Wednesday, November 23, 2016

அன்பு என்பது யாதெனின்....

அன்பு என்பது யாதெனின்....

மனதில் எவ்வளவு வலி கவலை இருந்தாலும் அதை மறைத்து சிரிப்பையும் சந்தோஷத்தையும் மட்டுமே பரப்புவது...

கெட் லாஸ்ட் என வள் என்று விழுந்தாலும் ஒரு 2 நிமிஷம் வாடிய முகத்தோடு இருந்து விட்டு பின்னே ரோஷமே இல்லாமல் போய் "ஏதாவது ப்ராப்ளமா .... நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா.." என்று கேட்டு இன்னும் வாங்கிக்கட்டி கொள்வது...

உடம்பு சரி இல்லன்னா "ஒண்ணும் இல்ல.... தைரியமா இருக்கணும் ...சரியா போயிடும்...... மருந்து சாப்பிட்டு நல்லா தூங்கணும்..." ன்னு சொல்லிட்டு அவர்கள் தூங்கிய பின் கவலை பட்டு இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை பீவர் இருக்கான்னு தொட்டு பார்த்து கொண்டு நைட் புல்லா தூக்கம் வராம புரள்றது....

சும்மா உரிமை இருக்குங்கறதுக்காக நைநைங்காம கொஞ்சம் ப்ரீயா இருக்க விடறது...

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியூரில் இருந்து  "நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வரேன் ..." ன்னு சொன்னதை கேட்டு  லாஜிக்கே இலலாமல் அந்த நிமிடத்தில் இருந்தே ரோடில் எந்த வண்டி ஆட்டோ சத்தம் கேட்டாலும் மனசு பரபரப்பது  ..

ரொம்ம்ம்ப பிடிச்ச ரொம்ம்ம்ப நாளா பாக்கணும்னு நினைச்சு இருக்கற படத்தை அதிசயமா டீவில பாக்கும்போது போன் வந்தா உடனே டீவியை நிறுத்திட்டு ஆசையா பேசறது ...

மனதுக்கு பிடித்த தேடி அலைந்து வாங்கிய எந்த பொருளாய் இருந்தாலும் "ஹேய்ய் நல்லா இருக்கே .." என்று சொல்வதை கேட்ட நிமிடமே "இந்தா வச்சுக்கோ.." என்று தூக்கி கொடுப்பது.. (ஆனா "நல்லா இருக்கு நீ பண்றது.... உனக்கு பிடிச்சு வாங்கி இருக்க.... தூக்கி கொடுக்கற ... எங்க வாங்கினன்னு சொல்லு .... வேணும்னா நானே வாங்கிக்கறேன்... " அப்படி சொல்றது தான் அவங்க அன்பு ..)

முக்கியமா நாலு கிலோ பேபி பொட்டேட்டோ வாங்கி ப்ரை பண்ணாலும் அதுல நாலு பீஸ் கூட நம்ம வாயில போடாம அவங்களுக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்ன்னு அப்ப்ப்ப்படியே எடுத்து வெக்கறது தான் அன்பிலேயே சிறந்த பேரன்பு...  (ஹிஹி வாட் டு டு ...நாம சீரியஸா மெசேஜ் சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சாலும் கடைசியில லைட்டர் மொமெண்ட்டா தான முடிக்க வருது...) !!!

No comments:

Post a Comment