கள் தூங்கிய பின் கவலை பட்டு இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை பீவர் இருக்கான்னு தொட்டு பார்த்து கொண்டு நைட் புல்லா தூக்கம் வராம புரள்றது....<br />
<br />
சும்மா உரிமை இருக்குங்கறதுக்காக நைநைங்காம கொஞ்சம் ப்ரீயா இருக்க விடறது...<br />
<br />
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியூரில் இருந்து "நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வரேன் ..." ன்னு சொன்னதை கேட்டு லாஜிக்கே இலலாமல் அந்த நிமிடத்தில் இருந்தே ரோடில் எந்த வண்டி ஆட்டோ சத்தம் கேட்டாலும் மனசு பரபரப்பது ..<br />
<br />
ரொம்ம்ம்ப பிடிச்ச ரொம்ம்ம்ப நாளா பாக்கணும்னு நினைச்சு இருக்கற படத்தை அதிசயமா டீவில பாக்கும்போது போன் வந்தா உடனே டீவியை நிறுத்திட்டு ஆசையா பேசறது ...<br />
<br />
மனதுக்கு பிடித்த தேடி அலைந்து வாங்கிய எந்த பொருளாய் இருந்தாலும் "ஹேய்ய் நல்லா இருக்கே .." என்று சொல்வதை கேட்ட நிமிடமே "இந்தா வச்சுக்கோ.." என்று தூக்கி கொடுப்பது.. (ஆனா "நல்லா இருக்கு நீ பண்றது.... உனக்கு பிடிச்சு வாங்கி இருக்க.... தூக்கி கொடுக்கற ... எங்க வாங்கினன்னு சொல்லு .... வேணும்னா நானே வாங்கிக்கறேன்... " அப்படி சொல்றது தான் அவங்க அன்பு ..)<br />
<br />
முக்கியமா நாலு கிலோ பேபி பொட்டேட்டோ வாங்கி ப்ரை பண்ணாலும் அதுல நாலு பீஸ் கூட நம்ம வாயில போடாம அவங்களுக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்ன்னு அப்ப்ப்ப்படியே எடுத்து வெக்கறது தான் அன்பிலேயே சிறந்த பேரன்பு... (ஹிஹி வாட் டு டு ...நாம சீரியஸா மெசேஜ் சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சாலும் கடைசியில லைட்டர் மொமெண்ட்டா தான முடிக்க வருது...) !!!<br />
<br /></div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-55098102157889726522016-11-19T09:25:00.002-08:002016-11-19T09:25:55.900-08:00Happy Men's day !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இன்னைக்கு சர்வதேச ஆண்கள் தினமாம் .... ஏதாவது சொல்ல வேண்டாமா...<br />
<br />
பிறக்கும்போதே ரெஸ்பான்சிபிலிட்டிஸோடவே பிறக்கும் மண்ணின் மைந்தர்கள்... பின்ன என்னங்க "பையனா ..... கொடுத்து வெச்சவங்க சார்.. வாழ்த்துக்கள்.." அப்படின்னு குடும்பத்தை தாங்கவே ஜனித்த திருமலை நாயக்கர் மகால் தூண்கள் .... அப்போது இருந்தே அவர்கள் மேல எதிர்பார்ப்புகள் கூட ஆரம்பித்துவிடும்.... ஆனா ஆணா பிறந்ததுக்கு தான் அவங்க செய்யற தியாகம் படற பாடு இருக்கே ... <br />
<br />
கூலா இருந்தா "பியூச்சர் பத்தி ஏதாவது அக்கறை இருக்கா பாரு ... " ன்னு மண்டகப்படி... எல்லாத்துக்கும் சீரியஸா இருந்தா "சரியான சிடுமூஞ்சி.." சின்சியரா இருந்தா "அய்யோ அது ஒரு அம்மாஞ்சி ..." ... அலப்பறை விட்டு சுத்தினா "சரியான தறுதலை.." இப்படி கேப்பே விடாம ரோட் பிளாக் பண்ணிடுவோம்...<br />
<br />
அட ஒரு காமெடிக்கு கெக்கே பிக்கேன்னு சிரிக்க முடியுதா... ஒரு கஷ்டம் ஏமாற்றம்னா வாய் விட்டு அழ முடியுதா... ஏதாவது ஸ்ட்ரெஸ்ன்னா நான்ஸ்டாப்ப்பா புலம்ப முடியுதா... . இதுல எதை செஞ்சாலும் "என்ன இது பொண்ணு மாறி அழுதுக்கிட்டு , சிரிச்சுக்கிட்டு , புலம்பிக்கிட்டு ..." ன்னு சொல்லிடும் இந்த சொ கால்டு 'ஆணாதிக்க??' சமுதாயம் ... so அப்படியே கெத்து மெயின்டெய்ன் பண்ண வேண்டி இருக்கு... <br />
<br />
கெத்தா இருந்தா "ச்செ ரொமான்டிக்கா இல்ல" ன்னு மேட்டுக்குடில வர்ற கவுண்டமணி ரேஞ்சுக்கு பாக்க வேண்டியது .... ரொம்ம்மன்டிக்கா இருந்தா "சரியான வழிசல் ..." ன்னு முத்திரை குத்த வேண்டியது ... அட அது கூட பரவால்ல எல்ல்லா ஆண்களுமே பயங்கர இன்டலிஜென்ட்டா இன்டலெக்சுவலா தில்லா இருக்க முடியுமா ... still according to our social setup such an image is an absolute necessity to gain respect as a man...<br />
<br />
குடும்பத்து விஷயங்கள்ல தலையிட்டா "என்னது இது பொண்ணு மாதிரி வம்பு ..." ங்க வேண்டியது ... எதுக்குடா வீண் வம்புல தலைய கொடுத்து மாட்டிக்கணும்னு தலையிடாம இருந்தா "வீட்ல என்ன நடக்குதுன்னு அக்கறை இருக்கா ... தன்னோட விஷயம் நடந்தா சரின்னு விட்டேத்தியா இருக்கறது .." ங்க வேண்டியது ...<br />
<br />
அட காரியர்ல கூட ப்ரொபஷனல் தான் மதிக்கப்படுது... வேற ஒரு பீல்டுல இன்ட்ரெஸ்ட் இருக்கற அதை காரியரா சூஸ் பண்ற எல்லா ஆண்களுக்குமா ஈசியா கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுது....<br />
<br />
பிரெண்ட்லியான அப்பாவா இருந்தா மொளகா அரைக்கறது ... ஸ்ட்ரிக்டான அப்பான்னா கடுகடுன்னு இருக்காருன்னு ஒதுங்கி ஓடறது.... <br />
<br />
இப்படி சொல்லிகிட்டேஏஏஏ போலாம் ... <br />
<br />
இருந்தாலும் இத்தனை சமூதாய கட்டுகளுக்குள்ள எப்பவுமே 'ஆண்' என்கிற கம்பீரத்தை வெளிக்காட்டி நம்ம குடும்பங்களை தாங்கற ஸ்டராங் பேஸ்மெண்ட்டா தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாமல் இயங்கும் ஆண்களுக்கு இன்றைய நாளில் ஒரு சல்யூட்...<br />
<br />
ஆனா ஒண்ணு "ஹேய்ய் சூப்பரா இருக்குடி" ன்னு கைல வழியற ஐஸ்கிரீமை கூட விடாம நக்கி ஒரு குச்சி ஐஸ ரசனையோட சாப்பிடத்தான் முடியுதா அவங்களால !!<br />
<br />
Very importantly... இந்த ரைட்டப் கண்டிப்பா மத்தவங்கள குறிப்பா குடும்பத்துல இருக்கறவங்க உணர்வுகளை மதிக்காம டாஸ்மாக் ட்ரக் அது இதுன்னு விழுந்து உழன்றுகிட்டு இருக்கும் ஜென்மங்களுக்கானதல்ல ....<br />
<br />
This is only for all the 'Real' Gentlemen around us !!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-5905470546533780622016-11-13T09:48:00.000-08:002016-11-13T09:48:08.775-08:00ஒரு யூத் ஸ்டோரி...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆபிஸ் பஸ்சில் ஒரு ஒரு வாரமாக எல்லாருடைய கவனமும் புதியதாய் அஷோக் பில்லரில் ஏறும் அவள் மேல்தான்.. போன வாரம் 3 நாட்கள் லீவ் எடுத்துட்டு ஊருக்கு ஒரு வேலையாய் போய்விட்டு வியாழன் அன்று பஸ்சில் ஏறியதும் எப்போதும் பின்னாடி ஸீட்டில் உட்காரும் அரவிந்த் முன் ஸீட்டில் இருந்தான் ... என்னை பார்த்து உற்சாகமாய் கையசைத்து அவன் பக்கத்து ஸீட்டை காட்டினான்... "என்னடா இங்க உட்கார்ந்து இருக்க.... " என்று நான் கேட்டதுக்கு நமட்டு சிரிப்பு சிரித்து "வெயிட் டில் அஷோக் பில்லர்" அப்படினான் ... அஷோக் பில்லரில் அவள் ஏறியதும் எனக்கு அவன் மாற்றத்தின் காரணம் சொல்லாமலேயே புரிந்து விட்டது.....<br />
<br />
"புதுசா வந்துருக்கற ஹெச் ஆர் டா.. எப்படி ..." என்று கேட்டவனை பார்த்து "சரிடா சரிடா நடத்து..." ன்னு சிரிச்சேன்.. "எங்ங்ங்க.... கொஞ்சம் திரும்பி பாரு ... பஸ் புல்லா எவனும் 3 நாளா வெளிய வேடிக்கை பாக்கறது இல்ல... மொபைல நோண்டறது இல்ல... பொதுவா ஹெச் ஆர் னா நல்லா பேசுவாங்க இல்ல... ஆனா அவ யாரையும் பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிக்கறது இல்ல.. அப்பறம் தான் தெரிஞ்சுது பைனான்ஸ் டிபார்ட்மெண்ட்ன்னு .... நான் கூட டீசெண்டா கொஞ்சம் சிரிச்சு ஒரு ஹலோன்னேன்... ரியாக்ஷனே இல்ல..... இதுல நடத்துங்கற...." என்றான்.<br />
<br />
"சரிடா ... புதிசா சேரும்போது அப்படித் தான் இருப்பாங்க .... பிரெண்ட்லியா genuine ஆ இருடா "ன்னு சொல்லிட்டு நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பிச்சேன் ....<br />
