Friday, November 4, 2016

நண்பேன்டா!!!

மாவடுவால் அமைந்த நட்பு  (yes you read it right... not a typo)

மலேரியா, டைபாய்டு, ஜாண்டிஸ் கூட பரவால்ல ஆனா காலேஜ் ஹாஸ்டல் போன புதுசுல வந்த ஹோம் சிக் இருக்கே ஐய்யய்யயோ ... ஒரு சுபயோக சுபதினத்தில் காலேஜ் அட்மிஷன் முடிஞ்சு ஹாஸ்டல் ரூம்க்கு போய் லக்கேஜ் எல்லாம் வெச்சுட்டு இரும்பு கேட்க்கு இந்த பக்கம் நின்னுட்டு புன்னகை மன்னன் கமல் ரேஞ்சுக்கு அழுகையோட கலந்த ஒரு சிரிப்பு சிரிச்சிட்டே அப்பா அம்மா உடன்பிறப்பு தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களுக்கெல்லாம் டாட்டா சொல்லும் போது மனசை கடிக்கற அந்த கொசுனால வரும் சிக்னெஸ் ..

ஒரு 10 நாள் இது வீட்ல சீவின தலைமுடின்னு அதை கலைச்சு மறுபடி சீவாம , இது வீட்ல தேய்ச்ச பல்லுன்னு அதை தேக்காம.. வெயிட் வெயிட் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துறாதீங்க இப்படி எல்லாம் இருக்க நினைச்சு பட் நம்மளை சுத்தி இருக்கற இந்த சமூக நலனை முன்னிட்டு ஒழுங்கா செஞ்சிட்டு காலேஜ் போய் அழுதிட்டு வருவேன்.. காலைல ஹாஸ்டல் பாத்ரூம் க்யூல பக்கட் போடறதுல இருந்து ஈவினிங் மெஸ்ல வாயில பிஸ்கட்ட போடற வரைக்கும் எல்லாமே பழக்கமே இல்லாத புது புது விஷயம் (நாம தான் ஈவினிங் பசில தாம்பாளத்த முழுங்கற ஆளாச்சே)....

நாக்கு எல்லாம் செத்து போச்சு...  தினம் காலைல இட்லியோட அதே சேம் சாம்பார் , மத்தியானம் ஒரே டைப் சாம்பார் ரசம் (ஓர்ர்ர்ரெ அயிட்டம் தான் ... மேல எடுத்தா ரசம் கீழ சாம்பார் ... Point to be noted தப்பி தவறி கூட கரண்டியை வச்சு கலந்துறக்கூடாது ... அப்பறம் இப்படி multiple ஆ இல்லாம ஒரே டிஷ் ஆயிடும் ) கூடவே ஒண்ணு காராமணி இல்லனா காலிபிளவர்... காலிபிளவர் மட்டும் டேஸ்ட் ஓகேவா இருக்கும் ஆனா அத்தனை பேருக்கும் பண்ணும்போது அதை வெந்நீர்ல கொதிக்க வெச்சு சைவமா சமைச்சுருப்பாங்களா இல்லை புழுவோட அசைவமான்னு டவுட்லயே அதுவும் தொண்டைல இறங்காது.... சாயங்காலம் காலேஜ்ல இருந்து லைன்ல மயிலம்மாவோட z கிரேட் செக்யூரிட்டில (ராகிங்கை அவாய்டு பண்ணவாம்.. மயிலம்மாக்கு 65 வயசு இருக்கும்.. நம்ம மைக்கேல் மதன காமராஜ் பாட்டி மாதிரி பல்டியெல்லாம் அடிப்பாங்களா அப்படின்னெல்லாம் எனக்கு தெரியாது ... இருந்தாலும் அவங்ககிட்ட ஏதோ ஒரு திறமை இருந்ததால அவங்கதான் பாடிகார்ட் ... But a sweet person she was... ) ஹாஸ்டல் வந்து, அதோட லாபில (பெருசா ஏர்போர்ட் லாபி ரேஞ்சுக்கு நினைச்சுக்க வேணாம் .. ஒரு பெரிய ஸ்டீல் காட் போட்டு இருக்கும் வார்டன் உட்கார்ந்து ரோல் கால் எடுக்க) இருக்கற லெட்டர்ஸ்ல நமக்கு ஏதாவது லெட்டர் இருக்கான்னு (டெயிலி யாரால தான் லெட்டர் போட முடியும்) செக் பண்ணி இல்லைனதும் ஹோம் சிக்ல தொண்டை அடைக்க சரி டீ குடிச்சு சரி பண்ணலாம்ன்னு போனா தொண்டைல டீ இறங்கும் போதே கண்ணுல தண்ணி கொட்டும் ...

இப்படியே போய்ட்டு இருந்தப்போ தான் ஒரு நாள் காலேஜ்க்கு  போற க்யூல  என்னை மாதிரியே கண்ணீரும் கம்பலையுமா அவங்களை பார்த்தேன் ...என் ரூமுக்கு நேர் கீழ் ரூம்... ஆஹா இவங்களும் நம்ம இனம் தான் போலன்னு போய் பேச ஆரம்பிச்சேன் ... இருந்தாலும் வேற வேற ரூமாச்சே எப்படி போய் ஒட்டிக்கறது என்னை பத்தி என்ன நினைப்பாங்கன்னு தயக்கமா  இருக்கும் ...

ஒரு நாள் லன்ச் டைம்ல மெஸ்க்கு  சேர்ந்து போறதுக்காக அவங்க ரூம்க்கு போய் இருந்தேன் .... வீட்டுல இருந்து மாவடு ஊறுகாய் கொண்டு வந்துருந்தா  ஒருத்தி ... அது அந்த 10 நாள்லயே காலியாகி ஓர்ர்ர்ரெ ஒரு குட்டி மாங்காய் மட்டும் அந்த பாட்டில்ல இருந்தது ... அதை எடுத்து ஒண்ணே ஒண்ணு தானனு பாட்டிலோட தட்டுல கவுத்தா இன்னொருத்தி.... அந்த மாங்கா டேக்கா குடுத்துட்டு தட்டுல விழாம எங்கயோ தரைல போய் விழுந்தது... போகட்டும்ங்கறாங்க ரெண்டு பேரும் .. அய்யய்யயோ வீட்டுல சீவின தலைங்கறதுக்காகவே  தலைய 2 நாள் சென்டிமெண்டா கலைஞ்சுராம பாத்துக்கிட்ட நானா வீட்டுல இருந்து கொண்டு வந்த மாங்காயை விடுவேன் ... ச்செ தரையில விழுந்தாத்தான் என்ன.. இவங்க வேற போனா போகட்டுங்கறாங்க ... நாம ஏதாவது சொன்னா கேவலமா நினைச்சுப்பாங்களேன்னு நினைச்சுகிட்டே அதை பாத்திட்டு நிமிரறேன் .... மூணாவதா அந்த ரூம்ல இருந்த ஒருத்தி அதையே பாத்துட்டு இருக்கா .... நான் அவள பாக்கறது தெரிஞ்சதும் என்னை பார்த்தாளே ஒரு பார்வை .. அந்த நொடி அந்த இணைபிரியாத உயிர் நட்பு எங்களுக்குள்ள பிறந்த நொடி.... நண்பேன்டா....

இப்பவும் எப்போ சந்திச்சாலும் மாவடு கதைய மட்டும் மறக்காம பேசி விழுந்து விழுந்து சிரிக்கறோம் ... இன்னும்  சிரிப்போம்..

ஆனா அந்த குட்டி  மாவடு என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லமாட்டேனே !!!

No comments:

Post a Comment