Tuesday, August 2, 2016

என்னுயிர் தோழி ....

நானும் மதுவும் ஸ்கூல் போன காலத்திலிருந்தே பிரெண்ட்ஸ்... ஸ்கூல் முடித்து காலேஜில் பி.எட் படித்ததும் ஒன்றாகத்தான்.... நான் வாயை திறக்கவே யோசித்தால் அவள் வாயை மூடவே யோசிப்பாள்.... நான் ஹம்ம்ம் என்றாலே பயந்து அழுதால் அவள் இடியே விழுந்தாலும் சிரித்து கொண்டிருப்பாள்.... ஒரளவு வசதி உள்ள குடும்பம் என்னுடையது... ஒரு ஏழை குமாஸ்த்தாவின் மூன்றாவது  பெண்  மது.... நான் பயங்கர சென்டிமென்ட் .... ஒரு நாள் பச்சை கலர் ட்ரெஸ்ஸில் போய் அன்று கிளாஸ் டெஸ்டில் நல்ல மார்க் வாங்கி விட்டு அன்றில் இருந்து காலேஜ் முடிக்கும் வரைக்கும் எந்த டெஸ்ட் எக்ஸாமாக இருந்தாலும் தவறாமல் பச்சை கலர் ட்ரஸில் போனவள்... இதற்காகவே ஆல் ஷேட்ஸ் ஒப் கிரீனில் ட்ரஸ் வாங்கி வைத்திருப்பேன்.. பத்தாவது படிக்கும் போது அப்பா ஒரு ஹீரோ pen வாங்கித்  தந்தார்... அதில எழுதி நல்ல மார்க் வந்ததால அதுக்கு அப்பறம் வந்த எல்லா எக்ஸாம் அப்ளிகேஷன் எல்லாத்துக்கும் அந்த ஹீரோ pen தான் .... இவ்வளவு ஏன் ஒத்தை பின்னலில் போன ஒரு சின்ன காம்படீஷனில் கான்ஸோலேஷன் ப்ரைஸ் வாங்கியதால் அதுக்கு அப்பறம் எப்பவும் ஒத்தை பின்னல்... "என்னடி இது இப்படி இருக்க... இவ்வளவு எல்லாம் சென்டிமென்ட்ஸ் பாத்தா அப்பறம் ரொம்ப கஷ்டம்டி.... இப்ப நான் கூட இருக்கும் போது ஏதாவது அதிர்ஷ்டம் வந்தா அப்பறம் என்னை கட்டிகிட்டே சுத்துவியா ..." ன்னு கிண்டலா கேப்பா மது.... காலேஜ் முடிச்சதும் வேலை தேடி ஒன்றாக சுத்தினோம் ...  மது அளவிற்கு எனக்கு வேலைக்கு போகும் அவசியம் இல்லை தான் ... இருந்தாலும் வேலைக்கு போணும்ன்னு ஒரு ஆசை .... இருக்கும் எல்லா classified காலமையும் அலசி அப்ளிக்கேஷன் போடுவோம்...  ஒரு வருஷம் தேடி எனக்கு ஒரு பிரைவேட் ஸ்கூலில் வேலை கிடைத்தது.... அதில் சேர்ந்த பிறகு மதுவை பார்ப்பது கொஞ்சம் குறைந்தது.... அவளும்  அவள் அம்மாவிற்கு உடம்பு முடியாமல் போனதால் அதிலேயே கவனம் போய் விட்டது.... நடுவே பார்க்கும் போதெல்லாம் "எனக்கு ஒரு வேலை கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும் ... ஏதாவது vacancy தெரிய வந்தா கட்டாயம் சொல்லுடி.... அம்மாவை விட்டுட்டு வேலைக்கு எப்படி போவேன்னு நினைச்சு சொல்லாம விட்டுடாத.... அது எல்லாம் மேனேஜ் பண்ணிக்கலாம்.... பட் ஒரு வருமானம் வந்தா நல்லது ..." அப்படின்னு சொல்லுவாள்.... அன்னிக்கு எங்க காலேஜ் HODய கடைவீதில பாத்தேன்... என்னை பாத்த உடனே வேகமா வந்தாங்க .... "நானே மதுவையோ உன்னையோ காண்டாக்ட் பண்ணணும்னு இருந்தேன்மா... நல்லா இருக்கியா..." என்றார்...  