Saturday, October 15, 2016

முகவரி...

ரொம்ம்ம்ம்ப நாளுக்கு அப்பறம் இன்னைக்கு டீவில ஒரு படம் பார்க்கிறேன் ... அதுவும் 'முகவரி' படம்ங்கறதால.... சில விஷயங்கள் நிறைய நினைவுகளை அதுக்குள்ள புதைச்சு வச்சிருக்கும்... இது ஒரு அற்புதமான படம் மட்டும் இல்ல எனக்கு இது நிறைய நினைவுகளை பொதிஞ்சு வெச்சுருக்கும் படம் ....

காலேஜ் கட் அடிச்சிட்டு பார்த்த முதலும் கடைசியுமான படம் (காலேஜ் கட் அடிச்ச அனுபவமும் வேணும்னு நாங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ப்ராஜெக்ட் டைம்ல ஒரு மத்தியானம் போனது) .... படத்துல விரல்ல பிரஸ் டர்ன் புல்ன்னு ப்ரபோசலே செம்ம ரொமான்டிக்கா , போன்ல டயலாகே இல்லாமல் ம்யூசிக்கலா, அழகான அன்பே உருவான ஹீரோ பாமிலி கலகலப்பான ஹீரோயின் பாமிலின்னு கவிதையா, கடைசில யதார்த்தம்னாலும் பிரிவுல ன்னு முடிஞ்ச படத்தை பார்த்துட்டு ஒரே பீலிங்க்ல வெளிய வந்தா வெளிய ட்ரிஸ்லிங்... அந்த gloomy eveningla எமோஷனல் ஆகி  ரோட்ல நடக்கும் போதே என் அருமை தோழி தோள்ல சாஞ்சி கண்ணீர் விட்டது...
அன்னைக்கு என்னை பார்க்க என் ஹாஸ்டலுக்கு அப்பா வர என் ரூம் மேட் நான் படம் பார்க்க போனது தெரியாமல் ஏதோ ப்ராஜெக்ட் வொர்க்காக நான் லேப்ல இருக்கறதா சொல்ல அப்பா சரி படிக்கற புள்ளைய தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு திரும்ப கிளம்பியது... அப்படி கிளம்பிய அப்பாவை நான் படம் பார்த்திட்டு திரும்பி வரும்போது ரோட்ல கீழ பராக்கு பார்த்துக்கிட்டே இந்த மாதிரி ஒரு பேண்ட் ஒரு நடை கைல ஒரு  பேகை எங்கயோ பார்த்து இருக்கோமேன்னு நிமிர்ந்து பார்த்து நீ ஏதோ லேப்ல ப்ராஜெக்ட் வொர்க் பண்ணிட்டு இருந்த போல இருக்கேன்னு நமட்டு சிரிப்போட கேட்ட அப்பாவை பார்த்து அப்பான்னு செல்லமா சிணுங்கிகிட்டே வழிஞ்சது... அவரோட ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டது.... அப்பறம் ரூம்க்கு வந்து என்னதான் யதார்த்தம்னாலும் அன்பான  குடும்பத்துக்காக லட்சியத்தை ஒத்தி போடற ஹீரோ, அவ்வளவு சப்போர்ட்டிவா, அண்டர்ஸ்டாண்டிங் ஆன செல்ப்லெஸ் ஹீரோயின மட்டும் எப்படி லட்சியத்துக்காக விட்டுடலாம் பாவம் தான அவ அப்படின்னு ஆர்க்யூ பண்ணது...

அந்த ஒரு நாளை இத்தனை வருடங்கள் கழித்து இன்று மீண்டும் வாழ்ந்து விட்டேன்...  முகவரி பிரிண்ட் கொஞ்சம் மங்கலாய் இருந்தது ... அந்த படத்தின் முடிவை பற்றிய என் கருத்து மட்டும் இன்னும் அப்படியே... Perhaps that is what is wonderful about this movie !!!

No comments:

Post a Comment