<br />
ஒரு 10 நாள் இருக்கும் .... அன்றைக்கு பஸ்சில் ஏறியவளை எதேச்சையாக பார்த்தேன் .... மெல்லியதாய் ஒரு சிரிப்பு சிரிச்சா .... நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்... ஒரு செகண்ட் பஸ்சே (ட்ரைவர் உட்பட) என்னையே பார்த்தது ...<br />
அவ்வளவுதான் அரவிந்த் ஒரு முறை முறைத்தான் ... "டேய்ய்.. என்னடா நடக்குது.... உனக்கே இது நியாயமா படுதா.... இதெல்லாம் சரி இல்ல ..." என்றவனை பார்த்து "ஹேய்ய் நான் என்ன பண்ணேன்... சிரிச்சா ஒரு கர்டெசிக்கு நானும் சிரிச்சேன்... ஏண்டா இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கீங்க.. கொஞ்சம் மெச்சூர்டா இருடா.. அதனால தான் அவ உங்களை எல்லாம் மைண்ட் பண்றதில்லை ..." என்றேன் .. "நீ பேசுவடா ... உனக்கு என்ன " என்று சொல்லிட்டு திரும்பி கொண்டவனை பார்த்து எனக்கு சிரிப்புதான் வந்தது ...<br />
<br />
இப்படியே ஒரு ஒரு மாசம் போனபோது..... ஒரு 10 நாட்கள் பிராஜெக்ட் விஷயமா பெங்களூரு போய்ட்டு அன்னைக்கு தான் பஸ்சில் வந்தேன் ... என்னை பார்த்ததும் அர்விந்த் "அப்ப்பா நல்லவனே ... உன்னால எனக்கு ஒரே ஒரு நல்லதுதான்டா நடந்தது .... நீ 10 நாளா பஸ்ல வராம இருந்தாலும் இருந்த ... அந்த அஷோக் பில்லர் 2 நாள் முன்னாடி திடீர்னு என்கிட்டே வந்து பேசினாடா....ஹாய்... எங்க உங்க பிரெண்டை ரொம்ப நாளா பாக்கமுடியலையே.... ரிசைன் பண்ணிட்டாரான்னு அக்கறையோட கேக்கறா ... இல்லனதும் ஒரு நிம்மதியோட போனா ... உனக்கு என்னடா .... மச்சம் தான் " ன்னு வயித்தெரிச்சலோட சொன்னான்..<br />
<br />
அஷோக் பில்லரில் அவள் ஏறியதும் நான் இருக்கும் ஸீட்டை தான் பார்த்தாள் .... அடுத்த செகண்ட் அவள் முகத்தில் தோன்றிய ஒரு பீலிங் சட்டென்று எனக்குள் ஒரு மணி அடித்தது....<br />
<br />
என்னை பார்த்து சிரித்துவிட்டு ஏதோ கேட்க வந்தவளை பேப்பர் படிப்பவன் போல நாசூக்காய் அவாய்ட் செய்தேன் .... முகம் வாடி உட்கார்ந்தவளை பார்க்க எனக்கே கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது ...<br />
<br />
வழக்கமாய் அஷோக் பில்லரில் அவள் இறங்கி போனதும் வடபழனியில் இறங்கும் நான், அன்றைக்கு சாயங்காலம் கிண்டியில் இறங்க போனதை ஆச்சர்யமாக அவள் பார்ப்பது தெரிந்தது...<br />
<br />
கிண்டியில் இறங்கியதும் "அப்ப்பா ... " என்று பஸ் ஸ்டாப்பில் என் மனைவியோடு காத்து கொண்டிருந்த என் ரெண்டரை வயது மகள் என்னிடம் தாவியதை அவள் ஷாக்கோட பார்த்தது தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது ....<br />
<br />
"இது என்னங்க உலக அதிசயமா ஆபிஸ் இருக்கற வீக் டேல சினிமா போறோம் ... கிண்டி வந்துருன்னு திடீர்னு 4 மணிக்கு போன் பண்ணி சொல்றீங்க ...ஒண்ணும் புரியல .." என்ற மனைவியை பார்த்து "ச்சும்மா ஒரு சர்ப்ரைஸ்" என்று சிரித்தேன்... இவளுக்கு புரியாது ஆனால் அவளுக்கு புரிந்திருக்கும்...<br />
<br />
பின்ன என்னங்க சந்தனத்தின் குணம் நிறைந்த santoor soap ன்னா பொண்ணுங்க மட்டும் தானா... நானும் சந்தனத்தின் குணம் நிறைந்த mysore sandal தாங்க !!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-87231649297112000492016-11-11T04:15:00.001-08:002016-11-11T04:15:42.878-08:00சிம்பிளா ஒரு கல்யாணம் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஊர்ல எவ்வளவோ விதமா கல்யாணங்கள் பண்ணறாங்க... 3 நாள் கல்யாணம் , 5 நாள் fair and lovely கல்யாணம், மெஹந்தி, பாராத் , ரிஸப்ஷன்னு மிக்ஸ்ட் ஸ்டைல், பணத்தை மூட்டைல வெச்சுருக்கறவங்க கப்பல்ல , பிளைட்ல, விட்டா மார்ஸ்ல கூட பண்ணறாங்க... அதுல buffet , அதுகூட ஐஸ் கிரீம் ஸ்டால் , பீடா ஸ்டால் , மெஹந்தி ஸ்டால், வளையல் ஸ்டால் , பாஸ்ட் புட் ஸ்டால் ன்னு ஒரு திருவிழா சந்தை ரேன்ஜ்க்கு பண்றாங்க.... இதெல்லாம் ஒரு சந்தோஷம்னாலும் சில சமயம் தோணும் இதுக்கு பதிலா அந்த பணத்தை அந்த பொண்ணு பேர்ல டெபாசிட் பண்ணா எவ்வளவு யூஸ்புல்லா இருக்கும்ன்னு .. இருந்தாலும் நம்ம சமூக கலாச்சார கட்டமைப்புல அதை எல்லாம் ஒரு ஆளா மாத்த முடியாது ....<br />
<br />
ஆனா கிட்டதட்ட ரெண்டு decades க்கு மேல ஒருத்தர் இந்த கல்யாணம் சம்பந்தமா எவ்வளவு புரட்சிகரமான மெஸேஜஸ் குடுத்துட்டு இருக்கார் ... அதையும் youthful ன்னு ரசிச்சு ரசிச்சு பாக்கறோம்..<br />
<br />
ஒண்ணா ரொம்ப துடுக்கா துறுதுறுன்னு இருக்கற பொண்ணு... அவளை "ஹேய்ய் நீ அழகா இல்ல... உன்னை லவ் பண்ணலை... ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமாருக்கு " ன்னு ரொமான்டிக்கா ப்ரபோஸ் பண்ணும் ஸ்மார்ட் ஹீரோ.. அவங்களுக்கு ஜஸ்ட் ஒரு கார்டன் இல்லனா ஷிபான் முகூர்த்த ஸாரி , இன்டர்வியூக்கு போற மாதிரி பீட்டர் இங்க்லேண்ட் பார்மல் முகூர்த்த பேண்ட் ஷர்ட்ல கோயில்ல ச்சும்மா கொஞ்சூண்டு அர்ச்சனைக்கு யூஸ் பண்ற அளவுல பூவை வச்சு ஆசீர்வாதம் பண்ணி (கல்யாண சாப்பாடு கூட இல்லாம) கல்யாணம் பண்ணி வைக்க நாலே நாலு பிரெண்ட்ஸ்.....<br />
<br />
இல்லேன்னா அந்த 4 பிரெண்ட்ஸ் கூட வேண்டாம்ன்னு குட்டியூண்டு டிரெயின் டிக்கெட்டை பொண்ணுக்கு மட்டும் அனுப்பி ஊருக்கு ஹோல்டாலோட வரவெச்சு கல்யாணம் பண்ணிக்கற ஹீரோ<br />
<br />
அதுவும் இல்லையா யாருமே ஆதரவு இல்லாத வாழக்கை இழந்த விதவையை ச்சும்மா ஒரு குங்குமத்தை நெத்தில வெச்சும் , மீள முடியாத நரகத்திலே சிக்கி இருக்கும் சின்ன பெண்ணை கோயில்ல கண்ணை மூடி வேண்டிட்டு இருக்கும் போது சர்ப்ரைஸா டக்குனு ஷேக் ஹாண்ட்ஸ் கொடுக்கற மாதிரி தாலி கட்டியும் கல்யாணம் பண்ணிக்கற "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை" ன்னு பயங்கர கெத்தா ஊரை காப்பாத்தற ஹீரோ....<br />
<br />
வேற யாருங்க நம்ம மணிரத்னம் சார் தான் .... எனக்கு தெரிஞ்சு கல்யாண மண்டபத்துல கல்யாணம் நடக்கற மாதிரி அவர் எடுத்த ரெண்டு படம் "இதய கோவில்", "மௌன ராகம் " தான் ... அதிலயும் இதய கோவில்ல தான் மண்டபத்தை முழுசா காட்டுவார்... மௌன ராகத்துல நாதஸ்வர சவுண்டை பேக்ரவுண்ட்ல கொடுத்துட்டு 2 நிமிட்ஸ்ல சிம்பிளா முடிச்சிருவார்...<br />
<br />
ஆனா இதைப்படிக்கற பெரியவங்க பெற்றோர்கள்லாம் "நீ சொல்ற இந்த புரட்சி கல்யாணத்துல எல்லாம் அட்லீஸ்ட் ஹீரோ ஹீரோயினோட பேரன்ட்ஸ்இ ருந்தாங்களான்னு " கேட்டு என்னை அடிக்க வராதீங்க.. நான் சொன்னது சிம்பிளா கல்யாணம் பண்ற aspect அ மட்டும் தான் ...<br />
<br />
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதை அடுத்து டீவில ஒருத்தர் "இந்த வாரம் நடக்க இருக்கும் கல்யாணங்களெல்லாம் எவ்வளவு பாதிக்கப்படும் தெரியுமா" ன்னு சொல்லிட்டு இருக்கும் போது வாஸ்தவம் தானனு யோசிச்சு சும்மா தோணினத எழுதிட்டேன்... மற்றபடி மணி சார் அவர் பையனுக்கு ராஜா முத்தையா ஹால்ல கல்யாணம் பண்ணினார்னா என்னை எதுவும் சொல்லாதீங்க.. கேக்காதீங்க ... ஏன்னா நான்தான் சொல்லிட்டேனே ... நம்ம கட்டமைப்புல இதெல்லாம் மாத்த முடியாததுன்னு... மணி சார் நீங்களும் கோவிச்சுக்காதீங்க !!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-42335429408188002162016-11-07T09:43:00.004-08:002016-11-07T09:43:49.292-08:00ஒரு குட்ட்ட்டி கதை...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கோயிலில் கூட்டத்தில் ரெஸ்ட்லெஸ் ஆக இருந்த குழந்தையிடம் "கண்ணா கொஞ்ச நேரம் சமத்தா வேண்டிக்கோயேன்... காட்க்கு தேங்க் பண்ணேன்..."<br />