நான் நல்லா இருக்கேன்னு சொன்னதும் அது ஒண்ணும் இல்லமா பக்கத்து ஊர் government high ஸ்கூல் பிரின்சிபால் என்னோட மாமா தான் ... அந்த ஸ்கூல்ல   ஒரு லீவ் வேகன்ஸீ வருது... என் மாமா "ஏம்மா உன்னோட ஸ்டுடண்ட்ஸ் யாராவது இருக்காங்களா.... அட்வெர்டைஸ்மண்ட் கொடுக்கணும்... பட் அதுக்கு முன்னாடி தெரிஞ்ச நல்லா டீச் பண்ணக்கூடிய டீச்சர் இருந்தா அவங்களையே அப்பாய்ண்ட் பண்ணலாம்... லீவ் வெகன்ஸீ னாலும் உள்ள வந்துட்டா நல்ல டீச்சர்ன்னா பர்மனண்ட் பண்ணிடலாம் அது ப்ராபளம் இல்ல... ஏன்னா இப்போ லீவில போகப்போற டீச்சர் அவ்வளவு சரி இல்ல ..." அப்படின்னு சொல்லிட்டு இருந்தார் ..... நான் மதுவையோ உன்னையோ தான் நினைச்சேன்..... மதுவை கேட்டுட்டு அவளால முடிலனா உன்னை கேட்கலாம்னு நினைச்சேன் ... நீங்க ரெண்டு பேரும் எங்கயாவது வேலைக்கு போறீங்களா என்றார் ... goverment வேலை என்றதும் ஒரு செகண்ட் யோசித்து நான் வேலைக்கு போவதை சொல்ல வேண்டாம்ன்னு முடிவு எடுத்தேன்... "மேம் மதுவோட அம்மாக்கு  ரொம்ப உடம்பு சரி இல்ல... அதனால அவளுக்கு வேலைக்கு போற ஐடியாவே இல்ல... நான் வேணா அப்ளை பண்ணவா " என்று கேட்டேன் .... "ஒ யெஸ் தாராளமா... நீ ஒரு அப்ளிகேஷனை எழுதி என்கிட்டே கொடு.. நான் பாத்துக்கறேன்..." என்றார் ... அப்ளிகேஷனை கொடுத்து ஒரு மாசம் கழித்து ஆர்டர் வந்தது ... இதற்கு நடுவில் ஒரு தடவை மதுவை ரோடில் பார்த்து ஆர்வமாக பேச வந்த அவளை ஏதோ அவசர வேலையாக போவது போல காட்டிக்கொண்டு நைசாக அவொய்ட் செய்து நழுவி  வந்து விட்டேன் ...  மறுநாள் வேலையில் சேர்வதற்காக பாக்கிங் செய்து கொண்டிருந்த போது மது வந்திருப்பதாக அம்மா சொன்னாள் .... ஒரு நிமிடம் தடுமாறி பின்ன போய் "வாடி என்ன அதிசயம்... இவ்வளவு நாளா ஆளையே காணோம்" என்றேன் .... ஒரு செகண்ட் என்னையே பார்த்தவள் "ஹேய்ய் நேத்து நம்ம HODய எதேச்சையா பாத்தேன் ... அவங்க தான் நீ நாளைக்கு வேலைக்கு சேர போற விஷயத்தையே சொன்னாங்க .... ஏண்டி என்கிட்ட எல்லாம் சொல்ல மாட்டியா.... சொன்னா நான் சந்தோஷ பட மாட்டேனா... " என்றாள் .... ஒரு நிமிடம் பக் என்று இருந்தது என் குட்டு HODயிடம் வெளிப்பட்டு விட்டதோ என்று .... அப்போது கூட மதுவிற்கு  செய்த துரோகம் உறுத்தவில்லை... HOD க்கு தெரிந்து இந்த வேலை போய் விடுமோ என்ற பயம் தான்..... "என்னடி