Sunday, October 9, 2016

வாரணாசி !!

வாரணாசிக்கு போய் புண்ணியம் சேர்த்துக்கலாம்னு பிளான் பண்ணி அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ணும் போதே டீவில  பாக்கற பக்தி மணம் கமழும் கங்கா நதியின் படித்துறைகள் (வாரணாசியில் அதை காட் ன்னு சொல்றாங்க பொருள் விளக்க உபயம் அங்க இருக்கற boatman),  ஒளிமயமான கங்கா ஆரத்தி, பக்திமயமான காவியுடை ஸ்வாமிகள் அப்பறம் இது எதுக்குமே சம்மந்தம் இல்லாம நம்ம ராஞ்சனா இந்தி படம் அதுல வர்ற காசி தெருக்கள், கொஞ்சமே கொஞ்சம் மனசு ஓரத்துல காசிக்கு போற அளவு வயசாயிடுச்சான்னு ஒரு பீலிங்ன்னு ஒரு மாதிரி கலவையா வாரணாசி ஏர்போர்ட் போய் இறங்கியாச்சு...

அங்க இருந்து வாரணாசி  டௌன்க்கு கார்ல போகும்போது (கிட்டத்தட்ட 25 kms) அந்த வழியெல்லாம் பார்த்தா மனசுல நினைச்சு இருந்த கலகல காசியான்னு ஸ்லைட்டா டவுட்  வந்திருச்சு... அவ்வளவு காலி ரோட் ...   அப்பறம் டௌன்க்குள்ள நுழைஞ்ச உடனே டவுட் கிளியர் என்ன கலகல காசி இல்ல கசகச காசி.... இங்க ரோட்டில வண்டி ஒட்டாம நடக்கறவங்களுக்கு நடுவுல ஓட்டறாங்க ..  டிராபிக் ரூல்ஸ்னா ஸ்பெல்லிங் கூட தெரியாதுன்னு தோணுது.... நான் நினைச்ச மாதிரி ஒரே மணம் கமழுது  ஆனா பக்தி மணம் இல்ல பான்பராக் மணம்...

நம்ம காசி தலைவர் ரிஷப வாகனன் தான் ஆனா அதுக்காக காசி நகரத் தெருவில் எல்லாம் 4 அடிக்கு ஒரு ரிஷபர்.. அந்த இர்ரெகுலர் அட்ராஷியஸ்  ட்ராபிக்கு நடுவிலும் என்னவோ மராத்தான் ஓடும் ரிஷபர்கள் (வேற எங்கயும் இவ்வளவு வேகமா ஓடற,  படித்துறையில் படி ஏறும் மாடுகளை நான் பார்த்ததில்லை.... அப்படி எங்க வேகமா போகுமோ... சிவபெருமானை பார்க்க அதுகள் கைலாசம் போகுமோ இல்லயோ  ரோட்டில நடக்கும் போது நாம கொஞ்சம் கவனமா இல்லனா நாம கண்டிப்பா சாணி மேல தான் லேண்ட் ஆவோம்ன்னு சொல்ல வந்தேன் வேற ஒண்ணும் இல்ல .. ம்ம்ம் )

கோவில் போற வழியெல்லாம் ஒரே பண்டிட்ஸ் அஸிஸ்டண்ட்ஸ் மயம்.... பண்டிட்ஸ் அங்க அங்க உட்கார்ந்து ஏதோ பிரார்த்தனை சங்கல்பம்ன்னு பண்றாங்க ... பக்கத்துல ஒரு பெரிய துணிக்கு அடியில ஒன்லி 500 ரூபாய் நோட்ஸ் (this is not to hurt any body's religious beliefs all i meant is the commercialisation behind all rituals)...
கோயில்ல நாமளே காசி விஸ்வநாதருக்கு  அபிஷேகம் பண்ணலாம்.... இதுவரைக்கும் அது மாதிரி இல்லாம இங்க அபிஷேகம் பண்ணப்போ இதுதான காசியின் மஹிமைன்னு தோணிச்சு...

நாங்க தங்கி இருந்த இடத்துல கங்கால எதிர் கரையில கிளீனா இருக்கும் பட் அங்க குளிச்சா புண்ணியம் இல்ல கோவில் இருக்கற பக்கம் தான் புண்ணியம்ன்னு சொன்னாங்க ...நேரா பரவசத்தோடு கங்கால புண்ணிய ஸ்நானம் பண்ண எல்லாம் ரெடியா கங்கா மாதாவை பார்க்க போனோம் .... போய் போட்ல காலை வெச்சிட்டு நிமிர்ந்தா போட் பக்கத்தில ஒரு செத்து போன கன்னுக்குட்டி மிதக்குது.... அப்பவே என்னமோ மாறி ஆய்டுச்சு .... அப்பறம் boatman ஒவ்வொரு காட் உம் என்ன என்னன்னு சொல்லி கூட்டிட்டு போனார் .... அதுல ரெண்டு காட்ல கடைசி மரியாதைக்கு நிறைய பேர் (?) படிக்கட்ல காத்திருந்ததை பார்க்க மனசெல்லாம் ஒரே morbid பீலிங்.... ஆனா தேங்க்ஸ் டு கங்கா மா ஆரத்தி கொஞ்சம் மூட் மாறிச்சு... ஸ்டில் அதுவரை நேரில்  இல்லாம டிவில  கங்கை கரையில் கோவிலை பார்த்த போது இருந்த லேசான பீலிங் இல்லாம கனமா தான் இருந்தது ... அதை விட புண்ணியமே உருவான பவித்ரமான கங்கா மா இப்படி நம்ம மன அழுக்குகளை மட்டும் இல்லாம எல்லாத்தையும் சுமந்து கலங்கி ஓடறதை பார்க்க கஷ்டமா இருந்த்து ... ஒரு புண்ணிய ஸ்தலத்துல இந்த மாதிரி இருப்பதெல்லாம் ஒரு பக்கம் சகஜம்ன்னு இருந்தாலும் நம்ம ஆழ்ந்த நம்பிக்கைகளை தாங்கிய இந்த ஸ்தலத்தில் புண்ணியம் மட்டும் சேர்க்க நினைக்காமல் தூய்மையா வெச்சுக்கறதும் நம்ம கடமைதானே ன்னு இங்க வர்ற ஒவ்வொருத்தருக்கும் தோணும்னு தோணுது ....

ஆனா இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ... போட்ல திருப்பி வரும்போது அந்த boatman "இது ராமர் சீதையை குகன் போட்ல கூட்டிட்டு வரும்போது  அவர்களை சிவ பார்வதி தர்சனம் பண்ணிய ஸ்தலம்.... அதனால குகன் வம்சத்துல வந்த boatman அவங்க கையால உங்களுக்கு கங்கா ஜலத்தை தெளிச்சா உங்களுக்கு புண்ணியம் (????!!!) ... குகனுக்கு உங்களால முடிஞ்ச தக்ஷிணை குடுங்க...." அப்படின்னு சொல்லி அவரோட அசிஸ்டண்ட் ஒரு பையனை பார்க்க , அவன் போட்ல இருந்து எட்டி கீழ ஓடிட்டு இருந்த கங்கா நீரை கைல எடுத்து எங்க மேல தெளிச்சு பாவத்தை போக்கினதை மட்டும் என்னவோ என்னால ஜீரணச்சிக்கவே முடில ...
அவன் வாய் நிறைய பான் !!!

Note:
With due respects to all our deep beliefs this is written just out of my thoughts on how our beliefs are being used for day to day living and earning....  It is not to hurt anyone's beliefs 🙏

No comments:

Post a Comment