<br />
ஒரு வழியா கூட்டத்தை சமாளித்து வெளிய வந்த உடனே முதல் கேள்வி "நீ என்னம்மா வேண்டிக்கிட்ட ?"<br />
<br />
என்னவோ ஆசைகளே இல்லாம, இருக்கறதுல திருப்தி அடையும் பெரிய்ய்ய செல்ப்லெஸ் மனசு இருக்கறவ நான்னு ஒரு நினைப்பு ப்ளஸ் மிதப்பு... பெரிய இவளாட்டம் "கடவுளுக்கு தெரியாதாடா நமக்கு என்ன தரணும்னு.. அம்மா எப்பவுமே எனக்குன்னு எதுவுமே கேட்க மாட்டேன்... நன்றி தான் சொல்லுவேன்.. என் குழந்தை நல்லா படிச்சி நல்ல ஆரோக்கியத்தோட லைஃப்ல நல்லா இருக்கணும் அப்படின்னு தான் வேண்டிப்பேன்.. " என்றேன் ..<br />
<br />
"ஏம்மா ஒண்ணுமே கேட்க மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு கேக்கறியே.. காட்க்கு தெரியாதா மா எனக்கும் எல்லாம் தர்றதுக்கு.... என்னையும் நல்லா பாத்துக்க .... " அப்படின்னு ஒரு பதில் வருது....<br />
<br />
சுரீர் ன்னு உறைச்சுது தெய்வத்திடம் பரிபூர்ண சரணாகதின்னா என்னன்னு .. <br />
<br />
பிரணவ மந்திரம் ஓதின குட்டி முருகன் மாதிரி தெரிஞ்சா என் குழந்தை !!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-87495761598926017422016-11-04T04:54:00.002-07:002017-09-07T22:30:20.680-07:00நண்பேன்டா!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மாவடுவால் அமைந்த நட்பு (yes you read it right... not a typo)<br />
<br />
மலேரியா, டைபாய்டு, ஜாண்டிஸ் கூட பரவால்ல ஆனா காலேஜ் ஹாஸ்டல் போன புதுசுல வந்த ஹோம் சிக் இருக்கே ஐய்யய்யயோ ... ஒரு சுபயோக சுபதினத்தில் காலேஜ் அட்மிஷன் முடிஞ்சு ஹாஸ்டல் ரூம்க்கு போய் லக்கேஜ் எல்லாம் வெச்சுட்டு இரும்பு கேட்க்கு இந்த பக்கம் நின்னுட்டு புன்னகை மன்னன் கமல் ரேஞ்சுக்கு அழுகையோட கலந்த ஒரு சிரிப்பு சிரிச்சிட்டே அப்பா அம்மா உடன்பிறப்பு தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களுக்கெல்லாம் டாட்டா சொல்லும் போது மனசை கடிக்கற அந்த கொசுனால வரும் சிக்னெஸ் ..<br />
<br />
ஒரு 10 நாள் இது வீட்ல சீவின தலைமுடின்னு அதை கலைச்சு மறுபடி சீவாம , இது வீட்ல தேய்ச்ச பல்லுன்னு அதை தேக்காம.. வெயிட் வெயிட் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துறாதீங்க இப்படி எல்லாம் இருக்க நினைச்சு பட் நம்மளை சுத்தி இருக்கற இந்த சமூக நலனை முன்னிட்டு ஒழுங்கா செஞ்சிட்டு காலேஜ் போய் அழுதிட்டு வருவேன்.. காலைல ஹாஸ்டல் பாத்ரூம் க்யூல பக்கட் போடறதுல இருந்து ஈவினிங் மெஸ்ல வாயில பிஸ்கட்ட போடற வரைக்கும் எல்லாமே பழக்கமே இல்லாத புது புது விஷயம் (நாம தான் ஈவினிங் பசில தாம்பாளத்த முழுங்கற ஆளாச்சே)....<br />
<br />
நாக்கு எல்லாம் செத்து போச்சு... தினம் காலைல இட்லியோட அதே சேம் சாம்பார் , மத்தியானம் ஒரே டைப் சாம்பார் ரசம் (ஓர்ர்ர்ரெ அயிட்டம் தான் ... மேல எடுத்தா ரசம் கீழ சாம்பார் ... Point to be noted தப்பி தவறி கூட கரண்டியை வச்சு கலந்துறக்கூடாது ... அப்பறம் இப்படி multiple ஆ இல்லாம ஒரே டிஷ் ஆயிடும் ) கூடவே ஒண்ணு காராமணி இல்லனா காலிபிளவர்... காலிபிளவர் மட்டும் டேஸ்ட் ஓகேவா இருக்கும் ஆனா அத்தனை பேருக்கும் பண்ணும்போது அதை வெந்நீர்ல கொதிக்க வெச்சு சைவமா சமைச்சுருப்பாங்களா இல்லை புழுவோட அசைவமான்னு டவுட்லயே அதுவும் தொண்டைல இறங்காது.... சாயங்காலம் காலேஜ்ல இருந்து லைன்ல மயிலம்மாவோட z கிரேட் செக்யூரிட்டில (ராகிங்கை அவாய்டு பண்ணவாம்.. மயிலம்மாக்கு 65 வயசு இருக்கும்.. நம்ம மைக்கேல் மதன காமராஜ் பாட்டி மாதிரி பல்டியெல்லாம் அடிப்பாங்களா அப்படின்னெல்லாம் எனக்கு தெரியாது ... இருந்தாலும் அவங்ககிட்ட ஏதோ ஒரு திறமை இருந்ததால அவங்கதான் பாடிகார்ட் ... But a sweet person she was... ) ஹாஸ்டல் வந்து, அதோட லாபில (பெருசா ஏர்போர்ட் லாபி ரேஞ்சுக்கு நினைச்சுக்க வேணாம் .. ஒரு பெரிய ஸ்டீல் காட் போட்டு இருக்கும் வார்டன் உட்கார்ந்து ரோல் கால் எடுக்க) இருக்கற லெட்டர்ஸ்ல நமக்கு ஏதாவது லெட்டர் இருக்கான்னு (டெயிலி யாரால தான் லெட்டர் போட முடியும்) செக் பண்ணி இல்லைனதும் ஹோம் சிக்ல தொண்டை அடைக்க சரி டீ குடிச்சு சரி பண்ணலாம்ன்னு போனா தொண்டைல டீ இறங்கும் போதே கண்ணுல தண்ணி கொட்டும் ...<br />
<br />
இப்படியே போய்ட்டு இருந்தப்போ தான் ஒரு நாள் காலேஜ்க்கு போற க்யூல என்னை மாதிரியே கண்ணீரும் கம்பலையுமா அவங்களை பார்த்தேன் ...என் ரூமுக்கு நேர் கீழ் ரூம்... ஆஹா இவங்களும் நம்ம இனம் தான் போலன்னு போய் பேச ஆரம்பிச்சேன் ... இருந்தாலும் வேற வேற ரூமாச்சே எப்படி போய் ஒட்டிக்கறது என்னை பத்தி என்ன நினைப்பாங்கன்னு தயக்கமா இருக்கும் ...<br />
<br />
ஒரு நாள் லன்ச் டைம்ல மெஸ்க்கு சேர்ந்து போறதுக்காக அவங்க ரூம்க்கு போய் இருந்தேன் .... வீட்டுல இருந்து மாவடு ஊறுகாய் கொண்டு வந்துருந்தா ஒருத்தி ... அது அந்த 10 நாள்லயே காலியாகி ஓர்ர்ர்ரெ ஒரு குட்டி மாங்காய் மட்டும் அந்த பாட்டில்ல இருந்தது ... அதை எடுத்து ஒண்ணே ஒண்ணு தானனு பாட்டிலோட தட்டுல கவுத்தா இன்னொருத்தி.... அந்த மாங்கா டேக்கா குடுத்துட்டு தட்டுல விழாம எங்கயோ தரைல போய் விழுந்தது... போகட்டும்ங்கறாங்க ரெண்டு பேரும் .. அய்யய்யயோ வீட்டுல சீவின தலைங்கறதுக்காகவே தலைய 2 நாள் சென்டிமெண்டா கலைஞ்சுராம பாத்துக்கிட்ட நானா வீட்டுல இருந்து கொண்டு வந்த மாங்காயை விடுவேன் ... ச்செ தரையில விழுந்தாத்தான் என்ன.. இவங்க வேற போனா போகட்டுங்கறாங்க ... நாம ஏதாவது சொன்னா கேவலமா நினைச்சுப்பாங்களேன்னு நினைச்சுகிட்டே அதை பாத்திட்டு நிமிரறேன் .... மூணாவதா அந்த ரூம்ல இருந்த ஒருத்தி அதையே பாத்துட்டு இருக்கா .... நான் அவள பாக்கறது தெரிஞ்சதும் என்னை பார்த்தாளே ஒரு பார்வை .. அந்த நொடி அந்த இணைபிரியாத உயிர் நட்பு எங்களுக்குள்ள பிறந்த நொடி.... நண்பேன்டா....<br />
<br />
இப்பவும் எப்போ சந்திச்சாலும் மாவடு கதைய மட்டும் மறக்காம பேசி விழுந்து விழுந்து சிரிக்கறோம் ... இன்னும் சிரிப்போம்.. <br />
<br />
ஆனா அந்த குட்டி மாவடு என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லமாட்டேனே !!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-27480203834906544212016-10-25T01:31:00.000-07:002016-10-25T01:31:12.359-07:00நான் செய்த ரசகுல்லா !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தீபாவளிக்கு ஸ்வீட் பண்ணனும் ... என்ன பண்ணலாம்னு வீட்ல கேட்டேன் ... உடனே "உனக்கு எதுக்குமா வீணா (போன) கஷ்டம் ... பேசாம வெளில வாங்கிக்கலாம்..." அப்படின்னு இம்மீடியட் ரெஸ்பான்ஸ் வருது... ஏன்னு சொல்றேன் ...<br />
<br />
போன வருஷம் தீபாவளிக்கு வித்தியாசமா ட்ரை பண்ணனும்ன்னு ரசகுல்லா பண்ணலாம்ன்னு ஏதோ ஒரு நல்ல ராகு காலத்துல முடிவு எடுத்தேன் ....<br />
<br />
உடனே போய் கூகிள்ல ரசகுல்லா ரெசிபி தேடி (நிறைய அலசி ஆராய்ஞ்சி தேடணும் இல்லனா குப்தா ஸ்வீட்ஸ் ரசகுல்லா மாதிரி வராதே) லிஸ்ட் போட்டேன் .... கிளம்பி போய் ஒரு 4 லிட்டர் (ஒரு 1 லிட்டர்ல ஆரம்பிக்க மாட்டேன் ... அவ்வளவு செல்ப் கான்பிடன்ஸ் ) புல் கிரீம் பால் , 2 கிலோ வெண்ணெய் (பின்ன பிரெஷ் நெய்யில பொரிச்சா தானே பிரமாதமா இருக்கும் ), 4 படி சர்க்கரை , 40 ஸாரி 4 எலுமிச்சம்பழம் (4 எல்லாம் தேவையே இல்ல... இருந்தாலும் ஸ்பேர்க்கு ) ரோஸ் எசென்ஸ் (ஹ்ம்ம்க்கும் அது ஒண்ணு தான் குறைச்சல் ) 1 படி மைதா மாவு, கிளீன் மஸ்லின் துணி ஒரு 4 மீட்டர் (பின்ன பால்ல லெமன பிழிஞ்சி அப்பறம் திரிஞ்சு போன பாலை மூட்டை கட்டி பிழிய வேணாமா) எல்லாம் வாங்கிட்டு வந்து உற்ச்சாகமா ஆரம்பிச்சேன் ... <br />