இப்படி முழிக்கிற... உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு தெரியுமா " என்று சொன்ன அவளை புரியாமல் பார்த்தேன் ... "ஞாபகம் இருக்கா நம்ம காலேஜ் பைனல் எக்ஸாம் முடிஞ்ச அன்னைக்கு உன்னோட ராசியான ஹீரோ பேனாவை  காணலைன்னு பிழிய பிழிய எழுதியே.... போன மாசம் ஒரு நாள் நான் என்னோட பழைய திங்க்ஸை கிளீன் பண்ணிட்டு இருந்தப்போ என்னோட பேக்ல அந்த பேனா இருந்தது .... உன்னோட பேக்ல போடறதுக்கு பதிலா என் பேக்ல போட்டுருக்க... நானும் காலேஜ் முடிஞ்சதும் அந்த பையை யூஸ் பண்ணாம என்னோட ஷெல்ப்பில வெச்சிருந்து இருக்கேன் ... அந்த பேனா கிடைச்சதும் அதை உன் கைல கொடுத்தா நீ எவ்வளவு சந்தோஷ படுவேன்னு நினைச்சேன் ... உனக்கு அடுத்த மாசம் பர்த்டே வருதே அப்போ அதை கொடுத்து சந்தோஷப் படுத்தலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் ... ஆனா அதுக்குள்ள நீ வேலையில சேர போறன்னு தெரிஞ்ச உடனே இப்போவே உனக்கு பிளசன்ட் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு தான் வந்தேன் ... இந்தா உன்னோட ராசியான பேனாவில் கையெழுத்து போட்டு வேலையில் சேரு ... அங்க போய் என்னை மறந்துராத ... கண்டிப்பா போன் பண்ணு ..." என்றாள் .. நான் உள்ளே சுக்கு நூறாய் நொறுங்கி கண்ணில் நீர் வழிய நிற்பதை கண்டு "ஹேய்ய் அசடு.... நீ என் பிரெண்ட் டீ ... சந்தோஷமா போய் ஜாயின் பண்ணு.. " என்று என்னை கட்டி அணைத்து விட்டு கிளம்பினாள்..  அவள் போய் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேனோ  "என்னடி இன்னும் பேக்கிங்கை முடிக்காம அப்படியே உட்கார்ந்து இருக்க... காலைல சீக்கிரம் கிளம்பணும் ... சட்புட்ன்னு முடிச்சிட்டு சாப்பிட வா... " என்ற அம்மாவின் குரல் என்னை உலுக்கியது....
சட்டென்று எழுந்து ஒரு பேப்பரை எடுத்து என்னுடைய ராசியான ஹீரோ பேனாவினால்  வேகமாக எழுத ஆரம்பித்தேன் "டியர் மேம் ஒரு நல்ல டீச்சர் என்ற தகுதியை நான் இழந்து விட்டதால் இந்த  வேலையில் என்னால் சேர முடியாது... என்னை மன்னித்து விடுங்கள்.... முடிந்தால் இந்த வேலையை மதுக்கு வாங்கித்தாங்க..."  !

3 comments:

  1. சென்டிமெண்ட் விவரங்களை
    விவரித்துப் போனவிதம் அருமை
    மிகச் சிறப்பாக எழுதுகிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்
    சில பாரா (தமிழ்?) வாக பிரித்து எழுத்தினால்
    படிக்க சுலபமாகவும் பார்க்க அழகாவும் இருக்குமே !

    ReplyDelete
  3. மிக்க நன்றி !

    ReplyDelete