Monday, November 7, 2016

ஒரு குட்ட்ட்டி கதை...

கோயிலில் கூட்டத்தில் ரெஸ்ட்லெஸ் ஆக இருந்த குழந்தையிடம் "கண்ணா கொஞ்ச நேரம்  சமத்தா வேண்டிக்கோயேன்... காட்க்கு தேங்க் பண்ணேன்..."

ஒரு வழியா கூட்டத்தை சமாளித்து வெளிய வந்த உடனே முதல் கேள்வி "நீ என்னம்மா வேண்டிக்கிட்ட ?"

என்னவோ ஆசைகளே இல்லாம, இருக்கறதுல திருப்தி அடையும் பெரிய்ய்ய செல்ப்லெஸ் மனசு இருக்கறவ நான்னு ஒரு நினைப்பு ப்ளஸ் மிதப்பு... பெரிய இவளாட்டம் "கடவுளுக்கு தெரியாதாடா நமக்கு என்ன தரணும்னு.. அம்மா எப்பவுமே எனக்குன்னு எதுவுமே கேட்க மாட்டேன்... நன்றி தான் சொல்லுவேன்.. என் குழந்தை நல்லா படிச்சி நல்ல ஆரோக்கியத்தோட லைஃப்ல நல்லா இருக்கணும் அப்படின்னு தான் வேண்டிப்பேன்.. " என்றேன் ..

"ஏம்மா ஒண்ணுமே கேட்க மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு கேக்கறியே.. காட்க்கு தெரியாதா மா எனக்கும் எல்லாம் தர்றதுக்கு.... என்னையும் நல்லா பாத்துக்க .... " அப்படின்னு ஒரு பதில் வருது....

சுரீர் ன்னு உறைச்சுது தெய்வத்திடம் பரிபூர்ண சரணாகதின்னா என்னன்னு ..

பிரணவ மந்திரம் ஓதின குட்டி முருகன் மாதிரி தெரிஞ்சா என் குழந்தை !!

No comments:

Post a Comment