<br />
முதல்ல அந்த துணிய துவைச்சு (அவ்வளவு சுத்தம் ) அப்பறம் அத்தனை பாலையும் அண்டால காய்ச்சி லெமன பிழிஞ்சி துணில மூட்டை கட்டி பிழிஞ்சிட்டு வெளில பிளேட்ல ஸ்ப்ரெட் பண்ணா ஆஹா என்ன ஒரு லுக் அண்ட் பீல் ... அப்பறம் அதுல மைதா மாவை சேர்த்து நல்லா தேய்ச்சா சூப்பர் மாவு ரெடி ஆச்சு ... போடு உடனே இலுப்ப சட்டிய ஊத்து அதுல 1 லிட்டர் நெய்ய .... நல்லா காம்பஸ் வச்சு ரவுண்டு போட்டு அந்த ரௌண்ட்ல மாவை உருட்டி நெய்யில பொறிச்சி , பேரலெல்லா இன்னொரு பர்னர்ல பண்ண சர்க்கரை பாகுல அதை போட்டு in addition ஒரு 2 சொட்டு ரோஸ் எசென்ஸையும் அதுல விட்டு, ஒரு 1 மணி நேரம் கழிச்சு அதை பிரிட்ஜல வச்சேன்... (இத்தனையும் பண்ணப்போ ஒரு பீஸ் கூட டேஸ்ட் பாக்கலை ... wanted to taste it chilled )...அப்பறம் 1 மணி நேரம் கழிச்சு அதை எடுத்து கிண்ணத்துல போட்டு ஆர்வமா ஒரு ஸ்பூனால மெதுதுவா (ரொம்ம்ம்ம்ப சாப்ட் இல்லயா அதனால ) கட் பண்ண ட்ரை பண்ணா அந்த உருண்டை எகிறி போய் டீவிய உடைச்சிருச்சு.... என் மனசும் அப்படியே சுக்கு நூறா உடைஞ்சிருச்சு.....<br />
<br />
என்னடா ப்ராபளம் நம்ம டச் எதுவும் குடுக்காம ஒழுங்கா ரெசிபியை தானே பாலோ பண்ணோம்ன்னு அனலைஸ் பண்ணா "ஆஆஆஆ பிழிஞ்சு எடுத்த பன்னீர்ல ஒரு டம்பளர் இல்ல ஜஸ்ட் பைண்டிங்க்காக ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவு தான் போடணும் யாராவது சொல்லக் கூடாதா ..."<br />
<br />
அப்பறம் வேற என்ன பண்றது .... எல்லாரும் தீபாவளிக்கு அணுகுண்டு வெடிப்பாங்க... நாங்க ரசகுண்டை தூக்கி போட்டு தூக்கி போட்டு வெடிச்சோம் (no pollution green deepavali) .... அப்பவே நம்ம மோடிஜி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பத்தி சொல்லி இருந்தா அவருக்காவது பார்சல் அனுப்பி இருப்பேன் ... It is absolutely a non nuclear weapon you know !!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-86088244384556884162016-10-16T22:50:00.003-07:002016-10-16T22:50:34.554-07:00ஹரித்வார் ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எங்கே போனாலும் அழுக்கு துணி மூட்டையை திருப்பி வீட்டிற்கு கொண்டு வருவது எனக்கு ஒத்துவராத விஷயம் .... அந்த ஊர்ல துணி காயற அளவு வெயில்னா நானே வாஷ் பண்ணிடுவேன்... இல்லனா தங்கி இருக்கும் ஹோட்டல்ல லாண்ட்ரி கொடுத்துருவேன்... ஹரித்வார்ல வெயிலும் இல்ல லாண்ட்ரியும் வெளிய தான் கொடுக்கணும்னு ஹோட்டல்ல சொல்லிட்டாங்க .... வெளிய தேடினா நிறைய இருக்குன்னு ஏதோ ஒண்ணுல கொடுத்துட்டு வந்துட்டார்.... <br />
<br />
சாயங்காலம் திருப்பி வாங்கப்போனவர் "காலைல கடைல இருந்த பையன் இல்ல... ஆனா அந்த பில்டிங்ல இருந்த இன்னொரு பையன் உங்க பண்டல் வெளியவே இருந்தா எடுத்துக்கோங்க அப்பறம் வந்து பணம் கொடுங்கன்னு சொன்னான் ..வெளியவே இருந்தது.. அதனால கொண்டு வந்துட்டேன்... திரும்ப 8 மணிக்கு போகணும்" அப்படினாரு .... சரி நாமளும் கம்பெனிக்கு போலாமேன்னு போனா திரும்ப கடைல யாருமே இல்ல... சுத்தி முத்தி பாத்திட்டு இருந்தப்போ கொஞ்ச தூரத்துல பைக் மேல நீட்டா அயர்ன் பண்ண பேண்ட், டக் இன் பண்ண புல் ஸ்லீவ் ன்னு ரெமண்ட்ஸ் மாடல் மாறி உட்கார்ந்து இருந்த ஒரு பையன் வேகமா வந்தான்... எங்கடா துணி பண்டல்ல காணோம் பே பண்ணாம எடுத்திட்டு போய்ட்டோம்ன்னு நினைச்சானோ என்னவோ முழிச்சான் .... உடனே இவர் "நாங்க பணம் கொடுக்காம போய்டுவோம்ன்னு நினைச்சிட்டியா ... மேல இருந்த பையன் சொன்னதால தான் எடுத்திட்டு போனேன்" னு அவன்கிட்ட நடந்ததை சொல்லி பணத்தை தந்தார்.... முதல்ல முழிச்சவன் அப்பறம் சிரிச்சிகிட்டே இட்ஸ் ஓகே சார் அப்படின்னு பணத்தை வாங்கிக்கிட்டான்.... யெஸ் அவன்தான் லாண்டரிவாலா வாம்... அப்பறம் சொல்றான் "மேரி கவர்ன்மென்ட் ஜாப் ஹே சாப்... யே லாண்டரி தோ பார்ட் டைம்.. சுபே அவுர் ஷாம் கர்தா ஹூன்" .... அட government job ல இருக்கானாம்.... ஆபீஸ் க்கு போறதுக்கு முன்னாடியும் வந்த அப்பறமும் லாண்டரில வேலை பண்ணுவானாம்.....<br />
<br />
துணிய வாங்கிட்டு இவரோட அங்க இருந்த ஒரு டீ ஷாப் போனா அங்க காலைல இருந்த டீ மாஸ்டர் இல்ல (காலைலயும் அங்க தான் டீ குடிச்சோம் ) .. இப்போ புல் ஸ்லீவ மடக்கி விட்டுட்டு பராத்தா தேச்சிட்டு இருந்தான் இன்னொரு பீட்டர் இங்க்லாண்ட் மாடல் ... உடனே என் வாய் சும்மா இல்லாம இது பார்ட் டைம் ஜாப்பா ன்னு கேட்டுட்டேன்... ஆமாங்கறான் ....<br />
<br />
அசந்து போய் ஹோட்டலுக்கு வந்து "நாளைக்கு மார்னிங் 6 o கிளாக் டிரெயின்... செக்கவுட் பண்றோம்... காலைல 5 மணிக்கு இங்க ஆட்டோலாம் கிடைக்குமா....இல்ல இப்போவே ஓலா புக் பண்ணிக்கவா" (ஓலா ஹரித்வார்லயும் இருக்கு ... infact அங்க இருந்து ரிஷிகேஷ்க்கு ஸ்பெஷல் பேக்கேஜ் இருக்கு olaல) அப்படின்னு இவர் கேட்டா ஹோட்டல் மானேஜர் சொல்றார் "நீங்க புக் லாம் பண்ண வேண்டாம் .... புல் டைம் ஆட்டோ ஓட்டறவன் காலைல வரமாட்டான்.... ஆனா டே டைம்ல ஆபிஸ் போய்ட்டு நைட் டைம்ல ஆட்டோ ஓட்டறவங்க நிறைய பேர் இருக்காங்க .... காலைல 4 மணில இருந்தே நிறைய வண்டி கிடைக்கும் " ன்னு ....<br />
<br />
வாட் அ ஊருய்யா... அதான் பேரு ஹரித்வார் போல...<br />
உழைப்பாளிகள் !!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-83892918208276336792016-10-15T13:37:00.002-07:002016-10-15T13:37:44.437-07:00முகவரி...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரொம்ம்ம்ம்ப நாளுக்கு அப்பறம் இன்னைக்கு டீவில ஒரு படம் பார்க்கிறேன் ... அதுவும் 'முகவரி' படம்ங்கறதால.... சில விஷயங்கள் நிறைய நினைவுகளை அதுக்குள்ள புதைச்சு வச்சிருக்கும்... இது ஒரு அற்புதமான படம் மட்டும் இல்ல எனக்கு இது நிறைய நினைவுகளை பொதிஞ்சு வெச்சுருக்கும் படம் ....<br />
<br />
காலேஜ் கட் அடிச்சிட்டு பார்த்த முதலும் கடைசியுமான படம் (காலேஜ் கட் அடிச்ச அனுபவமும் வேணும்னு நாங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ப்ராஜெக்ட் டைம்ல ஒரு மத்தியானம் போனது) .... படத்துல விரல்ல பிரஸ் டர்ன் புல்ன்னு ப்ரபோசலே செம்ம ரொமான்டிக்கா , போன்ல டயலாகே இல்லாமல் ம்யூசிக்கலா, அழகான அன்பே உருவான ஹீரோ பாமிலி கலகலப்பான ஹீரோயின் பாமிலின்னு கவிதையா, கடைசில யதார்த்தம்னாலும் பிரிவுல ன்னு முடிஞ்ச படத்தை பார்த்துட்டு ஒரே பீலிங்க்ல வெளிய வந்தா வெளிய ட்ரிஸ்லிங்... அந்த gloomy eveningla எமோஷனல் ஆகி ரோட்ல நடக்கும் போதே என் அருமை தோழி தோள்ல சாஞ்சி கண்ணீர் விட்டது...<br />
அன்னைக்கு என்னை பார்க்க என் ஹாஸ்டலுக்கு அப்பா வர என் ரூம் மேட் நான் படம் பார்க்க போனது தெரியாமல் ஏதோ ப்ராஜெக்ட் வொர்க்காக நான் லேப்ல இருக்கறதா சொல்ல அப்பா சரி படிக்கற புள்ளைய தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு திரும்ப கிளம்பியது... அப்படி கிளம்பிய அப்பாவை நான் படம் பார்த்திட்டு திரும்பி வரும்போது ரோட்ல கீழ பராக்கு பார்த்துக்கிட்டே இந்த மாதிரி ஒரு பேண்ட் ஒரு நடை கைல ஒரு பேகை எங்கயோ பார்த்து இருக்கோமேன்னு நிமிர்ந்து பார்த்து நீ ஏதோ லேப்ல ப்ராஜெக்ட் வொர்க் பண்ணிட்டு இருந்த போல இருக்கேன்னு நமட்டு சிரிப்போட கேட்ட அப்பாவை பார்த்து அப்பான்னு செல்லமா சிணுங்கிகிட்டே வழிஞ்சது... அவரோட ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டது.... அப்பறம் ரூம்க்கு வந்து என்னதான் யதார்த்தம்னாலும் அன்பான குடும்பத்துக்காக லட்சியத்தை ஒத்தி போடற ஹீரோ, அவ்வளவு சப்போர்ட்டிவா, அண்டர்ஸ்டாண்டிங் ஆன செல்ப்லெஸ் ஹீரோயின மட்டும் எப்படி லட்சியத்துக்காக விட்டுடலாம் பாவம் தான அவ அப்படின்னு ஆர்க்யூ பண்ணது...<br />
<br />
அந்த ஒரு நாளை இத்தனை வருடங்கள் கழித்து இன்று மீண்டும் வாழ்ந்து விட்டேன்... முகவரி பிரிண்ட் கொஞ்சம் மங்கலாய் இருந்தது ... அந்த படத்தின் முடிவை பற்றிய என் கருத்து மட்டும் இன்னும் அப்படியே... Perhaps that is what is wonderful about this movie !!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-47456671183488401162016-10-13T18:21:00.001-07:002016-10-13T18:21:25.772-07:00நானும் என் ஹிந்தியும் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஹிந்திங்கறதே எனக்கு கொஞ்சம் தகராறு .... பின்ன நான் என்ன பிரவீன் ராஷ்ட்ரபாஷாலாம் படிச்சேனா என்ன ... ஏதோ நாலாங்கிளாஸ் அஞ்சாங்கிளாஸ்ல சுத்தமா ஹிந்தி தெரியாம அதுல க்ராமர் மட்டும் படிச்சிட்டு அத வெச்சிட்டே அலப்பறை விட்டுட்டு சுத்திட்டு இருந்தேன் ..... என்னோட அறியாமை எப்போ வெளிய வந்துதுன்னா எங்க அபார்ட்மெண்ட்ல ஒரு ஹிந்தி செக்யூரிட்டி வந்தப்போ தான் .... அதிலயும் அபார்ட்மெண்ட் மெயின்டெனன்ஸ் இன்சார்ஜ் எங்க பிளாட் டர்ன் போது .... இவர் இருக்கும் போது தப்பிச்சிருவேன் (இவருக்கும் அவ்வளவெல்லாம் ஹிந்தி வராது பட் இவர் இருக்கும் போது டீலிங்லாம் பார்த்துப்பார் சொ மீ எஸ்கேப் )... இவர் ஆபீஸ் போன டைம்ல ஏதாவது சொல்ல வேண்டி வந்தா மாட்டுவேன் or rather அவன் எங்கிட்ட மாட்டுவான்.... நான் என்ன சொல்றேன்னு புரியறத்துக்கே அவனுக்கு அரை மணி நேரம் ஆகும்... அதுக்காக அவன் சொல்றதெல்லாம் எனக்கு புரியாதுன்னு நினைச்சுக்க வேண்டாம் ... பேசத்தான் தகராறே ஒழிய இந்த ஷாரூக்கின் பாஜிகர் , அனில் கபூரோட கிஷன் கன்னையா, சல்மான் கானோட மேனே பியார் கியா முக்கியமா ராமானந்த சாகர் எடுத்த ராமாயணம் எல்லாம் பார்த்து ஹிந்தி புரியறதுல எனக்கு ஒண்ணும் கஷ்டமே இல்ல.. செக்யூரிட்டிக்கு எனக்கு பேசத்தெரியாம புரியறது மட்டும் ஆச்சர்யமா இருக்கும் போல ... சில சமயம் நான் பேசற ஹிந்திய கேட்டுட்டு அடக்க முடியாம நக்கலா சிரிப்பான்...<br />
<br />
இது ஒரு பக்கம்னா பொண்ணுக்கு பேசிக் ஹிந்தி லெட்டர்ஸ் சொல்லித்தரேன் பேர்வழின்னு ஹிந்தில எ ஏ தான் ஐ இல்லன்னு சொல்லிட்டேன்.... ஒரு 6 மாசம் நான் பிராக்டீஸ் கொடுத்து அப்பறம் அவ எதிர்காலத்தை நினைச்சு ஹிந்தி கிளாசில சேர்த்துட்டேன்... ஹிந்தி கிளாசில சேர்ந்த புதுசுல அவங்க டீச்சர் எ ஐ ன்னு சொல்லித்தராங்க ... இவ "Miss my mother has told there is no ஐ in hindi... this is ஏ..." அப்படின்னு அவங்களுக்கே சொல்லித்தரா... முதல் நாளாச்சேன்னு வெளிய வெயிட் பண்ணிட்டு இருந்த நான் அவ டீச்சரை பாக்காமலேயே நழுவிட்டேன்... பின்ன மானம் போச்சே..<br />
<br />
இப்படி இருக்க இந்த ஹிந்திய நம்பி நாங்க கிளம்பி வாரணாசி ஹரிதுவார்ன்னு தைரியமா போனோம்... அது என்னவோ என்ன மாயமோ தெரில.. அங்க போய் சுத்தி ஒரே இந்தி மயம்ன உடனே திருவிளையாடல்ல விறகு வெட்டி ங்கீயேன்னு ஆரம்பிச்சு திடீர்ன்னு "பாட்டும் நானே ..." ன்னு பொளந்து கட்டற மாதிரி அங்க போனவுடனே எந்த காலத்துலயோ நான் படிச்ச ஹிந்தி கங்கா பிரவாகம் மாதிரி அப்படியே பீறிட்டு வருது ... ஹிஹி... விடுவேனா எப்பவும் ஒழுங்கா இவர் பின்னாடி போறவ ஏதாவது வழி கேக்கணும்னாலோ இல்லை விலை கேக்கணும்னாலோ "ஹரே பதிஜி ஆப் டைரியேனா ...மெய்ன் பூச்க்கே பதாத்திஹூன் ..." அப்படின்னு கிளாசில முதல் பெஞ்ச் ஸ்டுடன்ட் மாதிரி பாஞ்சிட்டு போனேன் ... ஏற்கனவே "அம்மா சொன்னா ... அம்மா சொல்லுவா... " ன்னு என் புராணம் பாடற பொண்ணு (மத்தவங்க கிட்ட மட்டும் தான் ... எங்கிட்ட பேசும்போது இல்ல ) கேக்கவா வேணும் .... அப்படியே என்னோட ஹிந்திய கேட்டு "அம்மா சூப்பரா பேசற மா " அப்படின்னு அசந்துட்டா ... எனக்கு ஒரே பெருமை தாங்கல ...<br />
<br />
நிற்க ஹரித்வார்ல காலைல 6.30 மணிக்கு கங்கால ஸ்நானம் பண்ண சுறுசுறுப்பா கிளம்பினோம்... நிறைய இடத்தில குளிக்கறாங்க... நாங்களும் ஏதோ ஒரு படித்துறைக்கு போனோம் ... பட் மெயின் படித்துறை (ஹரி கி பவுரி ன்னு அந்த இடத்தை சொல்றாங்க ... ) எங்க இருக்குன்னு யாரையாவது கேக்கணும்னு இவர் சொல்லிட்டு இருக்கார்.. நான் உடனே "நான் கேக்கறேன்... நானு நானு ..." ன்னு அங்க இருந்த ஒருத்தர் கிட்ட "பையா.... ஹமே கங்கா சே (நாந்தான் சொன்னேனே அரைகுறை க்ராமர் ) பாத் கர்னா ஹே .. கைஸே ஜானா ஹே ..." ன்னு கேக்கறேன் .... அந்த ஆளு உடனே "ஹரே பாத் கரியே தோ ... ஹே ஹமாரி கங்கா மைய்யா ஹே ... ஆப் மன் கோல் கே ஜித்னே சாஹியே உத்னே பாத் கரியே ..." அப்டிங்கறாரு .... உடனே அவர் கூட இருந்த வைப் சிரிக்கறாங்க.... என் அருமை கணவர் என்ன பாத்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்... நான் bath ன்னு இங்கிலிஷ்ல கேட்டா அவர் ஹிந்தில பாத் (பேசறது) ன்னு நினைச்சுக்கிட்டு எங்க வேணா மனசு விட்டு பேசுங்கன்னு சொல்றார்.... இதுக்கு மேல ஊருக்கு திரும்ப வரைக்கும் நான் ஹிந்தில பேசி இருப்பேனா என்ன !!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-20357208649091417942016-10-09T11:08:00.000-07:002016-10-09T11:08:11.635-07:00வாரணாசி !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வாரணாசிக்கு போய் புண்ணியம் சேர்த்துக்கலாம்னு பிளான் பண்ணி அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ணும் போதே டீவில பாக்கற பக்தி மணம் கமழும் கங்கா நதியின் படித்துறைகள் (வாரணாசியில் அதை காட் ன்னு சொல்றாங்க பொருள் விளக்க உபயம் அங்க இருக்கற boatman), ஒளிமயமான கங்கா ஆரத்தி, பக்திமயமான காவியுடை ஸ்வாமிகள் அப்பறம் இது எதுக்குமே சம்மந்தம் இல்லாம நம்ம ராஞ்சனா இந்தி படம் அதுல வர்ற காசி தெருக்கள், கொஞ்சமே கொஞ்சம் மனசு ஓரத்துல காசிக்கு போற அளவு வயசாயிடுச்சான்னு ஒரு பீலிங்ன்னு ஒரு மாதிரி கலவையா வாரணாசி ஏர்போர்ட் போய் இறங்கியாச்சு...<br />
<br />
அங்க இருந்து வாரணாசி டௌன்க்கு கார்ல போகும்போது (கிட்டத்தட்ட 25 kms) அந்த வழியெல்லாம் பார்த்தா மனசுல நினைச்சு இருந்த கலகல காசியான்னு ஸ்லைட்டா டவுட் வந்திருச்சு... அவ்வளவு காலி ரோட் ... அப்பறம் டௌன்க்குள்ள நுழைஞ்ச உடனே டவுட் கிளியர் என்ன கலகல காசி இல்ல கசகச காசி.... இங்க ரோட்டில வண்டி ஒட்டாம நடக்கறவங்களுக்கு நடுவுல ஓட்டறாங்க .. டிராபிக் ரூல்ஸ்னா ஸ்பெல்லிங் கூட தெரியாதுன்னு தோணுது.... நான் நினைச்ச மாதிரி ஒரே மணம் கமழுது ஆனா பக்தி மணம் இல்ல பான்பராக் மணம்...<br />
<br />
நம்ம காசி தலைவர் ரிஷப வாகனன் தான் ஆனா அதுக்காக காசி நகரத் தெருவில் எல்லாம் 4 அடிக்கு ஒரு ரிஷபர்.. அந்த இர்ரெகுலர் அட்ராஷியஸ் ட்ராபிக்கு நடுவிலும் என்னவோ மராத்தான் ஓடும் ரிஷபர்கள் (வேற எங்கயும் இவ்வளவு வேகமா ஓடற, படித்துறையில் படி ஏறும் மாடுகளை நான் பார்த்ததில்லை.... அப்படி எங்க வேகமா போகுமோ... சிவபெருமானை பார்க்க அதுகள் கைலாசம் போகுமோ இல்லயோ ரோட்டில நடக்கும் போது நாம கொஞ்சம் கவனமா இல்லனா நாம கண்டிப்பா சாணி மேல தான் லேண்ட் ஆவோம்ன்னு சொல்ல வந்தேன் வேற ஒண்ணும் இல்ல .. ம்ம்ம் )<br />
<br />
கோவில் போற வழியெல்லாம் ஒரே பண்டிட்ஸ் அஸிஸ்டண்ட்ஸ் மயம்.... பண்டிட்ஸ் அங்க அங்க உட்கார்ந்து ஏதோ பிரார்த்தனை சங்கல்பம்ன்னு பண்றாங்க ... பக்கத்துல ஒரு பெரிய துணிக்கு அடியில ஒன்லி 500 ரூபாய் நோட்ஸ் (this is not to hurt any body's religious beliefs all i meant is the commercialisation behind all rituals)...<br />
கோயில்ல நாமளே காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் பண்ணலாம்.... இதுவரைக்கும் அது மாதிரி இல்லாம இங்க அபிஷேகம் பண்ணப்போ இதுதான காசியின் மஹிமைன்னு தோணிச்சு...<br />
<br />
நாங்க தங்கி இருந்த இடத்துல கங்கால எதிர் கரையில கிளீனா இருக்கும் பட் அங்க குளிச்சா புண்ணியம் இல்ல கோவில் இருக்கற பக்கம் தான் புண்ணியம்ன்னு சொன்னாங்க ...நேரா பரவசத்தோடு கங்கால புண்ணிய ஸ்நானம் பண்ண எல்லாம் ரெடியா கங்கா மாதாவை பார்க்க போனோம் .... போய் போட்ல காலை வெச்சிட்டு நிமிர்ந்தா போட் பக்கத்தில ஒரு செத்து போன கன்னுக்குட்டி மிதக்குது.... அப்பவே என்னமோ மாறி ஆய்டுச்சு .... அப்பறம் boatman ஒவ்வொரு காட் உம் என்ன என்னன்னு சொல்லி கூட்டிட்டு போனார் .... அதுல ரெண்டு காட்ல கடைசி மரியாதைக்கு நிறைய பேர் (?) படிக்கட்ல காத்திருந்ததை பார்க்க மனசெல்லாம் ஒரே morbid பீலிங்.... ஆனா தேங்க்ஸ் டு கங்கா மா ஆரத்தி கொஞ்சம் மூட் மாறிச்சு... ஸ்டில் அதுவரை நேரில் இல்லாம டிவில கங்கை கரையில் கோவிலை பார்த்த போது இருந்த லேசான பீலிங் இல்லாம கனமா தான் இருந்தது ... அதை விட புண்ணியமே உருவான பவித்ரமான கங்கா மா இப்படி நம்ம மன அழுக்குகளை மட்டும் இல்லாம எல்லாத்தையும் சுமந்து கலங்கி ஓடறதை பார்க்க கஷ்டமா இருந்த்து ... ஒரு புண்ணிய ஸ்தலத்துல இந்த மாதிரி இருப்பதெல்லாம் ஒரு பக்கம் சகஜம்ன்னு இருந்தாலும் நம்ம ஆழ்ந்த நம்பிக்கைகளை தாங்கிய இந்த ஸ்தலத்தில் புண்ணியம் மட்டும் சேர்க்க நினைக்காமல் தூய்மையா வெச்சுக்கறதும் நம்ம கடமைதானே ன்னு இங்க வர்ற ஒவ்வொருத்தருக்கும் தோணும்னு தோணுது ....<br />
<br />
ஆனா இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ... போட்ல திருப்பி வரும்போது அந்த boatman "இது ராமர் சீதையை குகன் போட்ல கூட்டிட்டு வரும்போது அவர்களை சிவ பார்வதி தர்சனம் பண்ணிய ஸ்தலம்.... அதனால குகன் வம்சத்துல வந்த boatman அவங்க கையால உங்களுக்கு கங்கா ஜலத்தை தெளிச்சா உங்களுக்கு புண்ணியம் (????!!!) ... குகனுக்கு உங்களால முடிஞ்ச தக்ஷிணை குடுங்க...." அப்படின்னு சொல்லி அவரோட அசிஸ்டண்ட் ஒரு பையனை பார்க்க , அவன் போட்ல இருந்து எட்டி கீழ ஓடிட்டு இருந்த கங்கா நீரை கைல எடுத்து எங்க மேல தெளிச்சு பாவத்தை போக்கினதை மட்டும் என்னவோ என்னால ஜீரணச்சிக்கவே முடில ...<br />
அவன் வாய் நிறைய பான் !!!<br />
<br />
Note:<br />
With due respects to all our deep beliefs this is written just out of my thoughts on how our beliefs are being used for day to day living and earning.... It is not to hurt anyone's beliefs 🙏</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-74306677643530182842016-10-07T10:26:00.000-07:002016-10-07T10:26:52.111-07:00வாட் அ நவராத்திரி தட் வாஸ் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எனக்கு நினைவு தெரிந்த நவராத்திரிகளில் "எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் மாமி ... வெத்தலை பாக்கு வாங்கிக்க வாங்கோ ..." அப்படின்னு குங்கும சிமிழை நீட்டி சிமிழ் மாதிரி இருக்கற குட்டி வாயால கூப்பிடும் குழந்தைகள் (ஆனா அப்போ மட்டும் அதுகளுக்கு நீளமா தலை முடி இருக்கும் எல்லாம் சவுரி உபயம் .... அதுல ராக்கொடிய வச்சு தாழம்பூ தெச்சுன்னு பண்றதுக்கு அதுகளுக்கு ரசனையான பாட்டிகள் இருப்பாங்க ...)<br />
<br />
"அடடே குழந்தை என்ன சமத்தா கூப்பிடறது ..." அப்படின்னு மெச்சிக்கிட்டே "மாலுக்குட்டி எங்க அழகா ஒரு பாட்டு பாடேன் " தவறாம சொல்லும் மாமிகள் (அங்க கூடத்துலே பார்த்தா பெருசா விரிச்சு இருக்கும் ஜமக்காளம் மேல ஆல்ரெடி ஜுகல்பந்தி பண்ண தோதா 7 8 பாவாடை சட்டை சவுரிகள் பலமா கச்சேரியை ஆரம்பிச்சிருக்கும் )...<br />
<br />
அத்தனை டிக்கட்டும் வெட்கப்படாம சுருதி சுத்தமா (?!!!) பாடறதையும் பொறுமையா கேட்கும் மாமி வீட்டு மாமாக்கள் , தாத்தாக்கள்...<br />
<br />
கொலு கடைசீ படிக்கட்டுல வெச்சிருக்கற குட்டியூண்டு பீங்கான் டீ கப் செட் , மர சோப்பு (அதோட காலி ஒலை பெட்டியும் தவறாம அது பக்கத்துலயே இருக்கும்) , மாக்கல் செட் (அதுல மாத்திரை சைஸ்ல பணியாரம் செய்ய இருக்கும் பணியார தட்டு, இட்டிலி செய்ய காலி மாத்திரை ஸ்ட்ரிப் தவறாம இருக்கும்) , துக்கினியூண்டு பிரிட்ஜ், பீரோ, ஆங் மிக்ஸி (பிளாஸ்டிக்ல ) இது எல்லாத்தையும் நைஸா போய் போய் தொட்டு பார்க்கும் பாவாடை அக்காக்களோட வந்த வாண்டு நிஜார்கள் பிராக் பாப்பாக்கள் ....<br />
<br />
இது எல்லாத்தயும் விட கொடுக்கும் தாம்பூலத்துல வெத்தலை பாக்கு பழம் இதோட ஒரு பேப்பர் பொட்டலம்... அந்த பொட்டலத்துல இருக்கும் சுண்டலை ஆசை ஆசையாக, பொட்டுக்கடலை மாவை பப் பப் ன்னு அள்ளி சாப்பிடும் குழந்தைகள் ....<br />
<br />
வாட் அ நவராத்திரி தட் வாஸ் .... I want a time machine please !!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-9490751339112531162016-09-29T10:05:00.000-07:002016-09-29T10:05:47.663-07:00சாப்பிடுவதும் ஒரு கலைதான் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சமைப்பது ஒரு கலைனா (நான் சமைக்கறத சொல்லல... இன் ஜெனரல்) ரசனையோடு சாப்பிடுவதும் ஒரு கலைதான்... சமைப்பதில் எக்ஸ்பர்ட்டோ இல்லயோ முன்னொரு காலத்துல நான் சாப்பிடுவதில் பயங்கர எக்ஸ்பர்ட்...<br />
<br />
ஸ்கூல்ல இருந்து வரும்போதே இன்னைக்கு என்ன மெனுன்னே யோசிச்சிட்டு வர்ற ஆள் ... எங்களுக்கு பாட்டு சொல்லித்தர பாட்டு மாமி பாவம் ஹால்ல வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க .... "மாமி ரொம்ம்ப பசிக்கறது ... ஒரு டூ நிமிட்ஸ் பிளீஸ்..." ன்னு சொல்லி அசுர வேகத்துல ஒரு தாம்பாளம் நிறைய இடியாப்பத்தை உள்ளே தள்ளுவேன் (ஒரு படத்துல நடு ராத்திரி ராதிகா "மாமா இருந்த கொஞ்சுண்டு மாவுல இட்லி பண்ணிருக்கேன் ... எழுந்துருங்க மாமா " அப்படின்னு ஒரு தாம்பாளத்த ரஜினியை எழுப்பி காட்டுவாளே அதே தாம்பாளம் தான்).... தோசை , இட்லி எல்லாம் டஜன் கணக்கு தான் ... பூரி கேக்கவே வேணாம் "என்னடி ஹோட்டல் சர்வர் நிறைய பேருக்கு அடுக்கிட்டு வரத நீ உன் ஒருத்தி பிளேட்ல அடுக்கிட்டு வர்ற..." அப்படின்னு என் உடன்பிறப்பு கேலி பண்ணாலும் அசராம ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டவ...<br />
<br />
காலேஜ் ஹாஸ்டல் ... இருந்தாலும் சாயங்காலம் தாம்பாளத்தை முழுங்கிய வயறு சும்மா இருக்குமா... முதல் வருஷம் பல்லை கடிச்சிட்டு ஓட்டிட்டேன் (ஏன்னா வெளிய நாட் அல்லோவ்ட் ... இல்லனா ஆரம்பிச்சுருக்க மாட்டேனா ).... அடுத்த வருஷம் பாத்தேன் ... முதல்ல தனியா ஹோட்டல் போக தயக்கமா இருந்தது .... அப்பறம் கவலையே படாம தனியா போக ஆரம்பிச்சேன் ... அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது நம்ம நட்புக்களும் நம்மள மாதிரித்தான்னு... கோவை சாய்பாபா காலனி அன்னபூர்ணால என் சைக்கிளை பார்த்தாலே வரிசையா ஒரு சாம்பார் வடை , மசால் தோசை அண்ட் பில்டர் காஃபி டேபிளுக்கு வந்துரும்... அங்க போய் 15 வருஷமாச்சு.... பட் இப்போ போனாலும் மறக்காம அதே ஐட்டம்ஸ் டேபிளுக்கு வந்துரும்னு நினைக்கறேன் அந்த அளவு ரெகுலர் ஈட்டர் ஐ மீன் விசிட்டர் ஹிஹி...<br />
<br />
இன்னொரு முக்கியமான விஷயம் என்னதான் வித விதமா சமைச்சாலும் ஒரு ப்ராப்பர் காம்பினேஷன் இல்லனா ரசிச்சு சாப்பிட முடியுமா .... பார் எக்ஸாம்பில் டொமட்டோ ரைஸ் அண்ட் புடலங்கா கூட்டு ன்னா எப்படி இருக்கும் .... சொ சாப்பிடறதையும் அழகான காம்பினேஷன்ல சாப்பிடறது ஒரு ரசனை.... இது வரைக்கும் என் மனதில் நீங்கா இடம் பெற்ற நான் கற்ற கேட்ட பார்த்த படித்த சில எவர்க்ரீன் காம்பினேஷன்ஸும் இருக்கு...<br />
<br />
பாலிகா அங்கிள் கற்றுத் தந்த சூடான போளியை அதுக்கு மேலே நல்லா ஒரு குழிக்கரண்டி நெய் (ஒரு போளிக்கு தான் ஒரு கரண்டி) ஊத்தி சாப்பிடுவது.... என் கசின் (அத்தை பொண்ணு) சூப்பரா இருக்கும்ன்னு சொல்லிக் கேட்ட மழை நாட்களில் நல்ல சூடான ரசத்துக்கு எலுமிச்சம்பழ ஊறுகாய் (அவ ஒரு ஸ்பூன் ஊறுகாய் ன்னு தான் சொன்னா நான் என் நாக்குக்கு தகுந்தா மாறி ஒரு பாட்டில் ன்னு மாத்திக்கிட்டேன்)... வெளிய டிராவல் பண்ணும் போது என் நாக்கை நாற்பது முழம் வளர்த்த அம்மா தந்த நல்லா மிளகாய்ப்பொடி தடவிய இட்லி (கவனிக்கவும் மிளகாய்ப் பொடிக்கு தொட்டுக்க இட்லி என்ற ப்ரபோஷன் நாட் அதர்வேய்ஸ்), சப்பாத்தி வித் தக்காளி தொக்கு (இப்போ நினைத்தாலும் ஜலம் வர்றது கண்ணுல இல்ல நாக்குல).. 1980's இல் ஏதோ ஒரு மாதத்தில் வந்த மங்கையர் மலர் புக்கில், டயட்டிங் (??) பற்றிய ஒரு காமெடி கதையில் படித்த ஜாங்கிரிய சூடா பால் ஊத்தி சாப்பிடணும், குலாப்ஜாமூனை நல்லா ஐஸ்க்ரீம் சேர்த்து சாப்பிடணும்... அந்த கதைய படிச்சதிலிருந்து இப்போ வரைக்கும் குலாப்ஜாமூனும் ஐஸ்க்ரீமும் ஒண்ணா கிடைச்சா நான் மிஸ் பண்ணதே இல்ல வாட் அ டிவைன் டேஸ்ட் .... என் நாக்கு நல்லா கேட்ட பட்டர் நான் வித் மலாய் கோப்தா (கவனிக்கவும் பட்டர்ர்ர்ர் நான்), எந்த சூப்பா இருந்தாலும் அது மேல ஒரு 4 ஸ்பூன் பட்டர்ர்ர்ர், காரட் ஹல்வா வித் உருளைக்கிழங்கு போண்டா (யெஸ் யெஸ் அது இல்லாமயா ... பில்டர் காஃபி )...<br />
<br />
இப்படியெல்லாம் ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டுட்டு ( ஆனா அப்போ இப்படி சாப்பிட்டும் 50 கேஜி தாஜ்மஹாலா தான் இருந்தேன் ... நம்பாதவங்களுக்கு போட்டோ ப்ரூப் இருக்கு) இப்போ கேரட்டை வெறுமனே அரைச்சு , கம்பு மாவை கரைச்சு, ஓட்ஸை குடிச்சு (ஏன்னு கேக்கறீங்களா... எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான் பிகாஸ் மை பாமிலி அ ஸ்வீட் பாமிலி) என்னைக்காவது இதையெல்லாம் நினைச்சிட்டே "ச்சை... எப்படி இருந்த நான் இப்படி ஆக வேண்டியதாயிடுச்சே ..." ன்னு நொந்து, மெய் மறந்து, டயட் தவம் கலைந்து சில பல காம்பினேஷன்ஸை எல்லாம் நல்லா சாப்பிட்டுட்டு, "அய்யயோ இது என்ன சொல்ல போறதோ" ன்னு மனசு கேக்காம நேரா போய் பாத்தா "யக்கா.... உனக்கு இந்த காம்பினேஷன் பிடிச்சு நீ ரசிச்சு சாப்பிட்டதெல்லாம் சரி... இப்போ சுகர் அண்ட் பிளட் பிரெஷர் , கொலஸ்ட்ரால் அண்ட் லிவர் fat ன்னு இன்னும் சில காம்பினேஷனுக்கு எல்லாம் சீக்கிரமே உன்னை ரொம்ப பிடிச்சு போய்டுமே... beware... Prevention is better than cure" அப்படின்னு சொல்ற வெயிங் மெஷின் மட்டும் கடுப்பேத்துது மை லார்ட் ...<br />
<br />
இதனால் சகலமானவர்க்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால்<br />
"இளமையில் உண் " !!!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-73000109515945281722016-09-25T06:17:00.002-07:002016-09-25T07:40:10.411-07:00கடவுளுக்கும் சில சமயம் கண் தெரிவதில்லை....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"டேய்ய் குமார் ..... வேணான்டா.... ஜட்ஜ் மாமா கிட்ட மாட்டின அவ்வளவுதான்.... நல்லா வாங்குவ .... சொன்னா கேளுடா ...." என்று கத்திய என்னை அலட்சியமாக பார்த்த குமார் அந்த வீட்டு கம்பௌண்ட் தாண்டி உள்ளே குதித்தான்..... மெதுவா நடந்து வீட்டு காலிங் பெல்லை விடாமல் அமுக்கி அலற விட்டு சர்ர்ன்னு வேகமா அவங்க வீட்டு மாமரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான் ...<br />
<br />
அந்த அக்ரஹாரத்துல நான் , குமார், சீனி , ரவி, சர்குணம்ன்னு பெரிய கேங் ... எல்லாரும் அங்க இருந்த பாய்ஸ் ஹை ஸ்கூல்ல ஏழாவது, எட்டாவதுன்னு படிச்சிட்டு இருந்தோம்... பெரிய கம்பௌண்ட் வெச்ச அந்த கடைசீ வீட்டுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி<br />
ஜட்ஜ் மாமா குடி வந்ததுல இருந்து இதே வேலை ... அவர் வீட்ல அவரும் மாமியும் தான் .... அந்த மாமா பாத்தாலே டெர்ரரா இருப்பார் (கவுரவம் சிவாஜி மாதிரி)... ஆனா மாமி பார்க்கவே சாந்தமா மஹாலக்ஷ்மி மாறி இருப்பாங்க ... என்ன கொஞ்சம் சிரிச்சா இன்னும் அழகா இருப்பங்களேன்னு தோணற அளவுக்கு முகத்தில எந்த உணர்ச்சியும் இருக்காது... வீடு விட்டா சிவன் கோவில்ன்னு ரொம்ப அமைதியா இருப்பாங்க .... எங்க தெரு மத்த மாமிகளாம் "அவ ஆத்துக்காரர் பெர்ர்ரிய ஜட்ஜோன்னோ .... அதான் கர்வம் ..." அப்படின்னு பேசிப்பாங்க...<br />
<br />
ஜட்ஜ் மாமா குடி வந்த உடனே வாசல்ல "தயவு செய்து காலிங் பெல்லை அடிக்காதீர்கள்" ன்னு ஒரு போர்ட் தான் மாட்டப்பட்டது ... ஒரு தடவை அவங்க வீட்டு மாமரத்துல இருந்த மாங்காயை பறிச்சுக்கலாமான்னு கேக்கறதுக்காக குமார் தெரியாம காலிங் பெல் அடிச்சிட்டான்... ரொம்ப நேரமா கதவு திறக்கலைனதும் திரும்ப அடிச்சான் .... கொஞ்ச நேரத்துல கதவை திறந்த ஜட்ஜ் மாமா குமார் காதை பிடிச்சு திருகி "ஏன்டா பெல் அடிக்க வேண்டாம்னு தான் தெளிவா போர்ட் போட்டுருக்கே... அறிவு இல்ல ... ஏன்டா இப்படி உயிரை வாங்கறீங்க... " அப்படின்னு ரொம்ப கடுமையா திட்டிட்டார்... குமார் ரோஷக்காரன்.. "அது என்னடா ஏதோ கவனம் இல்லாம பெல் அடிச்சிட்டேன்.... அதுக்கு போய் இப்படி காதை எல்லாம் திருகி கன்னா பின்னான்னு திட்டறார்... அது சரி அடிக்க தானே காலிங் பெல் ... அடிக்க கூடாதுன்னா அதை கழட்டி வெக்க வேண்டியது தானே ..." அப்படின்னு பொருமி தள்ளிட்டான்...<br />
<br />
அதுல இருந்து வேணும்னே அந்த வீட்டை தாண்டி போகும்போதெல்லாம் எங்க குரூப்ல எவனாவது போய் அந்த பெல்லை அடிச்சிட்டு ஒளிஞ்சுக்குவான் ... கொஞ்ச நேரத்துல அந்த மாமா வெளிய வந்து கத்துவார்.. எங்க தொல்லை தாங்க முடியாம எங்க வீட்லலாம் வந்து கத்திட்டு போவார் ... எங்க கணக்கு வாத்தியார் நரசிம்மமூர்த்தி கிட்ட கூட சொல்லிப் பாத்துட்டார்... அவர்னா எங்களுக்கு ஒரு பயம் ... ஆனா இந்த விஷயத்தில குமார் ரொம்ப உறுதியா இருந்தான் ... ஒரு கட்டத்துல எங்க தொல்லை தாங்காம அந்த பெல்லை கழட்டணும்னு முடிவு பண்ணார்... அந்த காலிங் பெல் அவங்க வீட்டு முற்றத்துக்கு மேல உயரமா வெச்சுருந்தாங்க ... அதை கழட்ட ஆள் தேடினார்ன்னு கேள்விப்பட்டு "அவர் அதை கழட்டறதுக்குள்ள ஒரு வழி பண்ணனும்டா..." ன்னு சொல்லி வேணும்ன்னே தினமும் போய் அடிக்க ஆரம்பிச்சான்...<br />
<br />
அன்னைக்கும் அப்படி அடிச்சிட்டு தான் மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான்.. கொஞ்ச நேரத்துல ஜட்ஜ் மாமா வீட்ல இருந்து அவரோட குமாஸ்தா வேகமா வெளிய ஓடி வந்தார் ... வெளிய போய்ட்டு திரும்பி வந்தப்போ "இப்படி அடிக்கடி வந்தா அப்பறம் சீரியஸ் ஆய்டும்.... ஏன் இப்படி நடக்குது ..." ன்னு சொல்லிட்டே கூடவே ராமானுஜம் டாக்டர் வரார்.... எங்களுக்கு ஒண்ணும் புரியல.... கொஞ்ச நேரத்துல அந்த மாமிய தூக்கிட்டு ஹாஸ்பிட்டல்க்கு போனாங்க... என்னன்னு புரியலைனாலும் கொஞ்ச நாளைக்கு அந்த காலிங் பெல்லை அடிக்காம இருந்தோம்... ஒரு வாரம் கழிச்சு அந்த மாமி ஆளே பாதியா போய் திரும்ப வீட்டுக்கு வந்தாங்க ... <br />
<br />
அப்பறம் 2 நாள்ல அவங்க வீட்டை காலி பண்ண சாமான்லாம் வண்டில ஏத்திட்டு இருந்தாங்க ... அதை பாத்த குமார் "பாத்தியாடா ... வீட்டையே காலி பண்ணிட்டு ஓடறார்..." அப்படின்னு சிரிச்சான்.... எங்களை பாத்த அந்த குமாஸ்தா நேரா வந்து "ஏன்பா சின்ன பசங்களா இருக்கீங்க ... எவ்வளவு சொன்னாலும் கேக்காம பெல்லை அடிச்சு அடிச்சு பாவம் இப்படி வீட்டையே காலி பண்ண வெச்சுட்டிங்களே ... பாவம் அந்த மாமி பரம சாது ... ஸ்கூல் போன அவங்க குழந்தை ரோட்டில அடிப்பட்டு இறந்துடுச்சுன்னு அவங்க வீட்டு காலிங் பெல்லை அடிச்சு தான் சொல்லி இருக்காங்க ... அதுல இருந்து பெல்லை யாராவது அடிச்சாலே மாமிக்கு பிட்ஸ் வந்துரும் ... இங்க குடி வந்ததுல இருந்து அடிக்கடி பிட்ஸ் வந்து ரொம்ப சீரியஸா போயிடுச்சு ... அதான் வீட்டையே காலி பண்ணறாங்க ... போங்கப்பா உங்கள எல்லாம் நல்ல பசங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன் ..." என்றாரே பார்க்கணும்..<br />
மளுக்கென்று உள்ளே ஏதோ உடைய கண்ணில் வழிந்த கண்ணீரோடு அங்கிருந்து வீட்டு வாசலில் இருந்த<br />
மாமியை பார்த்தோம் ... அழும் எங்களை ஒண்ணும் புரியாமல் பார்த்த மாமி நாங்கள் பார்த்த அவ்வளவு நாட்களில் முதல் முறையா மென்மையா சிரித்தார் ...<br />
<br />
கடவுளுக்கும் சில சமயம் கண் தெரிவதில்லை...</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1331758038779804971.post-71772704030767638742016-09-21T11:06:00.000-07:002016-09-21T11:06:22.733-07:00தன்னம்பிக்கை மனிதர்கள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒன்பது வயசு இருக்கும் போது நாலு வீடுகள் இருந்த ஒரு காம்பௌண்ட்ல குடி இருந்தோம்... எங்க வீடு மெயின் ... பின்னாடி வரிசையா வேற முணு போர்ஷன்... நான் , பின்னாடி முதல் வீட்டு அபி, ரெண்டாவது வீட்டு மஞ்சு முணு பேரும் தான் ஸ்கூல் போற நேரம் தவிர எப்பவும் ஒண்ணா விளையாடிட்டு இருப்போம் .... விளையாட்டு னா இந்த ஓடி பிடிச்சி , கண்ணாமூச்சி, செங்கல் அடுப்பு வச்சு சமைக்கறோம் பேர்வழின்னு துவரம் பருப்புக்கு பதிலா கடலை பருப்பை வேகவைக்க படாதபாடு பட்ட சமையல் விளையாட்டு , பிசினெஸ் , கேரம் இதெல்லாம் மட்டும் இல்ல... எங்க காம்பௌண்ட் உள்ள இருந்த கொய்யா மரத்தில ஏறுறது , அதுல இருந்து சன்ஷேட்க்கு தாவறது , மாடிப்படி சுவர்ல சறுக்கறதுன்னு பல வீர விளையாட்டுகளும் அடக்கம்...... பல நாள் இந்த மாதிரி விளையாட்டுல அடிபட்டுருமோங்கற பயத்துல அம்மா கையால தான் அடிபட்டுக்கிட்டு இருக்கேன் .... கடைசீ போர்ஷன் ஹரி அண்ணா மட்டும் நாங்க விளையாடுற இந்த வீர விளையாட்டை எல்லாம் சிரிச்சிகிட்டே வேடிக்கை பார்த்திட்டு இருப்பான்...<br />
ரொம்ப சாதுவா அமைதியா அதே சமயம் ரொம்ப disciplined ஆ இருக்கற பையன் ... அவன் அம்மா ஒரு டீச்சரா இருந்ததும் காரணமா இருக்கலாம்... காலைல அஞ்சு மணிக்கே எழுந்துருவான்.... ஆறாங் கிளாஸ் படிக்கும் போது அவ்வளவு சீக்கிரமா எழுந்து தினமும் என்னதான் படிப்பானோ .... ஆனா படிப்புல மட்டும் இல்லாம பயங்கர ஜெனரல் நாலேஜ் ... அவன் நோட் எல்லாம் அவ்வளவு கிளீனா இருக்கும் ... கையெழுத்து கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கும் ... அவ்வளவு கிராஃப்ட் வொர்க் பண்ணுவான்.. நாலாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்த எனக்கு ஹரி அண்ணா அப்படினாலே ஒரு மரியாதை..... ஆனால் அவனை பார்த்து அபிக்கு எப்பவும் பொறாமை.... "அவனே அப்படி படிக்கறான்.... உனக்கென்ன நல்லாதானே இருக்க... அப்பறம் என்ன ..." ன்னு அவனை கம்பேர் பண்ணி அவ அம்மா அவளை எப்பவும் திட்டறதும் காரணமா இருக்கலாம்....<br />
<br />
இப்படி இருக்க ஒரு நாள் அபி ஒரு பக்கம் உசுப்பேத்த (அவ தெளிவு.. ஏற மாட்டா என்னை ஏத்தி விட்டு நான் அடிவாங்கும் போது ஓடிருவா ) நான் நல்லா வழுக்கற கொய்யா மரத்தில எப்படியோ ஏறிட்டேன்... சன் ஷேட் உயரத்துக்கு போயிட்டேன் .... அப்போ வெளிய இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்த ஹரி அண்ணா "ஹேய் கீழ விழுந்துற போற .. ஏன் இப்படி ஆபத்தான விளையாட்டு எல்லாம் விளையாடறீங்க " அப்படினான்... உடனே அபி வெடுக்குன்னு "ஏன் உன்னால இது எல்லாம் செய்ய முடிலயேன்னு பொறாமையா.." அப்படின்னு கேட்டா .... அப்படி கேட்ட உடனே ஹரி அண்ணா முகம் அப்படியே சுண்டி போச்சு ... நான் அதுவரைக்கும் அவனை அப்படி பார்த்ததில்லை.. ஆனா ஒரு நிமிஷம் தான் .. அதுக்குள்ள டக்குனு மெல்லிசா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போய்ட்டான்...<br />
ஒண்ணும் சொல்லாம போன அவனை பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு .... "ஏன் அபி இப்படி பேசற .. இப்படி பேசறது தப்பு இல்லயா ..." அப்படின்னு கேட்ட என்னை "அட போப்பா அவனுக்கு தான் ரொம்ப இன்டெலிஜெண்ட்ன்னு ப்ரவுட்... அவனால நான் எவ்வளவு திட்டு வாங்கறேன் தெரியுமா " ன்னு சொன்னா ...<br />
அந்த வருஷம் நவராத்திரி வந்தது... ஹரி அண்ணா வீட்ல எப்பவுமே பெருசா கொலு வெப்பாங்க... அந்த வருஷமும் பெருசா வெச்சிருந்தாங்க... டீச்சர் "இந்த வருஷம் எங்காத்து ஹரி ஸ்பெஷலா ஒரு தனி கொலு வெச்சிருக்கான் .... நீங்க வந்து பாருங்க..." அப்படின்னு சொன்ன உடனே ஆர்வத்துல போனோம் ... அடேங்கப்பா ஒரு மலை அதுக்கு கீழ காடு அனிமல்ஸ் குளம் அப்பறம் பேனால பவுண்டன் ரெயில்வே ட்ராக் pulley மாறி ஏதோ எல்லாம் வெச்சிருந்தான்..<br />
எங்கயோ ஒரு பைப்பை ஓபன் பண்ணினா பேனா பவுண்டன்ல இருந்து தண்ணி வருது.... அப்பறம் கீ கொடுத்தா டிரெயின் ஒடி வருது... அதுல மனுஷன் மாறி ஒரு பொம்மை டிரெயின் எஞ்சின்ல அதை ஓட்டற டிரைவர் மாறி உட்காந்து வருது .... ரொம்ப யோசிச்சு ஏதோ பண்ணி இருந்தான் .... அடுத்த கொலுவுல ஏரோபிளேன் ஹெலிகாப்டர் லாம் பண்ண போறேன்னு சொல்லிட்டு அபியை பாத்து பெருமையா ஒரு சிரிப்பு சிரிச்சான் ... அவளுக்கு முகமே சரி இல்ல... அப்ப தான் நான் அந்த பொம்மைய கவனிச்சேன்... அதுக்கு ஒரு கையை காணோம்.... எனக்கு ஹரி அண்ணாவோட அந்த confidence பிடிச்சி இருந்தது .... ஆமா அவனுக்கு போலியோனால வலது கை ரொம்ப குட்டியா இருக்கும் ...<br />
<br />
தன்னம்பிக்கை மனிதர்கள் !!!!</div>
Charuhttp://www.blogger.com/profile/07397034000886878235noreply@blogger.com2